Ithayathil Oru Oviyam!
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Megam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5
Related to Ithayathil Oru Oviyam!
Related ebooks
Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Nee Naan Naam Vazhave Rating: 3 out of 5 stars3/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5En Uyirin Urave Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Naan Nila! Nee Kathir! Rating: 0 out of 5 stars0 ratingsIruvizhi Paarvaiyile...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kolla Vaarayo Rating: 4 out of 5 stars4/5Vanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Bathil Solli Sel Penne! Rating: 4 out of 5 stars4/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Idhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Melliya Poongatre Rating: 5 out of 5 stars5/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5
Reviews for Ithayathil Oru Oviyam!
1 rating0 reviews
Book preview
Ithayathil Oru Oviyam! - Jaisakthi
http://www.pustaka.co.in
இதயத்தில் ஓர் ஓவியம்!
Ithayathil Oru Oviyam!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
அத்தியாயம் - 24
அத்தியாயம் - 25
அத்தியாயம் - 26
அத்தியாயம் - 27
அத்தியாயம் - 1
நல்லாப் பார்த்துக்கங்க. இப்ப வந்துடறேன்!
என்று பதில் கொடுத்தாள் குகப்பிரியா. இரவு பதினொரு மணி இருக்கும். மல்லிகா! டிரிப்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுடலாம். இதோ நான் டென் மினிட்ஸ்லே வந்தர்றேன்!
என்றாள்.
தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் டாக்டர் குகப்பிரியா. அவள் மகப்பேறு மருத்துவமனை அருகிலேயே இருந்தது. பத்து நிமிட டிரைவ். சொந்தமாக மகப்பேறு மருத்துவமனை வைத்திருந்தாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். அதனால் அவர்கள் வீட்டில் அவளுக்கென்று ஒரு மருத்துவமனையே கட்டிக் கொடுத்து விட்டார்கள். அந்த ஊரிலே புகழ் பெற்ற டாக்டராக இருந்தாள்.
'ப்ரஷியஸ் சில்ரன்!' என்கிற வகையில் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு ஒரு பொக்கிஷம் போல கிடைக்கக் கூடிய பிள்ளைகளை பிரஷியஸ் சில்ரன் என்று சொல்வார்கள். அது போல பல முறைகளைக் கையாண்டு குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கச் செய்து விடுவாள் குகப்பிரியா.
அவள் மருத்துவமனை தொடங்கி மூன்றாண்டுகள் ஆகியிருந்தன. இதற்குள்ளாகவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் அங்கிருந்து உருவாகிப் போனார்கள். அத்தனை பெற்றோர்களும் கிட்டத்தட்ட அவளைத் தெய்வமாகவே மதித்தார்கள்.
குகப்பிரியாவின் கார் மருத்துவமனைக்குள் நுழைந்தது.
கூர்க்கா சல்யூட் அடித்து கதவைத் திறந்து விட்டான். வேகமான நடையுடன் பிரசவ அறையை நோக்கிப் போனாள். என்னாச்சு மல்லிகா?
என்றாள்.
இல்லே, காலையிலே பெயின் வருங்கற மாதிரி நினைச்சுகிட்டிருந்தோம். அவங்களுக்கு இப்பவே கொஞ்சம் பெயின் ஆயிடுச்சு!
என்றாள்.
அப்படியா? ஆயிடுமா டெலிவரி? யார் டியூட்டியிலே இருக்கீங்க?
என்று கேட்டாள்.
நானு, மாலதி, அன்னம்மா அக்கா, மூணு பேரு இங்கே இருக்கோம்!
என்றாள் மல்லிகா.
ஓ.கே! ஓ.கே! கெட் ரெடி!
என்று கைக்கு உறை மாற்றிக் கொண்டு அந்தப் பிரசவத்திற்குத் தயார் ஆனாள்.
ம்...!
என்று வயிற்றைத் தடவிப் பார்த்து விட்டு ஃபோர்ஸெப்ஸ் போல இருக்கு. ஓ. கே. ஏற்பாடு பண்ணுங்க!
என்று சொன்னாள். முக்கால் மணி நேரத்தில் குழந்தையை வெளியே எடுத்துத் தன் இரு கைகளாலும் தூக்கும் பொழுதே குழந்தை வீர் வீர் என்று கத்தியது.
லலிதாம்மா உங்க குழந்தை ரொம்ப ஸ்மார்ட்! இம்மிடியட்டா அழுதுட்டாங்க!
