Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gayathri Manthram
Gayathri Manthram
Gayathri Manthram
Ebook190 pages1 hour

Gayathri Manthram

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603934
Gayathri Manthram

Read more from Devibala

Related to Gayathri Manthram

Related ebooks

Reviews for Gayathri Manthram

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gayathri Manthram - Devibala

    http://www.pustaka.co.in

    காயத்ரி மந்திரம்

    Gayathri Manthram

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    இன்னும் முழுமையாக விடியவில்லை. அதிகாலை ஐந்து மணி!

    அலமேலு மாமி குளியல் முடித்து மடிசார் புடவையைக் கட்டிக் கொண்டு, பூஜை அறைக்குள் நுழைந்தாள்!

    விளக்கேற்றினாள்! கண்மூடி, பிரார்த்தனை செய்தாள்!

    வெளியே வந்தாள்! கூடத்தில் அவள் கணவர் கிருஷ்ணமூர்த்தியின் படம், பட்டு மாலையுடன் அணையாவிளக்கு தாங்கி கம்பீரமாக இருக்க, அருகில் வந்தாள்!

    ஸ்விட்சைப் போட,

    "ஓம் பூர் புவஸுவக தத்ஸ விதுர்வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோயோன; பிரசோதயாத்!"

    என்ற காயத்ரி மந்திரம் அழகாக ஒலிக்க, கண்ணீருடன் கணவர் படத்தைப் பார்த்தாள்!

    அலமு! நம்மாத்துல எப்பவும் காயத்ரி மந்திரம் ஒலிச்சிண்டே இருக்கணும்! 24 மணி நேரமும் அது ஒலிக்கணும்! மனசை அது சுத்தமாக்கும். அதைவிட ஒரு பெரிய தியானமும், பிரார்த்தனனயும் இந்த உலகத்துல இல்லை. நம்ம உயிர் மூச்சுல காயத்ரி மந்திரம் கலக்கணும்டி

    அதனால்தான் நம்ம குழந்தைக்கு காயத்ரினு பேர் வச்சேளா

    அதுல சந்தேகமென்ன! நம்ம காயத்ரி என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வணங்கற அம்பாளோட சொரூபம்டி!

    மாமி சட்டென விடுபட்டு அந்தப் படத்தையே பார்த்தாள்!

    காயத்ரி மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது'

    நேரம் ஐந்தே கால்!

    வேகமாக உள்ளே வந்தாள்

    காயத்ரி! எழுந்திரும்மா நேரமாச்சு! இன்னிக்குத்தான் முதல்நாள் காலேஜ்ல சேரப் போறே! குளிச்சு ரெடியாடுமா

    காயத்ரி கண்களை விழித்தாள்.

    எழுந்து நேராக கூடத்துக்கு வந்தாள்! அப்பாவின் படத்தை ஒருமுரை பார்த்துவிட்டு உள்ளே போனாள்!

    அலமேலு பரபரவென அடுப்பாடிக்குள் நுழைந்தாள்!

    காயத்ரி! தயிர் சாதமா கலந்து டப்பால வச்சிரட்டுமா! இங்கே இட்லியை சாப்டுட்டு போயிடு!

    சரிம்மா!

    சீக்கிரம் குளிச்சிட்டு வா! புஸ்தகங்களை எடுத்து வச்சுக்கோம்மா! எதையும் மறக்காதே! பஸ் பாஸ் இன்னிக்கு வாங்கிடு! சரியா?

    ஆகட்டும்மா

    அடுத்த அரைமணியில் டப்பாகட்டி எல்லாம் தயாராக

    காயத்ரி ரெடியாம்மா?

    இதோ வந்துட்டேம்மா

    பதினேழு வயது காயத்ரி, பன்னிரண்டாவது வகுப்பை முடித்துவிட்டு இன்று கல்லுாரியில் பிகாம், படிப்புக்காக சேரப்போகும் காயத்ரி, அழகான இளம் காயத்ரி - மூடிய கதவைத் திறந்தாள்!

