Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathangai Ittal Oru Maathu
Sathangai Ittal Oru Maathu
Sathangai Ittal Oru Maathu
Ebook94 pages35 minutes

Sathangai Ittal Oru Maathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

she has written several novels in Tamil.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580115703994
Sathangai Ittal Oru Maathu

Read more from Lakshmi Rajarathnam

Related to Sathangai Ittal Oru Maathu

Related ebooks

Reviews for Sathangai Ittal Oru Maathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathangai Ittal Oru Maathu - Lakshmi Rajarathnam

    http://www.pustaka.co.in

    சதங்கை இட்டாள் ஒரு மாது

    Sathangai Ittal Oru Maathu

    Author:

    லட்சுமி ராஜரத்னம்

    Lakshmi Rajarathnam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lakshmi-rajarathnam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    அந்த மலை நகரத்திலிருந்து புறப்பட்ட காண்டஸா கார் பொம்மை மாதிரி தெரிந்தது. இருபுறமும் வானுயர்ந்த மரங்கள், மலர்கள் செண்டாடும் செடி, கொடிகள், நடுப்பாதையில் கார் வருவது கைதேர்ந்த ஓவியன் தீட்டிய ஓவியம் போலத் தோன்றியது. அதில் அமர்ந்திருந்த சுமித்ராகூட பொம்மை மாதிரி அமர்ந்திருந்தாள்.

    ஒல்லியாக ஐந்தரை அடி உயரத்தில் இருந்தாலும் மலைப்பிரதேசத்திற்கு உரிய செழுமைபின்னி பூச்சூடி இருந்தாலும், இருபுறமும் வழிந்து காதுகளை மறைக்கும் முடி, நீள் விழிகள், குவிந்த சிறு உதடுகள், எந்த ஓவியனாக இருந்தாலும் மாடலாக நிற்க வைத்து தீட்டவே ஆசைப்படுவான்.

    அவளருகில் மாமா ராஜாராம் முறுக்கு மீசையுடன் கன கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருந்தார். மலை நகரத்து பங்களாவிலிருந்து கிளம்பி இரண்டு மணி நேரமாக போகிறது. சுமித்ரா இன்னும் வாயை திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

    இந்த கனத்த மெளனத்தை உடைக்க வேண்டும். சுமித்ரா ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜா தொண்டையை செருமிக் கொண்டார்.

    "சுமி...''

    பார்வையை அவர் மீது வீசுகிறாள்.

    என் மேல் கோபமா?

    கோபத்துடன் உதடுகளை குவித்தவள் இல்லை மாமா, ரொம்ப சந்தோஷம். இந்த மட்டுமாவது எனக்குப் பிடிக்காத காரியத்தை செய்ய போகிறீர்களே... உங்களைத் தவிர வேறு யார் இப்படி செய்யப் போறாங்க? என்றாள் கோபமாக.

    கண்ணீர் இமை விளிம்பைத் தொட முகத்தை தாழ்த்திக் கொண்டாள்.

    உனக்கு நான் கெடுதல் செய்வேனா?

    இப்ப என் ஆசைக்கு மாறாக என்னை ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்க்கப் போகிறீர்களே... அது என்ன?

    உங்கப்பாவோட ஆசை அதுதானேம்மா?

    இதுல என் ஆசைனு ஒண்ணுமே கிடையாது. எனக்குத்தான் படிப்பே வேண்டாம்னு சொல்றேனே? என்னைப் பிடிவாதமா ஏன் கொண்டு சேர்க்கிறீங்க. மாமா, நான் நிச்சயமா பெயில்தான் ஆவேன். இப்பவே சொல்லிட்டேன். புரிஞ்சுக்குங்க. இந்த சுமித்ரா நினைத்ததை சாதித்து காட்றவ. நான் ஒண்ணும் ஜெயில் கைதி இல்ல -என்றாள் சீறலாக.

    மாமா சிரித்துக் கொண்டே... நீ இன்னும் குழந்தைதாம்மா. இந்த உலகத்துல நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்கு. நீ உண்மைன்னு நினைக்கறது பொய்யா இருக்கலாம். பொய் உண்மையாகவும் இருக்கலாம்.

    அதெல்லாம் கவலையில்லை எனக்கு.

    எதைப் பத்திதான் கவலைப்படறே சொல்லு.

    என் ஆசை எல்லாம் உங்களுக்குத் தெரியும். சும்மா சீண்டாதீங்க. பெண்ணாப் பிறக்கக்கூடாது, அப்படிப் பிறந்தாலும் பணக்கார வீட்ல பிறக்கக்கூடாது.

    மாமா பேசாமல் இருந்தார். இவளுடைய அம்மா தன் தங்கை தான். அவளே போய்விட்ட பின்பு பேசாமல் இருந்திருக்கலாம். பாசம் இழுக்கிறதே...

    என்ன மாமா யோசனை பண்றீங்க. இப்பவும் ஒண்ணும் லேட்டாயிடல்ல. வண்டியை நிறுத்தச் சொல்லுங்க. இப்படியே இறங்கி எங்கேயாவது போயிடறேன். இந்த பரந்த உலகத்துல என் ஒருத்தியால பிழைக்கவா முடியாது?

    உங்கப்பனுக்கு யாரம்மா பதிலை சொல்றது?

    காணோம்னு சொல்லிடுங்க...

    நீ சுலபமா சொல்லிட்டே. நீ காணாமப் போறது குடும்பத்தை எத்தனை தூரம் பாதிக்கும்னு உனக்குத் தெரியாது. விளையாட்டாக் கூட அது மாதிரி செய்துடாதே. உனக்கு நான் கெட்டது செய்ய மாட்டேன் என்றபொழுது குரல் உடைந்து தழுதழுத்தது.

    மூக்கை உறிஞ்சிக்கொண்டே சுமித்ரா ஏதோ பேச ஆரம்பிக்க, மாமா கையை அமுக்கி டிரைவர் இருப்பதை சுட்டிக் காட்டினார். விசுவாசமான டிரைவர். தன் எஜமானன் சித்தார்த்திற்கு துரோகம் பண்ண மாட்டான் என்று தெரியும்.

    சுமிக் கண்ணா, உனக்கு எது நல்லதுனு உங்கப்பாவுக்கு தெரியாதா? அவர் சொன்னதைக் கேளும்மா. மூஞ்சியை நல்லா வச்சுக்க. டிரைவர் ஏதாவது கேஸட்டை போடப்பா - என்றார்.

    சி.டி.பிளேயர் இயங்க அம்மா என்றழைக்காத உயிரில்லையே... கசிந்தது.

    இரவு முழுக்க பயணம் பண்ணி மறுநாள் காலையில்தான் நகரம் வந்தார்கள். மலைகளும், செடிகளும், கொடிகளும் பள்ளத்தாக்கு சரிவுகளும் நிரம்பிய மலைப்பிரதேசத்திற்கு நேர்மாறாக இருக்கிறது நகரம். சிலுசிலுவென்று அடிக்கும் சாரலுக்கு பதிலாக சுள்ளென்று வெய்யில் முகத்தை குத்திக் கண்களை சுருங்க வைக்கிறது.

    கூட்டமாக செல்லும் மனிதர்கள், குறுக்கும் நெடுக்குமாக செல்லும்

    Enjoying the preview?
    Page 1 of 1