ஜூலையில் ஒரு கொலை
()
About this ebook
Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Read more from ராஜேஷ்குமார் Rajeshkumar
மூன்று வினாடி முகம் Rating: 5 out of 5 stars5/5நிலா வெளிச்ச சதி Rating: 5 out of 5 stars5/5அவென்யூ மரங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsஇது சதிவேளை Rating: 0 out of 5 stars0 ratingsதூரத்தில் ஒரு சிகப்புக்கொடி Rating: 0 out of 5 stars0 ratingsஉடைந்த நிலா Rating: 0 out of 5 stars0 ratingsஇரவுக்கு ஆயிரம் 'GUN' கள் Rating: 0 out of 5 stars0 ratingsஆயுள் ஆறே நாள் Rating: 0 out of 5 stars0 ratings
Related to ஜூலையில் ஒரு கொலை
Related ebooks
Natchathira Girahanam Rating: 0 out of 5 stars0 ratingsVellaikodi Rating: 5 out of 5 stars5/5Makeup Punnagai Rating: 5 out of 5 stars5/5kaikuttaikkul Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsSigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Whisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsBharath Speaking Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsKolla Pirantha Uravu Rating: 4 out of 5 stars4/5Ilamai - Ithudan Inaippu Rating: 0 out of 5 stars0 ratingsJanuary Nilave! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathil Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsKolusu Satham Rating: 0 out of 5 stars0 ratingsDaniel Rating: 4 out of 5 stars4/5Maranathin Niram Manjal Rating: 5 out of 5 stars5/5Odaathey Kolaikaraa Rating: 5 out of 5 stars5/5மரணத்திற்கு ஒரு மனு Rating: 5 out of 5 stars5/5Vidinthaal Vibareetham Rating: 5 out of 5 stars5/5Kanavugaludan Nadamadu Rating: 0 out of 5 stars0 ratingsUyirindri Uyireduppen Rating: 5 out of 5 stars5/5Kirumi Rating: 0 out of 5 stars0 ratingsYeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Vaseegara... Vaseegara Rating: 0 out of 5 stars0 ratingsNimmi Rating: 5 out of 5 stars5/5Thayangaathey Rating: 0 out of 5 stars0 ratingsOnbadhu Uyirgal Rating: 3 out of 5 stars3/5Kana kachithamaai Rating: 0 out of 5 stars0 ratingsTick.. Tick.. Thik. Rating: 4 out of 5 stars4/5
Related categories
Reviews for ஜூலையில் ஒரு கொலை
0 ratings0 reviews
Book preview
ஜூலையில் ஒரு கொலை - ராஜேஷ்குமார் Rajeshkumar
1
சூரியன் பகல் கதவை இழுத்து சாத்தி விட்டு நிலாப் பூட்டைத் தேடிக் கொண்டு இருந்த சாயந்தரத்தின் கடைசி நிமிஷங்கள். த்தடத் தடவென பைக்கில் ஆரோகணித்து வந்து காம்பவுண்டு கேட்டுக்குள் பிரவேசித்தான் ஜெயகிருஷ்ணன், போர்டிகோவின் ஒரு ஓரத்தில் போய்ப் புதைந்து கொண்டது பைக்.
கூலிங் கிளாசை முகக் கவ்வலில் இருந்து விடுவித்தபடியே இறங்கின ஜெயகிருஷ்ணன் பத்தடி உயரமிருந்த போர்டிகோவுக்குள் முக்கால் உயரத்துக்கு வளர்ந்திருந்தான் ஸ்டோன்வாஷ், நார்த் ஸ்டார் இத்யாதிகளில் சிக்கியிருந்தான். ஆண் என்கிற மதிப்பீட்டில் கண் விஸ்தாரம் கொஞ்சம் அதிகப்படி. வலது கை மணிக்கட்டில் பவுன் நிற பிரேஸ்லெட். செய்கைகளில் அமிதாப்தனம் இருந்தது.
படிகளேறி முன் ஹாலுக்கு வந்தான். ஆள்காட்டி விரலில் பைக் சாவியின் சுழலல்.
