Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannanin Seethai
Kannanin Seethai
Kannanin Seethai
Ebook142 pages1 hour

Kannanin Seethai

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

அறியாப் பருவத்தில் முளைத்திட்ட காதல் புரிதல் இல்லாமல் கருகிப் போக அதற்கு தானே காரணமென்று மனம் புழுங்குகிறான் நாயகன். அவன் மனதை மாற்றி மனதில் இடம் பிடிக்க வருகிறாள் நாயகி. பல பெண்களுக்கு நடுவே இருப்பவர் எல்லாம் கண்ணன் அல்ல... அவர்களுக்குள்ளும் சீதையின் நாயகன் இருக்கத்தான் செய்கிறான் என்பதே கண்ணனின் சீதை.

Languageதமிழ்
Release dateJul 15, 2020
ISBN6580134405621
Kannanin Seethai

Read more from Latha Baiju

Related to Kannanin Seethai

Related ebooks

Reviews for Kannanin Seethai

Rating: 3 out of 5 stars
3/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannanin Seethai - Latha Baiju

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    கண்ணனின் சீதை

    Kannanin Seethai

    Author :

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    நிலைக் கண்ணாடியின் முன்பு நின்றிருந்த சீதாவின் கைகள் சேலையின் முந்தானையை சரிசெய்து கொண்டிருக்க சற்றுமுன் தொலைக்காட்சியில் கண்ட பாடலின் வரிகளை அவளது அழகான சின்ன இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

    முகத்தை சரிபார்த்தவள் அழகாய் தோளில் புரண்டு கொண்டிருந்த கூந்தலை சற்று சரியாக்கி திருப்தியாய் ஒரு புன்னகையை இதழில் தவழ விட்டாள். நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை எடுத்து வைத்துக் கொண்டவள் சேலை சரியாயிருக்கிறதா என்று மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டாள்.

    சீதா… கிளம்பிட்டியாம்மா… கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்த அவளது அன்னை சுகந்தி மகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டார். ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரம். கோதுமை நிறத்தில் எடுப்பான கண்ணும், மூக்கும், உதடுகளும் முகத்தில் தோன்றிய கம்பீரமும் அவளை அழகியாய் காட்ட,

    சுமாரான அழகுடைய எனக்கு இப்படி ஒரு அழகான மகளா… அப்படியே அவ அப்பாவோட அழகும், நிமிர்வும் இவளுக்கு…" என்று மனதுக்குள்ளேயே ரசித்துக் கொண்டார். டிசைனர் சேலையில் அழகாய் புறப்பட்டு நின்றவளை கண்நிறையப் பார்த்துக் கொண்டவர் அவள் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தார்.

    வாடா… அப்பா நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார்… என்றவரிடம், ம்ம்… நான் ரெடிம்மா… என்றவள் ஹாலுக்கு செல்ல அழகாய் வெட்டி விட்டிருந்த கூந்தல் அவள் முதுகில் அலையலையாய் தவழ்வதை பின்னிலிருந்து ரசித்துக் கொண்டே வந்தார் அவளது அன்னை சுகந்தி.

    சீதம்மா கிளம்பலாமாடா… செல்ல மகளிடம் பரிவோடு கேட்ட சேகரன் கம்பீரமாய் இருந்தார். டவுனில் சொந்தமாய் ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் கடை வைத்திருந்தார். அதில் நல்ல வருமானம் வந்ததில் சொந்தமாய் ஒரு குட்டி பங்களாவும், காரும், பாங்கில் சில லட்சங்களும் அவருடைய சொத்தாக இருந்தாலும் அதெல்லாவற்றையும்விட தன் மகளையே பெரும் சொத்தாக நினைத்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து தவத்தில் பிறந்த மகளாயிற்றே.

    சரிப்பா… தந்தையின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாத மகள்… அவள் மறுத்து சொல்ல சந்தர்ப்பமே வைக்காமல் அவளுக்குப் பிடித்ததை மனதறிந்து தேர்வு செய்யும் தந்தை. இந்தக்காலத்து குழந்தைகளின் விருப்பமும் எதிர்பார்ப்புகளும் வேறுபட்டிருந்தாலும் சீதாவின் எண்ணங்கள் எப்போதுமே அவர்களின் எண்ணத்துக்கு மாறாய் யோசித்ததில்லை.

