Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muthal Kuttram Muttrum Kuttram
Muthal Kuttram Muttrum Kuttram
Muthal Kuttram Muttrum Kuttram
Ebook96 pages34 minutes

Muthal Kuttram Muttrum Kuttram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Muthal Kuttram Muttrum Kuttram

Read more from N.C.Mohandass

Related to Muthal Kuttram Muttrum Kuttram

Related ebooks

Related categories

Reviews for Muthal Kuttram Muttrum Kuttram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muthal Kuttram Muttrum Kuttram - N.C.Mohandass

    1

    மரங்கள் குளிருக்கு இருள் போர்வையைத் தேடிக்கொண்டிருந்த இலைகளில் பனி கசிந்து சொட்டிற்று.

    ஸ்வட்டரும் மங்கி குல்லாவுமாய் ஆரோக்யம் காருக்குள் அமர்ந்திருக்க, இருபத்திரண்டு வயது சசி, அப்போ நான் கிளம்பறேன்! என்று கண்களில் காந்தத்தை வீசினாள். காந்தம் கண்களில் மட்டுமில்லை.

    அவளும் உல்லனில் ஸ்வட்டர் போட்டுப் பம்மென்றிருந்தாள்.

    சரி, கிளம்பு! என்று காரிலிருந்து வெளியே வந்தான்.

    சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். ஐயாவுக்குப் பரிமாறு.

    சரி.

    அப்படியே நீயும் நல்லாச் சாப்பிடு. உனக்குப் பிடிக்குமேன்னு சிக்கன் ஃப்ரை!

    இதோ பார்! எனக்குப் பிடிக்கறதாய்ச் செஞ்சு போடறதுக்கு நீ யார்? இந்த மாதிரியெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல் கிளம்பு

    ஏன்ய்யா... என்னை உனக்குப் பிடிக்கலையா?

    பிடிக்கிறது. பிடிக்கலை அதுவா பிரச்சினை? முதலாளிக்குத் தெரிஞ்சால் தப்பாய் நினைப்பார்

    க்கும். அவருக்குத் தெரியாதாக்கும்! என்று தன் தோளால் அவனது தோள்பட்டையில் இடித்தாள். அவருக்குத் தெரியாமல் இந்த வீட்டில் எதுவும் நடந்திருமா என்ன?

    "ஐயோ... என்ன சொல்கிறாய்?’’ என்று ஆரோக்யம் பயந்தான். அவன் இயல்பிலேயே பயந்த சுபாவம். சாது. எதையும் யோசித்து யோசித்துத்தான் செய்வான்.

    இப்பக் கூடப் பார்- மேலே தன் ரூமிலிருந்து கண்ணாடி வழி பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சிரித்தாள்.

    அவர் பார்த்தாரோ இல்லையோ... நிமிர்ந்து பார்க்கும் திராணி அப்போது அவனுக்கில்லை. ஆளை விடு, என்று கார் சாவியை எடுத்துக்கொண்டு நடந்தவனைப் பிடித்து நிறுத்தினாள். நான் என்ன பேயா... இல்லை பிசாசா? எதற்காக என்னைக் கண்டு இப்படிப் பயப்படுகிறாய்?

    ‘பேய் பிசாசு என்றால் பரவாயில்லை’ என்று அவனுக்குத் தோன்றிற்று. அவற்றை நேரில் கண்டதில்லை. கதைகளில்தான் படித்திருக்கிறான், பார்த்ததில்லை. அவை பேசுவதில்லை. சதா நெருங்கி நெருங்கி வந்து கண்களால் கொல்வதில்லை. ப்ளவுஸ் கொக்கிகளை விடுவித்து அமர்ந்து வளைவு நெளிவுகளைக் காண்பிப்பதில்லை. சூடேற்றுவதில்லை.

    ஏற்றம் இறைப்பதில்லை. பெருமூச்சு விடுவதில்லை."

    "ஏன்ய்யா பேசாமல் போகிறாய்?’’

    "என்ன பேசணும்?’’

    எனக்கிருக்கிற தைர்யம் கூட உனக்கில்லையே... நான் பொம்பளை.

    ‘அதனால்தான் பயப்படுகிறேன்.’ என்பதையும் அவன் வெளியே சொல்லவில்லை.

    "நானும் தனி. நீயும் தனி. எனக்கும் யாருமில்லை. உனக்கும் யாருமில்லை. நாம் ஏன் கல்யாணம்?’’

    எனக்கு யாருமில்லை என்று யார் சொன்னது? எனக்கு எப்போதோ கல்யாணமாகிவிட்டது. பெண்டாட்டி ஊரில் இருக்கிறாள்!

