Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கேடயம்
கேடயம்
கேடயம்
Ebook95 pages32 minutes

கேடயம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பார்வதி பழங்கள், ஹார்லிக்ஸ் என தம்பிக்கு ஏராளமாக வாங்கிக் கொண்டு வந்தாள்.
 தம்பி நடேசனின் மனைவி சரஸ்வதி, பார்வதி யைப் பார்த்ததும் அழத் தொடங்கினாள்.
 "அண்ணி! எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு! ஒரு நிமிஷம் படுத்துக் கிடக்க மாட்டார். அவருக்கு ஒரு கஷ்டம்னா, இந்தக் குடும்பத்தோட கதி என்னாறது?"
 "நீ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கற? அவனுக்கு ஒண்ணும் இல்லை!"
 "லீவு போட்டா, சம்பளம் கட்டாகும்கா!"
 "போகட்டும்டா! அந்தப் பணத்தை நான் குடுத்துர்றேன். உன் உடம்புதான் முக்கியம். அரசு! இதுல மூவாயிரம் ரூபாய் இருக்கு. டாக்டர், மருந்து செலவுக்கு வச்சுக்கோ! இந்தக் குடும்பம் தடங்கல் இல்லாம நடக்க நான் உத்திரவாதம் தர்றேன். சரியா?"
 "அக்கா!"
 அருகில் வந்து உட்கார்ந்தாள்.
 "நடேசா! கவலைப்படாதேடா! நாகு கல்யாணம் நடக்கணுமேனு கவலையா? அதனாலதான் ரத்த அழுத்தமா?"
 அவர் பேசவில்லை.
 "நல்ல மாப்ளையா பார்த்து நாகு கல்யாணத்தை நாங்க நடத்தறோம். அது எங்க பொறுப்பு! விட்ருவோமா உன்னை? இதப்பாரு சரசு! அவனுக்கு நீதான் ஆறுதல் சொல்லணும்!"
 "குமரன் எப்பக்கா வர்றான்?"
 "இந்த மாசக் கடைசில! வரன் கூட பாக்கத் தொடங்கிட்டேன்!""ஒப்புக்கிட்டானா?"
 "மாட்டேன்னு சொல்லிடுவானா? நீ தாய்மாமன்டா! நீ தெம்பா இருந்து நடத்தணும்டா! உடம்பைத் தேத்திக்கோ! கையோட நாகு கல்யாணத்தையும் முடிச்சிடலாம்!"
 யாரும் பேசவில்லை.
 "நான் வரட்டுமா? என்ன தேவைனாலும் நாகுகிட்ட சொல்லிவிடு சரசு!"
 "அண்ணி... சாப்டுட்டு போங்க!"
 "வேண்டாம்மா. நான் இன்னிக்கு ஒரு பொழுது! வரட்டுமா நாகு?"
 "அத்தே! நான் உங்களைக் கொண்டுவந்துவிடறேன்!"
 "பக்கத்துத் தெருவுக்கு எதுக்குடி துணை? நான் போயிடுவேன்! நீ உங்கப்பாவை கவனி. வர்றேன் நடேசா!"
 பார்வதி போய் விட்டாள்.
 "பாவம் அக்கா... நமக்கொரு கஷ்டம்னா, உடனே வந்துடுவா! அவளை விட்டா நமக்கும் யாரு இருக்கா?"
 "என்னங்க!"
 "சொல்லு சரசு!"
 "நாகுமேல அண்ணி நிறைய பாசம் வச்சிருக்காங்க! ஆனா நாகுவே தன் மருமகளா வரணும்னு அண்ணிக்கு தோணவே இல்லை பாருங்க!"
 "அம்மா! நீ என்ன உளர்ற?"
 "ஏன்மா?"
 "அத்தான் படிப்பும், தகுதியும், வருமானமும், கௌரவமும் எங்கே... நான் எங்கேம்மா? மலையும், மடுவும் மாலை மாத்திக்க முடியுமாம்மா?"
 "என்னடீ இப்படி பேசற? ஒரு நல்ல மனைவிக்குள்ள தகுதி உனக்கு இல்லையா?"அம்மா! சமையலுக்கும், வீட்டு வேலைகளுக்கும் ஏன்... புள்ளை வளர்க்கக் கூட இப்பல்லாம் பணம் குடுத்தா ஆள் கிடைக்குதும்மா! ஆனா படிப்பும், பதவியும், கைநிறைய பணமும் உள்ள பொண்ணுங்க சுலபமா கிடைப்பாங்களா?"
 "அது மட்டும் போதுமா நாகு?"
 "அம்மா! கூடத்துல ஒக்காந்து ஆங்கிலம் பேசற புத்திசாலி மனைவியை விட்டுட்டு, அடுப்படில வியர்வை வழிய நிக்கற பெண்களை யாரும்மா ஏத்துப்பாங்க?"
 நடேசன் எழுந்து உட்கார்ந்தார்.
 "சரசு! உன் பொண்ணு சொல்றதுதான் சரி! அக்காவுக்கு நாகு வலது கையா இருக்கலாம்! அதுக்காக அந்த வீட்டு எஜமானியா உன் மகள் ஆகணும்னு ஆசைப்படாதே! ஏத்த பந்தமா இருந்தாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு சுடும்! நீ புரியாம பேசி, நாகு மனசை நோகடிக்காதே!"
 "அப்பா! நான் நோகமாட்டேன். ஏன்னா, அத்தான் கணவனா வரணும்னு ஒருநாளும் நான் ஆசைப்பட்டதில்லை! எனக்கு என் தகுதியும், எல்லைகளும் தெரியும்பா!"
 நாகு உள்ளே போய் விட்டாள்.
 "நாகுவுக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து நாங்களே கல்யாணம் செஞ்சு வைக்கிறோம்னு அக்கா சொல்றாங்களே!"
 சரசு பேசவில்லை! முகத்தில் சிரிப்பில்லை!
 மனசு மட்டும் துடித்துக் கொண்டிருந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 14, 2023
ISBN9798223561972
கேடயம்

