Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kettathu Kidaikkum!
Kettathu Kidaikkum!
Kettathu Kidaikkum!
Ebook141 pages50 minutes

Kettathu Kidaikkum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603769
Kettathu Kidaikkum!

Read more from Devibala

Related to Kettathu Kidaikkum!

Related ebooks

Reviews for Kettathu Kidaikkum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kettathu Kidaikkum! - Devibala

    http://www.pustaka.co.in

    கேட்டது கிடைக்கும்!

    Kettathu Kidaikkum!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    வாசுதேவன் குடும்பம் உற்சாகமாக தயாராகிக் கொண்டிருந்தது! அது வியாழக்கிழமை! பாபாவுக்கு பூஜை செய்து முடித்திருந்தாள் நளினி!

    அம்மா! கொஞ்சம் உள்ள வாயேன்!

    குரலைத் தொடர்ந்து நளினி ஓட, உள்ளே அர்ச்சனா பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டிருந்தாள்!

    இந்தப் புடவை சரியா இருக்கா?

    ஏண்டீ? கல்யாணம் உனக்கா? உன் தம்பிக்கா? நீ இத்தனை கிராண்டா வர்றே?

    வாசுதேவன் உள்ளே வந்தார்!

    நளினி! இவதானே நாத்தனார்? பந்தாவா இப்பவே இருக்க வேண்டாமா?

    அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்! வர்ற மருமகள் கிட்ட இந்தக் குடும்பமே தோழமையாக இருக்கணும்! புரியுதா? சரி! அபிஷேக் குளிச்சிட்டானா?"

    உன் பிள்ளை அத்தனை சீக்கிரம் புறப்படுவானா? போய்ப் பாரு!

    நளினி உள்ளே ஓட, பாத்ரூமில் பாடல் உறக்கக் கேட்டது!

    சீக்கிரம் வாப்பா! அவங்க வீட்ல பத்து மணிக்கு இருக்க வேண்டாமா? நல்ல நேரத்துல பொண்ணை பாத்துடணும்!

    அர்ச்சனா பட்டுச் சேலையுடன் வெளியே வர,

    மாப்ளை கூட வந்திருக்கலாம். உன் குழந்தையையும் விட்டுட்டு. வந்துட்டே!

    அம்மா! அவருக்கு லீவு போட முடியாது! உன் பேரன் தொந்தரவு தருவான்னு மாமியார் கிட்ட விட்டுட்டேன்! இது முடிஞ்சதும் இன்னிக்கு சாயங்காலமே நான் எங்க வீட்டுக்குப் போயிடுவேன்!

    என்னங்க! ஒரு வேளை தாம்புலம் மாத்திகிட்டு ஒரு ஒப்புதல் நிச்சயம் மாதிரி பண்ணலாம்னு அவங்க கேட்டா?

    இரு, நளினி! இவங்க ரெண்டு பேரும் பார்த்து ஒருத்தருக்கொருத்தர் புடிக்கணுமில்லையா?

    அதுல என்ன சந்தேகம்? ஜாதகம் நல்லா சேர்ந்தாச்சு! ரெண்டு பேருக்கும் போட்டோல புடிச்சாச்சு! அவங்க வந்து நம்ம வீட்ல பேசி, நமக்கும் சம்மதம்தான்! போட்டோல இருக்கறவங்க நேர்ல வேற மாதிரி இருப்பாங்களா? முடிவாயிடும்! அதனால் நாம தயார் நிலையில் இருக்க வேண்டாமா?

    அபிஷேக் தலை துவட்டியபடி வந்தான்!

    தயார் நிலைனா என்னம்மா?

    அந்தப் பொண்ணு பூஜாவுக்கு ஒரு புடவை, ரவிக்கை, கூடுதலா கொஞ்சம் ஸ்விட்ஸ், பழங்கள் எல்லாம் எடுத்து வச்சிக்கறேன்!

    சரி நளினி! கைல வச்சுக்கோ! தப்பில்லை!

    ஏம்மா? அவர் கூட இல்லையே?

    இது நிச்சயதார்த்தம் இல்லைடி! ஒப்புதல் தாம்பூலம் மாதிரி! உறுதிப்படுத்திக்கறது நல்லதில்லையா?

    சரி! அங்கே போய் முடிவெடுக்கலாம்!

    இதப்பாரு அபிஷேக்! நீ கைநிறைய சம்பாதிக்கறே! உங்கப்பா பிஸினஸ்ல சொத்துக்களை சேர்த்தாச்சு! உங்கக்கா கல்யாணம் ஆகி நல்ல நிலைல இருக்கா! நமக்கு வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை!

    இதை இப்ப நீ எதுக்கும்மா சொல்ற?

    அவங்க மிடில் க்ளாஸ்! பூஜா நல்ல வேலைல இருக்கா! அவ சம்பளம் பெரிய பலம் அவங்களுக்கு! தொடர்ந்து அவ அங்கியே குடுக்க நினைச்சாலும் நீ தடுக்காதே! அவகூட தனியா பேசுவே இல்லையா? அப்பச் சொல்லிடு!

    வாசுதேவன் சிரித்தார்.

    ஏன்பா சிரிக்கிறீங்க?

    உங்கம்மாவுக்கு எல்லாத்துக்கும் அவசரம். அதது பக்கத்துல வரும்போது பேசிக்கலாமே!

    கிண்டலா? இதப்பாருங்க! முன் கூட்டியே யோசிச்சு எல்லாத்தையும் நான் செய்யற காரணமாத் தான் இந்தக் குடும்பம் நல்லா இருக்கு! புரியுதா?

