என்னவோ நீ கிடைத்தாய்..!
By V.Usha
()
About this ebook
மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் திடீரென்று உயிர்பெற்ற மல்யுத்த வீரனைப் போலச் சுறுசுறுப்பாக இருந்தது.
ஜனங்கள் பிளாட்பாரத்தின் இருபக்கங்களிலும் மாறி மாறி ஓடுவதும் பரபரப்பாய் இடம்பிடிப்பதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமான களேபரத்தில் இருக்க, ஊர்மிளா அந்தக் கலாட்டாவைப் புன்னகையுடன் பார்த்தாள்.
ஆங்கில அரசாங்கத்தின் மிச்சங்களில் ஒன்றான அந்தச் சிறிய மலை ரயில் பிரத்யேக கர்வம் சுமந்து நிற்பதாய்த் தோன்றியது உண்மையிலேயே ரசனைக்காரர்கள்தான் பரங்கியர்கள். மலையைக் குடைந்து சாலைப் போக்குவரத்து போட்டதோடு நிறுத்திக் கொள்ளாமல், கூடவே ரயில் பாதையையும் வெட்டியிருக்கிறார்கள். ரிலாக்ஸாகச் சாய்ந்து கால் நீட்டி, களைப்புத் தராத ரயில் பயணம் மேற்கொண்டு மலை ராணியை ரசிக்க வேண்டுமானால் வித்தியாசமான சிந்தனை ரொம்ப அவசியம்தான். மிக மலிவாகத்தான் இந்திய உழைப்பு கொட்டிக் கிடந்திருக்கிறதே...
"மேடம்... உங்க பேரெல்லாம் எனக்குத் தெரியாது... ஆனா காரணப் பெயர் வெச்சு உங்களைக் கூப்பிடப்போறேன்," என்றான் சக்திவேல்.
"சரி," என்று புன்ளகைத்தாள்
"தெரசா..." என்றான்.
"தெரசாவா...?" என்று ஆச்சரியப்பட்டாள்.
"நீங்க பண்ணினதுக்குப் பேர் என்ன...? சர்வீஸ்... மதர் தெரஸா சர்வீஸ். எதிர்பார்ப்பே இல்லாம சமயத்துல வந்து உதவிக்கரம் நீட்டினீங்களே... தெரசா இல்லாம வேறு எது பொருத்தமான பேரா இருக்கும்...?"
"மூணு முக்கியமான பொருத்தங்கள் இல்லையே...""அப்படின்னா?"
"தெரசாம்மா மாதிரி நான் வெளிநாட்டுல பொறந்தவ இல்லை. நோபல் பரிசு வாங்கலே... அவ்வளவு வயசும் ஆகலே..."
முதல் தடவையாக அவன் சிரித்தான். பிறகு சொன்னான்.
"மனசுப் பொருத்தம் ஒண்ணு போதுமே... சேவை மனப்பான்மை... மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டீஸ் வெச்சு நடத்தினாத்தான் உண்டா என்ன...?"
சட்டென்று நிமிர்ந்தாள்.
அந்த வார்த்தை!
மிஷினரி ஆஃப் சாரிட்டீஸ்!
தர்மஸ்தாபனம்... ஆதரவற்ற அனாதைகளுக்குத் தாய் தந்தை முகம் கூடத் தெரியாத அபாக்கியசாலிகளுக்கு என்றே ஆரம்பிக்கப்பட்ட கவுரவமான அனாதை இல்லம்...
தான் வளர்ந்த "உதவும் கைகள்" இல்லம் ஒரு கணம் நினைவில் வந்து நெஞ்சை அசைத்துவிட்டுப் போனது.
"உங்க பேர், அட்ரஸ் சொல்லுங்க மேடம்," என்றான், சக்திவேல் டயரியைப் பிரித்து வைத்தபடி.
"ஏன் மேட்டுப்பாளையத்தோட உங்க ட்ராவல் நின்னுடப் போகுதா என்ன?"
