காகிதப்பூக்கள்
By Devibala
()
About this ebook
மறுநாள் இரவு அர்ஜூன் டூர் முடிச்சு வந்து விட்டான்! இந்த முறை மும்பை, பூனா என்ற டூர் போயிருந்தான் அர்ஜூன்!
போனா வாலா போய், அம்மாவுக்கு பிடித்த சிக்கி எனப்படும் கடலை, எள் மிட்டாய் வகைகளை வாங்கி வந்திருந்தான்! அர்ஜுன் விளையாட்டுத்தனமாக இருப்பான்!
ஆனா குடும்பப் பாசம் நிறையாவே உண்டு!
சுயநலக்காரன் இல்லை ஏறத்தாழ பார்த்தியின் குணம்தான்!
நடுவில பிறந்த சுந்தர் தான் பாதை மாறி விட்டான். காதல் காரணமாக!
ஆனால் அர்ஜுன் நிறைய செலவழிப்பான்! உடைகள், செண்ட் வகையறாக்களை, விதம் விதமான ஷூக்கள், விலை உயர்ந்த மொபைல் போன்கள், 2பேட், லேப்டாப் என மார்க்கெட்டில் வரும் புதுச்சரக்கு உடனே அர்ஜுனிடம் வந்து விடும்!
மாதம் தோறும் பதினாறாயிரம் அம்மாகையில் கொடுத்து விடுவான்! அதற்கு மேல் ஒரு பைசா தரமாட்டான்!
ஆனால் வீட்டுக்கு வாங்கி வரும் பொருட்கள் சோபா கட்டில்கள், காட்டன்கள், புதிய 48 அங்குல சோனி டீவி என அழகுப்படுத்தி விட்டான்.
ஏரியா மேனேஜர் ஆகிவிட்டதால் சம்பளமும் எண்பதாயிரம் வரை உயர்ந்து விட்டது!
அம்மா விடமாட்டாள்!
"மிச்சம் இருபத்தஞ்சாயிரமா குடேன்டா! உனக்கு சம்பளம் உயரும் போது! நீ எனக்குத் தர்றதும் உயர வேண்டாமா?"
"வீட்டை அழகு படுத்தறேனே! அது எந்தக் கணக்கு!"நியாயம்தான்டா!"
பார்த்திக்கு அவன் செல்லத்தம்பி!
அவனுக்கும் அண்ணனிடம் பாசமுண்டு!
"அண்ணனே! ரெண்டு லட்சம் செலவு பண்ணி உன் வழுக்கை தலையை மாத்தட்டுமா? தொப்பையை குறைக்க, பணத்தைக் காட்டி உன்னை அழகா மாத்தட்டுமா?"
"சரிடா அர்ஜுன்" அம்மா சொல்ல,
"பேசாம இரு! முப்பதை தாண்டியாச்சு! இனி எதுக்கு அழகு!"
"அண்ணா! சினிமாவில் பிரபல நாயகர்கள் எல்லாருமே நாற்பது கடந்த வயசு தான்! உச்சந்திக்கு வரும் போது அம்பது தாண்டும்! மக்கள் ரசிக்கல?"
"அதுவேறடா! ரசிகர்கள் மறக்கக்கூடாதுனு வயசை மறைக்க அவங்க பண்றது நியாயம்!"
"ஒரு அண்ணியைக் கொண்டு வர, நாமும் பாடுபட்டா தப்பா?"
"அப்படி கேளுடா என் சிங்கக் குட்டி!"
"சந்தோஷம்டா அர்ஜுன்! தானா உருவத்தை தாண்டி என்னை நேசிக்கிற ஒருத்தி வரணும்! அதுதான் நடக்கும்! அழகும், வாலிபமும், கொஞ்ச காலம் தான்"
"நியாயம்தான் வேஷம் போட்டு, அதுக்கு பல ஆயிரங்கள் கறைக்கறது விரயம்தான். சுந்தர் அழகா இருக்கான். காதலிச்சான்! எல்லா தகுதிகளும் இருக்கு என்ன லாபம்! நிம்மதி இல்லையே?"
