Veli Thaandiya Velladugal
()
About this ebook
எல்லாக் கதைகளுமே சற்று அதிர்ச்சி தருபவைதான். புத்தகத்தின் தலைப்பே கதைகளின் கருப்பொருளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
வாழ்வதில் இருவகை. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்பது ஒருவகை. 'எப்படியும் வாழலாம்' என்பது இன்னொரு வகை.
சமுதாயத்தில் இருக்கும் எதிர்மறைக் கருத்துக்களை சாடி, சீறி, வரம்பு மீறி வாழ்க்கை நடத்துபவர்களைப் பார்த்து இவர்கள் செய்வது நியாயம்தானோ என்ற ஐயம்கூட எழலாம்.
ஆனால் சம்பிரதாயமாகத் திருமணம் செய்து, கழுத்தில் மங்கல நாண் அணிந்த பிறகு செய்யும் தவறுகள் மன்னிக்கப்படக்கூடாது. அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற திட்டவட்டமான உண்மையை இந்நூலில் உள்ள சிறுகதைகள் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
எட்டுக் கதைகளைப் பற்றி விரிவாகச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்!
‘எப்ப வருவா கனகா?’ கதையில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மகளின் தோழி, சேர்ந்து படிக்க வருகிறாள், அவள் வீட்டில் சூழ்நிலை சரியில்லை, மகளின் தோழியின்மீது ‘பார்வை பதிக்கும்’ அப்பா, அவள் படிக்க வராத நாட்களில் அவள் வீடு தேடி அழைத்து வருவதும், அதனைக் கண்டு சொந்த மகள் ஹாஸ்டலில் போய்ப் படிப்பதும்…! வயது வித்யாசம் இல்லாமல் கடைசியில்.. நீங்களே படியுங்கள்.
‘பெல்ட்’ கதையில், கதாநாயகி காசாம்புவின் ஹிஸ்டீரியாவினால் அவள் நடந்துகொள்ளும் கோரக் காட்சிகளும், காசாம்புவின் கணவனைத் தேடிவரும் ஒரு போலீஸ்காரர் மூலம் அவள் அடங்குவதும், கை மீறிப்போன மனைவியின் செய்கையினால் நொந்துபோன கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் காசாம்பு செய்தவை, வாசகர்களுக்கே ஆத்திரமூட்டும் அளவுக்கு இருக்கின்றன.
‘ருக்குமாமா’ கதையின் இறுதிவரை அந்த வீட்டுத் தலைவர் பேசும் வசனம் பளீரென்று அறைவத போல் உள்ளது. “தப்பு பண்ணினால் தண்டனை கிடைக்கும் என்று நான் உணர்த்தவில்லை என்றால் நான் ஜட்ஜே இல்லை...”
‘சுபலேகா’ கதையில் கள்ளக்காதலன் துணையோடு, கணவனுக்கு- கோமாவில் இருப்பவருக்கு- தொல்லை தர மந்திரவாதி மூலம் தீர்வு காண்கிறாள். என்ன பெண் இவள் என்று சொல்ல வைக்கிறார் ஆசிரியர்.
‘மாமி விட்ட தூது’ கதையின் முடிவில் மரணம் தராமல் வேற வகை தண்டனை!
ஆக நேர்மறையாகச் சொல்லாமல் எதிர்மறையாகவே கதைகளை எழுதத் தீர்மானித்திருக்கிறார் ஆசிரியர்.
‘நல்லவன் வாழ்வான்’ என்று சொன்னால் என்ன… ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்றால் என்ன… (என நினைத்தார்போலும்).
