ஏதேதோ ஆசைகள்...
By V.Usha
()
About this ebook
உலகத்துக்கே நான்தான் மகாராஜா' என்று மார்தட்டிச் சொல்லியபடி இமயமலை நின்றது.
அருண், கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டி இருந்தான்.
உழைப்பின் வலிமையால் இரும்பு போல் நிமிர்ந்து நிற்கும் அவனது ஆறடி உயர தேகத்தை பதம் பார்க்க துடித்துக் கொண்டிருந்த கடுங்குளிரையும் மீறி வெட்ட வெளியில் நின்றிருந்தான்.
அவன் விழிகள், பெருத்த ஆர்வத்துடன் இமயமலைத் தொடரின் மேல் படர்ந்திருந்தன.
ஆகா! என்ன கொள்ளை அழகு!
இயற்கை, தனக்குதானே சூட்டிக்கொண்டிருக்கிற பனி மகுடமல்லவா இது?
அதென்ன அப்படியொரு உயரம்! கம்பீரம்! இந்த மணாலி இராணுவ முகாமுக்கு அவன் வந்து மூன்று மாதம் முடியப்போகிறது. இருந்தாலும் இந்தக் காட்சி இன்னும் அவனைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இமைகளை மூடவிடாமல் ரசிக்க வைக்கிறது. இப்படியொரு பிரமாண்ட அழகா என்று திகைக்கச் செய்கிறது.
அருண், உள்ளங்கைகளை வேகவேகமாக தேய்த்துக் கொண்டான். ஊகூம்! கொஞ்சம் கூட சூடு உண்டாகவில்லை. தமிழ்நாட்டில் இருந்தால் இந்த உள்ளங்கை உரசலில் தீப்பொறியே பறந்திருக்கும் என்று நினைத்தபோது அவன் உதடுகள் தாமாகப் புன்னகைத்தன.
"ஓ... இங்கே இருக்கிறாயா, அருண்? வா, வந்து டீ சாப்பிடு..." என்று கூடாரத்தின் உள்ளே இருந்து ரெட்டியின் இந்திக் குரல் கேட்டது.
"நீ குடி ரெட்டி... நான் இன்னும் சிறிது நேரம் கழித்து வருகிறேன்..." என்றான் அவன், பனிமலைகளின் மேல் இருந்த பார்வையை விலக்காதவனாக"அப்படி என்னப்பா பார்க்கிறாய், அருண்? பழைய சினிமாக்களில் வருவது போல, உன் காதலி, மலை முகடுகளில் தேவதையாகத் தெரிகிறாளா?" என்று சிரித்த ரெட்டி, தேநீர் கோப்பைகளுடன் வெளியே வந்தான்.
"நன்றி தோழனே..." என்று வாங்கிக்கொண்ட அருண், நண்பனை கனிவுடன் பார்த்தான்.
"என்ன சொன்னாய், காதலியா?" என்றான், நாசுக்காக தேநீரை உறிஞ்சியவாறு.
"அதேதான்... சொல்லேன்... அப்படி என்னதான் இருக்கிறது அந்த மலைச் சிகரங்களில்?"
"காதல்தான் உலகின் அதிகபட்ச ரசனைக்குரிய விஷயமா?"
"நிச்சயமாக... அதுவும் நம்மைப் போன்ற துடிப்பான இளைஞர்களுக்கு..." ரெட்டி, கண்களைச் சிமிட்டினான்.
"அனுபவம் ஏற்படட்டும் நண்பா... பிறகு பார்க்கலாம்..." என்றான் இவனும் பதிலுக்கு கண் சிமிட்டி "இந்த மூன்று மாதமாக நாம் பார்க்கும் இந்த அதிகாலை சூரியோதயம் இத்தனை நாளும் நான் பார்த்திராத அற்புதம், ரெட்டி... நான் என்ன, எங்கள் ஆறு கோடி தமிழ் மக்களில் மூக்கால்வாசி பேருக்கு மேல் தரிசித்திராத அதிசயம் இது... என்ன அழகு... எத்தனை அழகு."
