Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karpoora Kanavukal
Karpoora Kanavukal
Karpoora Kanavukal
Ebook130 pages54 minutes

Karpoora Kanavukal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

பெண்ணுக்கு உவமையாக மென்மையான பொருட்களைத்தான் கூறுவார்கள். ஒலி வீசுவதில்: கூட குளிச்சியை தரும் நிலவை மட்டுமே ஒப்பிடுவார்கள். மானே, தேனே, மலரே திரவியமே, பூங்கவிதையே, கவிதை தரும் சுகமே என்று போற்றப்படுபவள். சுடும் நெருப்பாக இருந்தால், அதுவும் எவர் ஒருவரையும் தனக்கு அடிமையானவர் என்று கருதும் மனப்போக்கில் இருந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த நாவல்... நெருப்பில் பூத்த காதல் சாம்பலாகிறது... படித்து பார்த்து எழுதுங்கள்...

உங்கள், தேவிபாலா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603579
Karpoora Kanavukal

Read more from Devibala

Related to Karpoora Kanavukal

Related ebooks

Reviews for Karpoora Kanavukal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karpoora Kanavukal - Devibala

    http://www.pustaka.co.in

    கற்பூர கனவுகள்

    Karpoora Kanavukal

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    முன்னுரை

    பெண்ணுக்கு உவமையாக மென்மையான பொருட்களைத்தான் கூறுவார்கள். ஒலி வீசுவதில்: கூட குளிச்சியை தரும் நிலவை மட்டுமே ஒப்பிடுவார்கள். மானே, தேனே, மலரே திரவியமே, பூங்கவிதையே, கவிதை தரும் சுகமே என்று போற்றப்படுபவள். சுடும் நெருப்பாக இருந்தால், அதுவும் எவர் ஒருவரையும் தனக்கு அடிமையானவர் என்று கருதும் மனப்போக்கில் இருந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த நாவல்... நெருப்பில் பூத்த காதல் சாம்பலாகிறது... படித்து பார்த்து எழுதுங்கள்...

    உங்கள்

    தேவிபாலா

    1

    தரகரை எதுக்குப்பா வரச் சொல்றீங்க?

    இதென்னம்மா கேள்வி? படிப்பை முடிச்சு, ரெண்டு வருஷமாச்சு; உனக்கு இருபத்திநாலு வயசு! இனிமே உன்னை வீட்ல வச்சுக்கிறது முறையில்லை. அதான் கல்யாண ஏற்பாடு பண்ணப்போறேன்!

    சொன்னார் துரைசாமி

    கேட்டது அவரது ஒரே மகள் இன்பா

    இன்பா எம்.காம் படித்துவிட்டு தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக கடந்த 2 வருடங்களாக வேலை பார்க்கிறாள். துரைசாமி லஷ்மி தம்பதியருக்கு மூத்த மகள்! இன்பாவுக்கு ஒரே தம்பி சுரேஷ் அவன் காரைக்குடி பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கிறான். அப்பா அரசாங்க உத்யோகம்! அம்மா ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சர் குடும்பத்தில் பணப் பற்றாகுறை இல்லை.

    இன்பா, அழகான புத்திசாலிப்பெண்! கடந்த 2 வருடங்களாக குடும்பத்துக்கு சம்பாதித்துத் தருகிறாள்.

    எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் வேகமான பெண்!

    அப்பா! தரகர் வேண்டாம்!

    என்னடீ பேசற? கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொல்றீயா?

    நான் தரகரை வேண்டாம்னு சொல்றேன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லவில்லை."

    இதுக்கு என்னம்மா அர்த்தம்?

    என் கூட வேலை பார்க்கிற சபரினு ஒருத்தரை நான் விரும்புகிறேன்!

    இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்கள்.

    அந்த சபரி நம்ம ஜாதியா? அம்மா லஷ்மி கேட்க,

    இல்லையம்மா!

    அப்படீன்னா வேண்டாம்!

    அம்மா டக்குனு பதில் சொல்லிடாதே! என்னை விட அதிகப் படிப்பு, உயர் பதவி, அழகாக இருப்பார்.! தகுதிகள் நிறைஞ்சவர். என் மனதுக்கு அவரைப் புடிச்சிருக்கு!

    நிறுத்துடி! உன் மனதுக்குப் பிடிச்சிட்டா போதுமா! பெத்தவங்க நாங்க எதுக்கு இருக்கோம்? நம்ம உறவுகள் இருக்கு! சாதிசனம் இருக்கு! நமக்குன்னு நாலு மனுசங்க வேண்டாமா? நாங்க நாலுபேர் முகத்துல நாளைக்கு எப்படி முழிக்கிறது?

    நீ பேசி முடிச்சிட்டியா?

    பேசிறது மட்டும் இல்லை, உன்னோட அர்த்தமில்லாத இந்தக் காதலுக்கும் ஒரு முடிவைக் கட்டு!

    "அம்மா! வாழ போறவ நான்!' என் மனதுக்குப் புடிச்சவன் கூட வாழ்ந்தால்தான், நான் சந்தோஷமா இருக்க முடியும்! புரியுதா?

