Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Thuppakiyum Sila Thottakalum
Oru Thuppakiyum Sila Thottakalum
Oru Thuppakiyum Sila Thottakalum
Ebook141 pages1 hour

Oru Thuppakiyum Sila Thottakalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580100905104
Oru Thuppakiyum Sila Thottakalum

Read more from Pattukottai Prabakar

Related to Oru Thuppakiyum Sila Thottakalum

Related ebooks

Related categories

Reviews for Oru Thuppakiyum Sila Thottakalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Thuppakiyum Sila Thottakalum - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    ஒரு துப்பாக்கியும் சில தோட்டாக்களும்

    Oru Thuppakiyum Sila Thottakalum

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    தூக்கக் கலக்கப் பார்வை போல காட்சிகளை அமைத்து வைத்திருந்தது அதிகாலைப் பனி.

    அந்தப் பிரதேசம் முழுவதற்கும் வெள்ளை முகமூடி அணிவித்து விட்டிருந்தது மார்கழிப் பனி.

    வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் மரங்களின் இலைகளையும் சில்லென்ற மவுனக் கண்ணீர் வடிக்க வைத்திருந்தது சென்னைப் பனி.

    காந்திராமன் அந்த முரட்டுப் பனியைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. எக்காரணத்தாலும் அவருக்கு அதிகாலை கடற்கரை நடை தடைபடவே கூடாது.

    காலை ஏழரை மணிக்கு வெளியூருக்குப் புறப்பட வேண்டிய ஒரு பயணத் திட்டம் இருந்தாலும் கூட ஐந்து மணிக்கு காரை எடுத்துக் கொண்டு பெசண்ட் நகர் கடற்கரைக்கு வந்து நிறுத்தி, நடைபாதை ஓரமாக வியர்வை பொங்கி வழியும் வரை வேகவேகமாக முழு நீளமும் நான்கு தடவை நடந்துவிட்டு சென்று, பிறகுதான் அவசரமும் பதட்டமுமாக பயணத்திற்குப் புறப்படுவார்.

    இன்றும் அப்படி பனியை லட்சியம் செய்யாமல் காந்திராமன் தனது வெள்ளை மாருதியை நிறுத்தி இறங்கினார்.

    வழக்கமாக நடைக்காக அணியும் டிராக் சூட்டும், கான்வாஸ் பூட்சும் அணிந்திருந்த அவர் இன்று குளிருக்காக முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தார்.

    தூரத்தில் அலைகள் தெரியவில்லை. ஆனால் அவை வந்து கரையில் கரையும் ஓசை கொஞ்சம் வடி கட்டப்பட்டு கேட்டது, பத்தடி தள்ளி எதுவும் தெரியவில்லை பனி, பனி எங்கும் பனி. இது சென்னையா, இல்லை ஊட்டியா என்று வியக்க வைக்கும் பனி.

    வானம் இன்னும் ஒரு சுறுசுறுப்பான புதிய தினத்தின் துவக்கத்திற்கு தயாராகவில்லை. தற்போது தான் சாம்பல் நிறத்தில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு சில நட்சத்திரங்கள் புறப்படாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்தன.

    காந்திராமன் தன் முகத்தில் சிலீரென்று அறைந்த குளிர் காற்றில் தடுமாறிப் போனார். அவர் தன் வாழ் நாளில் சென்னையில் இத்தனை அடர்த்தியான பனியைப் பார்த்ததே இல்லை

    இந்தப் பனியில் நடந்தால் நிச்சயம் எதிரே வருகிற நபர் அல்லது விளக்குக் கம்பத்தின் மேல் மோதிக்கொள்வது நிச்சயம் என்றும் பட்டது.

    மறுபடி காரில் ஏறிக்கொண்டு கதவை மூடி, கண்ணாடியையும் ஏற்றி விட்டுக் கொண்டார். சில நிமிடங்களில் பனி கலைந்து விடும் என்று காத்திருந்தார்.

    காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தான் கொண்டு வந்திருந்த ஆங்கில நாளிதழை எடுத்துக் கொண்டு, காரின் உள் விளக்கைப் போட்டு படிக்கத் துவங்கிய காந்திராமனை சற்று விரிவாக அறிமுகப்படுத்தலாம்.

    காந்திராமனுக்கு வயது அறுபத்தி மூன்று. அவரைப் பார்க்கிற யாரும் ஐம்பதுக்கு மேல் மதிக்க மாட்டார்கள். அப்படி ஒரு கச்சிதமான உடலமைப் பைக் கொண்டுள்ள அவர் முகத்தில் அதிக சுருக்கங்களும் இல்லை.

    நல்ல உயரம், ஐந்தடி பதினோரு அங்குலம், நீள முகம், முன் வழுக்கை, தலையின் இரண்டு காதோரப் பகுதிகளில் மட்டும் நரை லேசாக கலந்த முடி. மீசை வைப்பதில்லை. அடர்த்தியான புருவங்கள், தாடையின் நடுவில் ஒரு பள்ளம். மடிப்புகளில்லாத கழுத்து.

