அவென்யூ மரங்கள்
()
About this ebook
Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Read more from ராஜேஷ்குமார் Rajeshkumar
மூன்று வினாடி முகம் Rating: 5 out of 5 stars5/5நிலா வெளிச்ச சதி Rating: 5 out of 5 stars5/5தூரத்தில் ஒரு சிகப்புக்கொடி Rating: 0 out of 5 stars0 ratingsஜூலையில் ஒரு கொலை Rating: 0 out of 5 stars0 ratingsஇது சதிவேளை Rating: 0 out of 5 stars0 ratingsஇரவுக்கு ஆயிரம் 'GUN' கள் Rating: 0 out of 5 stars0 ratingsஉடைந்த நிலா Rating: 0 out of 5 stars0 ratingsஆயுள் ஆறே நாள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to அவென்யூ மரங்கள்
Related ebooks
Oru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsThaduththaal Kooda Tharuven Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsசின்னஞ் சிறு கிலியே! Rating: 5 out of 5 stars5/5Aaya Kolaigal 64 Rating: 0 out of 5 stars0 ratingsMuththangaludan Shalini Rating: 5 out of 5 stars5/5Hello Inspector Rating: 5 out of 5 stars5/5Uyirai Thanthuvidu Rating: 0 out of 5 stars0 ratingsMaane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vaarisu Rating: 5 out of 5 stars5/5Oru Muththam Kasakkirathu Rating: 5 out of 5 stars5/5Indhuja Iru Kadhalippom Rating: 5 out of 5 stars5/5NIl Sol Kol Rating: 5 out of 5 stars5/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Nizhalodu Rating: 5 out of 5 stars5/5Ini Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsHouseful Rating: 5 out of 5 stars5/5Oruvar Manathil Oruvaradi Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Viji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsThottu Kolla Aasai Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsAabathukku Oru Azhaipidhal Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Pol Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsMagizhampoo Thendral Rating: 5 out of 5 stars5/5Neela Nila Rating: 5 out of 5 stars5/5Nishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for அவென்யூ மரங்கள்
0 ratings0 reviews
Book preview
அவென்யூ மரங்கள் - ராஜேஷ்குமார் Rajeshkumar
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
Copyright © By Pocket Books
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
1
தேக்கடி அழகாய் ஈஸ்ட்மென் கலர் நிறத்தில் விடிந்து கொண்டிருந்தது. மரங்களின் உச்சந்தலைகள் சூரியனின் ஆரஞ்சு நிற வெளிச்சம்பட்டு எண்ணெய் பூசிய மாதிரி மினுமினுத்தன. பட்சி வர்க்கங்கள் உயிர்மெய் எழுத்துக்களை விதவிதமாய் உச்சரித்துக் கொண்டிருக்க சத்தம் கேட்டு கம்பளிக்குள் புகுந்திருந்த யோகேஸ்வரி விழித்துக் கொண்டாள். கம்பளியை விலக்கிக் கொண்டு. மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். உள்ளங்கைகளை தேய்த்து விட்டுக் கொண்டவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த டாலர் லாக்கெட்டைத் திறந்து பத்து வருஷங்களுக்கு முன்னால் இறந்து போன தன் கணவர் ஜெயப்பிரகாசத்தின் போட்டோவை தரிசித்துக் கொண்டபின் கட்டிலைவிட்டு கீழே இறங்கினாள்.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த போது
வாட்ச்மேன் பொன்ராஜின் மகள் மங்களா சாணம் தெளித்த வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். அந்நேரத்துக்கே தலைக்குக் குளித்ததின் அடையாளமாய் கூந்தலின் முடிச்சில் ஈரத்துண்டு தெரிந்தது. யோகேஸ்வரி ஜன்னல் கம்பிகளுக்குப் பக்கத்தில் நின்று பெரிதான கோலம் ஒன்றைப் போடுவதில் மும்முரமாய் இருந்த மங்களாவையே பார்த்தாள். இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு களையான முகம்...? ஊட்டமில்லாத சாப்பாடு கிடைக்கும் போதே உடம்பிற்கு இப்படியொரு நிறமும், மினுமினுப்பும் இருக்கிறதே... இனி நல்ல சாப்பாடு, நெய், பால் சேர்ந்தால் எப்படியிருப்பாள். அந்தக் கண்கள் தான் எவ்வளவு அழகாய்... வரைந்த மாதிரி...?
