Ragasiya Sinehithane
By R.Manimala
()
About this ebook
Read more from R.Manimala
Anbu Megame Rating: 0 out of 5 stars0 ratingsMalare Ennai Nerunkaathe Rating: 4 out of 5 stars4/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsSarkkarai Nilave Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Manam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellaam Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsMuththamida Aasai Rating: 0 out of 5 stars0 ratingsSuttum Vizhichsudare Rating: 0 out of 5 stars0 ratingsPon Vaanam Panneer Thuvuthu Rating: 0 out of 5 stars0 ratingsPoove Pen Poove Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsKannellaam Un Vannam Rating: 0 out of 5 stars0 ratingsEn Piriyasagi Rating: 0 out of 5 stars0 ratingsVinnaivittu Vaa Kanne Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Neram Rating: 0 out of 5 stars0 ratingsManathodu Pesa Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKannil Therigindra Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thara Vanthen Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsVaa PonMayile Rating: 0 out of 5 stars0 ratingsMarakkumo Nenjam Rating: 5 out of 5 stars5/5Nee Kaatru... Naan Maram… Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5En Anbe Rating: 4 out of 5 stars4/5
Related to Ragasiya Sinehithane
Related ebooks
இரகசிய சினேகிதனே... Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratingsகானலைத் தேடும் காவிரி Rating: 0 out of 5 stars0 ratingsகலையும் கனவுகள்..! Rating: 0 out of 5 stars0 ratingsKalaiyum Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaan Rating: 0 out of 5 stars0 ratingsKolai Sei Kadhala Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Kuyilosai Kettayo! Rating: 0 out of 5 stars0 ratingsVellai Roja Karuppu Poonai Rating: 0 out of 5 stars0 ratingsVaana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPaasangu Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Roja Rating: 5 out of 5 stars5/5Kannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Manam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5மனம் விரும்புதே உன்னை... Rating: 0 out of 5 stars0 ratingsஎண்ணம் போலக் கண்ணன் வந்தான் Rating: 0 out of 5 stars0 ratingsEnnam Pola Kannan Vanthaan Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsNigazhntha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Chinna Chellamey! Rating: 0 out of 5 stars0 ratingsUllukkulle Un Ninaivu Rating: 5 out of 5 stars5/5Paattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsItharkuthane Kathiirunthom Rating: 5 out of 5 stars5/5உன்னைத் தேடும் நெஞ்சம்! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5
Related categories
Reviews for Ragasiya Sinehithane
0 ratings0 reviews
Book preview
Ragasiya Sinehithane - R.Manimala
1
அழகழகான.. விதவிதமான மலர்களை ஓவ்வொரு அறையிலும் சிறைப்படுத்தியிருந்தனர். அடைக்கப்பட்டிருக்கிறோமே என்கிற கவலை கொஞ்சமும் அவர்கள் முகத்தில் இல்லை! உலகையே தங்கள் துப்பட்டாவில் வளைத்து கட்டி விட்ட பெருமிதமும், மகிழ்ச்சியும் பேச்சில் உற்சாகமாக வெளிப்பட்டது. இது ஒரு தனி உலகம். அது... கல்லூரி வளாகம்!
பி.எஸ்.ஸி மூன்றாம் வருடம் என்று சாக்பீஸால் கதவில் எழுதப்பட்டிருந்த அறையில்... அந்த பூக்களின் நடுவே தாமரைப்பூவாய் தனித்து தெரிந்தாள் காவ்யா! அந்த வகுப்புக்குரிய ஆசிரியை விடுமுறை என்பதால்... இளசுகளின் முகத்தில் இரட்டிப்பு சந்தோஷம்.
காவ்யா தலை குனிந்து தீவிரமாய் எழுதிக்கொண்டிருந்தாள். அவள் எழுதுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள்... ரேகா.
"இமை மீது நித்திரை... இரவு தந்தது!
இதழ் மீது முத்திரை... உறவு தந்தது!
ஒன்று தூக்கமானது.
ஒன்று ஏக்கமானது.
இன்ப ஏக்கம் வந்த பின்பு தூக்கம் நீக்கமானது!
அதுதான் உணர்வு!
அதில் தான் உலகு!"
எப்படியிருக்கு? படிச்சு பார்த்து சொல்லு!
எழுதிய பேப்பரை ரேகாவிடம் கொடுத்தாள் காவ்யா.
எப்படி உன்னால இவ்வளவு சூப்பரா கவிதை எழுத வருது?
பிரமிப்பாய் கேட்டாள்.
"எங்கப்பா நல்லா கவிதை எழுதுவார் தெரியுமா?
அவருக்கு சின்ன வயசிலேயே நல்லா படிச்சு தமிழ் பண்டிட்டா வரணும்னு ஆசையிருந்துச்சு. குடும்ப சூழ்நிலை... படிக்க விடலை! காடு, கழனின்னு விவசாயத்துல இறங்கிட்டார். ஆனால், அவரோட வேட்கை தணியலை. ஆசை தலைதூக்கும் போதெல்லாம் கவிதை எழுத உட்கார்ந்துடுவார். இந்த கவிதைக்கூட எங்கப்பா எழுதி வச்சதிலேர்ந்து சுட்டதுதான்."
அடிப்பாவி... காப்பி அடிக்கிறியா?
மத்தவங்க எழுதினதை ஒண்ணும் எடுத்து என்னோடதுன்னு சொல்லலியே! எங்கப்பா எழுதினதைதானே எடுத்தேன்?
இருந்தாலும் கற்பனை திருடக்கூடாது. அது கேவலமான செயல்!
உன்கிட்டே உண்மைய சொன்னது என் தப்பு! இதை நான் தான் எழுதினேன்னு சொல்லியிருந்தா... என்னை பாராட்டியிருப்பே! அப்படித்தானே?
