கொஞ்சிப் பேசக் கூடாதா
By தேவிபாலா
()
About this ebook
காலையில் எழுந்து குளித்து யாரிடமும் பேசாமல், டிபனும் சாப்பிடாமல் சௌந்தர்யா ஆபீசுக்குப் போய் விட்டாள்.
இதை முகுந்தன் கவனித்தார்.
“உன் பொண்ணு வேணும்னே கலாட்டா பண்றாளா? அவளா செய்யறாளா, இல்லைனா நீ தூண்டி விடறியா?”
“ரொம்ப நல்லாருக்குங்க! அவதான் பிடிவாதக்காரி. இது அவ வாழ்க்கை! நீங்களாவது விட்டுப் புடிக்கக் கூடாதா? இது பழைய காலம் இல்லீங்க. எல்லாத்துக்கும் பெண்கள் தலையசைக்க மாட்டாங்க...”
“என்ன சொல்ற?”
“பிள்ளைங்க தோளுக்கு மேலே உசந்துட்டா தோழமைதான் மனசுல இருக்கணும். அதிகாரப்படுத்தினா எதையும் சாதிக்க முடியாது. அவமானத்துலதான் முடியும். ஒரு மனைவியா இருக்கறதால மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்!”
சாந்தா உள்ளே போய் விட்டாள்.
முகுந்தனுக்கு பிடிவாதம் உச்சந்தலை வரை இருந்தாலும் இப்போது நடப்பது கொஞ்சம் அதிகப்படியோ என்ற கலவரம் வந்தது.
‘அவர்கள் வரும் நேரம் ஒருவேளை சௌந்தர்யா வீட்டுக்கு வராமலே இருந்து விட்டால்?’
‘அல்லது வீட்டுக்கு வந்து ஏதாவதொரு வகையில் அவர்களை அவமானப்படுத்தி விட்டால்?’
‘நான் தலை குனிய வேண்டி வரும்!இப்ப என்ன செய்யலாம்? அவர்கள் வருவதை ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தடுக்க வேண்டும். தடுத்தால் என் மகளின் கொடி உயர்ந்து விடும்! அது எனக்கு நாளைக்கு பாதகமாக முடியும்!’
‘வருவது வரட்டும்! சமாளிச்சுக்கலாம்!’
அவரும் அலுவலகம் புறப்பட்டு விட்டார்.
சாந்தா கலக்கத்துடன், என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போனாள்.
மாலை ஐந்து மணிக்கே முகுந்தன் வந்து விட்டார்.
“சாந்தா! எல்லாம் பொருந்திப் போனா, இன்னிக்கே தாம்பூலத்தையும் மாத்திடலாம்!”
“ஏன் இப்படி அவசரப்படறீங்க?”
“அவசரம் இல்லைடி! நம்ம ஜோசியரைக் கலந்து பேசித்தான் இந்த முடிவுக்கு வந்தேன்!”
“என்கிட்ட கோவப்படாதீங்க. ஆனா பேச வேண்டிய நேரத்துல பேசித்தான் ஆகணும். பெண் பார்க்க வர்றதையே விரும்பாத உங்க மகள் தாம்பூலம் மாத்தற வரைக்கும் போனா என்ன ஆவா? ஏங்க... வாழப் போறவ அவ! அதை அவ சந்தோஷமா வாழ வேண்டாமா? நம்ம கடமை முடிஞ்சு போச்சுன்னு அவளைக் கிணத்துல புடிச்சு தள்ளிர்றதா?”
முகுந்தன் அவளை நெருங்கினார்.
பளீரென அறைந்தார். சாந்தா நிலைகுலைந்தாள்.
“நான் அவளுக்கு அப்பன்டி! என் மகளை, நான் கிணத்துல புடிச்சுத் தள்ளுவேனா? என்னடீ பேசற நீ? இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லணும்னா என்ன ஒரு திமிர் இருக்கணும் ஒனக்கு?”
சாந்தா கண்ணீருடன் கன்னத்தைப் பிடித்தபடி நிமிர்ந்தாள்.
“அடிங்க! இந்த வயசுல கூட மானங்கெட்டு உங்க அடிகளையும் வாங்கிட்டு, உங்களுக்கும் ஒரு தர்மபத்தினியா வாழறேன் பாருங்க! எனக்கொரு விடுதலையை கடவுள் நிரந்தரமா என்னிக்கு தரப் போறானோ?”