"இல்லே... ஊட்டி வரைக்கும் போய்த்தான் ஆகணும்..." என்றான் அவன் சங்கடத்துடன்.
"தனியா ஏதாவது பணம் வெச்சிருக்கீங்களா? இந்தக்குட்டி டிரெய்ன்ல போகறதுக்கு வேணா உங்களுக்கு ரைட்ஸ் உண்டு... ஏன்னா டிக்கெட் ஊட்டி வரைக்கும் இருக்கறதால... ஓடிப்போய் இடம் பிடிக்காம நின்னுகிட்டிருக்கீங்க?"
"நீங்க மட்டும் ஊட்டி போக வேண்டாமா? டி.டி.ஆர் செக் பண்ணும்போது பார்த்தேனே, உங்க டிக்கெட்படி டிஸ்டினேஷன் ஊட்டிதானே...?"
"க்ளவர்..." என்றாள் வாய்விட்டுப் பாராட்டியில் நகரத் தொடங்கிவிட்டது. அழுக்கும் பசியும், லக்கேஜூமாக இருந்தாலும், ஜனங்கள் உற்சாகமாகவும் இருந்தார்கள். ஒரு இளைஞன் தன் பெட்டியில் இருந்த இளம்பெண் பார்க்கும்போதெல்லாம் தலையைக் கலைத்துவிட்டுக் கொண்டான். வடஇந்திய சேட்டுக்குடும்பம் 'ஓ சௌரஸ்... க்யா போல்தேதும்?' என்று சத்தம் போட்டுச் சிரித்துக்கொண்டிருக்க, ஜிமிக்கி அணிந்த பூனம் ஸாரி மாமி, ன்னா... வெறும் ஸ்வெட்டர் மட்டும் போறுமோ...? ஷால் கிடைச்சா வாங்கிக்கலாமா? இப்படி குளிர் நடுக்கறதே!' என்று சத்தோஷமாய் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
"மிஸ்டர் சக்திவேல்... வெளில பஸ் ஸ்டாண்ட் இருக்கு... எதிர்லயே மதுராபவன்னு நல்ல ஹோட்டலும் இருக்காம்... டிபன் சாப்ட்டுட்டு பஸ்லயே போயிடலாம். இன்ஃபேக்ட், பஸ் ட்ராவல்ல இன்னும் நல்லா என்ஜாய் பண்ணலாம் ஊட்டி அழகை..."
"மேடம்... வந்து... இன்னும் உங்க பேர்..." அவன் ஒரு விரலால் தலையைச் சொறிந்தபடி கேட்டான்.
"ஓ... அயாம் ஸாரி... சொல்லிடறேன். என் பேர் ஊர்மிளா... உதவும் கைகள்னு ஒரு ஆர்ப்பனேஜ் இருக்கில்லே...? அதுல வளர்ந்தவ... இல்லத்து ரூல்ஸ்படி இருபத்திரண்டு வயசு வரைக்கும்தான் இருக்கலாம்... அதுக்கு மேல ஒண்ணு வேலைல ஒக்காந்து செட்டிலாகணும்... இல்லேன்னா அவங்க பார்த்து செலக்ட் பண்ற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டி வெளில போயிடணும்... நல்ல வேளையா எனக்கு நல்ல வேலை கெடைச்சது... நகர்ப்புற அபிவிருத்தி வங்கி, மசினகுடி பிராஞ்ச் கிளார்க் வேலை... ஜாயின் பண்ணத்தான் போயிகிட்டிருக்கேன்..."
அவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
Read more from V.Usha
கூட்டுக்குள்ளே சில காலம்... Rating: 0 out of 5 stars0 ratingsவிடியலை நோக்கி... Rating: 0 out of 5 stars0 ratingsமனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsஎங்கேயோ உன் முகம்... Rating: 0 out of 5 stars0 ratingsபனியைத் தேடும் ரோஜாக்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsகலையும் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsசம்சாரப் பூக்கள்..! Rating: 0 out of 5 stars0 ratingsஏதேதோ ஆசைகள்... Rating: 0 out of 5 stars0 ratingsமின்மினிக் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsமழையும் நீயே மானசி..! Rating: 0 out of 5 stars0 ratingsகாத்திருந்த காதல்..! Rating: 0 out of 5 stars0 ratingsகனவு மெய்ப்பட வேண்டும்... Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணில் தெரியும் வண்ணப் பறவை..! Rating: 0 out of 5 stars0 ratingsஎன்னை நான் தேடித் தேடி.. Rating: 0 out of 5 stars0 ratingsகை அருகில் வானம்..! Rating: 0 out of 5 stars0 ratingsநிலவும் வரும் உன்னோடு..! Rating: 0 out of 5 stars0 ratingsஉன்னைக் கண் தேடுதே..! Rating: 0 out of 5 stars0 ratingsகல்யாண வானம் Rating: 0 out of 5 stars0 ratings
Related to என்னவோ நீ கிடைத்தாய்..!
Related ebooks
Ennavo Nee Kidaiththaai Rating: 0 out of 5 stars0 ratingsIllavasam Oru Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsஇலவசம் ஒரு வானவில் Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kadhaigal Part - 4 Rating: 5 out of 5 stars5/5Kaathal Paingili Rating: 3 out of 5 stars3/5Thee. Deepaa.. Deepaavali... Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Thinamum Malaginrana Rating: 0 out of 5 stars0 ratingsNeethana Nejamthana Rating: 0 out of 5 stars0 ratingsKutra Parigaram Rating: 5 out of 5 stars5/5En Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Uyir Mattum Unmai Rating: 5 out of 5 stars5/5என் காதலே..! என் காதலே..! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Maanilam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsSathangai Ittal Oru Maathu Rating: 0 out of 5 stars0 ratingsBombaykku Pathavathu Mileil... Rating: 1 out of 5 stars1/5Sila Vellai Iravugalum Oru Karuppu Pagalum Rating: 0 out of 5 stars0 ratingsThuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaal Valarnthen Rating: 5 out of 5 stars5/527 Adi + Azhagi Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaikkalla Kaathal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsKuberasamy Rating: 0 out of 5 stars0 ratingsNil..! Kavani..! Kaathiru..! Rating: 0 out of 5 stars0 ratingsMatravai Nalliravu 1.05ku Rating: 0 out of 5 stars0 ratingsThittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Thodamaley Sudum Thanal Rating: 4 out of 5 stars4/5Theepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for என்னவோ நீ கிடைத்தாய்..!
0 ratings0 reviews
Book preview
என்னவோ நீ கிடைத்தாய்..! - V.Usha
1
ஊர்மிளா தலையை மட்டும் தொங்கப் போட்டுக் கீழே பார்த்தாள்.
ஜன்னல்கள் மூன்று மூடியிருந்தாலும், ஒரே ஒரு ஜன்னல் மட்டும் திறந்து அதை ஒட்டினாற்போல அந்தப் பச்சைச்சட்டை இளைஞன் உட்கார்ந்திருந்தான்.
குளிர் காற்று மலைப் பிரதேசத்தின் அண்மையை உணர்த்தியது. விடிந்தும் விடியாததுமான வானம். ரயில் பயணங்களில் மட்டுமே தெளிவாகப் பார்க்க முடிகிற மெல்லிய ஆரஞ்சு வர்ண வானம்.
நேரம் என்னவென்று தெரியவில்லை. ஆறு மணிக்குக் கோயம்புத்தூர் வந்துவிடும் என்று ஓமனா சொல்லியிருந்தாள். முக்கால் மணி நேரத்தில் மேட்டுப்பாளையம். எதிர் பிளாட்பார்மிலேயே ஊட்டி செல்லும் ரயில் காத்துக் கொண்டிருக்குமாம்.
எவ்வளவு விரைவாக இதிலிருந்து இறங்கி அதைப் பிடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு சற்றே வசதியாக இருக்கை கிடைக்குமாம்.
எக்ஸ்க்யுஸ் மி சார்...