    வெள்ளை ஸபாரி உடை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

    ஒரு தனியார் நிறுவனத்தின் மேனேஜராக நாற்ப தாண்டுகள் பணியாற்றி ஆறு மாதங்களுக்கு முன்பு தான் ஓய்வு பெற்றிருக்கிறார். இவர் பணியாற்றிய நாற்பதாண்டுகளில் அந்த நிறுவனத்தை மிக பிரமாதமாக வளர்த்திருக்கிறார்.

    பிரிவு உபசார விழாவின் போது நிறுவனத்தின் தலைவர் இவருக்கு மாலை அணிவித்ததோடு காலில் விடிந்து ஆசியும் பெற்று, மைக்கில் பேசியபோது நடுவில் தொண்டையடைத்துப் போய் அழவே துவங்கிவிட, அந்த கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரின் கண்களும் கலங்கிப் போனது உண்மை.

    அடையாறில் வீடு, மனைவி ஜெயலட்சுமி, ஒரு மகன், ஓரு மகள்.

    மகன் தியாகராஜன் கம்ப்யூட்டர் துறையில் நிறைய படித்து தற்போது அமெரிக்காவில் சிறப்பாக இருக்கிறான். மகள் பாரதி டெல்லியில் தொழிலதிபர் வேணுவுக்கு வாழ்க்கைப்பட்டு மகிழ்ச்சியாய் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.

    காந்திராமன் வீட்டில் அவரும், அவர் மனைவியும் மட்டுமே, தவிர ஒரு டிரைவர், ஒரு வேலைக்காரன் காந்திராமன். வீட்டின் பின்புறம் சின்னதாக பூந்தோட்டமும், காய்கறித் தோட்டமும் போட்டு வைத்துள்ளார். அவற்றைப் பராமரிப்பதில் நிறைய நேரத்தை பணி ஓய்வுக்குப் பிறகு செலவிட முடிகிறது தவிர கிளிகளும், நாயும் வளர்க்கிறார். அதனால் பொழுது போய்விடுகிறது.

    என்றாலும் காந்திராமன் செய்வதற்கு எதுவுமில்லை என்று சும்மா உட்கார்ந்து விடுகிற ரகமில்லை என்பதால் ஒரு புத்தகம் எழுதுகிற வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    வேலையில் இருந்த சமயத்திலேயே காந்திராமனுக்கு நிறைய துறைகளில் ஆர்வம் உண்டு. அவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கருத்தரங்கங்களில் தலைமையேற்றுப் பேசியிருக்கிறார். நகரில் எல்லாத் துறைகளிலும் முக்கியமான நபர்கள் அவருக்கு அறிமுகம் உண்டு.

    அவருக்கு ஏ.வி. எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் அவரின் பிள்ளைகள் அறுபதாம் கல்யாணம் நடத்தின போது வந்து குவிந்த கார்களை நிறுத்த ஏற்பாடு செய்ய இயலாமல் டிராபிக் காவல்துறை விழி பிதுங்கியது. நடிகர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தொழிலதிபர்கள் என்று கலவையான கூட்டம் வந்திருந்ததில் பிள்ளைகளுக்கே வியப்பு.

    காந்திராமனுக்கு பெண்கள் மேல் எப்போதும் ஓர் பரிவான பார்வை உண்டு. பெண்களுக்கு இந்த பூமியில் ஆண்களுக்குச் சரி நிகரான சமத்துவமும், மரியாதையும், வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்துக்களைக் கொண்டவர், ஆதரிப்பவர்.

    அதனாலேயே அவரை பல மகளிர் அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கின்றன. பல பத்திரிகைகள், அவரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கின்றன.

    அவர் தன் ஓய்வுகாலப் பணியாக எடுத்துக்கொண்டது 'இன்றைய பெண்கள்' என்னும் தலைப்பில் ஒரு மிகப் பெரிய புத்தகம் எழுதுவது என்பதுதான்.

    அந்தப் புத்தகத்திற்குத் தேவையான தகவல்கள், ஆதாரங்கள், மேற்கோள் காட்ட செய்திகள் என்று நிறைய சேகரித்து வைத்திருக்கும் அவர் தினமும் காலை கடற்கரை நடை முடித்து குளித்து, யோகாசனம் செய்து, தெய்வ வழிபாடு முடித்து பத்து மணிக்கு மாடியில் தனது தனியறைக்கு போய்விட்டாரென்றால் மதியம் இரண்டு வரை ஈடுபாட்டுடன் எழுதி வருகிறார்.

    இந்தப் புத்தகத்திற்காக பலதரப்பட்ட பெண்களை நேரில் சந்திப்பதை மாலை நேரத்தில் வைத்துக் கொண்டுள்ளார். பெண் அதிகாரிகள், பெண் வக்கீல்கள், நடிகைகள், டாக்டர்கள், பெண் கான்ஸ்டபிள்கள், நர்சுகள், ஆசிரியைகள், என்றும் பூக்காரி, வேலைக்காரி, சலவைப் பெண், கட்டடத் தொழிலாளி என்றும் எல்லா மட்டத்துப் பெண்களையும் சந்திக்கிறார். ரொம்ப நேரம் அவர்களைப் பேசவிட்டு டேப்பில் பதிவு செய்து கொள்கிறார்.

    இந்த புதிய வேலை அவருக்குப் பிடித்திருக்கிறது இந்த வேலையில் அவருக்கு உதவுபவள் சாருமதி அவருடைய

    Enjoying the preview?
    Page 1 of 1