Thottu Kolla Aasai
By JDR
()
About this ebook
Read more from Jdr
Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsOru Muththam Kasakkirathu Rating: 5 out of 5 stars5/5Kuttraththin Thirappu Vizha Rating: 5 out of 5 stars5/5Indruvarai Kanavan Rating: 5 out of 5 stars5/5Thirakkaathe Abaayam Rating: 5 out of 5 stars5/5Hello Inspector Rating: 5 out of 5 stars5/5Sothappal Mannan Idea Saamy Rating: 0 out of 5 stars0 ratingsMuththangaludan Shalini Rating: 5 out of 5 stars5/5Uyirai Thanthuvidu Rating: 0 out of 5 stars0 ratingsIndhuja Iru Kadhalippom Rating: 5 out of 5 stars5/5Thedivarum Vibareetham Rating: 5 out of 5 stars5/5Kollamath Thudikkuthu Manasu Rating: 0 out of 5 stars0 ratingsKalavukku Kai Koduppom Rating: 0 out of 5 stars0 ratingsAntha Ponnu Vendaam Rating: 0 out of 5 stars0 ratingsNIl Sol Kol Rating: 5 out of 5 stars5/5Kolai Vaarisu Rating: 5 out of 5 stars5/5Bumber Kuttrangal Rating: 5 out of 5 stars5/5
Related to Thottu Kolla Aasai
Related ebooks
Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Uyire... Uyire... Rating: 0 out of 5 stars0 ratingsPoove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsSooriyan Miga Arugil Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsKetkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsNeeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Uyirai Thanthuvidu Rating: 0 out of 5 stars0 ratingsThiru & Thirumadhi Rating: 4 out of 5 stars4/5Suvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Kanavu Meipada Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMegamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsEnakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Anal Mele Panithuli Rating: 5 out of 5 stars5/5Unnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Ellaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Thulasi Rating: 0 out of 5 stars0 ratingsAmuthai Pozhiyum Nilavey! Rating: 0 out of 5 stars0 ratingsAbiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Neelakuyile Kannamma Rating: 5 out of 5 stars5/5Nee Irukkum Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsMerke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Mazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Thottu Kolla Aasai
0 ratings0 reviews
Book preview
Thottu Kolla Aasai - JDR
18
1
வேலுமணியின் மலரும் நினைவு
கணித ஆசிரியர் முன் பயத்துடன் நின்றிருந்தான் வேலுமணி.
வீட்டுக் கணக்கை ஏண்டா செய்யலை?
எங்கம்மாவுக்கு முடியல சார். ஆஸ்பத்திரிக்குப் போயிட்டம்...
ஆத்தாவுக்கு நோவுனு பொய்யா சொல்ற? வீட்டுக் கணக்கு போடாம வந்திட்டு பொய் வேற...? கொழுப்புல உனக்கு. கைய நீட்டு.
நடுங்கும் கையை நீட்டினான் வேலுமணி. விழப் போகும் அடியின் வலியைப் பொறுத்துக்கொள்ள, பற்களை இறுகக் கடித்தான் கண்களை இறுக மூடி அடியை எதிர் பார்த்தான். கையில் அடி விழவில்லை. அவன் நெஞ்சில் இடி விழுந்தது.
வேலுமணியோட அம்மா செத்துப் போயிட்டுதாம் சார்... ஆள் வந்திருக்கு...
பியூனின் குரல் இது. அப்போது வேலுமணியின் வயது ஒன்பது.
சூரியன் தொலைந்து போயிருந்த பின் மாலை. அல்லது முன் இரவு மேகக் கொள்ளையனின் அட்டகாசத்தால் நட்சத்திரங்கள் கூட ஒளிந்து கொண்டிருந்தன. பறவைகள் மவுனம் அனுஷ்டிக்க, காற்றின் வரவை எதிர்பார்த்து மரம் செடிகள் அட்டென்ஷனில்!