    அம்மா ஏற இறங்கப் பார்த்தாள்!

    மடிசார் புடவையில் காயத்ரி - தலையை பின்னலிட்டு, நெற்றியில் குங்குமம் வைத்து மகாலக்ஷ்மி போல வெளியே வந்தாள்!

    அப்பா படத்தருகில் வந்தாள்!

    அப்பா! நான் இன்னிக்கு காலேஜ்ல சேரப் போறேன்! நீ நன்னா படிச்சு, உசந்த நிலைக்கு வரணும்னு நொடிக்கு நூறுதரம் சொல்லுவேள்! உங்க ஆசிர்வாதத்தோட முதல் படில நான் காலை வைக்கரேன்பா! நிச்சயமா நான் நல்ல நிலைமைக்கு வருவேன்! நீங்க தெய்வாமா என் கூட இருப்பேள்! எனக்கு அந்த நம்பிக்கை இருக்குப்பா!

    காயத்ரி கண்கலங்க திரும்பினாள்!

    அம்மா! ஒனக்கு நாழியாகலையா?

    இன்னிக்குக் கொஞ்சம் லேட்டா வர்றேன்னு சொல்லியிருக்கேன்மா! நீ இட்லியை சாப்பிடறீயா?

    ரெண்டே ரெண்டு குடும்மா!

    காயத்ரி! கோவப்படாதே நான் ஒண்ணு சொல்லட்டுமா!

    சொல்லும்மா

    இன்னிக்குத்தான் காலேஜிக்கு முதல் நாள்! சின்னப் பொண்ண நீ! கூடப்பாடிக்கற குழந்தைகள் உன் வயசுப் பொண்ணுங்க எல்லாம் சுடிதார், ஜீன்ஸ்னு வரும்போது, நீ இப்படி மடிசாரைக் கட்டிண்டு போறது சரியா?

    சரக்கென திரும்பினாள் காயத்ரி!

    நீயாம்மா இதைக் கேக்கற

    ஆமாம்மா!

    உனக்குக் காரணம் தெரியாதா? என் மனசுல உள்ள வைராக்யம் புரியாதா? மத்தவா பார்வைக்கு எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும் என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு தவம்! எங்கப்பா பாஷைல தியானம் போதுமா? இனிமே இதைப்பற்றிப் பேசாதே! இட்லியை எடுத்து வை!

    சாப்பிட்டாள்! புத்தகங்களை எடுத்துக் கொண்டாள்!

    ஃபீஸ் கட்டின ரசீதை வச்சுக்கோ! ஜாக்ரதையா போயிட்டு வா! யார்கிட்டேயும் ரொம்ப பேச்சு வச்சுக்காதே! எதுக்குமே கோவப்படாதே தெரிஞ்சுதா?

    சரிம்மா!

    மறுபடியும் அப்பாவிடம் வந்தாள்!

    நான் போயிட்டு வர்றேன்பா?

    வாசலில் இறங்கி விட்டாள்! தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்!

    இந்த நேரத்தில் இவர்கள் குடும்பத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்

    'கல்யாண கிருஷ்ணமூர்த்தி!’ என்றால் புரோகிதர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் இல்லை!

    அவர் வந்து மந்திரம் சொல்லி, மாங்கல்யத்தை எடுத்துக் தந்தால்தான் ராசி என்று பிராமண குடும்பங்களில் நம்பிக்கையே உண்டு!

    தகப்பனார் மடியில் மகளை மடிசாரோடு உட்கார வைத்து, மாப்பிள்ளை தாலியைக் கட்டும் நேரம் கல்யாண கிருஷ்ணமூர்த்தியின் வெண்கல தொண்டையில் உருவாகும் மந்திரம் மைக் இல்லாமலே மண்டபம் முழுக்க ஒலிக்கும்!