"ரொம்ப சரி..." ரெட்டியும் தன் தேநீர் கோப்பையுடன் திரும்பி, இமயமலை தொடர்களின் மேல் பார்வையைப் பதித்தான்.
கங்கணம் கட்டிக்கொண்டது போல காற்று கடுங்குளிரை சுமந்து வந்து வீசியது. நெஞ்சின் உட்பகுதிக்குள் ஊடுருவ முயன்று முட்டிமோதியது.
அருண் தன்னை மறந்து நின்றான்.
Read more from V.Usha
கலையும் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னை நான் தேடித் தேடி.. Rating: 0 out of 5 stars0 ratingsகை அருகில் வானம்..! Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த காதல்..! Rating: 0 out of 5 stars0 ratingsபனியைத் தேடும் ரோஜாக்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கண் தேடுதே..! Rating: 0 out of 5 stars0 ratingsசம்சாரப் பூக்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கேயோ உன் முகம்... Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மெய்ப்பட வேண்டும்... Rating: 0 out of 5 stars0 ratingsமழையும் நீயே மானசி..! Rating: 0 out of 5 stars0 ratingsமனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணில் தெரியும் வண்ணப் பறவை..! Rating: 0 out of 5 stars0 ratingsமின்மினிக் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsவிடியலை நோக்கி... Rating: 0 out of 5 stars0 ratingsகூட்டுக்குள்ளே சில காலம்... Rating: 0 out of 5 stars0 ratingsநிலவும் வரும் உன்னோடு..! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னவோ நீ கிடைத்தாய்..! Rating: 0 out of 5 stars0 ratingsகல்யாண வானம் Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஏதேதோ ஆசைகள்...
Related ebooks
Yethetho Aasaigal Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Ithu Pol Mazhaikkaalam Rating: 5 out of 5 stars5/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Devathai Vanthu Vittal Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Vannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Rathidevi Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsUllamengum Alli Thelithean Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Vaanamazhai Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsKannodu Kaanpathellam Rating: 0 out of 5 stars0 ratingsKathai Kathaiyaam Karanamaam Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsAmutha Geetham Rating: 0 out of 5 stars0 ratingsஅமுத கீதம் Rating: 0 out of 5 stars0 ratingsNagarnthu Varum Nathigal Rating: 4 out of 5 stars4/5Megam Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsUn Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsAntha Chinna Pennin Snegam Rating: 1 out of 5 stars1/5Natchathira Bungalow! Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsநீயில்லாமல் நானும் நானல்ல... Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5Aalayamaagum Mangai Manathu Rating: 0 out of 5 stars0 ratingsNilavukkum Niramundu Rating: 0 out of 5 stars0 ratingsநிலவுக்கும் நிறமுண்டு..! Rating: 0 out of 5 stars0 ratingsAada Marantha Oonjal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for ஏதேதோ ஆசைகள்...
0 ratings0 reviews
Book preview
ஏதேதோ ஆசைகள்... - V.Usha
1
பெரிய பாதையைவிட்டு இறங்கிய பேருந்து, அந்தக் கரடு முரடு கிராமத்துப் பாதையில் நகரத் தொடங்கியது. உதயா, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி வெளிப்புறக் காட்சிகளை ரசித்தாள்.
பச்சை, பச்சை, பச்சை!
எங்கெங்கு காணினும் பச்சை நிறம் பளீரிட்டது. பட்டுத் துணியால் பச்சைச் சால்வை அணிந்த மலை. செடி, கொடி, மர வகைகள் அனைத்தும் இளமை ததும்ப அசைந்தாடிய காட்சி, அவளது எட்டு மணி நேர கல்லூரிச் சோர்வை வேகமாக அகற்றிவிட்டது.