அழுதபடி உள்ளே ஓடிவிட்டாள்.
Read more from தேவிபாலா
மனசு ஒரு தினுசு! Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsபோர்க்களப் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபழைய பாடம் தேவையில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsநீதான் என் காதலி Rating: 0 out of 5 stars0 ratingsகோடைத் தள்ளுபடி Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsபாகீரதி Rating: 0 out of 5 stars0 ratingsபிரசாதப் பொட்டலம் Rating: 0 out of 5 stars0 ratingsவளர்ப்பு Rating: 0 out of 5 stars0 ratingsகோடையில் பனி மழை! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னோடு ஒரு நாள்! Rating: 0 out of 5 stars0 ratingsதானாகத் தெரியும்! Rating: 0 out of 5 stars0 ratingsபனித்திரை Rating: 0 out of 5 stars0 ratingsசூரியன் சுடவில்லை! Rating: 0 out of 5 stars0 ratingsஅழகான ஆபத்து Rating: 0 out of 5 stars0 ratingsஎப்பவும் உன் நிழலில்! Rating: 0 out of 5 stars0 ratingsசொன்னது என்னாச்சு? Rating: 0 out of 5 stars0 ratingsமயான மலர்கள் Rating: 0 out of 5 stars0 ratingsபெரியவங்க Rating: 0 out of 5 stars0 ratingsபேராசை! Rating: 0 out of 5 stars0 ratingsபட்டாசு பட்டம்மா..! Rating: 0 out of 5 stars0 ratingsபூமாலை போட வா! - II Rating: 0 out of 5 stars0 ratingsவா, சுகி வாசுகி Rating: 0 out of 5 stars0 ratingsமுகம் பார்க்கும் நிலவு Rating: 0 out of 5 stars0 ratingsதுணையிருப்பாள் துர்கா! Rating: 0 out of 5 stars0 ratings
Related to கொஞ்சிப் பேசக் கூடாதா
Related ebooks
Konchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivil Nee Vaa... Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsUn Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsபேராசை! Rating: 0 out of 5 stars0 ratingsPeraasai Rating: 0 out of 5 stars0 ratingsAagayap Panthalile Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsமனசுக்கு மட்டும்! Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsமம்மி-ரம்மி! Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5Kaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsதராசு முள்! Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsதாழ் திறவாய்..! Rating: 0 out of 5 stars0 ratingsThapicha Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsஒரு வழிப் பாதை Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for கொஞ்சிப் பேசக் கூடாதா
0 ratings0 reviews
Book preview
கொஞ்சிப் பேசக் கூடாதா - தேவிபாலா
1
"இந்த வெள்ளிக்கிழமையை விட்டா, ஒரு வாரத்துக்கு நாள் நல்லா இல்லை! அதனால வெள்ளிக்கிழமை சௌந்தர்யாவை பெண் பார்க்க வரச் சொல்லிடலாம்!"
அழுத்தமாக முகுந்தன் சொல்ல,
அவளை ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடலாமா?
அவ குழந்தை! அவளை என்ன கேக்கறது?
அப்படி இல்லீங்க. கட்டிக்கப் போறவ அவ. படிச்ச, உத்யோகம் பாக்கற பொண்ணு! அவ சம்மதம் இல்லாம, அவ விஷயத்துல நாமே முடிவெடுக்கறது நல்லதுங்களா?
இதப்பாருடி! இது கல்யாணம். பெரியவங்கதான் முடிவெடுக்கணும். புரியுதா?
சாந்தா பேசவில்லை.
முகுந்தன் பிடிவாதக்காரர். அவர் நினைத்தது நடந்தாக வேண்டும். மற்றவர் உணர்வுகளை, கருத்துக்களை மதிக்கும் பழக்கம் என்றுமே அவருக்கு இருந்ததில்லை. எதிர்த்தால் ரகளை ஆகி விடும். சொல்லிச் சொல்லி காட்டுவார். தனக்குத்தான் உலக ஞானம் மொத்தமும் என்ற அகந்தை உச்சந்தலை வரை உண்டு.
சாந்தா அவரிடம் போராடித் தோற்று விட்டாள்.
சௌந்தர்யா ஒரே மகள்!