என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள். அந்த லலிதாம்மா பாவம் அரை மயக்கத்தில் இருந்தாள். அப்படியும் கூட இரண்டு கைகளையும் தூக்கி வணக்கம் சொன்னாள்.
சேச்சே! என்ன இது!
என்று இவள் அவள் இரு கைகளையும் பிடித்து அமர்த்தி கன்னத்தைத் தட்டிக் கொடுத்து விட்டு குழந்தை வேணும்னு ஆசைப்பட்டீங்க. குழந்தையை உருவாக்கிக் கொடுத்தாச்சு!
என்று சிரித்தவள் குழந்தையை நர்ஸிடம் கொடுத்தாள். அவர்கள் குழந்தையை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அவள் கையிலே கொடுத்தார்கள். திராட்சை மின்னுவது போல மின்னிய அந்த இரண்டு கண்களையும் பார்த்தவுடனே அவளுக்குக் கொள்ளை ஆசையாக இருந்தது. லலிதாம்மா, உங்க குழந்தை சூப்பரா இருக்கறாப்ல. எவ்வளவு முடி பாருங்களேன். கண்ணு பாருங்க திராட்சை மாதிரி இருக்கு. பொண்ணா போச்சேன்னு கவலைப்படாதீங்க. மாப்பிள்ளை எல்லாம் வரிசையா நிக்கும்!
என்று சிரித்தாள்.
லலிதாம்மா தலையாட்டிக் கொண்டாள்.
சரி, குழந்தையை லலிதாம்மா கிட்ட காட்டிட்டு அவங்க அப்பா வெளில ரொம்ப டென்ஷனோட நிக்கறாப்ல. அவருக்கும் காட்டிருங்க!
என்று சிரித்தபடி வெளியே வந்தாள்.
அந்த லலிதாவின் கணவன் ரமேஷுக்குக் கிட்டத்தட்ட முப்பத்து ஏழு முப்பத்து எட்டு வயசு இருக்கும். அந்த லலிதாவிற்கு முப்பத்து மூன்று வயசுக்கு மேல இருக்கும். பத்தாண்டுகளுக்கு மேலாக பொறுத்துப் பார்த்து விட்டுத்தான் இவளிடத்திலே ட்ரீட்மெண்ட்டுக்காக வந்தார்கள்.
இவள் கொடுத்த ட்ரீட்மெண்டில் கிட்டத்தட்ட நார்மல் டெலிவரியாகவே குழந்தை பிறந்ததில் ரமேஷுக்கு மிகவும் மகிழ்ச்சி.
உங்க கால்லே விழுந்துதான் நான் கும்பிடணும்!
என்று ஆரம்பித்தான் ரமேஷ்
வேண்டாம். வேண்டாம். கால்லே எல்லாம் விழுந்து என்னைப் பாட்டி ஆக்கிடாதீங்க. ஐ வாண்ட் டு பி யங். குழந்தை வேணும்னு கேட்டீங்க. கடவுள் குடுத்துட்டாரு. நான் ஒரு கருவி. நாம என்ன ட்ரை பண்ணாலும் அவரு ஒரு பட்டனை அழுத்தணும். தெரியுமா?
என்று சிரித்தாள் குகப்பிரியா.
முகம் மலர சிரிக்கும் பொழுது அழகு தேவதையாக ஒளிர்ந்த அந்தப் பெண்ணைப் பார்த்து வாஞ்சையுடன் வணங்கினான் ரமேஷ்.
எங்களுக்கு ரொம்பப் பெரிய உதவி செஞ்சிருக்கீங்க!
என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே லலிதாவின் பெற்றோர்கள் இரண்டு பேரும் வந்து வணக்கம் சொன்னார்கள்.
ஆமாம்மா! எங்க பொண்ணோட வாழ்க்கையே பறிபோகிற மாதிரி இருந்தது. அவங்க அம்மா, அப்பாவையும் குறை சொல்ல முடியாது. பத்து வருஷம் பொறுத்துப் பார்த்தாங்க. இல்லைன்ன உடனே இவருக்கு வேற பொண்ணைப் பார்க்கலாம்னு ஆரம்பிச்சுட்டாங்க!
என்று சொன்னாள் லலிதாவின் தாய்.
லலிதாவின் தந்தை விட்ரு, அதையெல்லாம் ஏன் இப்பப் பேசிக்கிட்டிருக்கே? விட்ரு
என்றார்.
