Kadhal Vedham
By Devibala
5/5
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Manmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsPennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsCharumma Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5En Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Jodi Thevai Rating: 5 out of 5 stars5/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Kathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Kan Theduthe Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Kadhal Vedham
Related ebooks
Su(sa)gavasam Rating: 0 out of 5 stars0 ratingsKedayam Rating: 1 out of 5 stars1/5Karpoora Kanavukal Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsKaalaththin Kattalai Rating: 4 out of 5 stars4/5Vaira Kammal Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar! Rating: 3 out of 5 stars3/5Deepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsThoppil Thani Maram Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsKowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsMaappillai Ragasiyam Sollava Rating: 5 out of 5 stars5/5Kaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalamadi Kanne Rating: 5 out of 5 stars5/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsThunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsAnuradha Ramananin Sirukathaigal Part - 2 Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Veliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Kaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kadhal Vedham
1 rating0 reviews
Book preview
Kadhal Vedham - Devibala
11
1
தங்கை நீனாவின் கல்யாணம் முடிந்து ஒரு மாதமாகி விட்டது.
அந்தப் பரபரப்பு ஓய்ந்து விட்டது!
தங்கை புகுந்த வீட்டுக்குப் போய், உறவுக்காரர்கள் எல்லாம் கலைந்து சலசலப்பு மொத்தமாக அடங்கி விட்டது.
பத்ரி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டான்
பத்ரி வங்கி ஒன்றில் வேலை பார்க்கும் அதிகாரி. எம்.காம். படித்தவன்! ஐ.சி.டபிள்யூ முடித்தவன்!
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கடந்து சம்பளம்!
வெளிநாட்டு வங்கி அது!
பத்ரி கடுமையான உழைப்பாளி! அழகான இளைஞன். இருபத்தி ஏழு வயது.
பெற்றவர்களுக்கு ஒரே மகன். மூன்று சகோதரிகள். இரண்டு பேர் மூத்தவர்கள். வடநாட்டில் குடும்பம். தங்கை நீனா மட்டும் சென்னையில்!
அவளும் வெளிநாட்டுக்குப் போய் விடுவாள்.
சொந்த வீடு, வாகனம் என சகல வசதிகளும் உண்டு.
அப்பா தனியாரில் வேலை. அம்மா மத்திய அரசாங்க ஊழியர்.
பத்ரி வேலைக்கு வந்து விட்டான்.
பத்தே நிமிடங்களில் செல்போன் அழைப்பு.
சொல்லு வாசுகி!
உங்க பேங்க் வாசல்ல நிக்கறேன் நான்!
உள்ள வாயேன்!
லீவு போட்டுட்டு வர்றியா பத்ரி?
இல்லைம்மா! தங்கச்சி கல்யாணத்துக்கு நிறைய லீவு போட்டாச்சு. நீ உள்ள வா! தனி ரூம் தானே! தாராளமா பேசலாம்!
சில நொடிகளில் வாசுகி உள்ளே நுழைந்தாள்.
ஒக்காரு. என்ன சாப்பிடற?
எதுவும் வேண்டாம்!
ஏன் டென்ஷனா இருக்கே வாசுகி? கொஞ்சம் இரு!
இன்டர்காம் எடுத்து ரெண்டு காபிக்கு சொன்னான்!
டென்ஷன் படாம எப்படி பத்ரி? ரெண்டு வருஷங்களா காதலிக்கறோம். நீ எந்த பதிலும் சொல்லலை!
டீ வந்தது. சார் காபி இல்லை!
சரிப்பா! நீ போ! டீ சாப்பிடு வாசுகி!
பத்ரி! எனக்கு டீ புடிக்காது. காபிதான் குடிப்பேன்னு உனக்குத் தெரியாதா?
தெரியும்! ஒரு நாள் டீ சாப்பிடேன். எல்லாத்துக்கும் பழகணும் வாசுகி!
இல்லை பத்ரி! நான் என் ருசிகளை, எண்ணங்களை யாருக்காகவும், எதுக்காகவும் மாத்திக்க மாட்டேன்னு உனக்குத் தெரியாதா?
இந்தப் பிடிவாதம் தப்பு வாசுகி!
சரி! இப்ப டீ, காபியா முக்கியம். விஷயத்துக்கு வா பத்ரி!
சொல்லு!
இனி காத்திருக்க எங்க வீட்ல யாருக்கும் பொறுமை இல்லை. நானும் தயாரா இல்லை!
பத்ரி பேசவில்லை.
