Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rum Rummy Ramya
Rum Rummy Ramya
Rum Rummy Ramya
Ebook126 pages59 minutes

Rum Rummy Ramya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரம்யா சிங்கப்பூரில் வசித்து வரும் தன் கணவருடன் கடிதத்தின் மூலம் வாழ்ந்து வருகிறாள். கொள்ளை கும்பலால் துரத்தப்படும் ரிப்போர்ட்டர் நெப்போலியன். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் பொழுது எதிரில் வந்த ரம்யாவிடம் தனது கையில் இருந்த கவரை கொடுக்கிறான் அந்த கவரில் என்ன இருந்தது? ரம்யாவின் மனநிலை என்ன? நெப்போலியன் என்ன ஆனார்? பரத் - சுசிலா உடன் சேர்ந்து நாமும் துப்பறியலாமா…!

Languageதமிழ்
Release dateFeb 19, 2022
ISBN6580100908048
Rum Rummy Ramya

Read more from Pattukottai Prabakar

Related to Rum Rummy Ramya

Related ebooks

Reviews for Rum Rummy Ramya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rum Rummy Ramya - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ரம் ரம்மி ரம்யா

    Rum Rummy Ramya

    Author :

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    ரம்யாவை இந்த அத்தியாயம் முழுவதும் பார்ட் பார்ட்டாகக் கழற்றி வர்ணிக்க ஆசைப்படுகிறேன்.

    ஆனால் ஒரு திருமணமான பெண்ணை அப்படி விலாவரியாக வர்ணிக்கக் கொஞ்சம் சங்கடமாய் இருப்பதால், ஒரே ஒரு சொல் போதும். அழகி!

    ரம்யா குளித்துவிட்டு காட்டன் சாரி கட்டிக்கொண்டாள். டைட்டான் குவார்ட்ஸ் கட்டிக்கொண்டாள். மதியத்திற்கு நான்கு சப்பாத்திகளை பார்சலாகக் கட்டிக்கொண்டாள். தன் பிளாட்சைப் பூட்டிக்கொண்டு இறங்கி வந்தபோது எதிர்ப்பட்ட கீழ் வீட்டுக்காரரின் தத்தி நடக்கும் பேரக் குழந்தையைக் கட்டிக்கொண்டாள்.

    நான் ஆஃபீஸ் போய்ட்டு வர்றேங்க.

    வாங்க, ஒரு ஹெல்ப். உங்க ஆபீஸ்லேர்ந்து ஒரு பையனை அனுப்பி வர்ற வெள்ளிக்கிழமை திருச்சிக்கு ராக்போர்ட்ல ஒரு பெர்த் டிக்கெட் ரிசர்வ் பண்ண முடியுமா ரம்யா?

    கேட்டவள் கீழ் வீட்டுக்காரரின் மனைவி. வீட்டின் நான்கு சுவர்களைத் தவிர வேறு தெரியாதவள். மூன்று பையன்கள் பெற்று பைசா பிரயோஜனம் இல்லாமல் ஒருவன் ஆஸ்திரேலியாவில், ஒருவன் டெல்லியில், ஒருவன் பெங்களூரில். ஆஸ்த்மாவுடன் போராடும் கணவனுடன் போராடும் இவள். ஒரே சொத்து இந்த வீடு. ஒரே வருமானம் ரம்யா தங்கியுள்ள மாடி வீட்டின் வாடகை!

    சரிங்க, ரிசர்வ் பண்ணித் தர்றேன்.

    சிரமப்படுத்தறேனா?

    இல்லை. உங்க பேருக்குத்தானே டிக்கெட்?

    ஆமாம் எஸ். கோதையம்மாள், 54 வயசு.

    ரம்யா குடையை விரித்துக்கொண்டு சாலையில் நடந்தாள். பஸ் ஸ்டாப் வந்து மடக்கிக்கொண்டு, கைப்பை திறந்து, இருபத்தி ஐந்து பைசா எடுத்து கை நீட்டிய பிச்சைக்காரிக்குப் போட்டாள். ஒரு ரூபாய்க்குப் பூ வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள்.

    அவளின் பஸ் வர இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன.

    அருகே பெட்டிக் கடையில் அன்று வந்த ஆனந்த விகடன் இதழைப் பார்த்ததும் சென்று வாங்கினாள். பக்கம் பக்கமாக லேசான அவசரத் துடிப்புடன் புரட்டினாள். கவிதை அனுப்பி இரண்டு மாதங்களாகிவிட்டன. நிச்சயம் இந்த இதழில் அச்சாகியிருக்க வேண்டும். தேர்வாகவில்லை என்றால் ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்துவிடும்.

    ரம்யா கடைசிப் பக்கம்வரை புரட்டிவிட்டு முகத்தில் படிந்த ஏமாற்றத்தைத் துடைக்க பஸ் வருகிறதா என்று பார்த்தாள்.

    அடுத்த வாரம் கண்டிப்பாக வரும்.

