Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Iniya Virothiye!
En Iniya Virothiye!
En Iniya Virothiye!
Ebook113 pages56 minutes

En Iniya Virothiye!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403450
En Iniya Virothiye!

Read more from Rajesh Kumar

Related to En Iniya Virothiye!

Related ebooks

Related categories

Reviews for En Iniya Virothiye!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Iniya Virothiye! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    என் இனிய விரோதியே!

    En Iniya Virothiye!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    கல்யாண் குளியலறையிலிருந்து வெளிப்பட்டு, ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் போய் நின்று சுற்றும் முற்றும் பார்த்து, இடுப்பிலிருந்த ஈரத்துண்டை உருவி, கட்டிலின் மேல் கடாசி விட்டு லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டான். பனியனுக்குள் நுழைந்து தன் தேகாப்பியாச உடம்பை முன்னும் பின்னுமாய் திருப்பி அழகு பார்த்தான். சுருண்ட கேசத்திற்கு டாடா ஹேர் ஆயிலைத் தேய்த்து, முகத்தை வானிஷிங் க்ரீமால் மெழுகிக் கொண்டிருந்தபோது -

    டேய்... கல்யாண்!

    அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கோபத்தோடு எகிறியது.

    என்னம்மா...?

    தட்டுல இட்லி வெச்சு எவ்வளவு நேரமாச்சு...? நீ சாப்பிட்டு... பஸ் பிடிச்சு கருமத்தம்பட்டியிலிருக்கிற அந்த பேக்டரிக்கு போய் சேர்றதுக்குள்ளே பத்து மணியாயிடும்...

    அட... ஏம்மா இப்படிப் பறக்கிறே...? இண்டர்வ்யூ பத்தரை மணிக்குத்தான். நிதானமா போகலாம்... ஒண்ணும் அவசரமில்லை.

    கொஞ்சம் முன்னாடியே போனா என்னவாம்...?

    சரி... சரி... வர்றேன்...

    கண்ணாடியினின்றும் நகர்ந்து சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த டைனிங் டேபிளுக்கு வந்தான்.

    ஏற்கெனவே அப்பா கிருஷ்ணராஜும், தங்கை பானுவும் சாம்பாரில் இட்லிகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள்.

    ஆஹ்ஹா... என்னா வாசனை... என்னா வாசனை... அம்மா வெக்கிற சாம்பார்க்குதான் இந்த வாசனை இருக்கும்... மூச்சை இழுத்துக் கொண்டே, இட்லித் தட்டுக்கு முன்பாய் போய் உட்கார்ந்தான் கல்யாண். சாம்பார் பாத்திரத்தை நகர்த்திக் கொண்டான்.

    கிருஷ்ணராஜ் நிமிர்ந்தார்.

    டேய்! இட்லி மேல கையை வெக்காதே...

    ஏம்பா...

    மொதல்ல... பூஜை ரூமுக்கு போய் நெத்திக்கு இட்டுகிட்டு வந்து உக்கார்...

    மறந்தே போச்!

    கல்யாண் தலையில் அடித்துக் கொள்ள, பானு குறுக்கிட்டுச் சொன்னாள். சாப்பிட மட்டும் மறக்க மாட்டே? அப்பா எத்தினிவாட்டி சொல்லியிருக்கார்... குளிச்சதும் பூஜை ரூமுக்கு போய் நெத்திக்கு இட்டுட்டு வரணும்னு...

    நாற்காலியை விருட்டென்று தள்ளியபடி கல்யாண் எழுந்தான். நெத்திக்கு இட்டுட்டு வரணும்... அவ்வளவுதானே...? - சொல்லிக் கொண்டே, கொஞ்சம் தள்ளியிருந்த பூஜையறைக்குள் நுழைந்து, சம்புடத்தில் இருந்த விபூதியில் நான்கு விரல்களைத் தொட்டு நெற்றி நிறைய இழுத்து, கழுத்திலும் பூசிக் கொண்டான். வெளியே வந்தான்.

    போதுமா...?

