Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Muththam Kasakkirathu
Oru Muththam Kasakkirathu
Oru Muththam Kasakkirathu
Ebook92 pages1 hour

Oru Muththam Kasakkirathu

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466657
Oru Muththam Kasakkirathu

Read more from Jdr

Related to Oru Muththam Kasakkirathu

Related ebooks

Related categories

Reviews for Oru Muththam Kasakkirathu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Muththam Kasakkirathu - JDR

    25

    1

    "அன்பார்ந்த கலா ரசிகப் பெருமக்களே... சேலம் மாநகரில் முகாமிட்டிருக்கும் ரோஜா சர்க்கஸ் உங்கள் அனைவருக்கும் தனது அன்பு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது..."

    அறிவிப்பாளரின் குரலைத் தொடர்ந்து ‘டொடொய்ங்’ என்று கிடார் ஒலித்தது. பெரிதாய் ஒரு தாம்பாளம் அதிரும் சத்தம் கேட்டது.

    அறிவிப்பாளரின் குரல் தொடர்ந்தது.

    எங்களது ரோஜா சர்க்கஸின் சாகஸ நிகழ்ச்சிகளையும், பயங்கரமான பார் விளையாட்டுகளையும், சிங்கம், யானை, புலி, கரடி, சிறுத்தை, குதிரை, நாய் ஆகிய விலங்குகளின் சாகஸ சர்க்கஸ் வித்தைகளையும், எங்கள் குழுவினர் உயிரைப் பணயம் வைத்துச் செய்யும் அபாயகரமான நிகழ்ச்சிகளையும், குள்ளக்கோமாளிகளின் நகைச்சுவை வேடிக்கை வினோதங்களையும் ரசித்து மகிழ ஆவலுடன் வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம். இதோ, முதல் நிகழ்ச்சியாக எங்கள் ரோஜா சர்க்கஸ் குழுவினரின் அலங்கார அணிவகுப்பு.

    அறிவிப்பாளரின் குரல் ஏற்ற இறக்கங்களுடன் ஒலி பெருக்கியில் ஒலிக்க, அதனைத் தொடர்ந்து ட்ரம்ஸ் ‘டபடப டபடப்’ வென ஒலித்தது. அடுத்து கிடார், வயலின், கேஸியோ ஆகிய இசைக் கருவிகளின் இன்னிசை முழங்கின.

    பார்வையாளர்கள் பகுதியில் விளக்குகள் அணைந்து போய்விட, மையப் பகுதியில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று மலர் மாலை ஏந்திவர, சிம்மாசன அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையில் அரசி போல வேடமிட்ட பெண் ஒருத்தி அமர்ந்துவர, யானை, யானை, மேலும் யானை,. அதைத் தொடர்ந்து ஒட்டகம், குதிரை, இன்னும் சில குதிரைகள், இடுப்பில் பெல்ட் அணிந்து சங்கிலியால் பிணைக்கப்பட்ட இரு கரடிகள், ஆறு பாமரேனியன் நாய்கள், வெள்ளைச் சீருடையில் ‘பார்’ விளையாடும் வீரர்கள், கோமாளிகள், தொடை தெரியக் குட்டைப் பாவாடை அணிந்த சர்க்கஸ் பெண் மணிகள் (அழகிகள் என்று கூறினாலும் பொருத்தமாய்த்தான் இருக்கும்) என அணிவகுப்பு அமைந்தது..

    இசை இனிமையாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

    பார்வையாளர்களில் அரவிந்தும் இருந்தான். அவனுடன் நண்பன் அசோக்குமாரும் வந்திருந்தான்.

    அணிவகுத்து வந்து கொண்டிருக்கும் சர்க்கஸ் அழகிகளில் குறிப்பிட்ட ஒருத்தியை மட்டும் கண்களால் தேடினான், அரவிந்த்.

    அசோக்... அசோக்... அதோ பாரு, அஞ்சாவதா வர்றாளே...

    அரவிந்த் சுட்டிக் காட்டிய அவள் படு கம்பீரமாய் நடந்து வந்தாள்.

    சூப்பர் பிகர்மா அரவிந்த்

    டேய், பிகர் கிகர்னு எல்லாம் சொல்லாதே! நான் அவளைக் காதலிக்கிறேன். சாதாரணமா இல்லே, சின்சியரா. நான் அவளைப் பற்றிப் பெரிய்ய திட்டமே வச்சிருக்கேன் சீரியஸாகச் சொன்ன அரவிந்த்தை வியப்பாகப் பார்த்தான் அசோக்.

    இவனுக்கு என்ன ஆச்சு?

    அசோக், அவளுக்கும் என்மேல ஆர்வம் இருக்கு. கவனி, அவளைக் கவனி.

    அந்த சர்க்கஸ் அழகி முன்வரிசைப் பார்வையாளர்களைப் பரவலாய் ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வை அரவிந்த் மேல் பதிந்தது. நடந்துகொண்டே திரும்பித் திரும்பி அவள் நாலைந்து முறை அவனையே பார்த்தாள்.

    பார்க்கிறா பாரு அசோக், பார்க்கிறா பாரு.

    வெளிப்படையாகவும் இல்லாமல் மறைமுகமாகவும் இல்லாமல் அவள் மிக நளினமாக ஒரு புன்னகையும் பூத்ததுபோல் இருந்தது.

    "தினம் இப்படித்தான் அசோக், அணிவகுப்புல வரும் போதும், ப்ரோகிராம் தரும்போதும் என்னை ‘லுக்’ விடுறா..... லேசா சிரிக்கிற மாதிரிகூடத் தெரியுது. அவளுக்காகவே தினம் சோபா டிக்கட் வாங்கிகிட்டு வந்து கிட்டத்தட்ட இதே இடத்துல உட்கார்றேன். அவ பார்வையில் ஓர் ஆர்வம் தெரியுதே, கவனிச்சியா அசோக்?’

    கவனிக்கலை.

    டேய் வாராதடா. சீரியஸாக் கேட்கிறேன் நான்.

    அதை விடு. ஏதோ திட்டம்னு சொன்னியே, அது என்ன?

    அவ அழகைப் பாரு. தோரணையா அவ நடந்துவர்ற நடையைப் பாரு. அவ உடம்புல இருக்கிற கவர்ச்சியைப் பாரு.

    அரவிந்த், அவ ஆயிரம் பேர் முன்னாடி ஆடிப் பிழைக்கிற சர்க்கஸ்காரி. அவ போட்டிருக்கிற டிரஸ்ஸைப் பாரு. டைட்டா ஒரு மேல் சட்டை, குட்டையா ஒரு பாவாடை.

    என்னோட பாய்ண்ட்டும் அதுதான் அசோக். இவ்ளோ அழகா, ரம்மியமா இருக்கிற இவ, இப்படி ஆயிரம் பேர் நடுவில வித்தை காட்டிப் பொழைக்க வேண்டியவளா? அத்தனை பசங்களும் பார்த்து ஜொள்ளுவிட அரை குறை ஆடை அணிந்து ஆட வேண்டியவளா? இல்லை அசோக். இவ அமர்க்களமான பங்களாவில, ஐம்பது அறுபது வேலைக்காரர்களை விரட்டி வேலை வாங்கிகிட்டு அரசி மாதிரி வாழ வேண்டியவ!

    அரவிந்த் சொன்னபோது, அவன் குரலில் ஒரு தீவிரம் இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1