.
நிஜம்தான்... ஆனா, உண்மைய மறைக்கறது... சூரியனை மேகம் மறைக்கிறமாதிரி! என்றைக்காவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்! சரி... இந்த பேச்சை விடுவோம். ரொம்ப போரடிக்குதே! என்ன பண்ணலாம்?
பாட புத்தகத்தை எடுத்து வச்சு படிப்போம்!
இருக்கிறதிலேயே மகா போர் அதுதானே? வேற நல்ல ஐடியாவா சொல்லு!
தாயே... ஆளைவிடும்மா! நான் கிளாஸ் முடியறவரைக்கும் இப்படி அப்படி அசையப் போறதில்லே. எங்கப்பா என்மேலே ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார்! காலேஜை கட் அடிச்சிட்டு உன் பொண்ணு ஊர் சுத்தறான்னு யாராவது பார்த்துட்டுப் போய் சொன்னா... அவ்வளவுதான்!
ஏன்... அடிப்பாரா?
அடிச்சா... சந்தோஷமா ஏத்துக்கலாமே! எங்கப்பா ரொம்ப வித்தியாசமானவர் ரேகா! நாங்க தப்பு செஞ்சா... தண்டனையை தனக்குத்தானே கொடுத்து எங்களை அழவைப்பார். யாரோடையும் பேசமாட்டார். வாரக்கணக்குல சாப்பிடமாட்டார். அப்படியிருக்கப்ப எங்களால் தப்பு பண்ணமுடியுமா சொல்லு?
இந்த கிளாஸ்ல காவ்யாங்கறது யாருங்க?
ஆபீஸ் பியூன் வாசலில் வந்து சத்தமாய் கேட்டதும்... அத்தனை பேரும் பேச்சை நிறுத்தி திருப்பிப் பார்த்தனர்.
காவ்யாவுக்கு வியப்பாய் இருந்தது.
யெஸ்...நான்தான்... என்ன விஷயம்?
வாங்க... உங்களை உடனே வீட்டுக்கு வரச்சொல்லி தகவல் வந்தது!
எ... என்னையா... எதுக்கு?
உடம்பெங்கும் பதற்றம் மின்சார அலைப்போல் பரவ... புத்தகங்களைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்தாள்.
தெரியல... வாங்க!
என்ற பியூனின் முகத்தில் சங்கடம் படர்ந்திருந்தது.
வீட்லேர்ந்து யார் வந்திருக்காங்க?
யாரும் வரலேங்க... போன்தான் வந்தது!
போனா? என்ன விஷயம்னு உங்களுக்குத் தெரியாதா?
.
இ... இல்லே... தெரியாது!
நோ... உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. சொல்லுங்க ப்ளீஸ்... இதுவரைக்கும் வீட்லேர்ந்து யாரும் என்னை அழைச்சதில்லே. மனசு பதறுது. என்ன விஷயம்னு தயவு பண்ணி சொல்லுங்க!
அவள் கெஞ்சவும்... அதற்கு மேல் வாயைமூடிக் கொண்டிருக்க முடியாமல் சொல்லிவிட்டான் அந்த மோசமான செய்தியை!
காவ்யாவின் அப்பா மீது லாரி மோதி மிக ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
அவ்வளவுதான்!
அப்பா...
என்று அலறிய காவ்யாவை கண்டு கதிகலங்கிப் போனான் பியூன்!.
அப்பாவை பார்க்க பார்க்க... அழுகை அடிவயிற்றிலிருந்து பீறிட்டு எழ முற்பட்டது. அவ்வளவையும் அம்மா முகம் பார்த்து சிரமப்பட்டு. அடக்கிக் கொண்டிருந்தாள். விபரீதமாய் ஏதும் நிகழ்ந்து விடுமோ என்கிற பயத்தோடு பேயறைந்ததுப் போலிருந்தது புனிதவதியின் முகம். தன் அழுகை அவளின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சின்னாபின்னப் படுத்தி விடுமோ என்கிற பயம் காவ்யாவிற்கு.
வெங்கடாசலத்தின் உடம்பில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் கட்டுப் போடப்பட்டிருந்தது. அறுவடை காலம் என்பதால்... வழக்கத்தை விடவும் அதிகமான நேரத்தை வயலில் செலவழித்தார். அன்று தாமதமாகத்தான் மதிய உணவை சாப்பிட்டிருக்கிறார். நெஞ்சை கரிப்பதுப்போல் இருக்கவே... சற்று தள்ளி உள்ள பெட்டிக்கடையில் வெற்றிலை பாக்கு வாங்க... ரோடை கடக்க முயன்றபோதுதான்... புயலாய் சீறிவந்தது அந்த லாரி, தாய்ப்பாலினால் மூடி. ஏதோ சரக்கு ஏற்றிச் சென்ற அந்த லாரிதான்... வெங்கடாசலத்தின் மீது மோதி தூக்கியெறிந்து விட்டு நிற்காமல் போய் விட்டது.
ஒரு இடம் பாக்கியில்லாமல் உடம்பில் எலும்பெல்லாம் நொறுங்கிவிட்டது. அவரை அள்ளிக்கொண்டுதான் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
மூன்று பெண்பிள்ளைகள். காவ்யாதான் மூத்தவள். அடுத்தவள் வினிதா ப்ளஸ்டூ படிக்கிறாள். கடைசிப் பெண் சுபர் பத்தாவது படிக்கிறாள். மூன்றும் பெண் பிள்ளைகளாயிற்றே என்று பெற்றவர்கள் ஒரு நாளும் மனம் கலங்கியதில்லை.