அழகைக்கூட வாடகைக்கு எடுக்கலாம்டா தம்பி! நல்ல மனசை விலைக்கு வாங்க முடியாது!"
கடந்த ஒரு வருடமாக இதுதான் விவாதம்!
அர்ஜுனும் சகாப்தம் இல்லையா!
ஆனால் பார்த்தி எதற்கும் மசியவில்லைஇதோ அர்ஜுன் வந்து விட்டான்!
இரவு சாப்பாடு முடிந்தது!
"அர்ஜுன்! அடுத்த டூர் எப்ப?"
"பத்து நாளைக்கு உள்ளூர்தான்! இனி டூர் இருக்காது அண்ணே! அடுத்து ப்ரமேஷன் வரப் போகுது! அப்புறமா இங்கேதான்!"
"சூப்பர்டா!"
"போண்ணே! ஜாலியா இந்தியா முழுக்க சுத்திக்கிட்டு இருந்தேன். அது இனி இருக்காது!"
"போதும்! உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு! பேச்சிலரா இருந்தா சுத்தலாம்! உன் வாழ்க்கையில் ஒருத்தி வரும் போது, நீ சுத்த முடியாது!"
"என்ன சொல்ற?"
"எல்லாம் கூடி வருது! உனக்குக் கல்யாணம் செய்யணும்னு சொல்றேன்!"
"உனக்கு முதல்ல நடக்கட்டும்!"
"போடா அதுக்காக நீ காத்திருந்தா, உனக்கு அம்பது தாண்டிரும்! இப்ப உள்ள அழகு போய், நீயும் என்னை மதிரி ஆகணுமா!"
"பாருடா அர்ஜுன்?"
"இதப்பாருடா தம்பி! பாசாங்கு வேண்டாம்! பிராக்டிலா சிந்திக்கலாம்! என் கல்யாண பேச்சு இனி வேண்டாம். உனக்கு நடக்கட்டும்!"
"இல்லைடா அர்ஜுன்! ஜோசியர் என்ன சொன்னார் தெரியுமா?"
"தேடி வரும்னு சொல்லிட்டார். அதுக்காக நான் காத்துக்கிட்டிருக்க தயார்!"
"அண்ணே! நாமும் முயற்சி செய்ய வேண்டாமா!முயற்சி செஞ்சு, மூக்கு அறுபட்டது போதாதா தம்பி? விட்டுடு இப்ப நான் கேக்கறேன்! உனக்கு யார் மேலேயாவது ஈடுபாடு இருக்கா?"
"நிறுத்துடா! சுந்தர் செஞ்ச தப்பை இவனும் செய்யணுமா?"
"எல்லாருக்கும் தப்பாவே நடக்கும்னு ஏன் நினைக்கிற?"
"சுந்தருக்கும் எதுவும் தப்பாகலே நம்மை அவன் உதறிட்டா நிம்மதியா இருப்பான்!
