Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathodu Pesa Vaa
Manathodu Pesa Vaa
Manathodu Pesa Vaa
Ebook87 pages30 minutes

Manathodu Pesa Vaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By R.Manimala
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466886
Manathodu Pesa Vaa

Read more from R.Manimala

Related to Manathodu Pesa Vaa

Related ebooks

Reviews for Manathodu Pesa Vaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathodu Pesa Vaa - R.Manimala

    1

    சரிவரத் துவட்டப்படாததால் ரோஜா இதழ்களில் பனித்துளிகள் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தன. கிழக்கு வானில் எட்டிப் பார்க்க சூரியன் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

    பறவைகள் சிறகுகளை படபடத்து சோம்பலை உதிர்த்தன. கூடவே மரக் கிளைகள் சலசலத்து... பழுத்தப்போன இலைகளை சிதறிவிட்டன.

    வாசலை அடைத்து கோலம் போட்டு முடித்த வைசாலி... ஒரு கணம் ஒதுங்கி நின்று தான் போட்ட கோலத்தை ரசித்தாள்.

    நெளி... நெளியாய்... எங்கே துவங்கி, எங்கே. முடிந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாத விடையாய் சிக்கலாய்... ஆனால் மிக அழகாய் இருந்தது.

    திருப்தியுற்றவளாய்... இடையில் உயர்த்தி செருகியிருந்த சேலையை இறக்கி விட்டுக்கொண்டு மாவு கிண்ணத்துடன் உள்ளேச் சென்ற வைசாலியின் நளினமான உருவம் இருள் பிரியாத இந்த அதிகாலை வேளையில் சில் அவுட்டாய் தெரிந்தது.

    குளித்து தலையில் கட்டியிருந்த டவலை அவிழ்த்து கொடியில் போட்டுவிட்டு... நீண்ட ஈரமான கூந்தலை, நுனியில் கொண்டை போட்டுக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.

    பாத்திரம் உருளும் சப்தம் கேட்டு... கண்விழித்துக் கொண்டாள் சாமுண்டீஸ்வரி. எழுந்தமர்ந்தவள் அவிழ்ந்த கூந்தலை உயரத்தூக்கி கொண்டை போட்டபடி, வைசாலி என்றழைத்தாள்.

    என்னம்மா... அதுக்குள்ளே எந்திரிச்சிட்டியா? இன்னும் விடியலே... நீ தூங்கு! என்றாள் தலையை மட்டும் வெளியில் நீட்டி...

    என்னை விடு... நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே... அடுப்பங்கரையிலே? நான் ஏழு மணிக்குதானே காபி சாப்பிடுவேன்? என்றாள் ஆச்சர்யமாய்.

    உனக்கு ஏழுமணிக்குதான் காபி தருவேன். நீ தூங்கு!

    நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே வரலை!

    அடடா! தெரிஞ்சுக்கலேன்னா தலை வெடிச்சிடுமே உனக்கு! கேரட் அல்வா செய்யறேன்!

    கேரட் அல்வாவா? விடியற்காலையிலேயா? இன்னைக்கென்ன விசேஷம்? உன்னை யாராவது பொண்ணு பார்க்க வர்றாங்களா? எனக்கேத் தெரியாம?

    இந்த குசும்புதானே வேண்டாங்கறது? என்னை யாராவது பொண்ணு பார்க்க வந்துடுவாங்களா? வந்துட சொல்லேன் பார்ப்போம்! அவ்வளவுதான்... துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு ஓட வச்சிட மாட்டேனா? என் மாமனைத் தவிர... வேற எவனுக்கு அந்த உரிமையிருக்காம்?

    சாமுண்டீஸ்வரி பெருமூச்சு விட்டாள்.

    ‘ஹூம்... இந்தப் பெண் அதுபாட்டுக்கு ஏதேதோ கற்பனைய வளர்த்துக்கிட்டிருக்கு. என்ன நடக்கப் போகுதோ? எது நடக்கப்போகுதோ? கடவுளே... என் பொண்ணு மனசுப்படி நல்லதையே நடத்திவை!’