    அரைச்சாமியார் ஆயிட்டே... உட்கார். இட்லி திணித்த வாயோடு சொன்னாள் பானு.

    கல்யாண் உட்கார்ந்து இட்லிகளைக் சூறையாட ஆரம்பித்த போது, அம்மாக்காரி அமிர்தம் சமையலறையிலிருந்து நெய்க் கிண்ணத்தோடு வெளிப்பட்டாள்.

    இட்லிக்கு நெய் விட்டுக்கோடா கல்யாண்... சாம்பார்க்கும், அதுக்கும் அமர்க்களமா இருக்கும்.

    மகனுக்கு வேலை கிடைக்கப் போகிற சந்தோஷம் அம்மாவுக்கு... பானு சிரிக்க -

    பின்னே இருக்காதா...? கிருஷ்ணராஜ் தட்டில் கையைக் கழுவினார். அமிர்தம் கேட்டாள். என்னங்க... கல்யாணுக்கு இந்த வேலை நிச்சயமா கிடைக்குமா?

    கிடைக்கணும். ஏன்னா... கம்பெனி டைரக்டர் கமலசேகர், மானேஜிங் டைரக்டர் சிவராம் - ரெண்டு பேருமே எனக்கு தெரிஞ்சவங்க. ஒரே காலேஜ்ல படிச்சோம். அவங்க நேரம் ஃபெர்டிலைஸர் பேக்டரி... அது, இதுன்னு மேலே வந்துட்டாங்க. நான் இந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்யோகத்துல இருபத்தஞ்சு வருஷமா குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்...

    பானு குறுக்கிட்டாள். அப்பா! அவங்க பெரிய பணக்காரங்களா இருக்கலாம். ஒரு கம்பெனிக்கு டைரக்டர்களா இருக்கலாம். ஆனா... சொஸைட்டியில உங்களுக்கு இருக்கிற மதிப்பு அவங்களுக்கு இருக்காதே. சென்ட்ரல் கவர்ன்மெண்ட்லயிருந்து ஒரு தடவையும், ஸ்டேட் கவர்ன்மெண்ட்லயிருந்து ஒரு தடவையும், ரிவார்ட் வாங்கின ஒரே இன்ஸ்பெக்டர் நீங்கதானே...?

    போதும்டி உங்க அப்பா பெருமை. மொதல்ல தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னிக்கு உனக்கு காலேஜ் இருக்கா... இல்லையா...?

    இருக்கும்மா...

    சாப்பிட்டுக் கிளம்பு.

    எனக்கு சூடா இன்னொரு இட்லி வேணும்...

    எடுத்து வெச்சுக்கடி சொன்ன அமிர்தம் கணவனிடம் திரும்பினாள். என்னங்க... கல்யாணுக்கு இந்த வேலை கிடைக்கலைன்னா அவன் ரொம்பவும் இடிஞ்சு போயிடுவான். நீங்க இன்னொருவாட்டி அந்த கமலசேகரோ... ராஜசேகரோ... அவர்க்கு போன் பண்ணி இண்டர்வ்யூக்கு வர்ற பையனைப் பத்தி சொல்லி வெச்சுடுங்களேன்...

    போன வாரமே சொல்லியிருக்கேன் அமிர்தம்...

    அவர்க்கு எத்தனையோ வேலைகள் இருக்கும். இப்ப ஒரு தடவை போன் பண்ணி ஞாபகப்படுத்திடுங்களேன்...

    கல்யாண் குறுக்கிட்டான்.

    ஆமாப்பா. இன்னொரு தடவை அவர்க்கு போன் பண்ணி ஞாபகப்படுத்திடுங்களேன்...

    கிருஷ்ணராஜ் டெலிபோனை நோக்கிப் போனார். டைரக்டரியைப் புரட்டி டெலிபோன் நெம்பரைப் பார்த்து, வாய்க்குள் சொல்லிக் கொண்டவர் ரிஸீவரை எடுத்து காதுக்கு கொடுத்தபடி டயலைச் சுழற்றினார்.

    தொடர்பு கிடைத்ததும் குரல்

    Enjoying the preview?
    Page 1 of 1