Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cauvery Innum Kaainthu Vidavillai
Cauvery Innum Kaainthu Vidavillai
Cauvery Innum Kaainthu Vidavillai
Ebook94 pages41 minutes

Cauvery Innum Kaainthu Vidavillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சேஷகோபாலன் தன் மகள் மீராவை, அரவிந்தனுக்கு திருமணம் செய்ய பேசி முடிவெடுக்கிறார்.

அரவிந்தன் மெட்ராஸ் கங்கா பில்டர்ஸ் கம்பெனியில் அசிஸ்டண்ட் என்ஜினியராக வேலை செய்கிறான்.

இந்நிலையில்,இவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய பிரச்னை....விபத்து என்ற போர்வையில் நுழைகிறது.

இனிதாக செல்ல வேண்டிய வாழ்க்கை பயணம் கடினமாக மாறுகிறது. ஒருகட்டத்தில் எல்லாம் கைமீறி செல்கிறது.

ஏன்...?

யாருக்கு...?

எதனால்...?

உறவுகளின் மனப்போராட்டங்களை நெகிழ்ச்சியான நிகழ்வுகளால் நம்மை கட்டிப்போடும்...இந்த நாவல்.

வாசிப்போம் ராஜேஷ்குமாரின் பாணியில்...

Languageதமிழ்
Release dateSep 20, 2021
ISBN6580100407308
Cauvery Innum Kaainthu Vidavillai

Read more from Rajesh Kumar

Related to Cauvery Innum Kaainthu Vidavillai

Related ebooks

Reviews for Cauvery Innum Kaainthu Vidavillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cauvery Innum Kaainthu Vidavillai - Rajesh Kumar

    https://www.pustaka.co.in

    காவிரி இன்னும் காய்ந்து விடவில்லை

    Cauvery Innum Kaainthu Vidavillai

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    வீடு கல்யாண சந்தோஷத்தில் நனைந்திருந்தது.

    ஹாலின் மையத்தில் பெரிதாய் ஒரு மாக்கோலம். சுவர்களுக்கு புது டிஸ்டெம்பர், ஜன்னல் கதவுகளுக்கு புது பெயிண்ட், நிலைகளில் பிளாஸ்டிக் மாவிலை தோரணங்கள் எல்லாமே 'பளிச் பளிச்'சென்று கண்களைப் பறித்தன.

    ஜெகதா...!

    ஈஸிச் சேரில் - சாய்ந்து உட்கார்ந்திருந்த சேஷகோபாலன் குரல் கொடுக்க - நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டும், நரைமுடிக் கொண்டையில் மல்லிகைப் பந்துமாய் நாற்பத்தைந்து வயது ஜெகதா சமையல் அறையினின்றும் வேகவேகமாய் வெளிப்பட்டாள்.

    என்னங்க...?

    பெரியநாயக்கன் பாளையம் சுந்தரேசனுக்கு பத்திரிகை அனுப்பிச்சேனோ...?

    ம்... நேத்துதானே போஸ்ட் பண்ணீங்க...

    அப்புறம் நம்ம பாலுசாமிக்கு...?

    எல்லாம் அனுப்பியாச்சு...? உங்களுக்கு ஏன்தான் இவ்வளவு மறதியோ...?

    வயது அம்பத்திரெண்டாகுது... மறதி இல்லாமே இருக்குமா? சரி... இப்படி வந்து சித்த என் முன்னாடி நில்லு சொல்றேன்...

    எதுக்கு?

    அட நில்லுன்னா...!

    ஜெகதா நின்றாள்.

    சேஷகோபாலன் தன் வழுக்கை மண்டையை நிரடிக்கொண்டே மனைவியை ஏற்ற இறக்கத்தோடு பார்த்தார்.

    ஜெகதா வெட்கித்து நெளிந்தாள்.

    என்ன... அப்படியொரு பார்வை வேண்டிகிடக்காம்...?

    இன்னிக்கு நீ 'தகதக'ன்னு இருக்கே ஜெகதா. தலைக்கு மட்டும் 'டை' அடிச்சுகிட்டியானா பத்து வயசு 'மளமள'ன்னு கொறைஞ்சுடும்

    மகளுக்கு இன்னும் பத்துநாள்ல கல்யாணம். உங்களுக்கு பொண்டாட்டியை ரசிக்கக் கூடிய அளவுக்கு பால்யம் திரும்புதாக்கும்...?

    மனசுலபட்டதை சொன்னேன்டி...! விகல்பமா எடுத்துக்காதே! ஆமா... மீரா எங்கே...?

    அவ ரூம்ல இருக்கா...

    என்ன பண்றா... பொஸ்தகம் படிக்கிறாளா?

    இல்லே, மருதாணி இட்டுக்கறா

    சரியா போச்சு! இன்னும் எத்தனை பத்திரிகைக்கு கவர்ல அட்ரஸ் எழுத வேண்டி இருக்கு? கைக்கு மருதாணி இட்டுக்கிட்டா... அட்ரசை யார் எழுதறதாம்?

    கொழந்தையை கஷ்டப்படுத்தாதீங்க... அட்ரசையெல்லாம் நீங்க எழுதுங்க... மீரா கல்யாணப்பொண்ணா லட்சணமா... மருதாணி இட்டுக்கட்டும்..

    சேஷகோபாலன் வாயைத் திறப்பதற்குள் - அறையின் மூலையில் இருந்த டெலிபோன் கத்த ஆரம்பித்தது.

    யார்ன்னு போய் பாரேன்

    ஜெகதா போய் ரிஸீவரை எடுத்தாள்.

    ஹலோ...

    சேஷகோபாலன் இருக்காரா...?

    நீங்க யாரு...?

    என் பேர் புண்ணியகோடி. அவரோட பால்ய காலத்து ஸ்நேகிதன். என் பேரைச் சொன்னா தெரிஞ்சுக்குவார்...

    ஜெகதா ரிஸீவரின் வாயை இடதுகை விரல்களால் மூடிக்கொண்டு கணவரை நோக்கி குரல் கொடுத்தாள்.

    என்னங்க... யாரோ புண்ணியகோடியாம். உங்களுக்கு பால்யகாலத்து சிநேகமாம். வந்து பேசறீங்களா?

    சேஷகோபாலன் பத்திரிகைகளை ஸ்டூலின் மேல் வைத்துவிட்டு எழுந்து போய் ரிஸீவரை வாங்கினார்.

    "ஹலோ... பேசறது யாரு... புண்ணியமா?

    நானேதாண்டா...!

    பம்பாயில் இருந்து எப்படா வந்தே…?

    கம்பெனி விஷயமா நேத்திக்கு வந்தேன். எதேச்சையா ஒரு இடத்துல உம்பொண்ணு கல்யாண பத்திரிகையைப் பார்த்தேன்...

    உனக்கும் கல்யாணப் பத்திரிகை அனுப்பிச்சிருக்கேண்டா... வந்து சேரலையா?

    நான் மூணு நாளைக்கு முன்னாடியே, பம்பாயில் இருந்து கிளம்பிட்டேன். பத்திரிகை என் மேஜை மேல கிடக்கும். ஆமா மாப்பிள்ளை யாரு...?

    "ரிடையர்ட் ரெஜிஸ்ட்ரார் வாசுதேவரோட ஒரே பையன். பேரு அரவிந்தன். என்ஜினீயரிங் படிச்சிருக்கார். மெட்ராஸ் கங்கா பில்டர்ஸ் கம்பெனியில் வேலை.

    Enjoying the preview?
    Page 1 of 1