Read more from Devibala
அதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsகைகேயி - 96 Rating: 0 out of 5 stars0 ratingsசீதைக்கு ராமன் சித்தப்பா Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணகி - '96' Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்ச(ம்) வா! Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsபல்லக்கில் ஏறு... Rating: 0 out of 5 stars0 ratingsஊர்மிளா - '96' Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsசின்ன மணிக் குயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsசரித்திரம் திரும்புகிறது! Rating: 0 out of 5 stars0 ratingsவேண்டாம் விளையாட்டு! Rating: 0 out of 5 stars0 ratingsசிரிக்காமல் விடமாட்டோம்! Rating: 0 out of 5 stars0 ratingsஆலயப் பூக்கள்... Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsகூட்டத்திலே கோயில்புறா... Rating: 0 out of 5 stars0 ratingsமூச்சுவிட நேரமில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsஉள்ளத்தால் துடிக்கிறேன்! Rating: 0 out of 5 stars0 ratingsதொடாமல் நான் மலர்ந்தேன்! Rating: 0 out of 5 stars0 ratingsமேடைக்கு வாங்க! Rating: 0 out of 5 stars0 ratingsபட்டு வண்ண ரோஜா! Rating: 0 out of 5 stars0 ratingsசந்தியா... வந்தியா...? Rating: 0 out of 5 stars0 ratingsபோகட்டும், விடு..! Rating: 0 out of 5 stars0 ratingsசிறகுகள் விரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsபத்தி எரியுது! Rating: 0 out of 5 stars0 ratingsகண் சிமிட்டும் காதல்! Rating: 0 out of 5 stars0 ratingsஅவளுக்கு பெயர் அக்னி..! Rating: 0 out of 5 stars0 ratingsதாய் பிறந்தாள்! Rating: 0 out of 5 stars0 ratings
Related to காகிதப்பூக்கள்
Related ebooks
Kaagitha Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuven Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Kan Simittum Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsகண் சிமிட்டும் காதல்! Rating: 0 out of 5 stars0 ratingsNaane Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsDhrogam Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsMounam Pesattum Rating: 5 out of 5 stars5/5மௌனம் பேசட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsAruke Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsமேடைக்கு வாங்க! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsகடைசிவரை யாரோ Rating: 0 out of 5 stars0 ratingsKadaisivarai Yaaro Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Yaathumagi Nindrai Rating: 0 out of 5 stars0 ratingsKaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsமம்மி-ரம்மி! Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsPanama... Pasama... Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsஒரு வழிப் பாதை Rating: 0 out of 5 stars0 ratingsதாழ் திறவாய்..! Rating: 0 out of 5 stars0 ratingsசிம்ம சொப்பனம்..! Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsதொடாமல் நான் மலர்ந்தேன்! Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for காகிதப்பூக்கள்
0 ratings0 reviews
Book preview
காகிதப்பூக்கள் - Devibala
1
அம்மா மீனாட்சி ஆஸ்பத்திரிலிருந்து அன்றைக்குத்தான் வீடு திரும்பியிருந்தாள்.
போன வாரத்தில் எக்கச்சக்கமாக ரத்த அழுத்தம் ஏறி, உண்டு இல்லையென்று ஆகிவிட்டது.
மயமக்கமடைந்து கீழே விழ, அந்த நேரத்தில் வீட்டில் யாருமில்லை பக்கத்து வீட்டம்மா எதார்த்தமாக இந்தப்பக்கம் வர, இதைப்பார்த்து பதறியடித்து வீட்டுக்கு ஓடி, தன் கணவரிடம் சொல்ல, அவர் வந்தார்.
அவங்க பையனுக்கு போன் போடுங்க.
இப்ப அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் ஆட்டோ கொண்டு வர்றேன். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடலாம்.
உடனே ஆட்டோவில் அருகிலுள்ள ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போனார்கள்.
போகும் வழியில் மீனாட்சியின் மூத்த மகன் பார்த்திபனுக்கு போன் செய்துவிட, ஆஸ்பத்திரிக்கு போன பத்தாவது நிமிடம் பார்த்தி வந்து விட்டான்.
பிபி அதிகமாக ஏறியிருக்கு. உடனே அட்மிட் பண்ணுங்க. இப்படி ஏறக்கூடாது நல்லதில்லை.
அட்மிஷன் நடந்தது.
உடனே அதைக் குறைக்கும் நடவடிக்கை தொடங்கியது.
தல் ஒரு நாள் மயக்கமிருந்தது!
பார்த்திபனுக்கே பயமாக இருந்தது.
மறுநாள் மாலைதான் பிபீ குறைந்து ஒரு சரி நிலைக்கு வந்து கண் விழித்தாள்.
ஓவரா பதட்டப்படுவீங்களா?