    பிள்ளைங்ககூட இருக்காமே! என்று சிரித்துத் தன் நம்பாமையை வெளிப்படுத்தினாள். இன்னும் எவ்ளோ நாளைக்கு இதே பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பாயாம்?

    பொய்யில்லை. நிஜம் சாமி சத்யமாய் எனக்குக் கல்யாணமாயிருச்சு

    அப்போ அவ எங்கே?

    ஊரில்.

    எந்த ஊருல?

    அதுவந்து அதெல்லாம் உனக்கு ஏன்? நீ உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போயேன்!

    இல்லை. பெண்டாட்டி பேச்செடுத்தாலே எப்போதும் நழுவுகிறாய். உண்மை தெரியாமல் இன்று உன்னை விடுவதாயில்லை. சொல்! நிஜமாலுமே உனக்குக் கல்யாணம்ஆகியிருக்கும் பட்சத்தில் இப்போ அவங்க எங்கே? ஏன் நீ அவங்களைப் பார்க்கப் போறதில்லை? அவங்க பேச்செடுத்தாவே உன் கைகள் ஏன் நடுங்குது?

    ஏய்... எனக்கெங்கே நடுங்குது... இல்லையே. என்று அவசரமாய்க் கைகளைப் பினனால் கட்டிக் கொண்டான். அப்படியும் அதை மறைக்க முடியவில்லை.

    வேண்டாம். வேண்டாம்! நீ எதையும் மறைக்க வேண்டாம். பொய் சொல்றதுக்கும் ஒரு யோக்யதை வேண்டும். சாமர்த்தியம் வேணும்! இத்தனைக் குளிரிலும் கூட உன் நெற்றியில் வியர்க்குது பார் என்று தன் சேலை கொசுவத்தைத் தேடி துடைத்துவிட முயல விலகினான். "நீ கிளம்பு! ஐயா கீழே வந்து விடுவார்.’’

    அப்போ உண்மையை ஒப்புக்கோ. உனக்குக் கல்யாண நடக்கலேதானே? பெண்டாட்டின்னு யாருமில்லேதானே?

    ஆமாம். கல்யாணம் நடக்கலே. பெண்டாட்டி இல்லை. போதுமா... ஆளை விடு.

    அப்படி வா வழிக்கு... அப்போ என்னை ஏன் நீ கட்டிக்கொள்ளக் கூடாது?

    அதை நாளைக்குப் பேசிக்கொள்ளலாம். நீ கிளம்பு.

    இல்லை. இப்போதே பேசியாகணும். சொல்! என்னிடம் என்ன குறை...? உனக்காக நான் உருகறேன்.

    ‘‘உருகச் சொன்னேனா?"

    இதெல்லாம் சொல்லியா செய்வாங்க; என்னை ஏத்துக்குய்யா.

    வேண்டாம். அதில் நிறையச் சிக்கல் இருக்கு.

    என்ன சிக்கல்? நம்மை எதிர்க்கவோ, பிரிக்கவோ யாருமேயில்லை."

    நீ ஹிந்து. நான் கிறிஸ்துவன்.

    நானும் கிறிஸ்துவாயிடறேன்.

    இல்லை சரிப்படாது என்று அவன் அவசரமாய் உள்ளே நுழைந்தபோது ஆரோக்யம் என்று மாடியிலிருந்து தியாகராஜனின் குரல் அழைத்தது.

    இதோ வந்துட்டேங்கய்யா! என்று பதில் கொடுத்துவிட்டு, சசி! இருட்டிருச்சு. சீக்கிரமாய்ப் போய்ச் சேர்! முதலாளி இன்னைக்கு என்னவோ தெரியல, பதற்றமாயிருக்கார். அவருக்குத் தெரிஞ்சால் கத்துவார். சொல்லிவிட்டு மாடிப்படியில் தாவ ஆரம்பித்தான். சசி ஏமாற்றத்துடனும் பெருமூச்சுடனும் அங்கிருந்து நடக்கலானாள்.

    2

    ஜீப் மலைமேல் உறுமி ஏறிக்கொண்டிருந்தது.

    அது போடியிலிருந்து குரங்கனி போகும் பாதை. மேற்குத் தொடர்ச்சி மலை, தேர்ச்சி பெற்ற ஆடலழகியின் வளைவுகளைப் போல் வளைந்து நெளிந்து நீண்டு கொண்டிருந்தது.

    இரண்டு பக்கமும் காப்பி, தேயிலை எஸ்ட்டேட்டுகள் இருண்டு கிடந்தன. ரோடு குறுகலாயிருந்தது. போன மழைக்குப் பல்போன தார்பூச்சுகள் இன்னும் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாயிருந்தன.

    Enjoying the preview?
    Page 1 of 1