Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naane Varuven
Naane Varuven
Naane Varuven
Ebook94 pages30 minutes

Naane Varuven

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Devibala
Languageதமிழ்
Release dateMay 2, 2020
ISBN9781043466930
Naane Varuven

Read more from Devibala

Related to Naane Varuven

Related ebooks

Reviews for Naane Varuven

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naane Varuven - Devibala

    1

    அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

    நிம்மதியாக மகள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு, வைத்ததுதான் சட்டம் என்று அதிகாரப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வந்து விடுமோ என்று பயம்.

    மாதவன் அழைத்து விட்டான்.

    நம்ம வீட்டுக்குப் போகலாம்! வாம்மா!

    மாது... நான்... நானா...?

    நீதான். நீ இல்லாம நான் எப்படீம்மா சமாளிப்பேன்? வீட்ல குழந்தைகளைப் பார்த்துட்டு நீ இருந்துட்டா, நான் நிம்மதியா வேலைக்குப் போவேன். வந்துரும்மா!

    அதில்லப்பா! என் உடம்புல ஆயிரம் வியாதிகள். மாத்திரை, மருந்துல வாழ்ந்துகிட்டிருக்கேன் நான். என்னையும் சேர்த்துச் சுமக்கணும் நீ! வேண்டாம் ராஜா! கஷ்டம்.

    என்னம்மா பேசற நீ! உன்னை என்னிக்கு நான் சுமையா நெனச்சிருக்கேன். மஞ்சு இருக்கும்போதே, ரெண்டு பேருமா உன்னை அழைக்காத நாளில்லை! அப்ப நீ வரலை. போகட்டும். இப்ப நானும், குழந்தைகளும் மட்டும்தான் வாயேன்மா!

    அம்மா ஏதோ சொல்ல வாய் திறந்தாள்.

    அதற்குள் தங்கை வீட்டுக்காரர் வந்துவிட, பேச்சு தடைபட்டது!

    மாதவன் வெளியே போய்விட்டான்.

    மாதவன் வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாகத்தான் இருந்தது.

    மாதவனுக்கு மத்திய அரசாங்கத்தில் வேலை! நல்ல சம்பளம்! மஞ்சுவை அவன் கல்யாணம் செய்து கொண்ட சமயத்தில் மஞ்சுவும் ஒரு பள்ளிக்கூடத்தில டீச்சராக இருந்தாள்...

    அந்த சமயத்தில் அப்பாவும் உயிரோடு இருந்தார்.

    ஒரு வருட காலத்தில் அப்பா இறந்தார். மஞ்சுவின் ராசி என்றெல்லாம் அம்மா வசைபாடித் தீர்த்தாள்.

    மாதவனுக்கு ரெண்டு சகோதரிகள்..

    ஒருத்தி உள்ளூரில்! அடுத்தவள் திருநெல்வேலியில்! அம்மாவுக்கு மகளிடம் இருக்கத்தான் பிடிக்கும்.

    இத்தனைக்கும் மஞ்சு எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டாள். அம்மா வைத்ததுதான் சட்டம்.

    முதல் குழந்தை, பிறந்து மஞ்சு வீட்டுக்கு வந்ததும், அம்மா, தங்கை வீட்டுக்குக் கம்பி நீட்டிவிட்டாள்.

    குழந்தையை பார்த்துக்கொள்ள ஆளில்லை!

    மாதவன் கெஞ்சிப் பார்த்தான்.

    அம்மா மசிவதாகத் தெரியவில்லை.

    உன் பெண்டாட்டி சம்பாதிக்கணும். உனக்குக் கைநிறைய காசு வேணும்னு வயசான என்னை கஷ்டப்படுத்தறியா?

    மாதவன் அதன்பிறகு அழைக்கவில்லை.

    மஞ்சு முடிந்தவரை லீவெடுத்தாள்.

    அதன்பிறகு வேலையை விடும் நிலைமை!

    குழந்தையை க்ரச்ல விட்ரலாமா?

    வேண்டாம் மஞ்சு! எனக்குப் பிடிக்கலை. நீ வேலையை விட்ரு!

