Sandikuthirai
()
About this ebook
பெண் என்பவள் மென்மையானவள் மட்டுமல்ல..மனதளவில் வலிமையானவளும்கூட! பூக்களைப் போல் புன்னகைக்கவும் செய்வாள். பூகம்பம் போல் கொதித்து எழவும் செய்வாள். அதே நேரம் சில சமூகக் கட்டுப்பாடுகள். அவர்களின் கைகளை கட்டிப் போட்டுத்தான் உள்ளன.
அவற்றில் இருந்து வெளிவரும் வழி எளிதாகத் தெரிந்திருந்தாலும்... தன் பாதை மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாகவே இருக்க வேண்டும் என்றும், கேடான பாதைக்கு வழிகாட்டிவிடக் கூடாது எனவும் சிந்தனை செய்தே அடுத்த முடிவை எடுப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கதாநாயகியைத்தான் 'சண்டிக் குதிரை’ யில் உங்களுக்கு அடையாளம் காட்டப்போகிறேன்.
வாசகர்கள் அத்தனைப் பேருக்கும் இந்த நாவல் வெகுவாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு, பட்டுக்கோட்டை பிரபாகர்
Read more from Pattukottai Prabakar
Oor Urangum Velai Rating: 5 out of 5 stars5/5Bharath VS Susila Rating: 4 out of 5 stars4/5Bharath And Pattampoochi Rating: 5 out of 5 stars5/5Bharath Rajyam Rating: 5 out of 5 stars5/5Thottal Thodarum Rating: 4 out of 5 stars4/5September, October, Christopher! Rating: 5 out of 5 stars5/5Iravu Pathu Rating: 0 out of 5 stars0 ratingsPuthi Munai Vithai Rating: 5 out of 5 stars5/5Kaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsNarukkendru Naalu Varthai Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Thadaiyillai Rating: 5 out of 5 stars5/5Netru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Vendum… Rating: 5 out of 5 stars5/5Ini... Iniya... Rating: 5 out of 5 stars5/5Ner Meley Nila Rating: 5 out of 5 stars5/5Pushpa Rating: 5 out of 5 stars5/5Mazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Kuttra Surangam Rating: 0 out of 5 stars0 ratingsYaarukkum Mugam Illai Rating: 0 out of 5 stars0 ratingsTick... Tick... Lipstick! Rating: 5 out of 5 stars5/5Varuvean! Velvean! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sandikuthirai
Related ebooks
Kanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsIndiargal Kaadhalikkirargal! Rating: 5 out of 5 stars5/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsVazhigal Moodapattullana Rating: 0 out of 5 stars0 ratingsMakeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Vithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Nalamillai... Nalama? Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsOru Coffee Kudikalama? Rating: 4 out of 5 stars4/5Pathaiyellam Pookkalittu... Rating: 5 out of 5 stars5/5Avaloru Kathanayagi Rating: 5 out of 5 stars5/5Uyire Urugathey Rating: 5 out of 5 stars5/5Kathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Ivvidam Yaavarum Nalam Rating: 0 out of 5 stars0 ratingsAvargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsPriyamana Penne... Rating: 0 out of 5 stars0 ratingsWhisky Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Nijame! Rating: 0 out of 5 stars0 ratingsVillan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsMay June Julie Rating: 0 out of 5 stars0 ratingsAyiram Muthangaludan Rating: 5 out of 5 stars5/5Aimbathu Latcham Dosai! Rating: 0 out of 5 stars0 ratingsOru Thuppakiyum Sila Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsUyirvarai Inithaval Rating: 5 out of 5 stars5/5Jarigai Medai Rating: 0 out of 5 stars0 ratingsDhayalan Theerpu Rating: 5 out of 5 stars5/5Atho Ange Aarambam Rating: 5 out of 5 stars5/5Kaathirukka Neramillai Rating: 5 out of 5 stars5/5Wellington Vibareetham Rating: 5 out of 5 stars5/5
Reviews for Sandikuthirai
0 ratings0 reviews
Book preview
Sandikuthirai - Pattukottai Prabakar
http://www.pustaka.co.in
சண்டிக்குதிரை
Sandikuthirai
Author:
பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukottai Prabakar
For more books
http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
என்னுரை
பெண் என்பவள் மென்மையானவள் மட்டுமல்ல..மனதளவில் வலிமையானவளும்கூட! பூக்களைப் போல் புன்னகைக்கவும் செய்வாள். பூகம்பம் போல் கொதித்து எழவும் செய்வாள். அதே நேரம் சில சமூகக் கட்டுப்பாடுகள். அவர்களின் கைகளை கட்டிப் போட்டுத்தான் உள்ளன.
அவற்றில் இருந்து வெளிவரும் வழி எளிதாகத் தெரிந்திருந்தாலும்... தன் பாதை மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாகவே இருக்க வேண்டும் என்றும், கேடான பாதைக்கு வழிகாட்டிவிடக் கூடாது எனவும் சிந்தனை செய்தே அடுத்த முடிவை எடுப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு கதாநாயகியைத்தான் 'சண்டிக் குதிரை’ யில் உங்களுக்கு அடையாளம் காட்டப்போகிறேன்.
