Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sathuranga Kuthiraigal!
Sathuranga Kuthiraigal!
Sathuranga Kuthiraigal!
Ebook101 pages55 minutes

Sathuranga Kuthiraigal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜெயகோபால் மற்றும் சந்தியா இருவரும் தம்பதியர்கள். புத்தாண்டு கொண்டாட ஹோட்டலுக்கு சென்றபோது சந்தியா கொலை செய்யப்படுகிறாள்.

போலீஸ் ஒருபுறம் கொலையை பற்றி விசாரிக்க, மறுபுறம் சந்தியாவின் கணவனான ஜெயகோபாலனும் கொலை செய்யப்படுகிறான். போலீஸ் குழப்பத்தில் தவிக்க, பிரபல நடிகையான சுவர்க்காவிற்கும் கொலைமுயற்சி நடக்கிறது.

தம்பதியர்களின் இறப்பிற்கும், சுவர்க்காவின் கொலை முயற்சிக்கும் காரணம் என்ன? போலீஸ் கண்டறிந்ததா?

இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடியது யார்? போலீஸூடன் சேர்ந்து நாமும் தேடுவோமா? வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

Languageதமிழ்
Release dateDec 11, 2021
ISBN6580100407815
Sathuranga Kuthiraigal!

Read more from Rajesh Kumar

Related to Sathuranga Kuthiraigal!

Related ebooks

Related categories

Reviews for Sathuranga Kuthiraigal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sathuranga Kuthiraigal! - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    சதுரங்கக் குதிரைகள்!

    Sathuranga Kuthiraigal!

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ஜெயகோபால் ஐந்தாவது தடவையாய் குரல் கொடுத்தான்.

    சந்தியா...

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து சந்தியாவின் குரல் கேட்டது.

    வந்திட்டேன்...

    நீ கண்ணாடி முன்னால் நின்னு அரை மணி நேரமாச்சு. மணி இப்போ எவ்வளவு தெரியுமா?

    என்னவாம்...?

    பத்தரை...

    புத்தாண்டு பார்ட்டி பதினொரு மணிக்குத்தானே ஆரம்பம்?

    அதுக்காக சரியாய்ப் போய் பார்ட்டிக்கு நிக்கணுமா? பார்ட்டி நடக்கிற ஹோட்டல் பக்கத்திலா இருக்கு? ஹீரோ ஹோண்டாவில் போனாலே பதினைஞ்சு நிமிஷமாகும்.

    சரி... புலம்பாதீங்க. வந்திட்டேன்.

    ட்ரஸ்ஸிங் அறையிலிருந்து வெளிச்சமாய் வெளியே வந்தாள் சந்தியா. பளபளப்பான ரோஜா நிற சல்வார் கம்மீஸ். அதில் சிரிக்கும் சூர்யகாந்திப் பூக்கள். இருபத்தைந்து வயது சந்தியா, அரை மணி நேர மேக்கப்பின் விளைவாக ஐந்து வயது குறைச்சலாய்த் தெரிந்தாள்.

    ட்ரஸ் எப்படி?

    சந்தியாவுக்கு ஜே...

    இந்தக் கிண்டல்தானே வேணாம்ங்கிறது...?

    அட... நிஜமாத்தான் சொல்றேன். இந்த ரோஜா நிற சல்வார் கம்மீஸ்லே பார்க்கும்போது நீ எப்படி இருக்கே தெரியுமா?

    எப்படி இருக்கேன்?

    ஒரு பெரிய ரோஜாப் பூவுக்குக் கையும் காலும் முளைச்ச மாதிரி இருக்கு.

    சரி... எனக்கு ஏதோ நியூ இயர் ப்ரஸன்டேஷன் கொடுக்கப் போறதாச் சொன்னீங்களே...?

    ஆமா...

    எங்கே...?

    என் கோட் பாக்கெட்லே இருக்கு.

    கொடுங்க...

    இப்போ கொடுக்க மாட்டேன்.

    பின்னே எப்பவாம்...?

    புது வருஷம் பிறந்ததும்... அதாவது 12-01-க்கு.

    சரி... ப்ரஸன்டேன் என்னான்னு சொல்லிடுங்களேன். டென்ஷன் இல்லாமே இருப்பேன்.