ஊர்மிளா மேல் பர்த்திலேயே எழுந்து உட்கார்ந்தாள். குட் மார்னிங்... டயம் என்ன சொல்லுங்களேன்...
கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி அவன் தலைதூக்காமலே சொன்னான் அஞ்சே முக்கால்...
தாங்க்யு…
பதிலுக்கு குட்மார்னிங் சொல்லவில்லை. என்னடா ஒரு அழகான இளம் பெண் வலிய வந்து கேட்கிறாளே என்று பரபரத்துப் போகவும் இல்லை.
வித்தியாசமான இளைஞன்தான். ராத்திரி பூரா அவன் சரியாகத் தூங்கியிருக்கவில்லை என்று அவளுக்குத் தெரியும். இயல்பான ஜாக்கிரதை உணர்வும், தனியாகப் பயணப் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற பொறுப்பும் அவளையும் அடிக்கடி எழுப்பிவிட்டுத்தான் கொண்டிருந்தன. அப்போதெல்லாம் அவள் பார்வை இயல்பாகக் கீழே சென்றது. இதே போல விழித்துக் கொண்டு அவன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதையோ, பர்ஸைத் திறந்து ஒரு பெண்ணின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதையோ, விவேகானந்தர் படம் போட்ட ஒரு சிவப்புப் புத்தகத்தை வருடுவதையோ கவனித்தாள். தன்னைப் போலவே வாழ்க்கையின் முக்கியமான பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறான் போலும் அவன் என்று நினைத்துக் கொண்டாள. ரயிலின் வேகம் குறைய ஆரம்பித்தது.
ஊர்மிளா படுக்கையை மடித்துக் கட்டிவைத்தாள். இரும்பு ஏணி வழியாகக் கீழே இறங்கினாள். பாத்ரூம் கிட் எடுத்துக் கொண்டு போய்ப் பத்து நிமிடங்களில் பளிச்சென்று திரும்பி வந்தாள். அதற்குள் மற்றப். பயணிகளும் விழித்துக் கொண்டு கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷனை வரவேற்க ஆர்வமாகயிருப்பதைப் பார்த்தாள். இரண்டு சூட்கேஸ்கள், ஹோல்டால், வானிடி என்று சேகரித்துக்கொண்டு சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
மம்மி... டிக்கெட் எடுத்து ரெடியா வெச்சுக்க மம்மி... டி.டி. ஆர் வரார் பாரு. இதோ வந்துட்டார்....
எதிர் சீட் சுட்டிக் குழந்தை பரபரத்தது.
ஸ்மார்ட் கேர்ள்!
என்று அதன் கன்னத்தைத் தட்டிவிட்டு, பூர்ணம் விஸ்வநாதன் ஜாடையில் இருந்த டிக்கெட் கண்காணிப்பாளர் பயணிகளுக்கு நடுவே உட்கார்ந்தார்.
கோயம்புத்தூர்ல குண்டு வெடிச்சாலும் வெடிச்சது. பஸ், ரயில், ஆட்டோ ஸ்டாண்ட் எல்லா இடத்துலயும் கெடுபிடி ஜாஸ்தியா போயிடுச்சு. சென்ட்ரல் தாண்டினதுமே செக்கிங் முடிஞ்சாச்சு... இருந்தாலும் இறங்கறதுக்கு முன்னாடி இன்னொண்ணு... பெரிய ஜனநாயக நாடு இல்லையா? எல்லாரையும் உள்ளயும் விடணும், வாட்ச்சும் பண்ணணும்... ம்...
ஒரு வெள்ளைத் தாடி முதியவர் அலுத்துக் கொண்டார்.
ஊர்மிளா ஞாபகமாக வைத்த இடத்திலிருந்து டிக்கெட்டை எடுத்து நீட்டிக் காண்பித்து விட்டு, மறுபடி பத்திரமாக உள்ளே வைத்தாள்.