    என்னாங்க? எல்லாத்தையும் கேட்டுட்டு நீங்க பேசாம இருந்தா, எப்படி? நீங்க குடுக்கிற செல்லம்தான் அவளை இப்படியெல்லாம் பேச வைக்குது

    நீ இரு லஷ்மி! இப்படிபாரும்மா இன்பா! உன் காதல்ல நீ உறுதியா இருக்கியா?

    ஆமாம்பா!

    அந்த சபரியும் உன்னை அழுத்தமா காதலிக்கிறாரா?

    'அதுல என்ன சந்தேகம்?"

    அவங்க வீட்டுக்கு இது தெரியும்! தெரிஞ்சா ஒப்புக்குவாங்களா?

    'தெரியலியப்பா! பெரியவங்க சம்மதிச்சா, சந்தோஷமா கல்யாணம் நடக்கும்! மறுத்தாலும் நாங்க பிரியரதா இல்லப்பா!"

    என்ன திமிர் பாத்தீங்களா! இவளை...! லஷ்மி பாய்ந்தாள்.

    துரைசாமி தடுத்தார்!

    லஷ்மி! உள்ளே வா!

    எதுக்கு?

    வாடி! நான் உங்கிட்டப் பேசணும்! இன்பா! அந்த சபரியை நான் பார்க்கணும்!

    எங்கே! எப்பப்பா?

    நாளைக்கு சாயங்காலம் வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றியா?

    சரிப்பா! மனைவியை இழுத்துக் கொண்டு உள்ளே வந்து கதவைச் சாத்தினார்.

    எதுக்கு அவனைக் கூட்டிட்டு வரச் சொன்னீங்க?

    எதுக்கு நீ படபடக்கிற?

    பின்ன? சும்மா இருக்க முடியுமா? நம்ம உறவு முறைகள் கேட்டா, நம்மை மதிப்பாங்களா?

    உளறாதே லஷ்மி! உறவு, நட்பு, சாதி சனம் எல்லாம் வேணும் தான்! ஆனா பெத்த புள்ளங்களை விட எதுவுமே உசத்தி இல்லை. நாம தளர்ந்தா, தாங்கி பிடிக்கப்போறது நம்ம மகள்தான்... சாதிசனம் இல்லை!

    என்ன பேசறீங்க?

    டீச்சரா இருந்தாலும், கிராமத்து வாசனை போகலை உன்னை விட்டு! நானும் தடுத்தா, விரும்பியவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிப்பா! -

    அதான் சொல்லிட்டாளே!

    படிச்ச, பதவில இருக்கிற பொண்ணு. சட்டம் கூட அவளுக்குத்தான் சாதகம்? நமக்கு கசப்புதான் மிஞ்சும்! நாளைக்கு அந்தப் பையன் வரட்டும்! பேசலாம்! காலம் மாறிட்டு வருது! எல்லாத்தையும் ஜீரணிக்கப் பழகணும் லஷ்மி!

    இல்லீங்க! என்னால முடியாது. நான் இதை ஒப்புக்க முடியாது!

    உன் சம்மதம் வேணும்னு உன்மகள் எதிர்பார்க்கமாட்டா! போயிட்டே இருப்பா!

    கதவை திறந்தார் துரைசாமி!

    அவர், அம்மாவிடம் என்ன பேசினர் என இன்பா கேட்கவே இல்லை. இந்தத் தலைமுறை மாறுபட்ட மனப்போக்கு உள்ளவர்கள்! –

    மற்றவர்களைப் பற்றி அதிமாகக் கவலைப்படுவதில்லை. அவர்களும் மற்றவர் சம்மதம் கேட்பதும் இல்லை. அம்மா பேசவே இல்லை. இன்பா அதைப் பொருட்படுத்தவும் இல்லை. காலையில் இன்பா வேலைக்குப் புறப்பட்டு விட்டாள்!"

    "தனியார் வங்கிக்கு வந்துவிட்டாள். சபரிநாதன் இருந்த அறைக்குள் நுழைந்து காலை வணக்கம் சொன்னாள்!

    உக்காரு இன்பா!

    சபரி! பத்து நிமிஷம் பேசலாமா! -

    தாராளமா!

    நம்ம காதலை எங்க வீட்ல சொல்ல வேண்டிய கட்டாயம் நேத்திக்கு வந்துடுச்சு! சொல்லிட்டேன்!

    அ... அப்படியா?

    அம்மாவுக்கு கோவம்! அப்பா உங்களை சந்திக்க விரும்புகிறார். இன்னிக்கு ஈவினிங் ஏழு மணிக்குக் கூட்டிட்டு வர்றேன்னு உங்களைக் கேக்காம பிக்ஸ் பண்ணிட்டேன்!

    நான் வர்றேன் இன்பா!

    தேங்க்ஸ் சபரி!

    உன்னைப் பெத்தவங்களை நான் எப்படி எதிர் கொள்ளணும்? எனக்கு ஏதாவது ஒத்திகை தேவையா?

    வேண்டாம்! நீங்க, உங்க இயல்புல இருங்க! யாருக்காகவும் நாம் மாற வேண்டாம்! இதைத்தொடர்ந்து உங்க வீட்ல நீங்க பேச வேண்டியிருக்கும்!

    பேசிடலாம்!

    "அவன் வீட்டில் இதை

    Enjoying the preview?
    Page 1 of 1