திருநெல்வேலியின் சாலைகளிலும், கடைவீதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் குறைந்து போயிருந்தது வீதிகள் வெறிச்... வெறிச், காரணம் டி.வி.! எப்போதோ நிகழ்கிற அதிசயம்போல அந்த ஞாயிறு நல்ல தமிழ்ப் படம் டி.வி.யில்.
கடிகாரத்தின் சின்ன முட்கள் எட்டைத் தொட்டுக் கொண்டிருக்க, பெரிய முட்கள் பன்னிரண்டைத் தழுவியிருந்தன. இரசிகக்கண்கள் ஆர்வம் மிகும் பார்வையுடன் க்ளைமாக்ஸில் பதிந்திருக்க, பகவான் தெரு 17ஆம் வீட்டில் மட்டும் ராகவனின் கண்கள் அனல் தெறித்தது.
இன்னும் வரலை பாரு...
ராகவனின் வெப்பக்குரல்.
வந்திடுவாங்க...
ஜீவனற்று ஒலித்த அவர் மனைவி சரசுவின் குரலில் பயமும் தவிப்பும் பாதிப் பாதி.
மணி எட்டாகுதுடி. மத்தியானம் வீட்டை விட்டுப் போன வயசுப் பொண்ணு இன்னும் வரலை. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்...
எதிர்முனையில் மவுனம்.
மத்தியானம் போனவ சாயங்காலமாவது வந்து சேர்ந்திருக்கணும். வரலை. சரி ஒரு மணி நேரம் முன்னப் பின்ன ஆச்சுனா ஓர் ஆறரை ஏழுக்காவது வந்திருக்க வேண்டாமா? மணி எட்டாச்சு இன்னும் அந்தக் கழுதையை காணல...
ஏதோ வேலைக்கு அப்ளிகேஷன் போடுறது சம்மந்தமாத்தானே போயிருக்கிறா? நேரம் முன்னப் பின்ன ஆகியிருக்கும்ங்க. அவ என்ன விபரம் தெரியாத பொண்ணா ?
அதனாலதானேடி நா பயப்படுறேன். ஊர் உலகம் ரொம்ப கெட்டுக் கிடக்கு. தினம் பேப்பரைப் புரட்டினா கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு, கடத்தல்னுதானே நியூஸ் வருது? வயசுப் பொண்ணு இவ்வளவு லேட்டா வர்றான்னா, நாமல்ல வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டு இருக்க வேண்டியதிருக்கு?
ரோகிணி வீட்டுக்குத்தானே போயிருக்கிறா? வந்து விடுவா...
என்றாள் சரசு.
என்றாலும் மனசுக்குள் தவிப்பு தரையில் விழுந்த தாம்பாளமாய் அதிர்ந்து கொண்டிருந்தது.
ரோகிணி ஓர் அவுத்துவிட்ட கழுதை. அவங்க வீட்டுல இருக்கிற பணத்துக்கும் பவிசுக்கும் அவ அலைய வேண்டியதுதான் இவளுக்கு நம்ம நிலைமை புரிய வேண்டாமா இவ அவகூட சேர்ந்தா உருப்பட்ட மாதிரிதான்...
-
எப்பவும் குழந்தையைக் கரிச்சுக் கொட்டுறதே உங்களுக்கு வழக்கமாப் போச்சு,
என்றாள் சரசு முணு முணுப்பாக,
என்னடி முணுமுணுப்பு? அவ ஒண்ணும் குழந்தையில்ல. குமரி. உன்கிட்ட என்ன பேச்சு? அவ வரட்டும் நான் அவகிட்ட பேசிக்கிறேன்...
பொறுமையின்றி ராகவன் உலாவினார்.
இன்னும் வீடு திரும்பவில்லை.
ராகவனின் கோபம் மெல்ல மெல்லப் பயமாக உருமாற்றம் பெற்றது.
அர்ச்சனா ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை? அவளுக்கு விபரீதமாக ஏதாவது?
நினைக்கவே நெஞ்சம் துடித்தது.
என்னங்க...
ம்...
