Paasangu
()
About this ebook
நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி - சீதாப்பாட்டி நகைச்சுவைப் பாத்திரங்களை சிருஷ்டித்த பாக்கியம் ராமசாமி என்றால் திரு. ஜ.ரா. சுந்தரேசனைச் சட்டென்று வாசக உலகுக்குப் புரியும்.
37 ஆண்டுகள் குமுதம் பத்திரிகையில் உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகிய பதவிகளை வகித்துவிட்டு 1990'ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
ஜ.ரா. சுந்தரேசன் என்ற அசல் பெயரில் நிறைய நாவல்கள் எழுதியுள்ளார். பூங்காற்று, குங்குமம், மனஸ், கதம்பாவின் எதிரி, நெருங்கி நெருங்கி வருகிறாள், பாசாங்கு, பொன்னியின் புன்னகை போன்ற நாவல்கள் எழுதியுள்ளார்.
இவரது புனைப் பெயர்கள் அனேகம்... அப்புசாமி கதைகளுக்கு பாக்கியம் ராமசாமி என்ற பெயரையே பயன்படுத்துகிறார். மற்ற புனைப் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை: யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, இரா. சிதம்பரம், உதங்கர், சிவதணல், ஜ்வாலாமாலினி.
சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர் என்ற பாராட்டுப் பெற்றவர். அனேக அரிமா சங்கங்களிலும், ரோட்டரி கிளப்புகளிலும், ஹ்யூமர் கிளப்புகளிலும், தனியார் இலக்கிய கூட்டங்களிலும் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் நிறையத் தடவை பேசியிருக்கிறார். தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கிய சிந்தனை போன்ற பல அமைப்புகளில் இவரது எழுத்துக்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கின்றன. 'ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்' போன்ற பாராட்டுக்களைப் பெற்றவர். நகைச்சுவை என்றாலும் ஆன்மீகத்தில் ஆழமான நாட்டம் கொண்டவர். இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக் கொள்வது போன்ற பாணியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்ட கருத்துக்களை 'பாமர கீதை' என்னும் சிறு நூலில் விரிவாக விளக்கியிருக்கிறார்.
Read more from Ja. Ra. Sundaresan
Ellam Income Mayam Rating: 0 out of 5 stars0 ratingsThullal Rating: 0 out of 5 stars0 ratingsVeli Thaandiya Velladugal Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Ezhuthathey! Rating: 0 out of 5 stars0 ratingsKungumam Rating: 5 out of 5 stars5/5Pamara Geethai Rating: 0 out of 5 stars0 ratingsMullin Kadhal Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Thedinal Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsOru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsKadhambavin Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsPoonkaatru Rating: 0 out of 5 stars0 ratingsPonnin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsPennendral... Rating: 0 out of 5 stars0 ratings1990’il Veliyana Aazhamana Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Appa Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Nerungi Varugiral Rating: 0 out of 5 stars0 ratings
Related to Paasangu
Related ebooks
Maayamaan Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Unthan Ninaive Rating: 1 out of 5 stars1/5Ithayam Palavitham Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsNizhalgal Rating: 0 out of 5 stars0 ratings23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Kanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsUrugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Vasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsPaisa Nagarathu Gopurangal Rating: 5 out of 5 stars5/5Vaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsKuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Ragasiya Sinehithane Rating: 0 out of 5 stars0 ratingsஇரகசிய சினேகிதனே... Rating: 0 out of 5 stars0 ratingsMalathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 5 out of 5 stars5/5Parijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Vensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsஇறைவன் கொடுத்த வரம்! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5நேசம் மலர்ந்தது... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mutham Tharuvaaya? Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Paasangu
0 ratings0 reviews
Book preview
Paasangu - Ja. Ra. Sundaresan
http://www.pustaka.co.in
பாசாங்கு
Paasangu
Author:
ஜ.ரா.சுந்தரேசன்
Ja. Ra. Sundaresan
For more books
http://www.pustaka.co.in/home/author/jarasu
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
1
வெங்கையாவின் கட்டில் அருகே ஏஜண்ட் நாகலிங்கம் உட்கார்ந்தார். கண் சிகிச்சை விடுதியில் மாடியிலிருந்த அந்த ஸ்பெஷல் வார்டுக்கு ஏறிவந்ததில் களைத்தவர் போல் லேசாகப் பெருமூச்செறிந்தார் அவர்.