மாமழையே உனக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றி! ‘காய்ந்தும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும்’ என்பார்களே, அது! எத்தகைய உண்மை நிறைந்த அனுபவ மொழி.
மாதக்கணக்காக காயவைத்து, அழவைத்ததற்கு பிராயச்சித்தமாக சில மாவட்டங்களிலாவது கொட்டித் தீர்த்து விவசாயிகளின் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்து விட்ட மழையே, உனக்கு எங்கள் கோடானுகோடி வந்தனம்!
என்ன உதயா, என்னவோ வெகு தீவிரமாக சிந்திக்கிறாய் போலிருக்கிறது?
என்றபடி தோழி திலகா அவள் தோளை ஒரு இடி இடித்தாள்.
உதயா புன்னகைத்தாள்.
இல்லை, இயற்கை என்றைக்குமே மனிதனுக்குச் சவாலாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது திலகா எனக்கு.
எப்படிச் சொல்கிறாய்?
திலகா தன் தோளை, குலுக்கிக் கொண்டாள். இயற்கையை வென்றவன் மனிதன். இறக்கை படைக்கப்படாமலே அவன் பறக்கக் கற்றுக்கொண்டான். எடையைக் குறைக்காமலே கடலில் மிதக்கக் கற்றுக் கொண்டான்... எதிரொலியை வைத்து வானொலி படைத்தான்... இன்னும் நாளும் ஒரு விஞ்ஞான அதிசயத்தைக் கண்டுபிடித்து உலகத்தையே நெருக்கமாக்கி வருகிறானே, உதயா.
மழைக்கு மாற்றாக மனிதன் எதைக் கண்டுபிடித்திருக்கிறான், திலகா? மழை என்றில்லை... பஞ்சபூதங்களுக்கும் அப்படித்தான்... நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் அனுசரித்துத்தான் மனிதன் வாழவேண்டும்... அப்படி வாழ்ந்தால் தான் மனித குலம் சீக்கிரத்தில் நசித்துப் போகாமல் தொடர்ந்து கொண்டு இருக்கும்...
சில்வர் அயோடின் என்று ஒன்றை தெளிக்கிறார்கள் மேகத்தில்... உடனே மழை வந்துவிடுகிறது, தெரியுமா உனக்கு?
என்றாள் திலகா, சிறுமியைப் போல வேகமாக...
உண்மைதான்... ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கும் - மேகம் வேண்டுமே? அது இயற்கையின் பரிசல்லவா? அதை செயற்கையாக உண்டாக்க முடியுமா மனிதனால்?
உதயா புன்னகை மாறாமல் கேட்டாள்.
அப்படி வா வழிக்கு... மேகம் என்ற ஒன்று வேண்டுமானால் வருண பகவானை வழிபட வேண்டும்... மனமுருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்... என்ன, சரிதானா? ஒப்புக்கொள்கிறாயா?
மேனியை வருடிய மெல்லிய குளுமைக்காற்றை வரவேற்ற, சோளக்கதிர்கள் சீராக நடனமாடின. கரம் குலுக்குவது போல மருதாணிக் கிளை ஒன்று ஜன்னல் வழியே வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போனது.
ஏய் உதயா! என்ன பதிலே இல்லை? கடவுளின் கருணை இருந்தால்தான் பூமியில் மழை பெய்யும் என்பதை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?
திலகாவுக்கு அதற்குமேல் பொறுமை இல்லை.
நான் நம்புகிற உண்மையைச் சொல்லட்டுமா? கேட்கிறாயா?
அதைத்தான் கேட்கிறேன்? சொல்... சொல்...
