Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mannippom
Mannippom
Mannippom
Ebook68 pages27 minutes

Mannippom

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தாய் தந்தையரின் பிரிவு பிள்ளைகளை எவ்வளவு பாதிக்கும்... அதைவிட மனைவியின் பிரிவு கணவனுக்கு எவ்வளவு கொடியது... தன் அன்பான கணவனையும், அழகான பிள்ளைகளான சுகந்தி மற்றும் தேவாவை பிரிந்து தவறான பாதையில் செல்கிறாள் தாய்... இந்நிலையில் சுகந்தி, கைலாஷ் திருமண பேச்சு... சுகந்தி கைலாஷிடம் தன்னை மணந்துகொள்ள ஒரு கோரிக்கை விடுக்கிறாள்... சுகந்தியின் கோரிக்கையை கைலாஷ் ஏற்றுக்கொள்வானா? அப்படி என்ன கோரிக்கை அது? இந்நிலையில் சுனில் என்பவன் யார்? சுகந்தியின் தாய் சுனிலின் நிலை கண்டு திருந்தக் காரணம் என்ன? நிஷா என்பவள் யார்? சுகந்தியின் தந்தை தன் மனைவியை மன்னிப்பாரா? நாமும் சில சுவாரஸ்யத்துடன்....

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580100606634
Mannippom

Read more from Devibala

Related to Mannippom

Related ebooks

Reviews for Mannippom

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mannippom - Devibala

    https://www.pustaka.co.in

    மன்னிப்போம்

    Mannippom

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அப்பாவுக்கு பலமான ஹார்ட் அட்டாக் வந்து பிழைத்துவிட்டார்.

    ஏறத்தாழ டாக்டர் 24 மணிநேர கெடுவைத்து, எமர்ஜன்ஸியில் வைத்து, சொந்தக்காரர்களுக்குச் சொல்லிக்கொள்ளலாம் என அறிவித்து சகலமும் கைவிட்ட பிறகும் மறுநாள் விடியலில் அப்பா கண் விழித்தது பாத்த ஆச்சர்யம்!

    சுகந்தியால நம்ப முடியவில்லை!

    இன்னும் 30லகரம் ஆஸ்பத்திரியில் இருந்த பிறகு வீட்டுக்கு அழைத்துப் போகலாம் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.

    சுகந்தி ஆபீஸ்க்கு லீவு போட்டுவிட்டு, ஆஸ்பத்திரியில் முழுக்க முழுக்க அப்பாவுடன் இருந்தாள்.

    நினைவு தெளிந்தும் முழுமையாகப் பேசும் நிலைக்கு அப்பா இன்னும் வரவில்லை!

    அப்பாவுக்கு வயசு ஐம்பத்திரெண்டு! உத்யோகத்தில் இருப்பவர் ஓரளவு நல்ல பதவி - தனியார் வங்கியில்.

    சுகந்தி ஒரு பெண் - சமீபத்தில் தனது போஸ்ட் கிராஜுவேஷனை, கம்ப்யூட்டரை முடித்த கையோடு அரசாங்க நிறுவனம் ஒன்றில் இளநிலை அதிகாரியாக பதவியேற்ற 22 வயதுப் பெண். அவளது தம்பி தேவா - வயசு 19... கல்லூரியில் இரண்டாம் வருஷம் பிகாம்!

    அமைதியான குடும்பம்!

    சுகந்திக்கு ஆறு வயது... தேவாவுக்கு மூன்று வயது... அம்மா இறந்துவிட்டாள். அதன் பிறகு முழுக்க முழுக்க அப்பாவின் வளர்ப்புதான்.

    இவர்களை வளர்க்க இன்னொரு கல்யாணம் என்ற பெயரில் தன் உடம்புக்கு தீனிபோட அப்பா விரும்பவில்லை.

    ஒரு கர்ம யோகியாக இருந்து குழந்தைகளை வளர்த்தார். சமையல் தெரியும்.

    வீட்டை கண்ணாடி போல சுத்தமாக வைத்திருப்பார்.

    குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை!

    ஒரு அம்மா என்னல்லாம் செய்வாளோ - அதையெல்லாம் செய்து குழந்தைகளை குறை தெரியாமல் வளர்த்திருந்தார். அதனால்தான் அப்பா என்றால் இருவருக்கும் உயிர்.

    அப்பாவின் உயிருக்கு கெடு வைக்கப்பட்டதும் துடித்துப் போனார்கள்.

    வேண்டாத தெய்வம் பாக்கியில்லை!

    இதோ அப்பா பிழைத்துவிட்டார்!

    சுகந்திக்கு கூட்டம் சேர்க்கப் பிடிக்கவில்லை! அப்பாவின் சகோதர, சகோதரிகள் உண்டு.

    யாருக்கும் சொல்லி விடவில்லை.

    ஒரு வார காலம் ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு டாக்டர் டிஸ்சார்ஜ் கொடுத்துவிட்டார்.

    சுகந்தியை தனியாக அழைத்தார்.

    இதப்பாரும்மா! இனிமே ரொம்ப ஜாக்ரதையா அவரைப் பாத்துக்கணும். லேசா ஒரு தடுக்குத் தடுக்கிவிட்டாக்கூட உயிர் போயிடும்!

    "இங்கியே அவர்

    Enjoying the preview?
    Page 1 of 1