    சுவற்றில் ‘பசி’ படத்தின் போஸ்டர் ஒட்டியிருக்க, அதை ஒரு மாடு ஓரமாகக் கிழித்துத் தின்றுகொண்டிருந்த காட்சியைப் பார்த்ததும் ‘ச்சே கைவசம் ஒரு காமிரா இல்லையே’ என்று நினைத்தாள்.

    வைக்கோலும், புல்லும் தின்ன வேண்டிய மாடு போஸ்டர் தின்கிறது. காரணம் - பசி! எத்தனை யதார்த்தமாய் ஒரு மௌனக் கவிதை இங்கே எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது! என்னைத் தவிர வேறு யாரும் இதை ரசிப்பதாய் தெரியவில்லை. அவரவர்களுக்கு அவசரம். தின வாழ்க்கையின் சோதனைகளில், சுமைகளில் மனிதனுக்குள் கலாரசனை அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடல் அரிப்பு போல ரசனை அரிப்பு! டேஸ்ட் கான்சர்!

    இந்தக் கருத்தை மையமாக வைத்து லஞ்ச் நேரத்தில் ஒரு கவிதை எழுத வேண்டும். எழுதி இன்றே ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும்.

    ரம்யா தன் பஸ் வர, புத்தகத்தை கைப்பையின் வெளித்திறப்பில் செருகிக்கொண்டு கூட்டத்தில் லேசுலேசாய் மோதிக்கொண்டு ஏறினாள். டிக்கெட் வாங்கிக்கொண்டு நின்றாள்.

    ஒரு இளம் ஜோடி அமர்ந்திருக்க, அந்த இளைஞன் சுதந்திரமாக அவளின் தோளில் கை போட்டிருந்தான். அவள் ஈறு தெரிய சிரித்துப் பேசினாள்.

    இவளுக்குப் பொறாமையாக இருந்தது.

    கணவனே, மைடியர் கணவனே.

    பார், ஜோடி ஜோடியாக பிரயாணம் செய்கிறார்கள். ஜோடி ஜோடியாக நடக்கிறார்கள். சினிமா போகிறார்கள், ஐஸ்கிரீம் தின்கிறார்கள், கடற்கரையில் மடிமீது தலை வைத்து காற்று வாங்குகிறார்கள். ஆனால், நாம்?

    ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் சென்று உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே. இது என்ன நியாயம்? திருமணமாகி நான்கே மாதங்கள் பூமியைவிட்டு ஒரு அடி உயரத்தில் மிதந்தோம். படுக்கையறை தவிர நம் வீட்டின் அத்தனை அறைகளும் மறந்தேபோயின. ஊட்டியில் படகுவிட்டு, தோட்டத்தின் புல்வெளியில் உருண்டு, தொட்டபெட்டாவில் பேரிக்காயை கவர் பாலாக எறிந்துப் பிடித்து விளையாடி, அறைக்குள் பிடிவாதமாக எனக்கு உன் சட்டை, பேண்ட்டை அணிவித்து புகைப்படமெடுத்து, சாலையில் பார்த்துப் பொறாமைப்படட்டும் என்று வேண்டுமென்றே அணைத்து நடந்து, ஒரு முத்தத்திற்கும், மறு முத்தத்திற்கும் போதுமான இடைவெளிவிடாமல்...

    திடீரென்று இறக்கைகளை அறுத்தது போல பொத்தென்று வீட்டில் என்னைப் போட்டுவிட்டு ‘ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா’ பாட்டு பாடி விமானத்தில் பறந்து போய்விட்டாயே...

    எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வாதங்களை அடுக்கினாயே...

    "ரம்யா இங்கே பாரேன், எனக்கு மட்டும் உன்னைப் பிரிஞ்சி சிங்கப்பூர் போகணும்னு ஆசையா, சொல்லு? எனக்குள்ளே உள்ள வேதனை எனக்குத்தான் தெரியும். யாருக்கும் கிடைக்காத சந்தர்ப்பம் ரம்யா. இந்தியப் பணத்திலே பனிரெண்டாயிரம் சம்பளம். என்னோட வாழ்க்கை லட்சியங்கள் ரெண்டே ரெண்டுதான் ரம்யா. ஒண்ணு மனசைப் புரிஞ்சிக்கிற அன்பான அழகான பொண்டாட்டி! அதை அடைஞ்சுட்டேன். ரெண்டாவது நமக்கே நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு. இங்கே ரெண்டாயிரம் சம்பளத்திலே அது சாத்தியமில்லை ரம்யா. நாலே வருஷம்தான் காண்ட்ராக்ட். இந்த நாலு வருஷத்திலே ஒரு வீடு கட்றதுக்கு மட்டும் இல்லை, ஓரளவு வசதியான வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை பொருள்கள் அத்தனையும் நம்மால வாங்க முடியும். ஒரு சொந்த வீடு, கார், டி.வி., வீடியோ இப்படி ஒரு வாழ்க்கை நாலு வருஷத்தில் கிடைக்குது

    Enjoying the preview?
    Page 1 of 1