"அர்ச்சனாவை இன்னும் காணலையேங்க...
எல்லாம் நீ கொடுக்கிற இடம்...
உணர்வுக்குத் திரை போட்டுப் போலியாய்க் கோபப்பட்டார்.
வந்து அந்த ரோகிணி வீட்டுல போய்ப் பார்த்திட்டு வந்திடுங்களேன்...
சரசு சொல்ல; பதில் ஏதும் பேசாமல் சட்டை போட்டுக் கொண்டார். செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.
ரோகிணியின் வீடு நான்கு வீதி தள்ளியிருந்தது. அவள் வீடு நோக்கி நடக்க நடக்க அவருக்குள் பயம் பொங்கியது.
அர்ச்சனாவுக்கு ஏதாவது? வேகவேகமாக நடந்தார்.
ரோகிணியின் வீட்டில் சகஜம் நிலவியது. ரோகிணியின் அப்பா நரசிம்மன் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். டி.வி.யில் தேசிய நிகழ்ச்சிகள் தொடரும் -
சார்...
வாங்கோ வாங்கோ... அர்ச்சனாவோட தோப்பனார்தானே நீங்க?
ஆமா சார்...
உட்காருங்கோ... சவுக்கியமா?
சார் வந்து... அர்ச்சனா இங்கே வந்தாளா?
இருந்தாளே... ரோகிணியும் அவளும்தான் பாளையங்கோட்டைக்குப் போனா... ஏதோ போஸ்டிங்குக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதணுமாம். ரெண்டு கொழந்தைங்களும் கோச்சிங்கிளாஸ் போயிருக்கிறதுகள்... வர்ற நேரம் தான்...
மணி ஒப்பதாகிறதே...
அவாளுக்கு எட்டரைக்குத்தான் கோச்சிங் கிளாஸ் முடியும்னு ரோகிணி சொன்னா. அப்புறமா பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்து சேரவேண்டாமோ? நாழியாகத்தானே செய்யும்?
லேட் ஆகிறதேனுதான் எனக்கு பயமா இருக்கு.
அவா என்ன பச்சக் கொழந்தையா? வந்துடுவா சார்... நைட் பத்தரை வரைக்கும் பஸ் இருக்கு. வந்திடுவா. நீங்க வேணா ஒண்ணு செய்யுங்கோ. அவா வர்ற வரைக்கும் இங்கேயே இருங்கோ. வந்ததும் அர்ச்சனாவைக் கூட்டிண்டு போங்கோ.
இல்ல... பரவாயில்ல... நான் வீட்டுக்குப் போறேன். என் வொய்ப் பொண்ணைக் காணலனு பதறிக்கிட்டிருப்பா, நான் போய் விபரம் சொல்லணும்...
ராகவன் புறப்பட்டார். அவன் மனது சற்று நிம்மதிப்பட்டிருந்தது.
அவர் வீடு திரும்பியபோது மணி ஒன்பதே கால்.
என்னங்க, நம்ம அமச்சனா?
ம்... அந்த ரோகிணி பொண்ணுகூட எதோ கோச்சிங் கிளாஸுக்குப் போயிருக்கிறாளாம்... அது எட்டரைக்குத்தான் முடியுமாம்.
அதுதானே பார்த்தேன்... அதுக்குள்ளே குழந்தையைப் போட்டு கரிச்சுக் கொட்டிட்டீங்களே...
சரசு நொடித்துக் கொண்டாள்.
ராகவன் ஈஸி சேரில் சாய்ந்தார். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்தது.
மணி ஒன்பதரை... பத்து... பத்தே கால்... என்ற ரீதியில் நகர்ந்தது.
ராகவன்-சரசுவின் டென்ஷன் மீண்டும் ஆரம்பமாகியது.
பத்தரை மணிக்கு அவர்களுக்கு அந்த அதிர்ச்சிச் செய்தி கிடைத்தது.
சார்... சார்...
பதட்டத்துடன் அழைத்த குரல் நரசிம்மனுடையது.
என்ன...?