    ஸ்பஷ்டமான உச்சரிப்பு!

    அதிகம் தட்சணை கேட்காமலே, நியாயமாக நடந்து கொள்ளும் புரோகிதர். நேர்மை, உண்மை, நல்ல சிந்தனை என வாழும் அற்புதமான மனிதர்!

    இன்னொரு விதமாகச் சொன்னால் பிழைக்கத் தெரியாத மனிதர்!

    இத்தனை கல்யாணங்களை நடத்தியும் தன் வீட்டு வறுமையைப் போக்க முடியாதவர்!

    அவர் மனைவி அலமேலு! சமையல் மாமி! கல்யாண சீசன்களில் சமையல் - இல்லாத நாட்களில் ஏதாவதொரு வீட்டில் சமையல் வேலை.

    இவர்களது ஒரே குழந்தைதான் காயத்ரி!

    காயத்ரி தெருக்கோடிக்கு வர, பால்பாக்கெட்டை வாங்கிக் கொண்டு எதிரே வந்தாள் பங்கஜம்!

    என்னடீ? நீயும் உங்கம்மா மாதிரி சமையல் வேலைக்குக் கிளம்பிட்டியா?

    காயத்ரி சரக்கென திரும்பினாள்.

    இல்லை மாமி! காலேஜிக்குப் போறேன்! இன்னிக்கு முதல் நாள்!

    என்னது காலேஜிக்கா! மடிசார் புடவையோடவா?

    ஏன்? என்ன தப்பு?

    ஏண்டீ நாலுபேர் சிரிப்பானு நீ யோசிக்கவே மாட்டியா? இல்லை, உங்கம்மாதான் உனக்கு எடுத்துச் சொல்ல மாட்டாளா? இதென்னடீ கூத்து?

    நிறுத்தங்கோ மாமி! இது கன்யமான மதிப்பிற்குரிய ஒரு உடுப்புதான்! சிரிக்க என்ன இருக்கு?

    நல்லதைச் சொன்னா ஏண்டீம்மா கோவலப்படறே? கலி முத்தியாச்சு! இந்தக் கால குழந்தைகளுக்கு புத்தி பெரண்டாச்சு!

    புலம்பிக் கொண்டே அந்த மாமி போக, பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டாள் காயத்ரி!

    பான்னிரண்டாவது வகுப்பில் காமர்ஸ் க்ரூப்பில் தொண்ணூற்றி ஆறு சதவீதம் எடுத்து தேறி விட்டாள் காயத்ரி!

    கணவரையும் இழந்த அலமேலு, எப்படி மகளை கரையேற்றப் போகிறோம் என தவிக்க, அலமேலு வேலை பார்க்கும் ஒரு ஜட்ஜ் குடும்பம், காயத்ரியரின் ஸ்காலர்ஷிப்புக்கு ஏற்பாடு செய்தது! காயத்ரியின் படிப்புச் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தது!

    ஒரு நல்ல கல்லூரியில் இடமும் கிடைத்துவிட்டது!

    காயத்ரி பஸ்சில் ஏறிவிட்டாள்!

    காயத்ரி இடம்பிடித்து உட்கார்ந்தாள்! கண்டக்டர் வர, பஸ் பாஸை காட்டினாள்! அவன் ஏற இறக்கப் பார்த்தான்! பின்னால் ஒரு விமர்சனம் தெறித்து விழுந்தது!

    ரொம்பச் சின்னப் பொண்ணா இருக்கா! மடிசார் கட்டிண்டு வர்றா!

    இவ தொடங்கி வச்சா, இதுவே நாளைக்கு ஃபேஷனாகி, எல்லாம் மடிசாரோட அலைப்போறதுகள்!

    காயத்ரி மேற்படி வார்த்தைகளை பொருட்படுத்தவே இல்லை!