தங்கச்சி கல்யாணம் முடியாம நம்ம கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே முடியாதுனு நீ சொன்னே! காதலையும் வீட்ல சொல்ல முடியாதுனு சொல்லிட்டே! உன் தங்கச்சிக்கு வந்த வரண்கள் எல்லாம் தட்டிப் போயி, ஒண்ணரை வருஷங்கள் படாதபாடு பட்டு, இப்பத்தான் கல்யாணமாச்சு. நாங்களும் பொறுத்துக்கிட்டோம். இப்ப லைன் க்ளியர்! இனி என்ன பிரச்னை? இனிமே பேசலாமில்லையா?
பத்ரி தலையாட்டினான்!
தலையாட்டினா என்ன அர்த்தம்? வாய் திறந்து பதில் சொல்லு பத்ரி!
பேசலாம் வாசுகி! கொஞ்சம் பக்குவமா பேசணும்!
என்ன பக்குவம்?
நம்மது ஜாதி கடந்த காதல். எங்கம்மா இதய நோயாளி! இந்த ரெண்டும் முக்கியமான சங்கதிகள். அதனால பக்குவமாத்தான் பேசணும்!
பத்ரி! காதலிக்கும் போதே இந்த அறிவு இருந்திருக்கணும். ரெண்டு வருஷங்கள் காதலிச்ச பிறகு சொல்றே?
கூச்சல் போடாதே வாசுகி! காதலிக்கத் தொடங்கின முதல் நாளே என் பிரச்னைகளை நான் உங்கிட்ட சொல்லியாச்சு. எங்க குடும்பம் ஆர்த்தடாக்ஸ் குடும்பம்! ஜாதி தாண்டின காதலை எங்கப்பா, அம்மா அத்தனை சுலபமா ஏத்துக்க மாட்டாங்கனு நான் சொன்னேனா இல்லையா?
நீ சொன்னே பத்ரி! அதுக்காக முதல் நாளே என்னை உதறிட்டு நீ போகலையே?
காரணம் உன் மேல நான் வச்ச காதல்! இப்பவும் அது இருக்கு வாசுகி! அதனாலதான் உங்கிட்ட நான் பேசறேன்! அதுக்காக அவசர அதிர்ச்சிகளைக் குடுத்து ஏதாவது விபரீதம் ஆயிடக் கூடாதில்லையா?
பக்குவமாப் பேச இன்னும் எத்தனை வருஷங்கள் காத்திருக்கணும்!
கோவப்படாதே! நான் சமயம் பார்த்து பேச்சை ஆரம்பிக்கிறேன்.
பத்ரி! எனக்கும் வயசு இருபத்தி அஞ்சு! நிறைய வரண் வருது. எங்கப்பா அம்மா எத்தனை காலம் பொறுமையா இருக்க முடியும். இதை எங்கப்பா உன்கிட்ட போன்ல, நேர்ல பலமுறை சொல்லியாச்சு.
சரி சரி! உன் நிலைமை புரியுது எனக்கு! நான் இன்னிக்கே பேசறேன் வாசுகி!
இந்த வாரக் கடைசிக்குள்ள ரெண்டு குடும்ப பெரியவங்களும் சந்திச்சாகணும் பத்ரி!
முயற்சிக்கலாம்!
வாசுகி சலிப்புடன் எழுந்தாள்!
புறப்பட்டு விட்டாள்!
பத்ரி - காதலிக்கத் தொடங்கிய ஏழெட்டு மாதங்களில் வாசுகி தன் வீட்டுக்குச் சொல்லி விட்டாள். முதலில் அங்கும் புயல் வீசியது. வாசுகிக்கு அப்பா, அம்மா, ஒரு தம்பி மட்டும். அப்பா ஒரு ஓட்டலில் மேனேஜர். அம்மா குடும்பத் தலைவி! தம்பி படிக்கும் பையன். வாசுகிக்கு மாநில அரசாங்க உத்யோகம்!
முதலில் அப்பா, அம்மா கடுமையாக எதிர்த்தார்கள்.
வாசுகி பிடிவாதமாக இருந்தாள்.
மகள் விட்டுப் போய் விடுவாளோ என்ற பயம் வந்து விட்டது பெரியவர்களுக்கு!
பத்ரியை சந்திக்க விரும்பினார்கள்.
வாசுகி வீட்டுக்கே அவனை அழைத்து வந்தாள்.
பத்ரியின் அடக்கம், பணிவு, தோற்றம், வசீகரம், பேச்சில் உள்ள கண்ணியம் எல்லாமே சுலபமாக அவர்களை ஈர்த்து விட்டது!
மரியாதை தெரிந்த தகுதியான பையன் என்பதால் ஜாதி அவர்களை பாதிக்கவில்லை!
குழந்தைகளின் சந்தோஷத்துக்காக உறவைப் பகைத்துக் கொள்ளவும் இருவரும் தயாராக இருந்தார்கள்.
பத்ரி அடிக்கடி வந்தான்!
படிப்பும், பெரிய சம்பளமும் மகளது எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தந்தது!
ஆனால்