    என்னம்மா பேச்சையே காணோம்?

    சரி... இந்த வீட்டுக்குள்ளே நுழைய உன் மாமனைத் தவிர, வேற எவனுக்கும் தைரியமில்லே! அந்தப் பேச்சை விடுவோம். இந்த அல்வாவை யாருக்காக மெனக்கெட்டு செய்துக்கிட்டிருக்கே? நான் சர்க்கரை நோயாளி. சாப்பிடமாட்டேன். உனக்கும் இதெல்லாம் பிடிக்காது. பிறகு யாருக்காக செய்யறே?

    வேற யாருக்காக? என் மாமனுக்காகத்தான்!

    யாரு... மாதவனுக்கா?

    ஆனாலும் உனக்கு இவ்வளவு கிண்டல் ஆகாதம்மா! மாமன்னா வேற, யாரு? அவர்தானே?

    அடடா... ஒரு பேச்சுக்குகூட கேட்கக்கூடாதா? இப்ப சொல்லு... என்ன விசேஷத்துக்காக மாதவனுக்கு இந்த அல்வா?

    அவருக்கு இன்னைக்கு பிறந்த நாளாக்கும்!

    ஓஹோ...!

    கேரட் அல்வான்னா அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்!

    யார் சொன்னது?

    உங்கண்ணன்தான்!

    உனக்குதான் இந்த மாதிரி பலகாரமெல்லாம் ‘சமைக்கத் தெரியாதே! இப்ப எப்படி சமைக்கறே?

    மாமாவுக்கு பிடிக்கும்னு தெரிஞ்சப்பிறகும் சமைக்க கத்துக்காம இருப்பேனா? பவானியோட அம்மா தெரியுமில்லையா? கல்யாணம், விசேஷம்னு சமைக்கறதிலே எக்ஸ்பர்ட். அவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்! பார்த்துக்கிட்டேயிரு! எப்படி சூப்பரா செய்யப் போகிறேன் பார்! என் மாமா இதை சாப்பிட்டு அசந்துட மாட்டாரா? அல்வாவை கிளறிக்கொண்டு அம்மாவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தாள்.

    ஆமாமா... உன் அசத்தலான அல்வாவை சாப்பிட்டு பேச வாய் வராம...

    போதும்... போதும்... அறுதப் பழசான ஜோக்கெல்லாம் சொல்லாதே... சிரிப்பே வரலே! என் அல்வா கோந்துமாதிரி இருக்காது. சும்மா... பனிக்கட்டி மாதிரி நழுவிக்கிட்டு உள்ளே ஓடாதா?

    நீயே எடுத்துக்கிட்டு போய் கொடுக்கப் போறியா?

    பின்னே?

    என் அண்ணன்கிட்டே கொடுத்தனுப்பேன்ம்மா... அவர் மாதவனுக்கு கொடுத்துடுவார்.

    ஏன்... இதோ இருக்கு வீடு! நடந்தா பத்தே நிமிஷத்துலே போய் சேர்ந்திடலாம். நானே போய் கொடுத்திடுவேன்!

    இல்லே வைசாலி! வீட்டிலே உங்க அத்தை இருப்பா... என்றாள் கவலையுடன்.

    இருக்கட்டுமேம்மா... அதனாலென்ன?

    அவ உன்னைப் பார்த்தாலே... எதையாவது பேசி மனசை கஷ்டப்படுத்துவா! எதுக்கு வீண்வம்பு?

    "அத்தை என்னைக்குதான் பாசமா பேசியிருக்காங்க... இப்ப புண் படுத்தறாங்கன்னு வேதனைப்படறதுக்கு? இன்னைக்கு என் மாமனுக்கு பிறந்தநாள். அவரை நான் பார்க்கணும். நான் என் கையால செய்த அல்வாவை சாப்பிடனும். அவ்வளவுதான்! வேற எதைப்பத்தியும் நான் கவலைப்படப்

    Enjoying the preview?
    Page 1 of 1