    சரிம்மா! டென்ஷன் ஆகாதே! உன் விருப்பம் போல தான் எல்லாம் நடக்கும்!

    நாலு பேரும் தயாராகி விட்டார்கள்.

    வாசுதேவன் எலக்ட்ரானிக் பிஸினஸ்! அதில் நன்றாக சம்பாதித்து, இந்தப் பெரிய வீடு, கார் - தவிர இன்னும் நிலபுலன்கள் என ஏகப்பட்ட சொத்துக்கள்! நளினி, குடும்பத் தலைவி! அர்ச்சனா பட்டதாரி! நல்ல தகுதியான கணவன்! அபிஷேக் எம்.டெக்., எம்.பி.ஏ. படித்து, பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரி. இருமுறை வெளிநாடு சென்று வந்தவன்!

    நல்ல குடும்பம்!

    குறிப்பாக நளினி - இதமான தாய் - யாரையும் எதற்காகவும் நோகடிக்கக் கூடாது என்று நினைப்பவள்! எல்லாரிடமும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகும் பெண்மணி! முன் ஜாக்ரதை, திட்டமிடுதல், இதற்கெல்லாம் நளினியை மிஞ்ச முடியாது!

    சரி! புறப்படலாமா?

    சகலமும் எடுத்துக் கொண்டார்கள்!

    சாமி கும்பிட்டு கதவை ஜாக்ரதையாக பூட்டி விட்டு, காரில் ஏறினார்கள்!

    அம்மா! அவங்க வீட்ல சாப்பிடச் சொன்னா சாப்பிடணுமா? அர்ச்சனா கேட்க,

    முன் பின் பழக்கமில்லாத எடத்துல எப்படி சாப்பிடறது? அபிஷேக் கேட்க,

    பாக்கலாம்டா! அவங்க நல்ல மனுஷங்க! நமக்கும் பூஜாவைப் புடிச்சிருக்கு! நட்பு முறைல அவங்க சாப்பிடச் சொன்னா தாராளமா சாப்பிடலாம்!

    அதனாலதான் காலைல டிபனே தராம வெறும் காபியை மட்டும் குடுத்து எங்களைக் கூட்டிட்டுப் போறியா? வாசுதேவன் கேட்க,

    இது கொஞ்சம் ஓவரா இல்லை? அபிஷேக் கேட்க,

    அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து சிரிக்க,

    இதுக்கெல்லாம் அங்கே போய் பதில் சொல்றேன் நான்! அபிஷேக் காரை எடுத்தான். குடும்பமே சிரிப்புடன் உற்சாகமாக புறப்பட்டது!

    அரைமணி நேரத்தில் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு வாசலில் இருந்தார்கள்.

    காரை உள்ளே விட அனுமதியில்லை! வெளியே நிறுத்தி விட்டு இறங்க, பூஜாவின் அப்பா செல்வம், அம்மா நித்யா வெளியே ஓடி வந்தார்கள்!

    வாங்க! காரை உள்ளே விட்டுக்கலாம்!

    பரவால்லீங்க! பாதுகாப்பாத்தான் இருக்கு!

    உன்ளே அழைத்து வந்தார்கள். செல்வம் - நித்யா தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் வெளியூரில் - அதனால் வரவில்லை. அடுத்தவள் பூஜா. மூன்றாவது நிஷா கல்லூரியில் கடைசி வருஷம்! செல்வம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை! அம்மா குடும்பத் தலைவி! இது வாடகை வீடு!

    உள்ளே அழைத்து வர, அந்தக் கடைசிப் பெண் நிஷா ஒரு ஓரமாக நின்றாள்!

    ஒக்காருங்க! நிஷா! குடிக்கத் தண்ணி கொண்டு வா!

    பூஜா எம்.காம் முடித்து வங்கி ஒன்றில் வேலை. இவர்கள் தண்ணீர் குடிக்க, அடுத்தபடியாக காபி வந்தது! பருகினார்கள்!

    நித்யா! பூஜாவை வரச் சொல்லு!

    பூஜா இயல்பாக சூடிதாருடன் பளிச்சென வெளியே வந்தாள். முகத்தில் இயல்பான சிரிப்பு!

    ஒரு வணக்கம் சொன்னாள்!

    நளினி, அவளை தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்!

    உனக்கு இங்கிருந்து பேங்க் பக்கமா?

    இல்லை ஆன்ட்டி! பத்து கிலோ மீட்டர். டூவிலர்லதான் போகணும்!

    நம்ம வீட்லருந்து நடக்கற தூரம்மா! அர்ச்சனா சொன்னாள்! பொதுவாகப் பேசினார்கள். மகனை 'நிமிர்ந்து பார்த்தாள் நளினி!'

    அவன் முகத்தில் சிரிப்பு! சம்மதம் என தலையசைப்பு!

    நளினி நிமிர்ந்தாள்!

    ஜாதகம் பொருந்தியாச்சு! போட்டோ பார்த்தாச்சு! இப்ப நேர்ல வந்தாச்சு! எங்க அபிக்கு, பூஜாவை புடிச்சிருக்கு. எங்களுக்கும் பூரண திருப்தி! அதனால நீ அவ கூடப் பேசணுமா அபி?

    அபிஷேக் சிரித்தான்!

    பூஜா சம்மதிச்சா?

    உள்ள வாங்க! சொன்னபடி பூஜா

    Enjoying the preview?
    Page 1 of 1