- பாமா கோபாலன்
Read more from Ja. Ra. Sundaresan
Pamara Geethai Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Ezhuthathey! Rating: 0 out of 5 stars0 ratingsThullal Rating: 0 out of 5 stars0 ratingsEllam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsThedinal Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Mullin Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Oru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPaasangu Rating: 0 out of 5 stars0 ratingsKadhambavin Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Rating: 0 out of 5 stars0 ratingsPonnin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsPennendral... Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Nerungi Varugiral Rating: 0 out of 5 stars0 ratings
Related to Veli Thaandiya Velladugal
Related ebooks
Thagappan Kodi Rating: 0 out of 5 stars0 ratingsNaan Ezhuthanaal... Nee Vaarthaiyaavai... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsVannam Konda Vennilave Rating: 5 out of 5 stars5/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Konjam Kaadhal Konjam Kaamam Rating: 5 out of 5 stars5/5En Anni - En Manaivi? Rating: 0 out of 5 stars0 ratingsRajathithan Sabatham Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Amaithu Vaitha Medai Rating: 5 out of 5 stars5/5Kulire! Kulire! Kollathey! Rating: 5 out of 5 stars5/5Un Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsParijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsPesi Pesi Kollathey!!! Rating: 0 out of 5 stars0 ratingsMamanar Kathaigal Rating: 5 out of 5 stars5/5Maavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Thoorigai Thurogam Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 0 out of 5 stars0 ratingsMithrahasini Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathu Maharani Rating: 5 out of 5 stars5/5Unakkaga Kaathirukkirean Rating: 3 out of 5 stars3/5Koodalazhahi - Part 1 Rating: 5 out of 5 stars5/5Aasai Mugam Maranthayo Rating: 0 out of 5 stars0 ratingsValampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsAaruyire Mannipaaya Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyatha Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsVallamai Thaaraayo? Rating: 5 out of 5 stars5/5Raja Nayagi Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsVittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsMohana Punnagaiyil Oru Naal! Rating: 0 out of 5 stars0 ratingsAasai Nayagi Rating: 4 out of 5 stars4/5
Reviews for Veli Thaandiya Velladugal
0 ratings0 reviews
Book preview
Veli Thaandiya Velladugal - Ja. Ra. Sundaresan
http://www.pustaka.co.in
வேலி தாண்டிய வெள்ளாடுகள்
Veli Thaandiya Velladugal
Author:
ஜ.ரா. சுந்தரேசன்
Ja. Ra. Sundaresan
For more books
http://www.pustaka.co.in/home/author/jarasu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
1997’ல் ‘சாவி’ இதழில் வெளிவந்த ROMANCE சிறுகதைகள்
பொருளடக்கம்
தங்கம் பேபி
கனகமயிலு
பெல்ட்
எப்ப வருவா கனகா?
துணை டைரக்டரின் துணை
குக்கு மாமா
சுபலேகா
மாமி விட்ட தூது
அணிந்துரை
எல்லாக் கதைகளுமே சற்று அதிர்ச்சி தருபவைதான். புத்தகத்தின் தலைப்பே கதைகளின் கருப்பொருளை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
வாழ்வதில் இருவகை. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்பது ஒருவகை. 'எப்படியும் வாழலாம்' என்பது இன்னொரு வகை.
சமுதாயத்தில் இருக்கும் எதிர்மறைக் கருத்துக்களை சாடி, சீறி, வரம்பு மீறி வாழ்க்கை நடத்துபவர்களைப் பார்த்து இவர்கள் செய்வது நியாயம்தானோ என்ற ஐயம்கூட எழலாம்.
ஆனால் சம்பிரதாயமாகத் திருமணம் செய்து, கழுத்தில் மங்கல நாண் அணிந்த பிறகு செய்யும் தவறுகள் மன்னிக்கப்படக்கூடாது. அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்ற திட்டவட்டமான உண்மையை இந்நூலில் உள்ள சிறுகதைகள் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
எட்டுக் கதைகளைப் பற்றி விரிவாகச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும்!
‘எப்ப வருவா கனகா?’ கதையில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மகளின் தோழி, சேர்ந்து படிக்க வருகிறாள், அவள் வீட்டில் சூழ்நிலை சரியில்லை, மகளின் தோழியின்மீது ‘பார்வை பதிக்கும்’ அப்பா, அவள் படிக்க வராத நாட்களில் அவள் வீடு தேடி அழைத்து வருவதும், அதனைக் கண்டு சொந்த மகள் ஹாஸ்டலில் போய்ப் படிப்பதும்…! வயது வித்யாசம் இல்லாமல் கடைசியில்.. நீங்களே படியுங்கள்.
‘பெல்ட்’ கதையில், கதாநாயகி காசாம்புவின் ஹிஸ்டீரியாவினால் அவள் நடந்துகொள்ளும் கோரக் காட்சிகளும், காசாம்புவின் கணவனைத் தேடிவரும் ஒரு போலீஸ்காரர் மூலம் அவள் அடங்குவதும், கை மீறிப்போன மனைவியின் செய்கையினால் நொந்துபோன கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் காசாம்பு செய்தவை, வாசகர்களுக்கே ஆத்திரமூட்டும் அளவுக்கு இருக்கின்றன.
‘ருக்குமாமா’ கதையின் இறுதிவரை அந்த வீட்டுத் தலைவர் பேசும் வசனம் பளீரென்று அறைவத போல் உள்ளது. தப்பு பண்ணினால் தண்டனை கிடைக்கும் என்று நான் உணர்த்தவில்லை என்றால் நான் ஜட்ஜே இல்லை...