    மாசம் ரெண்டாயிரம்...

    போகட்டும். நான் ஓவர் டைம் செஞ்சு அதை ஈடுகட்டிக்கறேன். நீ ராஜினாமா பண்ணிரு!

    மஞ்சு, விவாதம் பண்ணவில்லை. விட்டு விட்டாள்,

    ரெண்டு வருஷம் கழித்து அடுத்த குழந்தை!.

    அதற்கு ஒரு வயதாகும்போது மஞ்சுவின் அப்பா இறந்து போனார்.

    அம்மா அண்ணன் வீட்டுக்குப் போய்விட்டாள்.

    மஞ்சுவின் குழந்தைகளும் நல்ல குழந்தைகள். நாலு வருட வாழ்க்கை எந்தப் பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் இருந்தது.

    யார் கண் பட்டதோ, என்ன கஷ்டகாலமோ... மஞ்சுவுக்கு அந்தக் காய்ச்சல் வந்தது.

    அது சாதாரண ‘ஜுரம்தான் என்று மாதவன் நினைத்தான்.

    ஆனால் மருந்துகளுக்கு அடங்கவில்லை.

    லோக்கல் டாக்டரின் மருந்து... செல்லுபடியாகவில்லை!

    ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பார்த்தார்...

    இது ஒரு மாதிரி விஷஜுரம். ஆஸ்பத்திரில சேர்த்துடுங்க

    மாதவன் பதறிவிட்டான்.

    மஞ்சுவை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அம்மாவுக்குத் தகவல் தந்தான்.

    அம்மா வரவேயில்லை.

    மாமியாருக்கு விவரம் தெரிவிக்க, மூன்றாவது நாளே மாமியார் வந்து விட்டாள்.

    அத்தே! குழந்தைகளை நீங்க பார்த்துக்குங்க! மஞ்சுகூட ஆஸ்பத்திரில நான் இருக்கேன்.

    சரி மாப்ளை!

    மஞ்சு கூடவே இருந்தான்.!

    டாக்டரின் சிகிச்சையில் தேறி ஒரு வாரத்தில் மஞ்சு வீடு திரும்பிவிட்டாள்.

    மாதவன் ஆபீஸ் போகத் தொடங்கிவிட்டான்.

    மாமியாரை மறுநாள் பஸ் ஏற்றிவிட வேண்டும். அன்று இரவு மஞ்சு கொட கொடவென வாந்தி எடுத்தாள். மயங்கி விழுந்தாள்.

    திரும்பவும் டாக்டர்.

    உடனே அட்மிட் பண்ணுங்க

    24 மணிநேர அவகாசம் தரப்பட்டது.

    மாதவன் மிரண்டு போனான்.

    அதனால் 12 மணி நேரம் கூட மஞ்சு தாக்குப் பிடிக்கவில்லை. போய்ச் சேர்ந்து விட்டாள்.

    ஏழு வயதில் ஒரு பெண்! நாலு வயதில் ஒரு பையன்...

    மாதவன் நிலைகுலைந்து போயிருந்தான்.

    ‘எட்டு வருட தாம்பத்யம் இத்தனை சீக்கிரமா முடிவுக்கு வரும்?’

    ‘ஓ... மஞ்சு எத்தனை அற்புதமான மனைவி?’

    அம்மா உட்பட சொந்த பந்தங்கள் மொத்தமும் கலைந்து போயின.

    மகளை இழந்ததால அழுது துடித்த மாமியாரும், மகனுடன் புறப்பட்டுப் போனாள்.

    மாதவன் எத்தனை நாளைக்கு வேலைக்குப் போகாமல் இருக்க முடியும்?

    ‘குழந்தைகள் சாப்பிட வேண்டாமா?’

    ‘வேலைக்குப் போனால் குழந்தைகளின் நிலை?’

    ‘தாயில்லாக் குழந்தைகள் வேறு!’

    ‘அம்மா வந்துதான் ஆக வேண்டும்.

    Enjoying the preview?
    Page 1 of 1