கோலத்தை முடித்துவிட்டு உள்ளே வந்த மங்களா ஜன்னலருகே யோகேஸ்வரி நிற்பதைப் பார்த்ததும் மலர்ந்தாள்.
எந்திரிச்சு... நேரமாச்சுங்களாம்மா...?
இப்பத்தான் எந்திரிச்சேன். நீ எந்திரிச்சு குளியலைக்கூட முடிச்சுக்கிட்டே போலிருக்கே...?
ஆமாங்கம்மா... இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே?
பால் வந்தாச்சா...?
இல்லீங்கம்மா... அப்பா... இப்பத்தான் பால் பூத்துக்கு போயிருக்கார்...
மங்களா! நான் எட்டு மணிக்குள்ளே இங்கிருந்து கிளம்பி மதுரைக்கு புறப்பட்டாகணும்... அதுக்குள்ளே நீ டிபன் பண்ணி முடிக்கணும்...
ஏழு மணிக்கு எல்லாமே ரெடியாயிரும்மா...
டிபன் என்ன பண்றே...?
ரவா தோசையும் கொத்துமல்லி சட்னியும்...
சீக்கிரமா பண்ணணும்...
இதோ...
சமையலறையை நோக்கிப் போனாள் மங்களா. புன்னகைத்த போது சட்டென்று தெரிந்து மறைந்த தெற்றுப்பல் ஒன்று இவளுடைய அழகான முகத்திற்கு நானும் ஒரு ப்ளஸ் பாயிண்ட் என்று சொன்னது. ஹால் சோபாவுக்கு வந்தாள் யோகேஸ்வரி.
டீபாயின் மேல் 'ஹிண்டு' கலையாமல் காத்திருந்தது. எடுத்து பிரித்து தலைப்புச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே
அருகில் இருந்த டெலிபோன் கிணுகிணுத்தது.
பேப்பரை வலது கையில் பிடித்தபடி இடது கையால் ரிஸீவரை எடுத்து ஹலோ
என்றாள்.
குட்மார்னிங் மேடம்...
மூணாறு எஸ்டேட் மானேஜர் சங்கரநாராயணன் குரல் கேட்டது.
குட்மார்னிங்...! பிரச்னை முடிஞ்சுதா...?
இல்ல மேடம்...
ஏன்... நேத்திக்கு ராத்திரி ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கிக்கப் போறதா யூனியன் லீடர் மாரியப்பன் சொன்னானே...?
அப்புறம் முடிவை மாத்திக்கிட்டாங்க வேலை நேரத்துல இன்னும் ஒரு அரைமணி நேரம் குறையணுமாம்...
என்ன பண்ணலாம்...?
ஸ்ட்ரைக் பண்ணட்டும்ன்னு விட்டுடலாம் மேடம்...
முட்டாள்தனமா உளாறாதீங்க...! ஸ்ட்ரைக் பண்ணட்டும்ன்னு சொல்றதுக்காகத்தான் நான் மூவாயிரம் ரூபாய் சம்பளம் குடுத்து உங்களை வேலைக்கு வெச்சிருக்கேனா...?
அ... அது வந்து மேடம்...
இதோ பாருங்க சங்கரநாராயணன்! லேபர்ஸ் பிரச்னைகளை தீர்க்கிறதுல வேகம் இருக்கக்கூடாது. நிதானம் இருக்கணும். அவசரப்பட்டா நஷ்டம் நமக்குத்தான். அந்த யூனியன் லீடர் மாரியப்பனை நான் வந்து பேசி சமாதானப்படுத்தறேன்...
மேடம்...! நாம் கொஞ்சம் கீழே இறங்கினா அவங்க மேலே ஏறிடுவாங்க... அப்புறம்... புதுப்புது பிரச்னைகளை நீங்க சமாளிக்க வேண்டியதா இருக்கும்...
அந்த விவகாரத்தை நான் டீல் பண்ணிக்கிறேன். மாரியப்பனையும் அவரோட சகாக்களையும் நான் சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க... எட்டுமணிக்கு மேல இங்கிருந்து புறப்பட்டு வர்றேன்...
மே...ட...ம்...
"சொன்னதை செய்யுங்க...! நம்மகிட்ட வேலை செய்யற தொழிலாளர்களை எதிரிகளா நினைக்கிற மனோபாவத்தை விட்டுடுங்க. அவங்க நல்லாயிருந்தாத்தான் நாம் நல்லாயிருக்க