‘சுபலேகா’ கதையில் கள்ளக்காதலன் துணையோடு, கணவனுக்கு- கோமாவில் இருப்பவருக்கு- தொல்லை தர மந்திரவாதி மூலம் தீர்வு காண்கிறாள். என்ன பெண் இவள் என்று சொல்ல வைக்கிறார் ஆசிரியர்.
‘மாமி விட்ட தூது’ கதையின் முடிவில் மரணம் தராமல் வேற வகை தண்டனை!
ஆக நேர்மறையாகச் சொல்லாமல் எதிர்மறையாகவே கதைகளை எழுதத் தீர்மானித்திருக்கிறார் ஆசிரியர்.
‘நல்லவன் வாழ்வான்’ என்று சொன்னால் என்ன… ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்றால் என்ன… (என நினைத்தார்போலும்).
- பாமா கோபாலன்
28.2.2020
*****
தங்கம் பேபி
நீங்க சீவ வேண்டாம். சிங்காரிக்க வேண்டாம். சொம்மா இருந்தாலே டக்கர் தூளா இருக்கீங்க,
என்றான் அழகப்பன்.
தட்டைகளை டபராவால் அழுத்தி அழுத்தி எண்ணெயில் போட்டுக் கொண்டிருந்தாள் தங்கம் பேபி.
கிழிந்த சோபாவின் நுனியில் உட்கார்ந்திருந்த அழகப்பன் அவளுடைய ஓரொரு அசைவையும் கவனித்தவாறு இருந்தான்.
எண்ணெய்ப் புகை வெளியே போக வழியில்லாமல் அறைக்குள் சுற்றி சுற்றி வந்து கமறியது.
உங்க வீட்டுக்காரன் சொகமில்லே. உங்களைக் கொண்டு வந்து இங்கே அடைச்சு வெச்சிருக்காரு. கிச்சனா இது? ஒரு சன்னலு உண்டாங்க?
அவன் கண்டித்தான்.
அவள் லேசாகச் சிரித்தாள்.
என்னங்க செய்யறது? சைக்கிள் மிதிக்கிறதுக்கே அதுக்கு நேரம் சரியா இருக்குது. ராத்திரி தண்ணி அடிச்சிட்டு வருது. படுத்துடுது.
தங்கம் பேபியின் அழகிய விரல்கள் வட்டத் தட்டையை பிளாஸ்டிக் பேப்பரிலிருந்து பிரித்து, கொதிக்கும் எண்ணெயில் நழுவவிட்டுக் கொண்டிருந்தன.
அவளைப் பாதாதி கேசம் ஒரு ஸர்வே எடுத்தன அவனுடைய கண்கள். ஆச்சர்யப்பட்டான். அப்போதுதான் சொன்னான் :
நீங்க சீவ வேண்டாம். சிங்காரிக்க வேண்டாம். சொம்மா இருந்தாலே டக்கர் தூளா இருக்கீங்க
என்று.
ஒரு மெலிந்த வியர்வை ஓடை நெற்றியிலிருந்து வழிந்து அவளது கூர்மையான நாசியின் பாதி தூரத்துக்கு வந்திருந்தது.
தன் நாசியை வலது விரலால் அனிச்சையாக அவளது விரல் தொட்டுத் தடவிக் கொண்டபோது அவன் உள்ளம் கூவியது. 'தங்கம் பேபி, உன் மூக்கைத் தொட்டுத் துடைத்து விடற வேலையை எனக்குக் குடேன். அங்கே எங்க அப்பனோட டிம்பர் மார்ட்டிலே போய் லட்ச ரூபாய் யாபாரம் பண்ற வேலை கூட எனக்கு வேணாம். இத்தினி அழகான மூக்கும், இப்படி ஒரு கண்ணும், பவுனுலே பண்ணின பட்டை ஒட்டியாணம் மாதிரி இடுப்பும், அந்தத் தொடையும், கெண்டைக்காலும், கால் வெரலுங்களும், நகங்களிலே தெரிகிற செவப்பு மருதாணியும்...'
அவன் மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம், அவளுக்குச் சில அடிகள் தூரத்திலே உட்கார்ந்து அவள் வேலை செய்கிறதைப் பார்க்கவாவது தனக்கு ஒரு அதிருஷ்டம் கிடைச்சிருக்கே.
காதுலே போட்டிருக்கிற ரெண்டு கண்ணாடித் தோட்டைத் தவிர ஒரு நகை நட்டு கிடையாது. சோப்புப் போட்டுக் கிளீனாக் கழுவிவுட்ட மாதிரி நெகு நெகுன்னு