Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aagayap Panthalile
Aagayap Panthalile
Aagayap Panthalile
Ebook101 pages35 minutes

Aagayap Panthalile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Aagayap Panthalile

Read more from N.C.Mohandass

Related to Aagayap Panthalile

Related ebooks

Related categories

Reviews for Aagayap Panthalile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aagayap Panthalile - N.C.Mohandass

    1

    போர்டிகோவில் கார் நுழைவது தெரிந்ததும், பாத்திரங்களை துலக்கி அடுக்கிக் கொண்டிருந்த பார்வதி ஓடிப்போய் லைட் போட்டாள். கதவைத்திறந்து, காரிலிருந்து இறங்கிவரும் எஜமானி கனகதாராவின் பையை வாங்கிக் கொண்டாள்.

    கனகதாரா, டி.வி.யில் நியூஸ் ஆன் பண்ணி ஈஸிசேரில் சரிந்ததும், அப்போ நான் கிளம்பட்டுமாம்மா? என்றாள்.

    சாப்பாடு ரெடி. பால் காய்ச்சி புரையும் ஊத்தி வெச்சிருக்கேன்!

    நீயும் சாப்பிட்டுப் போயேன்!

    வேணாம்மா. அப்பா காத்துட்டிருப்பார்.

    என்ன அவசரம்? நான் வேணுமானால் கொண்டு வந்து விடறேனே!

    எதுக்கும்மா சிரமம்? எங்கப்பனைப் பத்தி உங்களுக்கு தெரியாததில்லை. சதா குடி! எங்கே விழுந்து கிடக்குதோ! ரொம்ப லேட்டானால் மகள்ன்னுகூடப் பார்க்காமல் வாய்க்கு வந்தபடி ஏசுவார். கையில் கிடைக்கிறதை எடுத்து எறிவார். பேசியபடியே சேலையை சரி பண்ணினாள். முகம் துடைத்துக் கொண்டாள்.

    பார்வதி அவர்களின் வேலைக்காரிதான். ஆனால் கனகதாரா அவளை அப்படி நடத்தவில்லை. சொந்த மகள் போலவே அன்பு செலுத்துகிறாள். பார்வதிக்கு இருபது வயதுதானிருக்கும். வறுமையையும் மீறின வனப்பு! பளபளப்பு! அவளுக்கு பத்தாம் கிளாஸிற்கு மேல் படிக்க வசதியில்லை. தந்தைக்கும் பொறுப்பில்லாததால் இங்கே வேலைக்கு சேர்ந்துவிட்டாள். வீட்டு வேலையிலிருந்து டைப்பிங், தோட்டம் எல்லாம் அவளே. கனகதாரா ஒரு சமூக சேவகி. அலுவலக நேரம் போக எஞ்சிய நேரத்தில் சதா அவளுக்கு சமுதாயத்தில் சீரழிந்த பெண்களின் நினைப்பு தான். வசதியில்லாப் பெண்களின் மேல் அவளுக்கு எப்போதுமே ஒரு கரிசனம் உண்டு. அவர்களுக்கென்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறாள். உதவி என்று யார் வந்தாலும் தயங்காமல் செய்து தருவாள். பார்வதியின் மீதும் அவளுக்கு அளவு கடந்த பிரியம் உண்டு.

    நீ எதற்காக வாடகை வீட்டில் சாக்கடைக்கு இடையே தங்கணும். பேசாமல் இங்கேயே தங்கிக் கொள்ளேன். என்பாள். தினம் அனாவசியமாக ஒரு கிலா மீட்டர் நடக்கிறாய். இங்கே என்ன வசதியா இல்லை? நீ வாடகை எதுவும் தர வேணாம்!"

    வாடகைக்காக இல்லை. மேடம். அப்பா!

    அவரையும் அழைச்சு வந்திரேன்!

    அது சரிப்பட்டு வரும்னு தோணலே மேடம். அவருக்கு இடம் கொடுத்தால் உங்களோட பெயரும் கெட்டுப் போகக்கூடும். இந்த வீட்டை ஒரு தூய்மையான கேந்திரமாக வைத்திருக்கிறீர்கள். என்னால் அது பாழ்பட வேண்டாம்!

    அவரை திருத்தவே முடியாதா?