கீழேயிருந்த தோட்டத்திலிருந்து, மேலே ஏறி வந்த மல்லிகைக் கொடி கிழக்குப் பக்கத்து ஜன்னல் வழியே உள் நுழைய முயன்று கொண்டிருந்தது. அதனுடைய விடாமுயற்சியை அண்ணாந்து பார்த்து வியந்தன சூரியகாந்திகள்.
உடன் பிறந்தது போன்ற தடித்த தோல் கைப்பையைக் கட்டில்மேல் வைத்தார் நாகலிங்கம். அவசியமான அபூர்வமான சமயங்களில் மட்டுமே கழற்றும் தன் தலைப்பாகையையும் கழற்றி வைத்தார். வாழ்க்கையின் பெரும் பகுதியை இன்ஷ்யூரென்ஸ் ஏஜண்டாகவே கழித்துவிட்டதன் காரணமாக, அவர் முகத்தில் சிடுசிடுப்பே இல்லாத செயற்கைச் சிரிப்பு ஒன்று எப்போதும் தவழ்ந்து கொண்டிருந்தது.
யார், நாகலிங்கமா? எப்படியோ நீ வந்ததும் எனக்குத் தெரிந்து விடுகிறதடா,
என்று கூறிய வெங்கையா, நாகலிங்கத்தின் கைகளைத் தடவிப் பிடித்தார்.
'நோயாளியுடன் நீண்ட நேரம் பேசித் தொந்தரவு கொடுக்க வேண்டாம்' என்று நாகலிங்கத்துக்கு வழக்கமாக எச்சரிக்கும் ஒல்லி நர்ஸ் தன் தலையை மட்டும் அறைக்குள் காட்டிவிட்டுச் சென்றாள். அவள், சக நர்ஸையோ, டாக்டரையோ, அல்லது தலைக்குக் கட்டிக் கொள்ளும் துணியையோ ஒவ்வோர் அறையாகத் தேடிக் கொண்டிருந்தாள்.
அடுத்தாற் போல், தண்ணீர் ஜாடியில் நீர் பிடித்து வைக்க வார்டுபாய் உள்ளே நுழைந்தான். ஜன்னல் வழியே பழைய தண்ணீரைக் கொட்டப் போனவன் கீழே நீரூற்று அருகே, தலைமை டாக்டர் யாரோ ஒரு மிடுக்கான, நீல நிற பாண்ட் போட்ட வாலிபனுடன் பேசி நிற்பதைப் பார்த்து, உள்ளே மூலையில் வாஷ்பேஸினில் தண்ணீரைக் கொட்டிவிட்டுப் புதிய நீர் கொண்டு வரச் சென்றான்.
கட்டிலுக்கருகே இருந்த முக்காலியில் லேடீஸ் ஹாண்ட்பாக்
ஒன்று காட்சி அளித்தது.
நாகலிங்கம் கேட்டார்; சரஸ்வதி வந்துவிட்டுப் போய்விட்டதா? இவ்வளவு சீக்கிரமாகவா?
வெங்கையா இளம் சிரிப்புச் சிரித்தார், இல்லையே. எப்படிக் கேட்கிறாய்?
இல்லை? கைப்பை ஸ்டூல்மேல் இருக்கிறது. அது தான் கேட்டேன்.
ஓ, நேற்று சாயந்தரம் வந்திருந்தாள். எட்டு மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். கைப்பையை மறந்து விட்டாள் போலிருக்கிறது. அதை இப்டிப் பத்திரமாக என் தலைமாட்டில் வைக்கிறாயா?
ஊம். பாவம்! உனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது. இல்லையா?
என்று குறும்புச் சிரிப்புடன், முத்துக்களால் பின்னிய கைப்பையை வெங்கையாவிடம் தந்தார். அதை அவர் தன் தலையணையின் அடியில் வைத்துக் கொண்டார்.
நீங்கள் இன்னும் பேசியாகலே?
மெல்லிய நர்ஸ் மீண்டும் தலையைக் காட்டினாள். அவள் தலை நிலைப் படியிலிருந்தவாறே அறையை நோட்டமிட்டது. இன்னும் படுக்கைக்கு லினன் மாற்றலே? ஏ! ஆயா? அங்கே என்ன செய்கிறே? யார் இந்தக் காரியத்தையெல்லாம் செய்யறது? பையன் தண்ணீர் பிடிச்சு வைக்கலை இன்னும்? தரை பெருக்கியாகலே? வாட் இஸ் தட்? இப்படிப் பாதிப் பழத்தை மேலே யார் வைத்தது? க்ளுகோஸ் டப்பா இப்படியா எக்ஸ்போஸ் பண்ணி வைக்கிறது? மூடுங்க. எடுத்து அதை உள்ளே வையுங்க. நோயாளிகிட்டே பேசத் தெரியும் வர்றவங்களுக்கு... ப்ளீஸ்! நீங்க நகர்றீங்களா? கட்டில் கோணல்!
