Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaalangalil Aval Vasantham
Kaalangalil Aval Vasantham
Kaalangalil Aval Vasantham
Ebook80 pages26 minutes

Kaalangalil Aval Vasantham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நாவலின் நாயகி"ஜீவா", உங்களோடு பேச வருகிறாள். நல்ல பதவி, அழுகு, எல்லாமிருந்தும் முப்பத்தைந்து வயது கடந்தும், தனக்கென குடும்பம், வாழ்க்கை என மகிழ்ச்சியில் திளைக்காமல் மற்றவர்கள் சந்தோஷத்தையே விரும்பினாள்.

இவளுக்கும் காதல் வந்தது, வாழ்க்கை என்னும் ஓடத்திலே அவள் பயணம் அமையவில்லை.பிறர் மகிழ்ச்சியை சிதைத்துவாழ விரும்பாத அற்புதமான இந்த பெண் தேர்ந்தெடுத்த முடிவு என்ன? படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.

நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580128604652
Kaalangalil Aval Vasantham

Read more from Kanchi Balachandran

Related to Kaalangalil Aval Vasantham

Related ebooks

Reviews for Kaalangalil Aval Vasantham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaalangalil Aval Vasantham - Kanchi Balachandran

    https://www.pustaka.co.in

    காலங்களில் அவள் வசந்தம்

    Kaalangalil Aval Vasantham

    Author:

    காஞ்சி பாலசந்திரன்

    Kanchi Balachandran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanchi-balachandran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிங்கப்பெருமாள் கோயில்! நெடுஞ்சாலையில் இருந்து விலகி சற்றே நடந்தால் அந்த தெருவினை அடைந்து விடலாம்.

    ‘பார்க் அவென்யூ’ புதியதாக உருவாகியிருந்த அந்த குடியிருப்பில் அந்த வீட்டினை எளிதில் அடையாளம் காண முடியும்.

    சுற்றுச்சுவர் அமைக்கப்பட்ட அந்த வீட்டைச் சுற்றிலும் ஏராளமான பூச்செடிகள், குரோட்டன்ஸ், பவள மல்லிகை என ரம்மியமாக காட்சியளிக்கும்.

    வாசற்படிக்கு வலது பக்கத்தில் ‘லவ்பேர்ஸ்’ கூண்டு. பறவைகளின் சிணுங்கல் சத்தம். ஒன்றையொன்று முத்தமிட்டு கொஞ்சம் அழகு! எப்படிப்பட்ட மன அழுத்தத்தையும் அந்த பறவைகளைப் பார்த்தாலே பறந்து போகும் வியாதி. வீட்டு ஹாலில் வைக்கப்பட்டிருந்த அந்த மீன் தொட்டியில் துள்ளி விளையாடும் அழகான அந்த கலர் மீன்கள் நம்மை சந்தோஷத்திலே ஆழ்த்தும்.

    இவற்றையெல்லாம் விட அந்த வீடு ரொம்ப சுத்தமாயிருக்கும். எப்படி பராமரிக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுக்கும்.

    அந்த வீடு மற்றும் எல்லாவற்றையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அவளது வேலை. ஆனால், அவளால் எந்த ரம்மியமான சூழ்நிலையையும் ரசிக்க முடியாது.

    ஜீவா!

    இளமையைத் தொலைத்து விட்டவள்.

    தனது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாதவள். தனது குடும்பத்தாருக்கு தனக்கு பின்னால் பிறந்த 4 தங்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள்.

    மெழுகுவர்த்தி தன்னையே உருக்கிக் கொண்டு வெளிச்சம் தருவதைப்போல அவள் கோவில் தீபமாக ஒளி வீசுகிறாள். அந்த குடும்பத்திற்காக சந்தோஷம் என்ற வார்த்தையை எடுத்து வீசி எறிந்து விட்டாள்.

    அந்த இல்லத்தில் ரசனையாக செடி கொடிகள், மீன் தொட்டிகள், காதல் பறவைகள் எல்லாமிருந்தும் அவள் மனதிலே ஏதோ ஒரு சோகம்.

    விடை கிடைக்காத அல்லது விடை தேட முடியாத நிலையிலே அவளிருந்தாள்.

    முப்பத்தி ஐந்து வயது முடிந்து நாற்பதைத் தொட சில ஆண்டுகளே இருந்தது. திசை தெரியாத கப்பலில் தனது பணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

    விடியற்காலை!

    வழக்கமாக எழும் நேரம். எழுந்து விட்டாள் ஜீவா. குளித்தாள், சாமி முன்னாள் நின்றாள். பிரார்த்தனை சில நிமிடம் ஓடியது. அந்த அழகான வீட்டில் அவளும், அவள் அப்பா தேவன் மட்டுமே இருந்தார்கள். அவளுக்கு தாம்பரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் மேலாளர் பணி. ஒன்பது மணிக்கு வங்கியில் அவள் இருக்க வேண்டும்.

    அவசர அவசரமாக வீட்டின் வேலைகளை முடித்தாள். டிபன், சாப்பாடு செய்து முடித்து அதை ஒரு டப்பாவிலே போட்டு அடைத்து டைனிங் டேபிளில் அப்பாவுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்து நிமிர்ந்தாள்.

    கடிகாரம் 8.10 என்று நினைப்பூட்டியது.

    அப்பா! நான் பேங்குக்கு போயிட்டு வர்றேன்.

    ம்...ம்...

    அப்பா

    என்ன?

    சாயந்திரம் வரும்போது, ஏதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா?

    தேவையில்லை.

    சாப்பாடு, டிபன்...

    என்ன சனியனே! உயிரை வாங்குறே!

    என்னப்பா சொல்றீங்க!

    காதிலே விழல்லையா, சனியனே!

    நான் உங்க பொண்ணுப்பா, ஏம்பா இப்படி பேசறீங்க?

    என்னது நீ என் பொண்ணா?

    யார் சொன்னது? செத்துப்போனாளே உங்க அம்மா மானங்கெட்டவ அவ சொன்னாளா?

    அம்மாவை ஏம்பா வம்புக்கு இழுக்கிறீங்க?

    ஆமாம். நான் அப்படித்தான் பேசுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது. எனக்கு துரோகம் பண்ணிட்டு போன உங்க அம்மாவையோ உங்களையோ என்னால் ஒரு காலும் ஏத்துக்க முடியாது.

    அப்பா இனிமேலும் உங்ககிட்டே பேச நான் தயாரில்லே. இவ்வளவு கேவலமான மனுஷனை நான் இதுவரையிலே எங்குமே பார்த்ததில்லே! நீங்க ஏதாவது பேசிக்கிட்டேயிருங்க. நான் வர்றேன். வேகமாக வெளியே வந்தாள்.

    மனசு ஏதோ கனமானது. அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பறவைகள் கூண்டு அருகே நின்றாள்.

    தான் எதற்காக

    Enjoying the preview?
    Page 1 of 1