Read more from Devibala

Related to கேடயம்

Related ebooks

Related categories

Reviews for கேடயம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கேடயம் - Devibala

    1

    பார்வதி கோயிலுக்கு வந்திருந்தாள். குருக்களிடம் அர்ச்சனைத் தட்டைக் கொடுத்து, ‘குமரன் - பரணி நட்சத்திரம்’ என்க, குருக்கள் சிரித்தபடி, மாசாமாசம் பரணி நட்சத்திரத்துல பிள்ளைக்கு அர்ச்சனை பண்ண வந்துர்றீங்களேம்மா! என்றார்.

    ஆமாம்! ஒரே பிள்ளை! கடல் கடந்து வெளிநாட்ல இருக்கான். அவன் நல்லா இருக்கணுமில்லையா? பிரார்த்தனையைத் தவிர இந்தம்மாவால என்ன தர முடியும் அவனுக்கு?

    என்ன வயசு உங்க பிள்ளைக்கு?

    இருபத்தி ஏழு முடிஞ்சாச்சு!

    கல்யாணம் பண்ணலையாம்மா?

    அவன் மேல்படிப்பு, உத்யோகத்துல உழைப்புனு போன வருஷம் வரைக்கும் கல்யாணப் பேச்சையே எடுக்க விடலை. லண்டன்ல இருக்கான். வருஷத்துல பதினைந்து நாள் இங்கே வந்துட்டுப் போறான்! இந்த மாசக் கடைசில வர்றான். எப்படியாவது பேசி முடிக்கணும்!

    காலா காலத்துல நடக்க வேண்டியது நடக்கணும்மா! இல்லைனா, எல்லாருக்குமே ஒரு சலிப்பு வரும்!

    அர்ச்சனை நடந்தது! தீபாராதனை முடிந்து பிரசாதத்தோடு பார்வதி வெளியே வந்தாள்.

    நேராக ஜோசியர் வீட்டுக்கு வந்து விட்டாள்.

    வாங்கம்மா!

    என் பிள்ளை குமரன் ஜாதகம் குடுத்தேனே!

    பொருத்தமான வரன்கள் நிறைய இருக்கு! நீங்க பார்த்துத் தேர்ந்தெடுங்க!

    இவன் எம்.டெக்., எம்.பி.ஏ. படிச்சிருக்கான். வெளிநாட்ல லட்சக்கணக்குல சம்பாதிக்கறான். இவனுக்கு எல்லா விதத்திலும் தகுதியுள்ள பெண்ணா பாருங்க!

    இந்த மூணு வரனை எடுத்துக்குங்க! ரெண்டு பேர் உள்ளூர்ல! ஒருத்தி வெளிநாட்ல - அவங்கப்பா, அம்மா கூட இருக்கா! எல்லா பெண்களுக்குமே பெரிய படிப்பு, உத்யோகம்! அந்தஸ்தான குடும்பம்! எல்லா வசதிகளும் இருக்கு! தேர்ந்தெடுக்கிறது உங்க பொறுப்பு!

    சரி! நான் வீட்டுக்குக் கொண்டு போய் அவரோட பேசிட்டு, உங்ககிட்ட பேசறேன். குமரன் ஜாதகம் என்ன சொல்லுது?

    இந்த வருஷம் கல்யாணம் நடந்துடும்மா!