ஹால் சோபாவில் அருணாசல மூர்த்தி தெரிந்தார். வெண்ணிற ஜிப்பாவுக்குள் உடம்பை திணித்திருந்தார். மெலிசு பிரேம் கண்ணாடியை நாசிக்கு மேல் அமர்த்தியிருந்தார். ரிடையர்ட் ரெவின்யூ இன்ஸ்பெக்டர். பென்சனை நம்ப வேண்டியிருக்காத இரண்டு மகன்களின் சம்பாதிப்பு - கிராமத்து நில புலன்கள். ஜெயகிருஷ்ணனை பார்த்ததுமே பிசகியிருக்காத பல் வரிசையில் சிரித்தார்.
வாடா ஜெய்... உன்னத்தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்...
அவர் சொன்னபோது...
உள்ளறைக்குள்ளிருந்து வெளிப்பட்டான் நாகலஷ்மி, அள்ளிக் கொண்டையாய் முடித்திருந்த கூந்தல் பிரதேசத்தில் ஐம்பது சதவீதம் நரைக் கலப்பு. வயசு நாற்பத்திரண்டுக்கு மேல். நீலநிற ஃபுல்வாயிலை உடலில் சுற்றியிருந்தாள். நெற்றி நிறைய பரப்பு அதிகப்பட்டிருந்த குங்குமப் பொட்டு, மூக்கில் தங்கப்புள்ளி ஒன்று மினுமினுத்தது. அருணாசல மூர்த்தி விதை என்றால் செடியாய் இருக்கிற பர்ஃபெக்ட் மனைவி.
"என்னப்பா... என்ன விஷயம்...?’’ அசுவாரஸ்யமாய்க் கேட்டான் ஜெயகிருஷ்ணன்.
"இப்படி உட்காரு...’’ அவர் அருகே வந்தான்.
‘‘சொல்லுங்க."
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை நீட்டினார்.
இதைப்பாரு... கீர்த்தி எஸ்டேட் ஓணர் விஸ்வநாதன் பொண்ணு பேரு உமா. நல்ல இடம். சீர், பணம் எதிலுமே குறைச்சல் இருக்காது.
கையில் வாங்கிய அந்த போட்டோவை ஒரு நிமிஷம் பார்த்தான் ஜெயகிருஷ்ணன்.
ராதா சாயலில் இருந்தாள் அந்த உமா. நெற்றியோரமாய் வேண்டுமென்றே எடுத்து விடப்பட்ட மோதிர வளைய முடிச்சுருள், போட்டோத்தனமான ஒரு புன்னகை உதட்டோரமாய்ப் பொதிந்திருந்தது. கண்களிலும் கொஞ்சம் போல் சிரித்தாள்.
அருணாசலமூர்த்தியும், நாகலஷ்சுமியும் அவனையே ஆர்வப்பார்வை பார்த்தார்கள்.
ஜெயகிருஷ்ணன் போட்டோவினின்றும் பார்வையை விலக்கினான். திரும்ப அதை அருணாசல மூர்த்தியின் கைகளுக்கே கொடுத்தான்.
பிடிக்கலைப்பா.
நிமிர்ந்து ஸ்தம்பித்தார்கள் அருணாசலமூர்த்தியும், நாகலஷ்மியும். அருணாசலமூர்த்தியின் முக மேற்பரப்பில் காயச் சிவப்பு கப்பென பரவிக் கொள்ளக் கேட்டார்...
‘‘என்னடா பிடிக்கலை...! பொண்ணுக்கென்ன குறைச்சல்...? மகாலஷ்மி மாதிரி இருக்கா... நேரிலே பார்த்தா இன்னும் நல்லா இருப்பா...’’
"பிடிக்கலைன்னா பிடிக்கலை! அவ்வளவுதான்... அதுக்கு மேல் என்னை ஒண்ணும் கேக்காதீங்க...’’
"இது ஆறுாவது பொண்ணு. கொண்டு வர்ற போட்டோவையெல்லாம் முகத்தை சரியாகக் கூட பார்க்காம இப்படி எடுத்தெறிஞ்ச மாதிரி பேசினா என்ன அர்த்தம்?’’...
"பிடிக்கலைன்னா வேறென்னப்பா சொல்ல முடியும்? நீங்க சொல்றீங்களேன்னு பிடிச்சுதுன்னு சொல்லி வாழ்க்கை பூராவும் நான் கஷ்டப்படணும்னு சொல்றீங்களா...?’’