ஒரு உயிரணுவில் இருந்து உருமாறி உருமாறி இப்போது இந்த உருவத்தில் வந்து நிற்கிறோம், திலகா. இது விஞ்ஞானம். பஞ்சபூதங்களின் பங்களிப்பால்தான் உயிரின் உலா, பூமியில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால், மனிதன் என்ன செய்கிறான்? தான் பிறப்பதற்குக் காரணமாக இருந்த இந்த அனைத்து பூதங்களையும் பதம் பார்க்கிறான். நச்சுப் புகை எழுப்பி, மாசு நிறைத்து, வானத்தின் ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிட்டான்... மரங்களை வெட்டி வெட்டி மேகங்களின் கருவறையை கத்தரித்து விட்டான்... பூமித்தாயின் மேனியில் முடிந்தவரையில் ‘கான் கிரீட்டு’ களைப் போட்டு காற்றோட்டத்தையே ‘சீல்’ வைத்து விட்டான். இனிமேல் எந்தப் பூஜை செய்து என்ன? எப்போது மனிதன் தன்னை உணர்கிறானோ, அப்போதுதான் இனி பூமியில் மழை, காற்று, நீர் எல்லாமே சாத்தியம் திலகா... அட, அங்கே பாரேன், அந்த வண்ணத்துப்பூச்சியை, அந்தப் பூக்களின் மேல் எவ்வளவு உற்சாகமாகப் பறக்கிறது பாரேன்...
திலகா, வண்ணத்துப் பூச்சியைப் பார்க்காமல், தோழியைப் பார்த்தாள்.
வியந்தாள்.
யார் இந்த உதயா?
வர்ணங்கள் பளீரிடும் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்த கணம் சிறுமியைப் போலத் துள்ளி படபடக்கிற பருவப் பெண்ணா?
கல்லூரியில் சரித்திரத்தை ஆர்வத்துடன் படிக்கிற இளம் பெண்ணா?
‘ஓசோன்’ ஓட்டைப் பற்றி விரிவாக யோசித்து கவலைப்படுகிற சுற்றுச் சூழல் விஞ்ஞானியா?
வருண பகவானுக்கும் வான்மேகத்துக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்று நிதானமாக சிந்தனை செய்கிற முற்போக்குவாதியா?
உதயா அப்போதுதான் தோழியைக் கவனித்தாள்.
குறும்புப் புன்னகையுடன் அவள் தோளைப் பற்றினாள்.
என்னடி திலகா... வண்ணத்துப்பூச்சியைப் பார்த்ததும் படபடக்கிறதோ மனசு? எங்கே அந்த ‘பைக்’ ரோமியோவை இன்று காணவில்லையே?
வருவான்... வருவான்... வராமல் எங்கே போய்விடப் போகிறான்? என் யோசனை எல்லாம் உன்னைப் பற்றித்தான்டி உதயா... வினோத கலவையடி நீ... சேக்ஸ்பியரும் படிக்கிறாய்... சேட்டைகளும் செய்கிறாய்... என்னடி இது?
ஓ... பார்த்தாயா! சேக்ஸ்பியர் என்றதும் தான் நினைவுக்கு வருகிறது எனக்கு... நாளை தேர்வு இருக்கிறது. வீட்டுக்குப் போன கையோடு படிக்க உட்காரவேண்டும், திலகா...
என்றபடி உதயா மெல்லிய பதற்றத்துடன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
ஆறடிக்க இன்னும் பத்து நிமிடம் இருந்தது. பேருந்து நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதே வேகம் தொடர்ந்தால் போதும், ஆறு மணிக்கு நல்லூரை அடைந்துவிடலாம். ‘அம்மா, வீட்டில் இருக்கிறாரோ இல்லை, ஊர் வேலை என்று எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாரோ?’
வீடு வந்து சேர்வதற்கும், மணி ஆறு அடிப்பதற்கும் சரியாக இருந்தது.
துப்பட்டா பறக்க திலகா தனது வண்டியில் கிளம்பிப் போய் விட, இவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
அம்மா...
என்றபடி கை, கால்களை கழுவியவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வீட்டில் இருந்தால், அவள் குரல் கேட்ட மாத்திரத்தில்