    சொல்ல மாட்டேன். அது சஸ்பென்ஸ்.

    வாங்கின பொருளோட முதல் எழுத்தை மட்டும் சொல்லுங்களேன்.

    நோ க்ளூஸ். அந்தப் பரிசுப் பொருள் என்னான்னு 12-01-க்குத்தான் தெரியும். ம்.... கிளம்பு.

    பிசாசு... கல்லிலிருந்து நார் உரிச்சுடலாம், உங்கக்கிட்டேயிருந்து ஒரு வார்த்தையைக்கூட உரிக்க முடியாது.

    ஜெயகோபால் சிரித்தான்.

    வீட்டைப் பூட்டிக் கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள். ஹீரோ ஹோண்டா காத்திருந்தது.

    உதைப்பட்டது.

    சந்தியா, பில்லியனில் மெத்தென்று பொருந்திக்கொள்ள, ஜெயகோபால் வண்டியை விரட்டினான்.

    அண்ணா சாலை, புத்தாண்டு அமளியில் இருந்தது. இளைஞர்களும் யுவதிகளும் ஸ்கூட்டர், பைக்குகளில் சாய்ந்து தொங்கினார்கள். தொப்பிகளை நிறம் நிறமாய் மாட்டிக்கொண்டு கூச்சலிட்டார்கள். வர்ண பலூன்கள் தலைக்கு மேல் பறந்தன.

    என்னங்க...

    சந்தியா, ஜெயகோபாலின் முதுகைத் தன் நெயில்பாலீஷ் நகங்களால் மெல்லப் பிராண்டினாள்.

    ம்...

    இன்னிக்கு நடக்கப் போற பார்ட்டியிலே நீங்க லிக்கரை 'டச்' பண்ணக்கூடாது. உங்க கையிலே பெப்ஸிகோலா மட்டும்தான் இருக்கணும்.

    இது கொடுமை. பார்ட்டியில் கலந்துக்க ரூபாய் கொடுத்திருக்கோம். என்ஜாய் பண்ண வேண்டாமா?

    பார்ட்டியிலே அது ஒண்ணுதானா? அதை விட்டுட்டு மத்ததையெல்லாம் ‘டச்’ பண்ணுங்க.

    சரி... ஒரே ஒரு பெக் மட்டும்.

    நோ...

    ப்ளீஸ் சந்தியா... ஒரே ஒரு ஸ்மால் மட்டும்.

    ஸ்மால் மட்டும்....?

    ஆமா...

    நம்பலாமா உங்களை...?

    நம்பு... நம்பு. பார்ட்டியிலே நீயும் என் பக்கத்திலேதானே இருக்கப்போறே.

    ஸ்மால் லார்ஜானால் நான் பத்ரகாளியாயிடுவேன்.

    நீ ருத்ர தாண்டவமும் ஆடுவேன்னு எனக்குத் தெரியாதா? ஒரு ஸ்மாலுக்கு மேலே தாண்டவேமாட்டேன்.

    ஹீரோ ஹோண்டா அண்ணா சாலையில் பாதியை விழுங்கிவிட்டு, தியாகராய நகர் எல்லைக்குள் நுழைந்தது.

    போக்குவரத்து இல்லாததால் அந்நேரத்துக்கே ஊமையாகிப் போன சாலையில்.

    ஹோட்டல்கள் மட்டும் நியான் வெளிச்சத்தில் உயிரோடு இருந்தன.

    வேகமாய் எதிர்ப்பட்ட பைக்கில் இரண்டு இளைஞர்கள் பீர் பாட்டிலோடு கைகளை உயர்த்தி ஹேப்பி நியூ இயர்... என்று கத்திவிட்டுப் போனார்கள்.

    சந்தியா கவலைப்பட்டாள்.

    எதுக்காக இவ்வளவு வேகத்திலே போறாங்க...?

    "எங்கேயாவது மோதி சாகத்தான். ஒவ்வொரு புது வருஷமும் பிறக்கப் போகிற ராத்திரியன்னிக்கும் சென்னையிலே நாலைஞ்சு பேராவது ரோடு ஆக்ஸிடெண்ட்லே செத்துப் போயிடுறாங்க. சாகிறது எல்லாமே இந்த மாதிரியான

    Enjoying the preview?
    Page 1 of 1