Kolusu Satham
()
About this ebook
Read more from Pattukottai Prabakar
Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5Thappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Puthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsIravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Tick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Narukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsIni... Iniya... Rating: 5 out of 5 stars5/5Uyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Vaa! Theerpai Thaa! Rating: 0 out of 5 stars0 ratingsNer Meley Nila Rating: 5 out of 5 stars5/5Sollungal Seyyapadum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kolusu Satham
Related ebooks
Saatchigal Illaiyadi Papa! Rating: 5 out of 5 stars5/5Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Suzhal Narkaali Rating: 5 out of 5 stars5/5Yedu Un Vaalai Rating: 0 out of 5 stars0 ratingsUyire Vaa Uyirai Thaa Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Atho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Oru Thuppakiyum Sila Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyir Mattum Unmai Rating: 5 out of 5 stars5/5Thuppakki Vidu Thoothu Rating: 0 out of 5 stars0 ratingsUn Kathai Muttrum Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsIthu Puthu Sugam Rating: 5 out of 5 stars5/5Million Dollar Unmai Rating: 5 out of 5 stars5/5Iravugal Kanavukkaga... Rating: 5 out of 5 stars5/5Enakku Mattum Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsSathyavin Sapatham! Rating: 0 out of 5 stars0 ratingsPuthir Pootha Nandhavanam Rating: 0 out of 5 stars0 ratingsThats All Your Honour... Rating: 0 out of 5 stars0 ratingsSollathey Sei! Rating: 5 out of 5 stars5/5Thuduppillatha Padagugal Rating: 0 out of 5 stars0 ratingsIni Avan Iranthavan Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsThoodhu Sellaayo Thuppakkiye Rating: 5 out of 5 stars5/5April Raathiri Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam Thodathey! Rating: 5 out of 5 stars5/5No… Sudathea Rating: 5 out of 5 stars5/5Vellaikodi Rating: 5 out of 5 stars5/5Yeidhavanai Thedi... Rating: 5 out of 5 stars5/5Dhayalan Theerpu Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Kolusu Satham
0 ratings0 reviews
Book preview
Kolusu Satham - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
கொலுசுச் சத்தம்
Kolusu Satham
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
இரவு பெய்த மழையால் விடிந்த பின்னும் இலைகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன. காற்று நகரத்திற்கு இதமாக சாமரம் வீசிக் கொண்டிருந்தது. சோம்பல் முறித்தபடி சூரியன் உச்சந்தலையை மட்டும் கடல் பரப்புக்கு மேலே மெதுவாக நீட்டினான். அவன் விடும் கொட்டாவியாக சுரத்தில்லாத கதிர்கள். கடற்கரையில் உடற்பயிற்சிக்காக வந்தவர்களின் வாகனங்களின் மேல் பனி, கோலம் போடும் தொடக்கமாக புள்ளிகளை வைத்துக் கொண்டிருந்தது.
தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியதும், போர்வைக்குள் சுருண்டிருந்த பரணி பரபரப்பாக எழுந்தான்.
இமைகளை உதறி முதல் காரியமாக கழற்றி வைத்த கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்து பதறினான்.
தொலைபேசியை எடுத்து, பரணி பேசறேன்
என்றான்
அறிவிருக்காடா முட்டாள்? மணி என்ன இப்போ?
ஆறாகப் போகுது. என்னை மன்னிச்சிடு சந்துரு. நான் அலாரம் வைச்சுக்க மறந்து தூங்கிட்டேன். இப்ப நீ எங்கேர்ந்து பேசறே?
விமான நிலையத்தில் இருந்து தான் பேசறேன். மத்திய அமைச்சர் வர்ற விமானம் ஆறேகாலுக்கு வருதுன்னு நீதான் சொன்னே. கேமராவை எடுத்துக்கிட்டு என்னை அஞ்சரை மணிக்கே வரச்சொல்லிட்டு நீ பாவி இப்படித் தூங்கறியே...
கோவிச்சுக்காதே கண்ணா. ஒரு கப் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துடறேன். விமானம் சரியான நேரத்துக்கு வருதா? நீ விசாரிச்சியா?
விசாரிச்சேன். பதினைஞ்சு நிமிடம் தாமதமாம்.
அப்படின்னா எனக்கு அரை மணி நேரம் இருக்கு. நீ எனக்காக காத்திரு சந்துரு. நான் விமானம் தரை இறங்கறதுக்கு முன்னால் நான் அங்கே இருப்பேன்.
எங்கே, பார்க்கலாம்.