அவள் எந்த ஒரு கருத்தையும் உரக்கச் சொல்ல மாட்டாள். அப்பா சொன்னால் மறுக்கவும் மாட்டாள். கூடுமானவரை அவளை சுதந்திரமாகத்தான் விடுவார் முகுந்தன்.
சிலசமயம் முட்டிக் கொள்ளும்!
படிப்பு, உத்யோகம் என சகலமும் தேர்ந்தெடுத்துக் கொண்டவள் சௌந்தர்யா! கல்யாண வாழ்க்கையில் மற்றவர் கருத்துக்கு சம்மதிப்பாளா?
போதாக்குறைக்கு முகுந்தனுக்கு நாள், நட்சத்திரம், ஜாதக நம்பிக்கை கழுத்து வரை உண்டு. அதை மீறி எதையும் செய்ய மாட்டார்.
மாலை அலுவலகம் முடிந்து சௌந்தர்யா வந்து விட்டாள்.
சாப்பிடும் போது சாந்தா பேச்சை எடுத்தாள்.
வெள்ளிக்கிழமை முடியாது!
ஏன் முடியாது?
எங்க ஆபீஸ்ல ஆடிட்டிங்! நான் லீவு போட்டா, மெமோ குடுத்துடுவாங்க!
உனக்கு உடம்பு சரியில்லை... போக முடியுமா?
நான் நல்லாத்தானே இருக்கேன்?
திடீர்னு காய்ச்சல் வந்ததா நான் ஃபோன் பண்றேன்!
அப்படி ஒரு அவசியம் என்னப்பா?
இந்த வெள்ளியை விட்டா ஒரு வாரத்துக்கு நாள் சரியில்லை. அடுத்த வாரம் அந்தப் பையன் சிகாகோல வேலைல சேரணுமாம். லீவு இல்லையாம். இப்ப பேசி முடிவெடுத்துட்டா, அவன் கல்யாணத்துக்கு வருவான்!
அப்பா! எவனோ ஒருத்தனோட வசதியை நாம எதுக்குப் பாக்கணும்? வேற வரன் உலகத்துல இல்லையா?
நம்ம ஜோசியர் சொன்னது என்னான்னா...
ஸாரிப்பா. எனக்கு நேரமில்லை. வெள்ளிக்கிழமை கண்டிப்பா நான் வீட்ல இருக்க முடியாது!
அவள் எழுந்து போய்விட்டாள்.
சாந்தா, முகுந்தனைப் பார்த்தாள்.
என்னடீ? உன் மகளை தயார்படுத்திட்டியா?
நிறுத்துங்க. நான் அவளுக்கு அம்மா. அவ நல்லா வாழணும்னு உங்களை விடக் கூட எனக்கு அக்கறை இருக்கும். புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க!
சரி! சாயங்கால நேரம் வர முடியுமான்னு கேக்கறேன்!
அவரும் விடுவதாக இல்லை. ஜோசியர் சொன்னதால் இந்த வரனை முடித்தே தீர வேண்டும் என நிற்கிறார்.
மறுநாள் மாலை உற்சாகமாக வந்தார்.
வெள்ளிக்கிழமை ஆபீஸ் முடிஞ்சு, நீ வழக்கம்போல வீட்டுக்கு வந்துடுவே இல்லை?
ஏழு மணியாகும்!
தப்பில்லை. நான் அவங்களை ஏழரைக்கு வரச் சொல்லியிருக்கேன். சம்மதம் சொல்லிட்டாங்க!
ஏன்பா! நானே களைச்சுப் போய் வருவேன். அந்த நேரத்துல பெண் பாக்க வர்றது தேவைதானா?
என்ன நீ? உன் வசதிக்கு தகுந்த மாதிரி நான் ஏற்பாடு பண்றேன். அந்தக் குடும்பமும் தயாரா இருக்கு. இதுக்கு மேல என்ன செய்ய முடியும்?
அப்பா! இந்த வரன் அமைஞ்சா நான் வெளிநாடு போகணுமில்லையா?
அதுல என்ன சந்தேகம்? உன் புருஷன் இருக்கற இடத்துலதானே நீ இருக்கணும்?
எனக்கு வெளிநாட்டுக்குப் போக விருப்பமில்லை!
