Thirukkural Kathaigal
By Latha Baiju
()
About this ebook
இந்த அவசர யுகத்தில் முன்பு போல் சிறுவர்கள் நீண்ட கதைகளைப் படிக்க விரும்புவதில்லை. அதனால் சிறிய அளவில், அதே சமயத்தில் இரண்டே வரியில் வாழ்க்கைக்கு பயன்படும், சிறப்பான கருத்துக்களைக் கொண்ட திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட கதைகளை அதற்கான சிறு விளக்கத்துடன் இத்தொகுப்பில் அளித்துள்ளேன். குழந்தைகளை இந்த கதைகளைப் படிக்க வைத்து மகிழச் செய்யுங்கள்...
Related to Thirukkural Kathaigal
Related ebooks
Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThottu Kolla Aasai Rating: 0 out of 5 stars0 ratingsIndhuja Iru Kadhalippom Rating: 5 out of 5 stars5/5Vanajavin Annan Rating: 5 out of 5 stars5/5Soorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsMuththangaludan Shalini Rating: 5 out of 5 stars5/5Nishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Oru Muththam Kasakkirathu Rating: 5 out of 5 stars5/5Kadavulai Kandavargal Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsMuthamida Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 5 out of 5 stars5/5Uyirai Thanthuvidu Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsPerithinum Perithu Kel Rating: 5 out of 5 stars5/5Yamuna Nadhi Rating: 4 out of 5 stars4/5Krishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsVazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsMaya Maan Rating: 0 out of 5 stars0 ratingsIndruvarai Kanavan Rating: 5 out of 5 stars5/5Maaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Ullathil Nalla Ullam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thirukkural Kathaigal
0 ratings0 reviews
Book preview
Thirukkural Kathaigal - Latha Baiju
http://www.pustaka.co.in
திருக்குறள் கதைகள்
Thirukkural Kathaigal
Author:
லதா பைஜூ
Latha Baiju
For more books
http://www.pustaka.co.in/home/author/latha-baiju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. கடவுள் நம்பிக்கை
2. அறிவே துணை
3. அணிலின் நன்றி
4. நன்றி மறவாதே
5. எலியும் பூனையும்
6. விருந்தோம்பல்
7. கடவுளின் கருணை
8. கொக்கின் பெருந்தன்மை
9. கூடி வாழ்தலே நன்மை
10. உழைப்பின் உயர்வு
11. எது உண்மை
12. மன்னிப்பும் தண்டனையே
13. வருமுன் காத்தல்
14. நல்ல நட்பு
15. தீ நட்பு
16. கன்றுக் குட்டியின் நட்பு
17. உண்மையான நட்பு
18. உதவி செய்வோம்
19. உயிர்களை நேசிப்போம்
20. நீதி தவறாமை
21. நோபிட்டாவின் சோம்பேறித்தனம்
22. அன்பே பலம்
23. இன்னா செய்யாமை
24. எலி, பூனையின் நட்பு
25. டோலு போலுவின் நட்பு
26. தாயின் மகிழ்ச்சி
27. பச்சோந்தியின் குற்றவுணர்ச்சி
28. நல்ல நண்பர்கள்
29. இனிய சொற்களின் பயன்
30. புள்ளிமானின் கர்வம்
31. எறும்பும் வெட்டுக்கிளியும்
32. சொல்வது எளிது
33. மன்னரின் அன்பு
34. அறிவிலார் செல்வம்
35. வண்டின் அகம்பாவம்
36. கழுதையின் புத்திசாலித்தனம்
37. உண்மை அறிதல்
38. அமைச்சர் பீர்பாலின் சாதுர்யம்
39. மழையின் சிறப்பு
40. உழவின் பெருமை
41. மன்னரின் தீர்ப்பு
42. தேனீயின் பெருமை
43. மீனின் சொல்லாடல்
44. சோம்பித் திரியேல்
45. நல்ல நட்பு
46. கிளியும் காகமும்
47. யானைப்பாகனின் அறிவு
48. குரங்கின் அட்டகாசம்
49. கூடா நட்பு
50. காலமறிந்து காரியம் செய்
1. கடவுள் நம்பிக்கை
ஒரு காட்டில் விலங்குகள் எல்லாம் ஒன்று கூடி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. ஒரு சமயம் மழை பெய்யாததால் காட்டில் கடும் வறட்சி ஏற்பட்டு காடுகள் எல்லாம் அழியத் தொடங்கின. இதனால் விலங்குகள் எல்லாம் தொடர்ந்து காட்டில் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே எல்லாம் ஒன்று கூடி ஆலோசனை செய்தன.
மழை பொழிய ஏதாவது செய்தாக வேண்டும்... இல்லையேல் நாம் அனைவரும் தொடர்ந்து காட்டில் வசிக்க முடியாது.....
என்று பேசிக் கொண்டன. அப்பொழுது வயதில் மூத்த கரடி ஒன்று, நாம் அனைவரும் நாளை ஒன்று கூடி இறைவனைப் பிரார்த்தனை செய்வோம்..... நமக்கு நல்ல வழி பிறக்கும்.....