பரணி தொலைபேசி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் குளியலறைக்குள் சென்றான். பத்தே நிமிடங்களில் குளித்து வெளிப்பட்டான். கைக்குக் கிடைத்த ஒரு சட்டையை அணிந்தான். ஜீன்சு பேண்ட்டை அணிந்து சட்டையை உள்ளே செலுத்தினான்.
கண்ணாடி முன்பு நின்று விரல்களாலேயே தலை வாரினான். வாசனை திரவியத்தை சட்டை மேல் பீய்ச்சிக் கொண்டான். அவசரமாக பூட்சு அணிந்தான்.
அமைச்சரை பேட்டி எடுப்பதற்கான சிறிய டேப்ரெக் கார்டரையும், தன் கைக்கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டு, அறையைப் பூட்டினான். மூன்று மூன்று படிகளாக இறங்கினான்.
தன் மோட்டார் சைக்கிளின் மேல் தாவி அமர்ந்து கிளம்பினான். சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை சிதறடித்து விரைந்தான்.
பரணி விமான நிலையத்தை நெருங்கும்போது, அந்த டெல்லி விமானம் ஒரு தளத்தில் இறங்குவதைப் பார்க்க முடிந்தது.
இன்னும் வேகம் கூட்டிய பரணி விமான நிலையத்தின் முகப்பில் தன் மோட்டார் சைக்கிளை சாய்த்து நிறுத்தி ஓட்டமாக விரைந்து அங்கே அவனுக்காகக் காத்திருந்த புகைப்பட நிபுணன் சந்துரு அருகில் வந்து மூச்சிரைத்தான்.
எப்படி? சொன்ன நேரத்தில வந்துட்டேனா? விமானம் இப்பதான் தரை இறங்குது, வா உள்ளே போகலாம்.
பரணி, நீ கில்லாடிடா. ஆனால் ஒரு சந்தேகம்.
என்ன?
பல்லு தேய்ச்சியா இல்லையா?
அதெல்லாம் முந்தா நாளே தேய்ச்சாச்சுப்பா
என்று சந்துருவின் வயிற்றில் செல்லமாக குத்தினான் பரணி.
அங்கே இவர்களைப் போலவே பல பத்திரிகைகளிலிருந்து வந்து கும்பலாக நின்று மத்திய அமைச்சர் வரப்போகிற சிறப்பு வாசலையே பார்த்துக் கொண்டிருந்த நிருபர்களிடம் ஒரு காவல்துறை அதிகாரி வந்தார்.
அமைச்சர் உங்கள் எல்லாருக்கும் பதினைந்து நிமிடம் ஒதுக்கி பேட்டி தர்றதா முடிவு செய்திருக்கார். அதனால நீங்கள் எல்லாரும் இங்கேயே நாங்க ஏற்பாடு செய்திருக்கிற, தனி அறைக்கு வந்துடுங்க. இங்கே கும்பலா நிக்க வேணாம். அமைச்சரோட பாதுகாப்பு கருதிதான் சொல்றேன். தயவு செய்து ஒத்துழைங்க.
வழிநடத்திய அந்த அதிகாரியின் பின்னால் எல்லா பத்திரிகைக்காரர்களும் தொடர, பரணியும் சந்துருவும் ஆளுக்கொரு சிகரெட்டை பற்ற வைத்தபடி நடந்தார்கள்
பரணி தனக்கு அறிமுகமுள்ள சக நிருபர்கள் சிலருக்கு புன்னகை செய்தான். சிலரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினான்.
அந்த குளிரூட்டப்பட்ட கருத்துக்கூடத்தில் வகுப்பறை மாதிரி நிறைய நாற்காலிகள் போட்டிருந்தார்கள் எதிரே சிறிய கான்கிரீட் மேடை. அங்கே வசதியான ஆசனங்கள்.
ஒலிபெருக்கி தயாராக இருந்தது.
புகைப்படக்காரர்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கொள்ள, கேள்வி கேட்கப் போகிற நிருபர்கள் மட்டும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டார்கள்.
முதல் வரிசையில் அமர்ந்த பரணியிடம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் பெண் நிருபர் நிருபமா - வந்தாள் புன்னகைத்தாள்.
போன இதழில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை அபாரம் பரணி.
நன்றிங்க.
படிக்க ஆரம்பிச்சா வெண்ணெய் மாதிரி வழுக்கிக் கிட்டுப் போகுதுங்க உங்க எழுத்து. ஒரு கட்டுரையை எப்படி சுவையா, சுவாரசியமா, விறுவிறுப்பா எழுதறதுன்னு உங்கிட்ட நான் சிறப்புப் பாடம் கத்துக்கணும் பரணி.