நர்ஸ் கிடுகிடு என்று உள்ளே வந்தாள். நாகலிங்கம் அரண்டு போய் எழுந்து கொண்டார்.
வெங்கையாவைக் கைப் பிடித்து அழைத்து ஜன்னலோரமாக ஒரு நாற்காலி போட்டு நர்ஸ் உட்கார வைத்தாள். படுக்கை விரிப்பு மாற்றுகிற வரை இருங்க இப்படி!
. அவள் கட்டளையிட்டுவிட்டுப் போனதும் சடபட ஓசை அடங்கினாற் போலிருந்தது.
"அப்பா, நெருப்புத்தான்,' என்றார் நாகலிங்கம், வெங்கையாவுடன் பேசுவதற்கு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு..
வெங்கையா, நர்ஸிங் ஹோமில் சேர்ந்து பதினைந்து நாட்களாகின்றன. கிண்டியில் விஞ்ஞானக் கருவிகள் தயாரிக்கும் கம்பெனியில் மானேஜராக வேலை பார்த்து வந்த அவர், கண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத விபத்துக்குச் சிகிச்சை செய்து கொள்வதற்காக நர்ஸிங் ஹோமில் சேர்க்கப்பட்டார். புகழ்பெற்ற பெரிய டாக்டர்களின் சிபாரிசும், இளம் முதலாளி கொட்டிய பணமுமே அவருக்கு இந்தச் சிகிக்சை விடுதியில் இடம் பிடித்துக் கொடுத்தன.
வெங்கையாவைப் பற்றி ஏஜண்ட் நாகலிங்கம் வெகு நன்றாக அறிவார். வெங்கையாவிற்கும் அவருக்கும் ஒன்றாகத்தான் தலைமயிர் முளைத்ததும் நரைத்ததும். ஓர் இன்ஷ்யூரன்ஸ் ஏஜண்டாகக் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக வேலை செய்தும் அவரால் அடையமுடியாத கார், பங்களா வசதிகளை, வெங்கையா ஒரு கம்பெனியில் மானேஜராகி, அடைந்திருப்பதில் இவருக்குப் பொறாமை இல்லை. மகிழ்ச்சிதான். தான் அடையாத, தனக்குக் கிட்டாத சுகத் தைப் பிறர் அடைவதில் அவருக்கு வயிற்றெரிச்சல் கிடையாது. வெங்கையாவிடம் எத்தனையோ பலவீனங்கள் இருந்தாலும் நாகலிங்கத்துக்கு அவரிடம் ஒரு மாற்ற முடியாத ஈடுபாடு. சம்பாதிக்கும் யந்திரமாகத் தன்னைப் போல் ஆகிவிடாமல், அவர் நல்ல கலைரசிகனாகவும் இருந்தது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒரு ஞாயிறாவது அவரை வீட்டில் பார்க்க முடியாது. பட்டணத்தில் நல்ல கச்சேரி, மயிலாப்பூரிலா, மாம்பலத்திலா, நுங்கம் பாக்கத்திலா, பெரம்பூரிலா எங்கெங்கு நடக்கிறதோ அங்கேதான் பார்க்கலாம். இன்னொரு விஷயம்; மூளையோடு வேலை செய்வார். அனாவசியமாக உழைத்து உடம்பு களைத்துப் போகமாட்டார்.
உன்னைப் பொறுத்தவரை, எல்லாமே எதிர்பாராததாகத்தான் நடக்கிறது. ஆச்சரியமாயில்லை?
என்றார் நாகலிங்கம்.
கண்கள் கட்டப்பட்டிருந்த வெங்கையாவுக்கு நாகலிங்கத்தின் உணர்ச்சியைப் பார்க்க முடியவில்லை. எதை நாகலிங்கம் குறிப்பிடுகிறார் என்பது புரிந்தது அவருக்கு. ஆனால் வேண்டுமென்றே மெளனமாக இருந்தார்.
உனக்கு அடிபட்டதைத்தான் சொல்கிறேன்.
என்றார் நாகலிங்கம்.