அம்மா வாழறதே அதுலதான்.
தப்பும்மா! இதய நோய், கிட்னி பிரச்சனை, பக்கவாதம் இப்படி எதுலயாவது கொண்டு போய்விட்டா, நிரந்தர நோயாளி ஆயிடுவீங்க. உங்களுக்கும் கஷ்டம், மத்தவங்களுக்கும் பாரம் அது சரியானதில்லையே.
புரியுது டாக்டர். ஆனா டென்ஷன் படாம இருக்க முடியலையே.
எல்லாம் நடக்கிறதுதான் நடக்கும்.
நல்லா சொல்லுங்க டாக்டர்!
பார்த்தி சொல்ல,
குடும்ப சூழ்நிலை அப்படி டாக்டர்.
தப்பும்மா சூழ்நிலை எதுவா இருந்தாலும் அதைக்கடந்து மீண்டும் வர்றது தான் சாமார்த்தியம். நீங்க இவங்க மகனா.
ஆமாம் டாக்டர்.
நீங்க இனி இந்த மாதிரி வராம பாத்துக்கங்க. உங்க மனைவி ஊர்ல இல்லையா.
எனக்கு கல்யாணம் ஆகலை டாக்டர்
பார்த்திபன் சொல்ல,
டாக்டரின் பார்வையில் கேள்வி இருந்தது.
உயரம் குறைவு! தடித்த உடம்பு பெரிய தொப்பை என பார்த்தியை பார்த்தாலே முப்பது கடந்த மனிதன் என்பதை குழந்தைகூடச் சொல்லி விடும்.
கல்யாணம் ஆகலையா? ஏன். இதுதான் இந்த அம்மாவின் கவலையா? சரி! வீட்ல யாரு பெண் உறவு.
தற்சமயம் அப்படி யாரும் இல்ல டாக்டர்! அம்மாதான் எல்லாத்தையும் பார்த்துக்கறாங்க.
நீங்க ஒரே மகனா.
இல்லை டாக்டர்! மூணு பேர். நான் மூத்தவன்! என்னோட அடுத்த தம்பிக்கு கல்யாணமாகி உள்ளூர்ல தனியா இருக்கான். அவனுக்கு ஒரு குழந்தை மூணாவது தம்பி மெடிக்கல் ரெப்! இருபது நாலும் டூர்ல இருப்பான். சகோதரிகள் இல்லை.
சரி! அவங்களுக்கு ஓய்வு தரணும்! நீங்க எங்கே வேலை?
நான் ஒரு கவர்மென்ட் ஆபிஸ்ல செக்ஷன் ஆபீசரா இருக்கேன் டாக்டர்.
அம்மா ஜாக்கரதை! நாலு நாள் இங்கே இருக்கட்டும்.!
டாக்டர் போய்விட்டார்.
பார்த்தி! அத்தைக்கு தகவல் சொல்லுடா.
அவங்க ஊர்ல இல்லைம்மா! குடும்பத்தோட டெல்லிக்கு போயிருக்காங்க.
அர்ஜுனுக்கு போன் பண்ணினியா.
அவன் பாதி டூர்ல இருப்பான்! அவரசமா வந்து என்ன செய்ய போறான். நான் உன்னோட இருந்தா போதாதா?
சரிப்பா.
அடுத்த நாளும் பாத்தி இருந்தான்.
மேலும் இரண்டு நாட்கள் நர்சே பார்த்துக்கொண்டான். பார்த்தி யாருக்கும் இதைச் சொல்லவில்லை.
இதோ முப்பதாயிரத்தை முழுங்கிவிட்டு வீடு திரும்பிவிட்டார்கள்.
அம்மாவை படுக்கவைத்துவிட்டு மதிய உணவைத் தயாரிக்க பார்த்தி சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.
நீ படு! உடம்பை பார்த்துக்கோம்மா. நான் பார்த்துக்கறேன்!