அய்யோ நீங்க ரொம்ப புகழ்றீங்க.
உண்மையைத் தான் சொல்றேன். எங்க பத்திரிகையோட உதவி ஆசிரியர் எங்க ஊழியர் கூட்டத்தில் உங்கள் எழுத்துக்களைப் பத்தி குறிப்பிடாத நாளே இல்லை.
அப்படியா? அவருக்கு என்னோட நன்றியை சொல்லிடுங்க.
நீங்க எங்க தங்கியிருக்கீங்க? உங்க விலாசம் வேணுமே.
ஏன்?
பத்திரிகை துறை பற்றி உங்ககிட்ட நிறைய பேசணும்.
பரணி தன் விலாச அட்டை எடுத்துத் தந்தான். அப்போது அந்த அறைவாசலில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப்படை, உதவியாளர்கள், கட்சித் தலைவர்கள் சூழ கரம் குவித்தபடி உள்ளே வந்தார் மத்திய அமைச்சர். கேமிராக்களின், மின்னல்கள் பல கோணங்களிலிருந்து அவர் மேல் பாய்ந்தன.
அவர் அமர்ந்து சற்று ஆரவாரம் அடங்கியதும் என் இனிய நண்பர்களே... தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகைகாரர்களை இங்கே சந்திப்பதில் நான் பெருமைப் படுகிறேன். அரசாங்கத்தின் உத்தரவுகளை மாற்ற வல்லது எங்கள் பேனா. ஆனால் அரசாங்கத்தையே மாற்ற வல்லது உங்கள் பேனா
என்றார் அமைச்சர்.
நிருபர்கள் கைதட்டி கூக்குரலிட்டனர்.
அமைச்சர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார், பத்திரிகை நண்பர்களை நான் எப்போதும் மதிப்பவன். என்னை எந்த பத்திரிகையாளரும் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு மக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம். மக்களை மகிழ்விப்பதற்காக எழுதாதீர்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதுங்கள் இனி... ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.
ஒரு நிருபர் கேட்டார், புதிதாக பதவி ஏற்றுள்ளீர்கள். உங்கள் ஆட்சி காலத்திற்குள் இந்தியாவில் ஒரு மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாமா?
புன்னகைத்த அமைச்சர்... எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் முன்னேற்றம் ஒன்றுதான் நோக்கமாக இருக்க முடியும். நமது நாட்டில் ஏராளமான பிரச்சினைகள். ஏராளமான தடைக்கற்கள். எல்லாம் சரி செய்ய முனைப்புடன் போராடுவோம்
என்றார்.
பரணி தனது மைக்கை நீட்டியபடி, இன்றைக்கு இந்தியா எதிர்நோக்கியுள்ள தலையாய பிரச்சினைகளில் முதலிடம் தரவேண்டிய பிரச்சினை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
என்றான்.
வன்முறையைத்தான் தலையாய பிரச்சினையாக நான் கருதுவேன். நாடு முழுக்க தீவிரவாதம் மேலோங்கியிருக்கிறது திடீர் திடீரென்று ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. சமூகவிரோத சக்திகளிடம் நவீன ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். ஆகையால் சட்டத்துறையும், நீதித்துறையும் அதன் கடமைகளை தீவிரமாக செயல்படுத்த முழுஅளவு சுதந்திரம் கொடுத்து, வன்முறைகளை ஒடுக்கி சட்டம், ஒழுங்கை நாடு முழுவதும் சரியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே எங்கள் முதல்கட்ட வேலையாக இருக்கும்.
மேலும் கேள்விகள் தொடர்ந்தன. சில கேள்விகள் கோபம் தோய்த்து கேட்கப்பட்டாலும் புன்னகை மாறாமல் பொறுமையாக பதில் சொல்லி கைகூப்பிவிட்டுப் புறப்பட்டார் அமைச்சர்.
விமான நிலையத்தின் வெளியே மோட்டார் சைக்கிளை நெருங்கும்போது பரணியிடம் சந்துரு கேட்டான், ஆமாம், அந்த நிருபமா உன்னோட அறை விலாசம் கேட்டாளா?
ஆமாம், ஏன்?
நீ கொடுத்துட்டியா?
கொடுத்தேன். எதுக்கு கேக்கறே?
நீ தீர்ந்தே.
என்ன சொல்றே?
அந்த நிருபமா ஒரு மாதிரி. எச்சரிக்கையா இரு. அவ்வளவு தான் சொல்வேன். வண்டியை எடு.