என்று வெளியில் வந்த ராகவன், வாசல் முன் நரசிம்மனும் ரோகிணியும் மட்டும் நிற்க அதிர்ச்சியடைந்தார்.
அர்ச்சனா எங்கே?
சார்... உங்க பொண்ணு அர்ச்சனா இன்னிக்கு கோச்சிங் கிளாஸுக்கு வரலையாமே... இப்பதான் ரோகிணி சொன்னாள். அவளைத் தேடிண்டு வந்தேளே, அதுதான் தகவல் சொல்லிடலாம்னு...
‘ததும் ததும்’ என்று அதிர்ந்தது ராகவனின் நெஞ்சு.
அ... அர்ச்சனா... கோச்சிங் கிளாஸுக்கு வரலையா?
கோச்சிங் கிளாசுக்குன்னுதான் என்கூட புறப்பட்டா. நாங்க பாளையங்கோட்டை போகிற பஸ்லதான் ஏறினோம்...
அப்புறம்?
திடீர்னு நான் வரலை ரோகிணி. நீ போயிட்டு வான்னு சொல்லிட்டு ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட்ல அவ இறங்கிகிட்டா.
எ... எதுக்காக?
சரியாத் தெரியாது அங்கிள். நானும் கேட்டேன் எனக்கு வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு. வீட்டுக்குப் போகணும்னு சொன்னா. அவ வீட்டுக்குத்தான் வந்திருப்பானு நான் நினைச்சுட்டேன். அவ வீட்டுக்கு வரலையா அங்கிள்.
வரலையேம்மா...
அழு குரலில் பதில் சொன்னார் ராகவன். சரசுவும் பதறிக் கொண்டிருந்தாள்,
அர்ச்சனா எங்கே போயிருப்பானு தெரியுமா உனக்கு?
தெரியலையே அங்கிள்...
ராகவன் தவிப்பாய்க் கைகளைப் பிசைந்தார். சரசு வாயில் சேலைத் தலைப்பைத் திணித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றபடி அழ ஆரம்பித்தாள்.
நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதேம்மா... வந்து வ... ந்து...
தலை குனிந்தார் ராகவன்...
என்ன அங்கிள் கேளுங்க...
ராகவன் மெல்ல தலை நிமிர்ந்தார். தயக்கமாகக் கேட்டார்.
அவளுக்கு பிரண்ட்ஸ் யாராவது உண்டா? அதாவது...
பாய் பிரண்ட்ஸா அங்கிள்?
ம்...
ச்சே... அப்படியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரிஞ்சு யார் கூடவும் அவ பழகினதில்ல. ரொம்ப ரிசர்வ்ட் டைப் அவ...
அப்போ... அர்ச்சனா எங்கே போனா?
தெரியலையே அங்கிள்...
அந்த இரவு ஒரு விபரீதத்தோடு தொடர்ந்தது.
அதே சமயம்-
அவன் அந்த அறையில் அமர்ந்திருந்தான். டியூப்லைட் அங்கு பிரகாசித்துக் கொண்டிருந்தது. சுவரில் பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருந்தன.
அதே சுவரில் ஒரு பல்லியும் இருந்தது.
அது அந்த பூச்சிகளை உறுத்துப் பார்த்தது. தன் வாலை நெளிவாய்ச் சுழற்றியது.
அவன் அதை சுவாரசியமாய் பார்த்துக் கொண்டிருந்தான்
பல்லி மெல்ல பதிவிருந்தது. தன் நாக்கை இரண்டு முறை நீட்டிற்று. எதிர்பாராத ஒரு நொடிப்பொழுதில் சட்டென பாய்ந்து அந்தப் பூச்சிகளில் ஒன்றைக் கவ்வியது.
பூச்சியின் தலை உட்பட பெரும்பகுதி பல்லியின் வாய்க்குள் சென்றிருக்க, பின்பகுதி மட்டும் வெளியில் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் அதுவும் பல்லியின் வாய்க்குள்