தாய் அவரைத் திரும்பிப் பார்த்து உங்களுக்கு என்னங்க தெரியும்? அந்தப் பேச்சு ஆரம்பிச்ச உடனே என் மனசு பட்ட பாடும் லலிதா மனசு பட்ட பாடும் உங்களுக்கு என்ன தெரியும்?
என்றாள்.
உடனே ரமேஷ் நடுவில் புகுந்து அத்தை, என் மனசும் தான் ரொம்பப் பாடுபட்டுச்சு. எங்க அம்மா சொன்னா நான் ஒத்துக்குவேனா? அதனாலதானே லலிதாவை நான் இங்கே கூட்டிட்டு வந்தேன்
ஆமா, மாப்பிள்ளை. அது மட்டும் இல்லே? இங்க எவ்ளோ செலவாச்சு? எங்களுக்கு அவ்வளவெல்லாம் கொடுக்க முடியாதே?
என்று பாராட்டினார் லலிதாவின் தந்தை.
லலிதா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
நிலைமையை சுமுகமாக்க அந்த அனுபவமிக்க பெரியவர் முயற்சி செய்வது தெரிந்தது. அதே நேரத்தில் ரமேஷின் பெற்றோர்களும் வேக வேகமாக வந்தார்கள். ரொம்ப சந்தோஷம். ரொம்ப சந்தோஷம்!
என்று இவளைப் பார்த்துக் கையைக் கூப்பினார்கள்.
அம்மா! அப்புறம் பொண்ணு பிறந்துருச்சேன்னெல்லாம் சொல்லக் கூடாது. இன்னைக்கு பொண்ணுங்க தான் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க!
என்றாள் குகப்பிரியா
ரமேஷின் அம்மா அசடு வழிய சிரித்து விட்டு குழந்தை கிடைச்சதே போதுங்க டாக்டர். பொண்ணென்ன ஆணென்ன? எங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கு. அதனால நாங்க அப்படியெல்லாம் நினைக்கலை. தங்கமா வச்சுக்குவோம்
ம்... அது!
என்று இவள் சொல்லும் பொழுதே அவர்கள் ஸ்வீட்டெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம். எல்லாத்துக்கும் குடுக்கணும்!
என்றார்கள்.
நர்ஸுகளுக்கெல்லாம் நல்ல காஃபி வாங்கிக் கொடுங்க. அவங்களுக்கு ஏதாவது இந்த நேரத்திலே கேன்டீன் இருக்காது. பிஸ்கட் அந்த மாதிரி கூட வாங்கிக் குடுங்க. எனக்கு இந்த ஸ்வீட் போதும்!
என்று அவர்கள் கொண்டு வந்த லட்டில் இருந்து ஒரே ஒரு துளியை மட்டும் வாயில் போட்டுக் கொண்டு நான் கிளம்பறேன். மத்தபடி டியூட்டி டாக்டர் பார்த்துப்பாங்க. எதுவானாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க!
என்றவர் திரும்பி மல்லிகாவை அழைத்து மல்லிகா பார்த்துக்கோங்க! அரைமணி நேரத்திலே மறக்காம சீம் பால் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க. இட்ஸ் வெரி இம்பார்ட்டெண்ட்!
என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனாள்.
அவள் போவதை அவர்கள் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய அறைக்கு வந்தாள். அங்கே முகம் கழுவிக் கொண்டு கைகளையெல்லாம் சுத்தம் செய்து கொண்டு சற்று நேரம் சுழல் நாற்காலியிலே சாய்ந்து அமர்ந்தாள்.
விட்டத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டாள்! 'இன்னைக்கும் ஒரு குழந்தை உன்னால் பூமிக்கு வந்திடுச்சு. எத்தனை குழந்தைக்கு நீ தாய் ஆயிட்டே!' என்று மனதுக்குள்ளே ஒரு குரல் கேட்டது. சிரித்துக் கொண்டாள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
அவளுடைய உதவியாளர் அங்கேயே எலக்ட்ரிக் ஸ்டவ் வைத்திருந்தாள். அவளுக்கு சூடாக காஃபி தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
சாப்பிடுங்க மேடம்! ஃப்ரஷ்ஷா இருக்கும்!
என்றாள்.
ஃப்ரஷ்ஷாதான் இருக்கும். இப்பக் காஃபி குடிச்சா வீட்டுக்குப் போனா தூக்கம் வராதே!
என்று சிரித்தவள் இருக்கட்டும். பரவாயில்லை. குடுப்பா!