சந்துரு பின்புறம் அமர, மோட்டார் சைக்கிளைக் கிளப்பினான் பரணி ஏன் சந்துரு, அமைச்சர் பேசின மாதிரி நாடு பூராவும் வன்முறை ஒழிஞ்சி இந்தியா ஒரு அமைதிப் பூங்காவா மாறினா எவ்வளவு நல்லா இருக்கும்
என்றான்.
கனவு காணாதே. ஒண்ணும் வேணாம். நம்ம மாநிலத்தை எடுத்துக்கோ. ரெண்டு வருடமா தலை மறைவா இருக்கிற தீவிரவாதி கோடாலி முத்துவை பிடிக்க முடிஞ்சுதா இன்னும்? இங்கே நடந்த பல வன்முறைச் சம்பவங்களுக்கு அவன் நான் தான் பொறுப்புன்னு தைரியமா அறிக்கை விடுகிறான். அவன் புகைப்படத்தை அவனே துணிச்சலா அனுப்பி வைக்கிறான். காவல்துறையோட கண்ல விரலை விட்டு ஆட்டிக்கிட்டிருக்கானே... இந்த கோடாலி முத்துவை ஏன் கைது செய்ய முடியலை? உண்மையா முடியலையா? இல்லை கோடாலி முத்துவுக்கு ஏதாச்சும் அரசியல் ஆதரவு மறைமுகமா இருக்கான்னு நீயே கட்டுரை ஒண்ணுல எழுதினியே... மேடையில் பேசற பேச்செல்லாம் கேட்க நல்லாயிருக்கும். நடைமுறையில் எதுவும் நடக்கறதில்லை
என்றான் சந்துரு சலிப்புடன்.
வழியில் ஒரு ஓட்டலில் சிற்றுண்டி முடித்து பரணி தங்கள் பத்திரிகையின் ஆசிரியருக்கு போன் செய்து மத்திய அமைச்சரைப் பேட்டி எடுத்து முடித்ததைத் தெரிவித்த போது அவர் சொன்னார்.
பரணி, நீங்க உடனே நம்ம அலுவலகத்துக்கு வாங்க. தீவிரவாதி கோடாலி முத்து பத்தி ஒரு முக்கியமான செய்தி எனக்குக் கிடைச்சிருக்கு.
*****
2
அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினான் பரணி.
சந்துரு இறங்கியதும், இவனும் இறங்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டு கையடக்க சீப்பெடுத்து குனிந்து கண்ணாடி பார்த்து அவசரமாக சீவிக்கொண்டான்.
பரணி, உனக்கு தலை கலைஞ்சிருந்தாதான் அழகா இருக்கும். வாடா சீக்கிரம்
என்றான் சந்துரு.
இருவரும் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தார்கள். லிப்டுக்காகக் காத்திருந்த சிலரை நோக்கி, அது ஒரு வாரமா இயங்கலைங்க
என்று குரல் கொடுத்துவிட்டு படிகளில் விரைந்தேறினான் பரணி.
மூன்றாவது மாடிக்கு அவர்கள் வந்து சேர்ந்ததும், மூச்சுவாங்கிய சந்துரு, கொஞ்சம் இருப்பா, இதயம் வெளில வந்து விழுந்துடும் போலிருக்கு
என்று தன் நெஞ்சைப் பிடித்தபடி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அதெப்படி உனக்கு மட்டும் மூச்சு வாங்கலை?
உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்றேன் கண்ணா
எங்கேர்ந்துடா உனக்கு எல்லாத்துக்கும் நேரம் இருக்கு? திடீர்னு கொஞ்ச நாள் வயலின் கத்துக்கிட்டே. அப்புறம் கம்ப்யூட்டர் பயிற்சி எடுத்துக்கிட்டே. எங்கே இருக்கு நேரம்?
சிரித்த பரணி, சந்துரு, உலக அளவில் ஒரு சொத்து மட்டும் எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் ஆண்டவன் கொடுத்திருக்கான் தெரியுமா?
என்ன அது?
"ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம்! இதை எல்லாருக்கும் தானே கொடுத்திருக்கான்? யார் அதை எப்படி பயன்படுத்திக்கிறாங்கன்னு ஆண்டவனுக்குக் கவலையில்லை. அதைப்பத்தி மனிதன் தான் கவலைப் படணும். சந்துரு, எந்த ஒரு செயல் செய்றதுக்கும் நேரத்துக்கு முன்னாடி ரொம்ப முக்கியமா