Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Muththangaludan Shalini
Muththangaludan Shalini
Muththangaludan Shalini
Ebook77 pages45 minutes

Muththangaludan Shalini

By JDR

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By JDR
Languageதமிழ்
Release dateJun 2, 2019
ISBN9781043466718
Muththangaludan Shalini

Read more from Jdr

Related to Muththangaludan Shalini

Related ebooks

Related categories

Reviews for Muththangaludan Shalini

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Muththangaludan Shalini - JDR

    1

    எலே, பொன்னுத்தாயி... நீ ரொம்ப அதிஷ்டக்காரி புள்ள... என்றார் செல்லமுத்து.

    ஏம்ப்பா நான் வாங்கின லாட்டரி சீட்டுக்கு பிரைஸ் அடிச்சிருக்குதாக்கும். எம்புட்டு. ரூவாப்பா? கேட்ட பொன்னுத்தாய், அடுத்த வாரம் தனது இருபத்து மூன்றாவது பிறந்த தினத்தை சந்திக்கப் போகிறாள்.

    அவள் ஒரு கிராமியப் பேரழகின் தொகுப்பு. அழகாய் அளவாய் இருந்தாள். இடுப்பு தவிர மற்ற இடங்களில் சராசரிக்கும் மேல் அஞ்சு இன்ச் சுற்றளவு என செழிப்பாய் இருந்தாள்.

    பொன்னுத்தாய் என்ற பெயருக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத அழகு அவளிடமிருந்தது. அவளது தாவணியும், ஜாக்கெட்டும் அவளின் இளமைத் திமிரை சற்றே மிகைப்படுத்திக்காட்டின. அவளது முகத்தில் மட்டும் அவள் பிறந்த இடத்துக்குச் சொந்தமான ஒரு கிராமிய அப்பாவித்தனம் அக்மார்க் முத்திரையுடன் ஒட்டிக்கொண்டிருந்தது

    யப்போவ், கேட்கிறேனில்ல, எம்புட்டு ரூவா ப்ரைஸ் அடிச்சிருக்கு?

    ப்ரைஸ்தான் அடிச்சிருக்கு புள்ள... ஆனா ரூவா இல்லை... வாழ்க்கை... சொன்ன செல்லமுத்து அக்கு வாயெல்லாம் பல்

    அவரது உற்சாகக் கூச்சல் கேட்டு, அவரது சகதர்மினி சிந்தாமணி வீட்டினுள்ளிருந்து வெளிவந்தாள்.

    என்னதான் சொல்லுதிய? விக்கிரமாத்தித்தன் கதையில விடுகதை போடுற மாதிரி சொல்லாம விஷயத்தை பட்டுனு சொல்லுவியளா? சிந்தாமணியின் குரலில் ஆர்வம் தெரிந்தது.

    நம்ம பொன்னுத்தாயிக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகுது சிந்தாமணி... பட்டணத்துல இருக்காளே என் சித்தி மவ ராசகுமாரி, அவ மகன் சந்தானகிருஷ்ணனுக்கு நம்ம பொன்னுத்தாயைக் கேட்குறாவ...

    என்ன ராசகுமாரி மவனுக்கா?

    ஆமா சிந்தாம்னி... அவன்... ச்சீச்சீ... அவரு... பட்டணத்துல பெரிய கம்பெனில மேனேசரா இருக்காரு... காரு பங்களானு ரொம்ப வசதியா இருக்காவ...

    அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கக் கேட்க பொன்னுத்தாயி வானத்தில் பறந்தாள்.

    சந்தானம் மாமாவை அவள் இரண்டுமுறை பார்த்திருக்கிறாள். திருநெல்வேலியில் உறவினர் வீட்டு கல்யாணத்துக்குச் சென்றிருந்த போதும், மதுரையில் ஒரு கிரஹப் பிரவேசத்திற்கு சென்ற போதும் அவரைப் பார்த்திருக்கிறாள்.

    கொஞ்சம் சிவந்த மாநிறம், சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி, துறுதுறுத்த கண்கள், அளவாய்க் கத்தரிக்கப்பட்ட மீசை என அவன் சினிமாவில் வருகிற கதாநாயகன் போல இருப்பான். அவன் தனக்கு கணவனாக வரப்போகிறானா?

    ‘குபுக்’கென்று ஒரு சந்தோஷ ஊற்று அவள் மனதில் பொங்கிற்று. மழைக்கால காட்டாறு போல வெள்ளமாய் மகிழ்ச்சி பரவிற்று. கூடவே ஒருவித வெட்கம்.

    சட்டென முகம் சிவந்து போன பொன்னுத்தாய் வீட்டுக்குள் ஓடினாள். குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு வெளிப்பட்டாள்.

    அம்மா... நான் தோப்பு கிணத்துல போயி தண்ணி எடுத்திட்டு வர்றேன்...

    தோப்புக் கிணற்று தண்ணீர் அவள் நோக்கமல்ல. தோழியரிடம் தன் திருமணச் செய்தியைச் சொல்வதே அவளது எண்ணம்.

    அட, கல்யாண விசயம் சொல்லிகிட்டிருக்கேன், நீ பாட்டுக்கு கொடத்தத் தூக்கிட்டு கிளம்புனா என்ன புள்ள அர்த்தம்? செல்லமுத்து சிரிப்போடு சொல்ல, சிந்தாமணி குறுக்கிட்டாள்.

    அர்த்தம் என்ன அர்த்தம்? வெக்கந்தான்... கல்யாண விசயமுல்ல... குமரிக்கு வெக்கம் வராதா பின்னே? நீ போமா பொன்னுத்தாயி... இந்த குடம் தூக்கற வேலை எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீ மேனேசர் பெண்டாட்டி ஆனபிறகு உனக்கு தண்ணி எடுக்க ஒரு ஆளு, துணி துவைச்சுப் போட ஒரு ஆளு... சமையல் பண்ண ஒரு ஆளு, பாத்திரம் கழுவ ஒரு ஆளு... அம்மா அடுக்கிக் கொண்டேயிருக்க, பொன்னுத்தாய் வெட்கத்துடனும் குடத்துடனும் ஓடியே போனாள்.

    கிணற்றடியில் அவளது தோழிகள் இருந்தார்கள்.

    வா பொன்னுதாயி... என்ன இன்னிக்கு வெள்ளனே வந்திட்ட? கேட்டாள் அஞ்சலை.

    உங்கள எல்லாம் பார்க்கிறதுக்குத்தான்...

    ஏன் நேத்து முந்தானேத்து பாக்கலையாக்கும்?

    "நேத்து முந்தானேத்து பார்த்தாச்சு சரி...

    Enjoying the preview?
    Page 1 of 1