என்று அந்தப் பெண்ணைப் பார்த்து வாஞ்சையாக சிரித்து விட்டு வாங்கிக் குடித்தாள்.
நீ சாப்பிடலையா கீதா?
என்றாள்.
இதோ, சாப்பிடறேங்க மேடம்!
என்று அவளும் ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு வந்து எதிரே மேஜையிலே சாய்ந்து நின்று கொண்டாள்.
குழந்தை ரொம்ப அழகா இருக்கா மேடம்! எல்லாரும் பேசிக்கிட்டாங்க!
என்றாள்.
ஆமா, பெண் குழந்தை. முடியெல்லாம் அவ்வளவு அழகா இருக்கு. கண்ணெல்லாம் திராட்சை மாதிரி இருக்கு. நல்லா ஓரளவுக்கு நிறமாவும் இருக்கு. அதோட லட்சணமாவும் இருக்கு!
என்று சிரித்தாள் குகப்பிரியா.
ம்ஹும்... என்ன லட்சணமா இருந்தா என்ன மேடம்? லேடீஸ் தான் இங்க படாத பாடு படணும் இந்த உலகத்துக்கு வந்து!
என்றாள்.
ஏன் அப்படி? உங்க வீட்டுக்காரர்தான் உன்னைத் தாங்கு தாங்குன்னு தாங்கறாரே!
என்று சிரித்தாள் குகப்பிரியா.
தாங்கறாருதான். அவரு ஆர்மீலே இருக்காரு நான் இங்கே வேலை பார்த்துக்கிட்டிருக்கேன்
என்றாள் கீதா.
என்ன ஆர்மில இருக்காருன்னு அலட்சியமா சொல்றே. ஆர்மீ...ல இருக்காரு. இந்த நாட்டைப் பாதுகாக்கற வேலையில இருக்காரு. அதைச் சொன்னவுடனே தானே உன்னை எனக்கு அஸிஸ்டெண்ட்டா போட்டுக்கிட்டேன். உனக்கு மெடிக்கல் குவாலிஃபிகேஷன் எதுவும் கிடையாது. இருந்தாலும் நாட்டைக் காப்பாத்தற ஒரு வீரனுடைய மனைவிக்கு நாம சப்போர்ட் கொடுக்கணும்னு தானே எனக்கு பர்சனல் உதவியாளரா போட்டுக்கிட்டேன்
அது என்னமோ நிஜம்தாம்மா! நான் படிச்சிருக்கிற எஸ். எல். சி. படிப்புக்கு யாரு வேலை கொடுப்பாங்க. நீங்க நல்ல சம்பளமும் கொடுத்து இங்கே தங்கறதுக்கு இடமும் கொடுத்து பாதுகாப்பா வச்சிருக்கீங்க. இல்லைன்னா எங்க மாமியார் அம்மாகிட்ட நான் படாதபாடு படணும்!
என்றாள்.
வயசானவங்கன்னா அப்படித்தான் முன்ன பின்னே இருப்பாங்க... அவங்களையெல்லாம் நாம் குறை சொல்லக் கூடாது!
என்றாள் குகப்பிரியா.
நல்லவங்கதான் மேடம்! நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. அவங்களும் நிம்மதியா இருக்கமாட்டாங்க. இப்ப நான் என் சம்பளத்துல பாதி அனுப்பிடறேனா அதிலே அவங்களுக்கு ஒரு சந்தோஷம். அவரு வேற எல்லாப் பணத்தையும் எங்கிட்ட கொடுக்கறாரு. அதுவும் அவங்களுக்கு வருத்தம். ஆனா, நான் அந்தப் பணத்தையெல்லாம் அப்படியே சேமிச்சு தான் மேடம் வைக்கிறேன். அவரோட ஆலோசனைப்படி இப்ப இடம் வாங்கிப் போட்டிருக்கேன். அப்புறம் அவரு பேர்ல ஏதாவது லோன் போட்டு வீட்டைக் கட்டினோம்னா அவங்களும் நிம்மதியா அந்த வீட்ல உட்காரலாம். என்னோட திட்டத்தையெல்லாம் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!
என்றாள்.
புரிஞ்சுப்பாங்க. புரிஞ்சுப்பாங்க. மெதுவா புரிஞ்சுப்பாங்க. அடுத்த தடவை உன்னைப் பார்க்க வரும் பொழுது நானும் அவங்ககிட்ட பேசறேன். நைசா அவங்ககிட்டே எடுத்துச் சொல்றேன்
என்றாள் குகப்பிரியா.