வெளியே தெரிந்த பசுமலைகள் குழந்தையைப் போல அவளைப் பரவசமடையச் செய்தன. காற்றில் இருக்கிற சுத்தத்தை நாசி சுலபமாக உணர்ந்தது. சுற்றுப்புறம் குளுமையில் ஏதோ ஏசியில் வைத்த தக்காளிப்பழம் போல இருந்தது. ஜன்னல் கம்பிகள் மேல் விரல்கள் பட்டபோது, பனிக்கம்பிகளைத் தொட்ட மாதிரித் தோன்றியது.
திடீரென்று கம்பார்ட்மென்ட்டில் ஏற்பட்ட பரபரப்பு அவளைத் தொற்றிக்கொண்டது. என்ன ஆயிற்று?
இல்லே சார்... இங்கியேதான் சார் இருந்தேன்... ராத்திரி கண்மூடக்கூட இல்லே சார்... எப்படி சார் போயிருக்கு! ஐயோ... பணம், டிக்கெட் மட்டும் அதுல இல்லே... என் உயிரே அதுலதான் சார் இருந்தது... என் அம்மாவின் போட்டா... ஒரே ஒரு ஃபோட்டோ... மை காட்! யார் திருடியிருப்பா!... எதுக்காக!...
அந்த இளைஞன்தான் அலறினான். கம்பீரமான கறுப்பு முகம் உணர்ச்சிவசப்பட்டுத் தடுமாறுவது அவளை என்னவோ செய்தது.
சரியா பாருங்க சார்... தூங்கலேங்கறீங்க... உள்ளே யாரும் வர அவ்வளவா சான்ஸ் இல்லே... அதுவும் பான்ட் பாக்கெட்ல கையை விட்டு யார் திருடியிருக்கப் போறாங்க...? ஏதாவது ஸ்டேஷன்ல இறங்கினீங்களா?
சட்டென்று முகத்தில் மின்னலடிக்க, அவன் படபடத்தான்.
கரெக்ட் சார்... ஈரோட்டுல இறங்கினேன்... டீ சாப்பிட்டேன்... இந்தியா டுடே புஸ்தகம் வாங்கினேன்... சில்லரை எண்ணிக் கொடுத்து பர்ஸ் பாக்கெட்ல வெச்சுது நல்லா ஞாபகம் இருக்கே... பக்கத்துல ஒரு ஆள் கொடுங்க சார், அந்த புஸ்தகத்தை ஒரு க்ளான்ஸ் பார்த்துட்டு தரேன்னான்... கொடுத்தேன்... டீ குடிச்ச பிறகு புஸ்தகத்தையும் வாங்கிக்கிட்டு நகர ஆரம்பிச்ச ரயில்ல ஏறினேன் சார்...
சரியா தேடிப் பாருங்க சார்... பாத்ரூம் போகும்போது கூட எடுத்து வெச்சிருக்கலாம்...
என்றார் வெண்தாடி.
அனைவரும் அவனையே பரிதாபமாகப் பார்த்தார்கள்.
இறுக்கமான முகத்துடன் அவன் சென்னையில் ஏறி எதிர் சீட்டில் ஓரத்தில் உட்கார்ந்தது நினைவுக்கு வந்தது. மெழுகுப் பொம்மை போல எல்லாரிடமும் ஓடிப் பழகி ஓட்டிக்கொண்ட குண்டுக் குழந்தையிடம் கூட அவன் லேசான் புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான். புளியஞ்சாதம், தோசை, தயிர்சாதம் என்று ஒன்பது மணிக்கு எல்லாரும் கட்டுப்பிரித்தபோது, அவன் இரண்டு வாழைப்பழங்களுடன் ராச்சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.
ஸார்... ஸார்... தொலைஞ்சு போனது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு... ரயில்வே போலிஸ்கிட்ட கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டுப் போங்க... பட், இப்ப நீங்க ஃபைன் கட்டித்தான் ஆகணும்... டிக்கெட் சார்ஜ் பிளஸ்...
டி.டி.ஆர். சொல்லிக் கொண்டே