Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priyamana Penne...
Priyamana Penne...
Priyamana Penne...
Ebook85 pages50 minutes

Priyamana Penne...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903889
Priyamana Penne...

Read more from Pattukottai Prabakar

Related to Priyamana Penne...

Related ebooks

Reviews for Priyamana Penne...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priyamana Penne... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    பிரியமான பெண்ணே…

    Priyamana Penne...

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கமாக சென்னை வரை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் இன்னும் சில நிமிடங்களில் புறப்பட இருக்கிறது என்று ஸ்பீக்கர்கள் அறிவித்தன.

    காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கம்பன் எக்ஸ்பிரஸ் ஒரு நட்சத்திர ரயில். மாலை ஐந்தரைக்குப் புறப்பட்டு மறுநாள் காலை எட்டு மணிக்குத் தான் சென்னையைச் சென்றடையும் என்றாலும் வயதானவர்களுக்கும், நிம்மதியாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, உறக்கம் பாதிக்கப்படாமல் தொந்தரவில்லாமல் உறங்கிச் செல்ல விரும்புபவர்களுக்கும் மிக செளகரியமான ரயில்.

    பயணம் செல்பவர்களும், வழியனுப்ப வந்தவர்களுமாக பிளாட்பாரம் முழுக்க அடைத்துக் கொண்டு நின்றார்கள். குடும்பிகள் ஞாபகமாக தண்ணீர் பிடித்துக் கொண்டார்கள். ஒரு இளைய கோஷ்டி சக்கர வண்டியில் சீட்டுக் கட்டு இருக்கிறதா என்று விசாரித்துக் கொண்டிருந்தது.

    S1 கோச் - த்ரீ டயர் ஸ்லீப்பர் வசதியுடன் இருந்தது. வழி முழுக்க உள்ள ஸ்டேஷன்களில் கோட்டாப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி தாண்டித்தான் ஹவுஸ்ஃபுல் ஆகிற ரிசர்வ்ட் கோச் அது.

    என்ஜினிலிருந்து நான்காவது பெட்டியாகக் கோர்க்கப் பட்டிருந்த அந்த கோச்சில் தற்சமயம் ஏழெட்டு பேர்களே இருந்தார்கள்.

    மருதநாயகம் ரிட்டயர்டு தமிழ் வாத்தியார். அவர் வெள்ளை கதர் வேஷ்டியும், வெள்ளை முழுக்கை கதர் சட்டையும் போட்டு, தோளில் குட்டையாக ஒரு தேங்காய் பூ டவல் போட்டிருக்கிறார். அவர் அருகே ஜன்னல் ஓரமாக அமர்ந்து கம்பிகளில் கன்னம் பதித்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவரின் மூத்த மகள் பாரதி பாரதியார் மேல் உள்ள அபிமானம் காரணமாக வைத்த பெயர். வயது முப்பத்தி ஒன்று.

    பாரதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஐந்து வருடங்களாக வாத்தியார் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். வரதட்சணை பிரச்சனை காரணமாக தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. கல்யாணம் ஆகும் வரை சும்மா இருக்க வேண்டாமே என்று மெனக்கட்டு ஆரம்பப் பள்ளியில் வாத்தியாரம்மா வேலை வாங்கிக் கொடுத்தார். பிரச்சினை இல்லாமல் போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீர் என்று பாரதியை தேவக்கோட்டை பள்ளிக்கு மாற்றல் போட்டு விட்டார்கள்.

    தினமும் தேவகோட்டைக்கு பஸ்சில் போய் வேலை பார்த்துவிட்டு மறுபடி பஸ்சில் திரும்பி வருவது அவளுக்கு நிரம்ப சிரமமாக இருக்கிறது. தினமும் பள்ளியிலிருந்து தொய்வாக சக்தியே இல்லாமல் படு சோர்வாக வந்து சேர்கிறாள்.

    அவளுக்கு மறுபடி காரைக்குடிக்கே மாற்றல் போடச் செய்யவேண்டும். மருதநாயகத்திடம் படித்த மெய்யப்பன் சென்னையில் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் நல்ல பதவியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு மெய்யப்பனின் விலாசம், போன் நம்பர் எல்லாம் சேகரித்துக் கொண்டு தந்தையும், மகளும் புறப்பட்டிருக்கிறார்கள்.

    மெய்யப்பனுக்கு 'ழ' போடவே வராது. நான்தான் விரல் பிடிச்சி எழுதக் கத்துக் கொடுத்தேன். என்னை மறந்திருக்கமாட்டான். நிச்சயமா நமக்கு உதவி செய்வான் என்பது பாரதிக்கு நம்பிக்கை சொல்லியிருக்கிறார் வாத்தியார்.

    அந்தப் பகுதியில் அவர்களைத் தவிர ஒரு வாலிபன் இருந்தான்.

    சுந்தரேசன். லாயர். சென்னையில் ஒரு பிரபலமான வக்கீலிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான். காரைக்குடியில் இருந்த அவன் பெற்றோர் அவனை வரவழைத்து அவன் கல்யாண விஷயமாகப் பேச்செடுக்க, அவன் தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

    நான் தனியா போர்டு போட்டு பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் கல்யாணம் செய்துப்பேன். அதுக்கு முன்னாடி பொண்ணு பார்க்கறது, ஜாதகம் பார்க்கறது அது, இதுன்னு ஆரம்பிச்சீங்கன்னா எனக்குக் கெட்ட கோபம் வந்துடும்.

    கண்டிப்பாக தன் கருத்தை சொல்லிவிட்ட சுந்தரேசன் ரயிலில் ஏறி உட்கார்ந்த நிமிடத்திலிருந்து சுஜாதா எழுதிய நாவல் ஒன்றை மும்முரமாகப் படிக்க ஆரம்பித்து விட்டான். அவன் தோளை இப்போது யாராவது தொட்டு 'ஏன் சார் நீங்கதானே சுந்தரேசன்?' என்று கேட்டால்கூட 'இல்லை' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பான்.

    அந்தப் பகுதிக்கு இன்னும் வந்து சேர வேண்டிய மூன்று பேர்களை இதுவரை காணோம்.

    மருதநாயகம் தன் மடியில் எவர்சில்வர் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு சீவல் அள்ளி வாயில் அடக்கிக் கொண்டார். காட்டன் புடவை கட்டியிருந்த பாரதிக்கு பரபரப்பான பிளாட்பாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதில்தான் சுவாரசியம் அதிகம் இருந்தது. ரயில் புறப்பட்டதும் இந்த அவசர பிளாட்பாரம் மறைந்து விடுமே என்று சின்னதாக ஒரு ஏக்கம் கூட இருந்தது.

    "திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கமாக சென்னை வரை

    Enjoying the preview?
    Page 1 of 1