    அவர்கள் எது செய்தாலும் தன் நன்மைக்கு மட்டுமே என்ற மாறாத எண்ணம் கொண்டவள். அவர்களின் அன்பு மீதிருந்த நம்பிக்கை அவளை அப்படி எண்ண வைத்தது. ஒரு விஷயத்தை தீர்மானித்து விட்டால் அதை மாற்றிக்கொள்ளாத பிடிவாதக்காரி. எந்த விஷயத்தையும் துணிச்சலோடு நேரிடுபவள் அன்புக்கு மட்டும் அடிமையாகி விடுவாள்.

    MSc கம்ப்யூட்டர் முடித்தவுடன் அவளது ஜாதகத்தை ஜோசியரிடம் காட்ட ஆறு மாதத்திற்குள் கல்யாணத்தை முடிக்காவிட்டால் முப்பது வயதிற்குப் பிறகே அவளுக்கு கல்யாண யோகம் என்று கூறவும் அவளுக்கான மாப்பிள்ளைத் தேடலில் இருந்தார் சேகரன்.

    தூரத்து உறவில் ஒரு கல்யாண வரவேற்புக்காய் குடும்பத்தோடு புறப்பட்டுக் கொண்டிருந்தார். மனைவியும் மகளும் பின்னில் ஏறிக்கொள்ள புன்னகையுடன் காரை எடுத்தார்.

    அந்தப் பெரிய மண்டபத்தின் உள்ளே பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு மூவருமாய் மண்டபத்துக்குள் நுழைந்தனர். பொதுவாய் சீதா இந்த மாதிரி விசேஷங்களுக்கு அதிகம் வருவதில்லை. எந்த விசேஷத்துக்கும் மகளை கண்ணிலேயே காட்டுவதில்லை… என்ற சில உறவுகளின் புலம்பலால் இன்று மகளையும் வருமாறு சுகந்தி அழைக்க அன்னையின் அழைப்பை மறுக்க முடியாமலே சீதாவும் வர சம்மதித்திருந்தாள்.

    ரிஷப்சனில் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்த பெண்ணின் வரவேற்பையும் நீட்டிய குங்குமத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். மேடையில் மணமகனும், மணமகளும் பளிச்சென்று புன்னகைக் கனவுகளுடன் நின்றிருக்க அவர்களின் மீது வீடீயோவின் வெளிச்சப் பூக்கள் விடாமல் சிதறிக் கொண்டிருந்தன. அழகான மேடை அலங்காரம் கண்னைக் கவர அந்த மாலை நேரத்தை இனிமையாக்க இதமாய் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது மெல்லிசை.

    சேகரன், கல்யாணப் பெண்ணின் தந்தை சந்தானத்துடன் பேசிக்கொண்டிருக்க, சுகந்தி, உறவுக்காரப் பெண்களிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். சீதாவைக் கண்டவர்களின் பார்வையில் ஒரு மெச்சுதல் தெரிந்தது. புன்னகை முகமாய் பதில் சொன்னவளை ஆச்சரியமும் மனதுக்குள் சிறு அசூயையுமாய் அவர்கள் நோக்க, சுகந்தி மகளை பெருமையோடு பார்த்தார்.

    சேகரன் வரவும் அவருடன் மேடையேறி மணமக்களை வாழ்த்திவிட்டு, பரிசைக் கொடுத்துவிட்டு வந்து உறவுக் கூட்டத்துடன் அமர்ந்தனர். அவர்கள் பேசுவதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று மைக்கில் ஒலித்த குரலில் திரும்பினாள்.