    அடுத்தடுத்த நிறுத்தங்களில் பெண்கள் ஏற்றிக்கொள்ள, பஸ் நிரம்பி விட்டது!

    சுடிதார், ஜீன்ஸ் என கலர் கலராகப் பெண்கள். கையில் செல்போன்கள்.

    இவர்களுக்கு மத்தியில் வித்யாசமான மடிசார் காயத்ரி

    கல்லூரிக்கு அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் காயத்ரி இறங்க, அன்று கல்லூரி திறக்கும் நாள்!

    ஆண்-பெண் இணைந்து படிக்கும் கல்லூரி! மாடர்ன் உடைகளில் பெண்கள் பட்டாம்பூச்சியாக பறக்க,

    காயத்ரி மட்டும் மடிசாரில்!

    கல்லூரி மொத்தமும் திரும்பிப் பார்த்தது!

    இதப்பாருடா மச்சி! காலேஜுக்கு மாமி வந்திருக்குடா! கவனிச்சியா?

    அது படிக்க வந்திருக்காதுடா மாமா! கேன்டீன்ல சமையல் வேலைக்கு வந்திருக்கும்!

    இல்லைடா மாப்ளை! கைல புத்தகம் வச்சிருக்கு பாரு! காயத்ரி நடக்க நடக்க விமர்சனம்!

    காரிலே வந்த மாணவிகள் அவளை நெருங்கி, நீ படிக்க வந்திருக்கியா?

    ஆமாம்!

    ஏன் மடிசாரைக் கட்டிட்டு வந்திருக்கே?

    என்ன தப்பு? இதுவும் ட்ரெஸ்தானே?

    என்ன பேசற! பசங்கள்லாம் உன்னை ரொம்ப மோசமா கலாய்க்கறாங்க! உனக்குக் கஷ்டமா இல்லையா?

    அதைப் பற்றி நான் கவலைப்படல!

    அதற்குள் செய்தி பரவி, ஒரு மாணவர் பட்டாளம் படையெடுக்கத் தொடங்கி விட்டது!

    மாடத்துலே கன்னி மாடத்துலே - ஆத்துப் பொண்ணு! அய்யராத்து பொண்ணு!

    ஒருவன் பாடத் தொடங்க,

    இன்னா மாமி...? நீ இன்னா க்ரூப்...? ஒருவன் எதிரில் வந்து கேட்க, காயத்ரி எதற்குமே கலங்கவில்லை!

    மணியடித்ததும் வகுப்புக்குள் நுழைந்து அமர்ந்தாள்.

    பேராசிரியர் - காமர்ஸ் ப்ரொபஸர் கமலி வெங்கடேசன் உள்ளே நுழைய, வகுப்பே எழுந்து மரியாதை செய்ய, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கமலி, மாணவ மாணவிகளின் பெயரைக் கேட்டு அறிமுகம் செய்து கொள்ள, முதல் வரிசையில் முதல் பெயராக அமர்ந்திருந்த காயத்ரி எழுந்து நிற்க, கமலி ஏற இறங்கப் பார்த்தார்!

    காயத்ரி! நீ என்ன இந்த ட்ரெஸ்ல வந்திருக்கே?

    கூடாதா மேம்? நம்ம காலேஜுக்கு ட்ரெஸ் கோட் ஏதாவது இருக்கா?

    "அப்படி எதுவும் இல்லை! ஆனாலும்... சின்னப் பொண்ணுக்கு எதுக்கு இந்த மாமி வேஷம்? முதல் நாள் படிக்க வரும்போதே நாலுபேரோட விமர்சனத்துக்கு ஆளாகணுமா? இல்லை, உன்னை எல்லாரும் திரும்பிப் பாக்கணும்னு இந்த மாதிரி ட்ரஸ்ல வந்திருக்கியா?

    "ஸாரி மேம்! யாரையும் வசீகரிக்கணும்னு நான் மடிசார் கட்டலை!

    Enjoying the preview?
    Page 1 of 1