இப்ப சொல்லுவே. செட்டில் ஆனா சரியாகும்!
இல்லைப்பா. என்னைப் புரிஞ்சுக்குங்க! எனக்கு இந்த வரன் வேண்டாம்!
இதப்பாரு சௌந்தர்யா! நீ படிச்ச படிப்புக்கு நாளைக்கு வெளிநாட்ல சுபலமா வேலை கிடைக்கும். பணத்தை ரெண்டு பேருமா அள்ளலாம். நான் தொலைநோக்குல வாழ்க்கையை பாக்கறேன். நீ சின்னப் பொண்ணு. புரியாது! எங்க கூடவே நீ காலம் முழுக்க இருக்க முடியுமா? வேண்டாம்னு தோணறது, நாளைக்கு மனசுக்குப் பிடிக்கும். பிடிவாதம் கூடாது!
அதில்லைப்பா... என்னைக் கொஞ்சம் பேச விடுங்க!
அவர் படக்கென எழுந்து விட்டார்.
இதப்பாரு! உன் அப்பா நான்! உனக்கொரு வாழ்க்கையை அமைச்சுத் தர்றது என் கடமை. நீ வேண்டாம்னு தீர்மானமா இருந்தா அப்புறம் உன் சங்கதி எதுலேயும் நான் தலையிட மாட்டேன்!
அப்பா... நான்...
இதப்பாரு சாந்தா! என்னைப் பற்றி அவளைவிட உனக்கு நல்லாத் தெரியும். உன் மகளுக்குச் சொல்லி வை!
சரக்கென உள்ளே அவர் போக,
என்னம்மா இது? இவர் சர்வாதிகாரியா? இவர் காட்டின எடத்துல நான் கழுத்தை நீட்டணுமா? நான் அடிமையா?
மெதுவாப் பேசுடி!
நிறுத்தும்மா. நீ வேணும்னா காலம் முழுக்க அடிமையா அவர் காலடில கிட! எனக்கந்த அவசியம் இல்லை!
அப்படியெல்லாம் சொல்லாதேம்மா!
வெள்ளிக்கிழமை சாயங்காலம் நான் வீட்டுக்கே வர மாட்டேன்! என் ஸ்நேகிதி வீட்டுக்குப் போறேன். ஒரு வாட்டி இவரோட மூக்கு உடைஞ்சாதான் புரியும்!
சாந்தா பதறி விட்டாள்.
அப்படியெல்லாம் சொல்லிடாதேம்மா! அப்புறம் குடும்பத்துல நிம்மதி போயிடும். உங்கப்பா ரொம்ப மூர்க்கமானவர்!
நான் அதைவிட! பெண் வாழ்க்கையை விட, குடும்ப நிம்மதிதான் உனக்கு முக்கியமா? நான் யாருனு வெள்ளிக்கிழமை காட்டறேன் பாரு!
சௌந்தர்யா சரக்கென உள்ளே போய் விட்டாள்.
இரண்டு பேரிடமும் பேச முடியாமல் சாந்தா பொறியில் அகப்பட்ட எலியைப் போல தவித்தாள்.
வெள்ளிக்கிழமையும் வந்து விட்டது.
2
காலையில் எழுந்து குளித்து யாரிடமும் பேசாமல், டிபனும் சாப்பிடாமல் சௌந்தர்யா ஆபீசுக்குப் போய் விட்டாள்.
இதை முகுந்தன் கவனித்தார்.
உன் பொண்ணு வேணும்னே கலாட்டா பண்றாளா? அவளா செய்யறாளா, இல்லைனா நீ தூண்டி விடறியா?
ரொம்ப நல்லாருக்குங்க! அவதான் பிடிவாதக்காரி. இது அவ வாழ்க்கை! நீங்களாவது விட்டுப் புடிக்கக் கூடாதா? இது பழைய காலம் இல்லீங்க. எல்லாத்துக்கும் பெண்கள் தலையசைக்க மாட்டாங்க...
என்ன சொல்ற?
பிள்ளைங்க தோளுக்கு மேலே உசந்துட்டா தோழமைதான் மனசுல இருக்கணும். அதிகாரப்படுத்தினா எதையும் சாதிக்க முடியாது. அவமானத்துலதான் முடியும். ஒரு மனைவியா இருக்கறதால மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்!