    அடுத்து கரோக்கே முறையில் பாட விருப்பமுள்ளவர்களை வந்து பாடுமாறு அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூற ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த, மேடை கிடைக்காத கத்துக்குட்டி பாடகர்கள் ஒரு கைபார்த்து விட நினைத்து அவர்களுக்குப் பிடித்த பாடல் வரிகளை அலைபேசியில் தேடத் தொடங்கினர். ஒரு சிறுவன் தயக்கத்துடன் ஒரு பாடலை சொல்ல அதற்கான பின்னணி இசையை ஒலிக்கவிட்டனர். முதலில் சிறு தடுமாற்றத்துடன் தொடங்கியவன் பிறகு ஆர்வத்துடன் பாடத் தொடங்கினான். அடுத்து ஒவ்வொருத்தரும் ஆசையுடன் முயன்று பார்க்கத் தொடங்கினர்.

    சீதாவுக்கு அங்கு யாரும் துணைக்கு இல்லாததால் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    மெதுவாய் எல்லோரும் பேச்சைக் குறைத்துக் கொண்டு பாடுபவர்களை கவனிக்கத் தொடங்கினர். அதைப் பற்றிய அபிப்ராயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். அச்சோ… எதுக்கு இந்த நிகழ்ச்சி எல்லாம்… நல்ல பாட்டை கெடுக்கறாங்களே… என்று ஒரு பெண்மணி சுகந்தியிடம் கூற, அவர், பாவம்… ஏதோ ஆசைக்கு பாடுறாங்க… முறையா சங்கீதம் படிச்சிருந்தா அவங்களும் நல்லாதானே பாடுவங்க… என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    அவர்கள் பேசுவது காதில் விழ சிறு புன்னகையோடு பாடுபவர்களை கவனிக்கத் தொடங்கினாள சீதா. சிலர் நன்றாகவே பாடினர். பாட்டை ரசிக்காதவர்கள் உண்டா… தாங்களும் பாட வேண்டுமென்பது நிறைய பேரின் ஆசை தானே… குளியலறையில் பாடி ஆசையைத் தீர்த்துக் கொண்டிருந்த பலருக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயமாயிற்றே. ஒருமுறை பாடியவர்கள் தயக்கம் மறைந்து அடுத்தடுத்து பாடல்கள் தேர்வு செய்து பாட வந்தனர்.

    நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தவளைக் கண்ட அந்த உறவுக்காரப் பெண்மணி, ஏன் சுகந்தி… உங்க சீதா சின்ன வயசுல பாட்டுக் கிளாஸ் எல்லாம் போனதா சொல்லிருக்கியே… அவளை ஒரு பாட்டு பாட சொல்லலாமே… என்றார்.

    மகள் பாடுவதற்கு தயாரெடுக்காமல் எதுவும் சொல்ல விரும்பாத சுகந்தி, அவ பாட்டெல்லாம் படிச்சிருக்கா… நல்லாப் பாடவும் செய்வா… ஆனா இப்ப சட்டுன்னு எல்லார் முன்னாடியும் பாட சொன்னா அவளுக்கு கூச்சமாருக்குமே… இல்லியா சீதா… என்றார் மகளிடம்.

    வீட்டில் மகள் ஏதாவது பாடலை முணுமுணுக்கும் போது அவருக்குப் பிடித்த பாடலையும் சுகந்தி பாட சொல்வது வழக்கம். மகள் பாட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மறைத்துக் கொண்டு கேட்டவரை நோக்கிப் புன்னகைத்தாள் சீதா.

    அதுக்கென்னம்மா… பாடிட்டாப் போகுது… என்று பிகு பண்ணாமல் கூறியவள், எந்தப் பாடலைப் பாடுவது… என்று ஒரு நிமிடம் யோசித்து விட்டு அலைபேசியில் அந்தப் பாடல் வரிகளைத் தேடி எடுத்துக் கொண்டு எழுந்தாள். தான் சொன்னதுமே பாடத் தயரான மகளை மனதுக்குள் மெச்சிக் கொண்டார் சுகந்தி. மகள் மேடைக்கு அருகே செல்வதைக் கண்டு பேசிக் கொண்டிருந்த சேகரனும் திரும்பிப் பார்த்தார்.

    ஒரு பெண் பாடிக் கொண்டிருக்க அங்கே இருந்த ஒருங்கிணைப்பாளரிடம் அவள் பாடப் போகும் பாடலை சொல்லிவிட்டு அந்த பெண்

    Enjoying the preview?
    Page 1 of 1