என்றது. கரடியின் யோசனையை ஏற்றுக் கொண்ட விலங்குகள் சம்மதம் தெரிவித்தன.
அடுத்த நாள் அதே போல விலங்குகள் எல்லாம் பிரார்த்தனைக்காய் ஒன்று கூடின. எல்லா விலங்குகளும் மனதில் நம்பிக்கை இல்லாமல் வர, சிறு முயல் மட்டும் குடை எடுத்து வந்து இருந்தது. அதைக் கண்ட விலங்குகள் எல்லாம் முயலை ஏளனம் செய்தன. மழையில்லாமல் வறட்சியாக உள்ள நிலையில் குடை எதற்கு என்றன. முயல் பதில் ஏதும் அளிக்கவில்லை.
பிரார்த்தனை தொடங்கி எல்லாரும் கடவுளை வேண்ட சிறிது நேரத்தில் எல்லாம் கனமழை பொழியத் தொடங்கியது. முயல் குடை பிடித்து நனையாமல் நிற்க, மற்ற விலங்குகள் எல்லாம் பலமாக மழையில் நனைந்தன. அப்போது முயல் சொன்னது.
எப்பொழுதும் இறைவனின் மீது மனதில் நம்பிக்கை இருக்க வேண்டும்.... என் நம்பிக்கை வென்றது....
என்று மகிழ்ச்சியோடு கூறியது.
குறள் எண் - 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்: நம்பிக்கையோடு நினைப்பவர் உள்ளத்தில் தங்கியிருக்கும் இறைவனது சிறந்த திருவடிகளை விடாது நினைப்பவர், இன்ப உலகில் நீடித்து வாழ்வர்.
*****
2. அறிவே துணை
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அதற்கு தான் காட்டு ராஜா என்ற மிகுந்த கர்வம் இருந்தது. அது காட்டில் உள்ள விலங்குகளுக்கு எல்லாம் ஒரு கட்டளையிட்டது.
அதன்படி தினம் ஒரு விலங்கு தானாக முன்வந்து அதற்கு உணவாக வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி தினம் ஒரு விலங்கு சென்று சிங்கத்திற்கு இரையானது.
இதைக் கண்டு விலங்குகளுக்கு எல்லாம் ஒரே கவலையாகி விட்டது. இப்படியே சென்றால் இந்த சிங்கம் காட்டில் உள்ள விலங்குகளை எல்லாம் அழித்திடுமே என்று. உடனே ஒரு சுட்டி முயல் தீவிரமாய் யோசித்து ஒரு தீர்வை சொன்னது.
நாளை நானே சிங்கத்திற்கு இரையாக செல்கிறேன்..... அதன் அகம்பாவத்திற்கு தக்க பாடம் புகட்டுகிறேன்....
என்றது.
மறுநாள் முயலும் சிங்கத்திற்கு உணவாக சென்றது. முயல் செல்வதற்கு தாமதம் ஆனதால் சிங்கத்திற்கு பயங்கர கோபம் வந்தது. நான் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறேன்.... நீ வருவதற்கு ஏன் இத்தனை தாமதம்....
என கர்ஜித்தது சிங்கம்.
அதன் கர்ஜனையில் முயலுக்கு மனதுக்குள் உதறல் எடுத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பணிவாகப் பேசியது.
என்னை மன்னித்துவிடுங்கள்.... காட்டுராஜா.... நான் வரும் வழியில் உங்களைப் போலவே ஒரு பெரிய விலங்கு என்னை வேட்டையாடப் பார்த்தது.... நான் உங்களுக்கு உணவாக செல்கிறேன்... என்று கூறியும் கூட என்னை விட மறுத்தது.... நான்தான் சென்று எங்கள் ராஜாவை அழைத்து வருகிறேன்.... காத்திருங்கள்.... என்று சொல்லி வந்திருக்கிறேன்.... நீங்கள் விரைந்து வாருங்கள் ராஜா.... இல்லையென்றால் அந்த மிருகம் தப்பித்து சென்றுவிடும்...
என்றது.
சிங்கமும், ஓ.... யாரது... என்னை விடப் பெரிய ஒருவன்..... சென்று பார்க்கலாம்.... வா....
என்றது முயலிடம். முயலும் சிங்கத்தை தந்திரமாக காட்டுக்குள் வெகுதூரம் கூட்டிச் சென்றது.
ஒரு கட்டத்திற்கு மேல் சிங்கத்திற்கு சந்தேகம் வரவே, நீ என்னிடம் பொய்யுரைக்கவில்லையே....
என்று கோபத்துடன் கேட்டது.
இல்லை மகாராஜா..... அதோ..... அந்தக் கிணற்றுக்குள் தான் பதுங்கி இருக்கிறது.....
என்று அங்கிருந்த பாழடைந்த கிணறு ஒன்றைக் காட்டியது முயல். சிங்கமும், கிணற்றில் எட்டிப் பார்த்து, ஏய்.... யாரது.....
என்று