நாகலஷ்மி குறுக்கிட்டாள்.
நீ கஷ்டப்படற மாதிரி பொண்ணை நாங்க கொண்டு வர மாட்டோம்டா...! எங்களுக்குத் தெரியாதா? உன் மேல அக்கறை இல்லையா? எல்லாருமே வசதி நிறைஞ்சவங்கதாண்டா ஜெய்.
"வசதி மட்டும் நிறைஞ்சா போதாதும்மா... என் மனசும் நிறைய வேண்டாம்மா...!’’ அருணாசல மூர்த்தி கேட்டார்.
உன் மனசில் நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே...? அதையாச்சும் சொல்லித் தொலை.
ஜெயகிருஷ்ணன் மெல்ல அவரை ஏறிட்டான்.
‘‘சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா?’’
சொல்லுடா... சொன்னாத்தானே அதுக்கேத்த மாதிரி பொண்ணை நாங்க தேட முடியும்...?
‘‘அதுக்குக் கூட அவசியம் இல்லேப்பா... நானே தேடிட்டேன். நீங்க சரின்னு சொல்ற ஒரு வார்த்தைக்குக் காத்திருக்கேன்...?"
இரண்டு பேரும் ஒருசேரத் தலை உயர்த்தினார்கள்.
யார்றா... அந்தப் பொண்ணு?
.
நீங்க சம்மதம்னு உங்க வாயாலே சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன். பெண்ணை நேரிலேயே வேணாலும் கூட்டிட்டு வர்றேன்.
இரண்டொரு விநாடி மவுனம் அனுஷ்டித்தார் அருணாசலமூர்த்தி. நாகலஷ்மி ஆச்சர்யம் கலந்த முகத்தோடு ஜெயகிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன ஜாதி அந்தப் பொண்ணு...?’’
ஜெயகிருஷ்ணனின் உதட்டில் ஒரு புன்னகை தொற்றிக் கொண்டது.
‘‘உங்க மனசு எனக்குத் தெரியும்பா... அடுத்த கேள்வி அவளுக்கு எத்தனை சொத்து தேறும்னு கேப்பீங்க சரியா?’’
அருணாலமூர்த்தி அவனையே பார்த்தார். ஜெய கிருஷ்ணன் தொடர்ந்தான்.
மருமகள்னதும் உங்களுக்குள் எழற அந்த பிரதான கேள்விகளுக்கு என்கிட்ட இருக்கிற பதில் நெகட்டிவ்ப்பா. நான் சொல்ற அந்தப் பொண்ணு நம்ம ஜாதியில்ல. நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு வசதிப்பட்டவளும் இல்லே.
வார்த்தையை நிறுத்தி அவரைப் பார்த்தான். அவரின் முகம் சுழியலுக்குப் போயிருந்தது.
இப்பச் சொல்லுங்க, சம்மதமா?
ஜெயகிருஷ்ணன் கேட்ட விநாடி மாடிப்படிகளில் யாரோ இறங்கி வருகிற சத்தம். திரும்பிப் பார்த்தான். பூப்போட்ட ரத்த நிற லுங்கியிலும், அதே நிற சர்ட்டிலும் இருந்த பிரதீப் வந்து கொண்டிருந்தான். ஜெயகிருஷ்ணனை விட இரண்டு வயது கம்மியானவன். உயரத்திலும் இரண்டு இன்ஞ்ச் குறைவு. பிசினெஸ் யோசிப்புகளால் தலையில் ஆரம்ப வழுக்கை. அருணாசல மூர்த்தியின் இளவயது ஜாடை பிசகாமல் படிந்து இருந்தது.
படிகள் முடிந்து ஹால் தரையில் கால் பரவியதும் சொன்னான்.
‘‘முதல்ல நானே இதுக்கு ஒத்துக்க மாட்டேண்ணா!"
சொன்ன பிரதீப்பை உக்கிரப் பார்வை பார்த்தான் ஜெயகிருஷ்ணன்.
உன்னை நான் கேக்கலைடா... பிரதீப்...
"நீ கேக்காட்டிலும் சொல்ற உரிமை எனக்கு இருக்கு. கொஞ்சமாவது நம்ம குடும்ப கெளரவம், அந்தஸ்தை