    முடியும். அவர்கூடவே இருந்தால். இருபத்து நான்கு மணி நேரமும் அவருக்கு காவல் இருப்பது சாத்யமா? வேண்டாம் மேடம்! என்று மறுத்து விட்டாள்.

    கனகதாரா அவளை அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இங்கேயே தங்காதது ஒருவிதத்தில் அவளுக்கும் நல்லதுதான். இப்போதாவது வேலை முடித்து வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கிறாள். இங்கேயே தங்கினால் இரு பத்து நான்கு மணி நேரமும் ஏதாவது வேலை வைக்கத் தோன்றும். மேடத்தின் மனதில் பார்வதி பெரியதொரு இடத்தை பிடித்திருந்தது நிஜம். பார்வதிக்கு நல்லதொரு மாப்பிள்ளை பார்த்து அவளுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும் என்று அவள் தன் மனதில் தீர்மானித்திருந்தாள்.

    பார்வதி தோட்டத்து விளக்கை நிறுத்திவிட்டு ஜன்னலடைத்தபோது., சுஸ்பானா சாப்பிட்டாளா? மேடம் கேட்க அவளுக்கு சுருக்கென்றிருந்தது. சுஸ்பானா அவளது மகள்.

    இன்னும் இல்லை மேடம்.

    ஏன் சாப்பிடாமலேயே படுத்துட்டாளா? போய் எழுப்பு!

    வந்து... என்று நிறுத்திக் கொண்டாள்.

    சுஸ்பானா இன்னும் வீடு திரும்பியிருக்காததுதான் அவளது தயக்கத்திற்குக் காரணம். தாய் சமூக சேவகி. ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உழைப்பவள். உபதேசம் பண்ணுபவள். மகளோ கட்டுக்கடங்காமல் இருக்கிறாள். கல்லூரி விட்டால் நேராக வீடு திரும்புவதில்லை. கம்ப்யூட்டர் கிளாஸ், மியூசிக் கிளாஸ் என்று சொல்லி வித்யாதரன் என்பவனுடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கேட்டால் காதலாம்! படிக்கிற வயதில் காதல் எதற்காம்? ஏன் இப்படி புத்தியை அடகு வைக்கிறார்களோ தெரியவில்லை. காதலிக்க வயதா இல்லை? படித்து முடித்து வேலை தேடிக்கொண்டபின் அதையெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாதா? செல்வமும் சுதந்திரமும் இருக்கிறது என்பதற்காக அதை இப்படித்தான் முறைகேடாய் பயன்படுத்துவதா?

    கனகதாரா பெண் சுதந்திரம், பெண் உரிமை என்று போராடுபவள்.

    அதனால் தன் மகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் அவளது போக்குக்கே விட்டிருக்கிறாள்.

    பெண்களுக்கு சுதந்திரம் தேவைதான். அது எந்த அளவிற்கு தேவை? தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிற அளவிற்கா?

    கண்ணை மூடிக்கொண்டு போய் சேற்றில் விழுவதற்கா? பார்வதிக்கு சுஸ்பானாவின் போக்கு பிடிக்கவில்லையென்றாலும்கூட மேடத்திடம் அதுபற்றி வாய் திறப்பதில்லை. சுஸ்பானாவின் காதல் பற்றிக்கூட அவள் கவலைப்படவில்லை. அவள் காதலிக்கிறதாக சொல்கிற வித்யாதரனின் நடத்தை பற்றிதான் அவளுக்கு கவலை.

    அவன் அத்தனை நல்லவனில்லை. வெளியே வேறு சில பெண்களுடன் ஏற்கனவே அவனைப் பார்த்திருக்கிறாள். சுஸ்பானா ஒருமுறை அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறாள். அப்போது அவன் பார்வதியைப் பார்த்த பார்வை சரியில்லை. சுஸ்பானா குளிக்கப்போன தருணத்தில் அவளிடம் தகாத முறையில் நடக்கவும் முயன்றான். காதல் தெய்வீகமானது என்பார்கள். காதலிப்பவனுக்கு வேறு பெண்ணின் மேல் நாட்டம் போகுமா? போகலாமா? அப்புறம் அது எப்படி காதலாக இருக்க முடியும்? சுஸ்பானா எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை - அவனைப் பொறுத்தவரை அவள் மேல் உண்மையான அன்பு இருப்பதாகத் தெரியவில்லை. சாறை

    Enjoying the preview?
    Page 1 of 1