தாங்க்ஸ் மேடம்!
என்று சிரித்தாள் கீதா.
குகப்பிரியா அங்கிருந்து கிளம்பினாள். வாசல் வரை வருவதற்குள்ளாக மறுபடியும் ரமேஷினுடைய பெற்றோர்கள் அவர்களுடைய சம்பந்திகள் எல்லோரும் வந்தார்கள். ஓடி வந்து அம்மா நாங்க உங்களுக்கு ஏதாவது பரிசா கொடுக்கணும்னு நினைக்கிறோம். உங்களுக்கு என்ன வேணும்?
என்றார்கள்.
அவள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள். எங்க ஆஸ்பிட்டலை பேட்ரனைஸ் பண்ணியிருக்கீங்க. அந்த குழந்தைக்காக லட்சக் கணக்கா செலவாயிருக்கு. அதுவே போதும். எல்லார்கிட்டயும் சொல்லுங்க. இங்க நல்ல ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க அப்படின்னு. அதுவே போதும்!
என்றாள்.
கண்டிப்பா! அதை நீங்க சொல்லியா நாங்க செய்வோம். நாங்களே செய்ய மாட்டோமா?
என்றார்கள்.
சரி, உங்க இஷ்டத்துக்கு ரொம்பக் காஸ்ட்லியா இல்லாம ஏதாவது சின்னதா வாங்கிக் கொடுங்க. அதுக்காக ரொம்ப மெனக்கெட்டுக்காதீங்க. ஹாப்பியா வச்சுக்கறேன்!
என்று சிரித்து விட்டுக் கிளம்பினாள் குகப்பிரியா.
மோதிரம் வாங்கிடலாமா என்று அவர்கள் பேசிக் கொள்வது அவள் காதிலே விழுந்தது. சரி, அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுப்பானேன். ஆஸ்பிடல் பில்லில் ஏதாவது கொஞ்சம் கன்சஷன் கொடுத்தர்லாம்!
என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறினாள்.
அவளுக்கும் இருபத்து மூன்று வயதாகி விட்டது. வீட்டுக்குப் போய் இந்த விஷயத்தையெல்லாம் சொன்னால் அம்மா உடனே அவளுடைய கல்யாணப் பேச்சை ஆரம்பிப்பாள். அதை நினைத்தவுடனே இப்பொழுதே குகப்பிரியாவுக்கு கொஞ்சம் திகிலாக இருந்தது.
*****
அத்தியாயம் - 2
காலிங் பெல் அடிப்பதற்காகக் கையைத் தூக்கினாள் குகப்பிரியா. அதற்கு முன்பாகவே கதவு திறந்தது. அவளது சகோதரன் கார்த்திக் குமார் நின்று கொண்டிருந்தான். ஏன் பிரியா? கூப்பிட்டிருந்தா நானுமே வந்திருப்பேனே?
எதுக்கு? நீ தூக்கம் கெட வேண்டாம் அப்படின்னு தான் நான் சமையல்காரக்கா குப்பம்மாகிட்ட சொல்லிட்டுத் தானே போனேன்!
என்றாள்.
ஆமா, குப்பம்மா பாரு, குறட்டை விட்டுத் தூங்கறாப்லே!
என்றான் கார்த்திக்.
அதெல்லாம் காலிங் பெல் அடிச்சா எழுந்திருச்சுருவாங்க!
என்றாள்.
காலிங் பெல் அடிச்சா அவங்க மட்டுமா எழுந்திருப்பாங்க? நம்ம அம்மா, அப்பாவும் சேர்ந்து எழுந்திருப்பாங்க. அதான் நானே இருந்தேன்!
என்றான்.
சாரிண்ணா!
என்றபடி அவள் உள்ளே நுழைந்தாள்.
எதுக்கு சாரி சொல்றே? த்ரி அவர்ஸ் உட்கார்ந்து ஒரு நல்ல நாவல் படிச்சேன்!
என்றான்.
அதானே! உனக்கு டே டைம்ல படிக்கறதுக்கு நேரமே கிடைக்கறது இல்லை. இப்படி என் பேரைச் சொல்லிக் கிட்டாவது படி!
என்று சிரித்தபடி உள்ளே போய் ஹால் சோஃபாவில் அமர்ந்தாள்.
கார்த்திக்கும் உள்ளே நுழைந்தவன் சமையல் அறைக்குப் போய் சற்று வெது வெதுப்பாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.