    இதுபோதும் ஜோசியரே! அவனுக்குனு ஒரு குடும்பம் அமைஞ்சிட்டா, நாங்க நிம்மதியா இருப்போம்!

    அம்மா காரில் ஏறினாள். பத்தே நிமிடங்களில் வீட்டுக்கு வந்து விட்டாள்.

    அப்பா சிவதாசன் வங்கியில் உயர் அதிகாரி. ரிடையராக இரண்டு வருடங்கள் பாக்கி. வெளியூருக்கு மாற்றலாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்.

    சொந்த வீட்டை அவரே வாங்கி விட்டார்! அதை இன்னும் பெரிதாக்கி, வசதிகளை செய்து தந்து, கார் வாங்கிக் கொடுத்து, குமரன் சொர்க்க பூமியாக்கி விட்டான்.

    பணத்துக்கோ, மகிழ்ச்சிக்கோ அந்தக் குடும்பத்தில் பஞ்சமில்லை. வம்சம் தழைக்க வேண்டும்! குடும்பம் பெருக வேண்டும் என்பது பெரியவர்களின் நியாயமான ஆசை!

    அன்று மாலை சிவதாசன் வந்ததும், பார்வதி உட்கார்ந்து விட்டாள்.

    இந்த மூணுல எந்த வரன் நல்லாருக்குனு பாருங்க!

    எனக்கா பார்வதி?

    உங்களுக்கு இப்பத்தானே இருபது வயசு ஆகுது! இப்ப என்ன அவசரம்? அஞ்சு வருஷம் போகட்டும்!

    நக்கலாடி ஒனக்கு?

    முன் பல்லுல மூணு ஆடுது! இந்த அழகுல இப்படியெல்லாம் ஆசையா? விளையாட்டு போதும்! பாருங்க!

    குமரன் சம்மதிச்சிட்டானா?

    அவன் எங்கே சம்மதிச்சான்?

    கட்டிக்கப்போறவன் அவன். அவனைக் கேக்காம நீ பாட்டுக்கு ஏற்பாடுகளை செஞ்சா...?

    இல்லீங்க! இனிமே அவனை விடக்கூடாது! இன்னும் மூணு வருஷம் போனா முப்பது! வாலிபம் டாட்டா சொல்லத் தொடங்கிடும்! பெத்தவங்க தெம்போட இருக்கும்போதே, புள்ளைங்க தலைதூக்கிடணும்! இல்லைனா, எல்லாருக்கும் தளர்ச்சி. நான் அவனை சம்மதிக்க வைக்கறேன். நீங்க இதைப் பாருங்க!

    அவர் அலசினார்.

    மூணுமே தகுதி உள்ளதாத்தான் இருக்கு! யாரைக் கட்டிக்கிட்டாலும் உன் பிள்ளை வாழப்போறது வெளிநாட்லதான்!

    இருக்கட்டுமே!

    ரிடையர் ஆனதும் நாமும் போயிடலாமா?

    தப்பில்லை! அவனோட போய் ஒரு மாச காலம் இருந்துட்டு, திரும்பிடலாம்!

    ஏன்? இங்கே என்ன வச்சிருக்கு?

    காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும்னு ரஜினி பாடினாரே! அதுதான். டிகிரி காப்பியும், சுப்ரபாதமும், இட்லி சாம்பாரும், தமிழும் இல்லைனா என்னால வாழ முடியாது!

    இந்த நாலுமே வெளிநாட்ல இப்ப ஏராளமா கிடைக்குது!

    ஆனா ஜீவன் இருக்காதுங்க! தமிழ் நாட்ல இருக்கறது தாய்மடில படுத்துக் கிடக்கற மாதிரி! இதைவிட்டு நான் வரமாட்டேன்!

    சரி! ஒரே பிள்ளையோட இருக்கற யோகம் இல்லை!

    அத்தே! - குரல் கேட்டு இருவரும் திரும்ப, நாகலக்ஷ்மி ரெட்டை ஜடை மார்பில் புரள, மான்குட்டி போல துள்ளி வந்தாள்!

    பார்வதியின் தம்பி மகள் நாகலக்ஷ்மி. பக்கத்துத் தெருவில்தான் தம்பி குடும்பம்!

    தம்பி பெரிதாகப் படிக்கவில்லை. ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான். மனைவி குடும்பத் தலைவி! சுமாரான குடும்பம். இப்போதும் வாடகை வீடுதான். நாகலக்ஷ்மி ஒரே மகள்! அவளும் எஸ்ஸெல்சி படிப்புதான்! நன்றாக சமைப்பாள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். யார் கஷ்டப்பட்டாலும் தேகத்தால் உதவுவாள். இங்கே அத்தை வீட்டில் பெரும்பாலான வேலைகளை செய்வது நாகுதான்!

    "மாமாவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1