பாவம்டா நீ! ஒரு ஆம்பிளையா இருந்து.
ஆமாமா நீ தேவையில்லாம டென்ஷன் பட்டா, கஷ்டம் எனக்குத்தான் அதைப் புரிஞ்சிக்கோ.
சாதம் வைத்து, மிளகு ரசம் தயாரித்தான். ஒரு துவையல் செய்தான்.
பார்த்தி சுவையாக வேகமாக சமைப்பதில் வல்லவன். சமையலை ரசித்து செய்வான்.
எதுக்குடா உனக்கு இந்த வேலை.
ஆம்பள சமைக்கூடாதான்னு கேட்பான்.
ஆம்பளைங்க சமைக்கமாட்டாங்கன்னு சொல்லுவாங்க! ஆனா பெரிய கல்யாண வீடுகள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு சமைக்கறது பெரும்பாலும் ஆண்கள்தான். அம்மா சமைக்கறதுல ஆர்வம் வந்துட்டா, ருசி தன்னால வந்துரும்.
காலையில் அம்மா மீனாட்சி சமைத்துவிடுவாள். அவளுக்கு முடியாத நாளில் பார்த்தி எழுந்து செய்து விடுவான். இந்த உணவை பெரும்பாலும் தயாரிப்பது அவன்தான் விதம்விதமாக சமைப்பான்.
நண்பர்களை அழைத்துச் சாப்பிட வைப்பான்.
பார்த்தி! உனக்கு வர்ற மனைவி ரொம்ப கொடுத்து வச்சவடா.
யாராவது சொல்லிவிட்டால் போதும்.
அம்மா ஆரம்பிச்சிட்டியா? அதுக்குத்தான் நேரம் காலம் கூடவே இல்லையே?
அம்மா போதும்! தொடங்கிடாதே! அவங்க இல்லைடா சொல்றாங்க! அதைப் பெரிசா எடுத்துக்க வேண்டாம் புரியுதா?
அம்மா அன்றைக்கு சரியாக சாப்பிடமாட்டாள்.
மூட்அவுட் ஆகி விடுவாள்.
பார்த்திக்கு தர்ம சங்கடமமாகிவிடும்.
இதுதான் அந்த வீட்டின் அன்றாட அவஸ்த்தை.
மீனாட்சியின் கணவர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
பார்த்தி மூத்தவன்! இப்போது வயது முப்பத்தி ஐந்து பட்டதாரி படிப்பை முடிந்ததும் மத்திய அரசாங்க உத்யோகம் கிடைத்து விட்ட து.
அப்பா பள்ளிக்கூட வாத்தியராக இருந்தார். அவர் இறக்கும்போது பார்த்தி வேலைக்கு வந்துவிட்டதால் சுலபமாக குடும்ப பொறுப்பை ஏற்றிக்கொண்டுவிட்டான்.
அடுத்தவன் சுந்தர் இவனைவிட ஏழு வயது இளையவன். இப்போது இருபத்தி எட்டு.
மூன்றாவது அர்ஜுன் இருபத்தி ஐந்து. தம்பி ஒரு நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் தனக்கு கல்யாணம் என்று பார்த்தி உறுதியாக சொல்லவிட்டான்.
அர்ஜுன் பட்டம் வாங்கி வேலையில் சேரும்போதே பார்த்திக்கு முப்பதாகி விட்டது.
அதற்குள் சுந்தர் முந்திக்கொண்டு விட்டான்.
சுந்தர் பி.டெக் முடித்து ஒரு கம்பெனியில் வேலை கூடவே வேலை பார்க்கும் வனிதாவை காதலிக்கத் தொடங்கிவிட்டான்.
அந்தப் பெண் வேறு ஜாதி! விவரம் தெரிந்ததும் மீனாட்சி எதிர்க்கத் தொடங்க, காதல் தீவிரமாக இருந்தது.
பார்த்தி விசாரித்தான். படித்த