வாசகர்கள் அத்தனைப் பேருக்கும் இந்த நாவல் வெகுவாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு,
பட்டுக்கோட்டை பிரபாகர்
1
கண் விழித்தபோது நெற்றிப் பொட்டில் தலைவலி துடிப்பாய் இருந்தது. இரவு சரியான தூக்கமின்மையின் விளைவு. எப்போதாவது ஒரு நாள் இப்படி ஆகிவிடுகிறது.
ஏதேதோ எண்ணங்களின் வளர்வலம். ஒன்றின் வால் முனையைப் பிடித்துக்கொண்டு அடுத்த எண்ணம் மூக்கை நீட்டிவிடுகிறது. 'ச்சீ..’போ! எனக்குத் தூங்க வேண்டும்' என்று புறங்கையால் துரத்தினால், இன்னும் அதிக அழிச்சாட்டியம் செய்கிறது. 'என்ன இது... மணி ஒன்றாகிவிட்டதே! தெருவில் இரவுக் காட்சி பார்த்துத் திரும்புகிறவர்களின் சந்தடி தோன்றி, அதுவும் தேய்ந்து கரைந்துவிட்டதே! இன்னும் ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை?' என்று பதைத்துப் போனாலும், தூக்கம் அதுவாக வந்தால்தானே?
பசியா..? உடனே வயிற்றை நிரப்பிவிடலாம். தாகமா...? உடனே தொண்டையை நிரப்பிவிடலாம். தூங்க வேண்டும் என்றால் விளக்குகளை அணைத்துவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டு, கொசுத் தொந்தரவில் தப்பிக்க முன்னேற்பாடு செய்து, சவுகர்யமான நிலையில் படுத்தவாறு... கண்களை மூடிக்கொண்டு.. அப்புறம்? இதெல்லாமே தூங்குவதற்கான சூழ்நிலை அமைப்புதானே! தூக்கம் வரவழைப்பது எப்படி?
நேற்றைய இரவின் அனுபவம் அநியாய அவஸ்தை. கண்கள் சோர்வடைந்தால் துர்க்கம் வருமென்று 'டி.வி, 'யில் சேனல்
மாற்றி மாற்றி போரடிக்கும் நிகழ்ச்சியாக அமைத்துக்கொண்டு பார்த்து... அது சரியாக வராமல், கொட்டாவி வரவழைக்கும் எழுத்தாளரின் புத்தகமாக அலமாரியில் தேடிப் படிக்கப் படிக்க பக்கங்கள் நகர்ந்தாலும் தூக்கம்? மூச்....!
'அய்யோ! போய்விட்டு நாளைக்கு வாருங்கள்' என்று வாசலில் புன்னகையுடன் நிற்கிற வியாபாரப் பிரதிநிதியிடம் சொல்வது போல இந்தத் துரத்தும், எண்ணங்களிடம் சொல்லி அனுப்பி கதவை மூட முடியாமல் போய்... சரி. வந்துத் தொலை
என்று அனுமதிக்கத் தொடங்கினால், கட்சிப் பேரணி மாதிரி இப்படியா சாரசாரமாக முடிவே இல்லாமல் துரத்தும்?
அதுவும் பக்கங்கள் புரண்டு, புரண்டு... பாவாடை, சட்டையில் அப்போது எனக்கு வயது பத்தா... பதினொன்றா? அவ்வளவு பழைய நிகழ்வுகளை புரட்டிப் போட்டுவிட்டது. ஆனால், மடித்துப் போகாமல், பொலபொலவென்று உதிராமல், ஓரங்களில் கரையான் அரிக்காமல் அப்படியே இருந்தது. மழை பெய்யாத, கோடு தறி நெய்யாத புத்தம் புதுக் காப்பியாக!
'காரைக்குடி மேல உணரணி ரோட்டில் அம்மா சாம்பிராணி போட்டால்... கல்லுக்கட்டி வரை வாசனை வீசும்' என்று அப்பா கேலி செய்வார். கனவுக் காட்சி போல அவ்வளவு 'குபு குபு' புகை. தெய்வங்களுக்கே மூச்சுத் திணறி இருக்கும்.
சாமிக்கும், 'பீரோ'வுக்கும், முற்றத்துக்கும், மாட்டுக் கொட்டகைக்கும், துளசி மாடத்துக்கும் போட்டு முடித்ததும் மூங்கில் கூடை கவிழ்ந்து 360 டிகிரியிலும் ஈரக்கூந்தலை சூரியக் கதிர்கள் போல விரித்துப் போட்டு சாயும் கல்பனா அக்காதான், குடும்பத்தில் சட்டாம்பிள்ளை. அவள் உறங்கும்போது மீசை வரைந்துவிட நினைத்த என் மணிரத்தினக் குறும்பு கடைசி வரை செயல்படுத்தப்படாத சின்ன ஆசைதான்.
பாத்திரக் கடையில் ஆறு பேரை விரட்டும் அப்பாவையே விரட்டுவாள். எனக்கு மட்டும் அப்பாவுக்கு எதிராக ஒரு வார்த்தை நாக்கில் புரண்டதில்லை. பத்து விநாடிக்கு மேல் அவரை நிலையாகப் பார்த்தாலே பயக் கண்ணீர் துளிர்க்கும்.
புதுத் தாவணி வந்தாத்தான் சோத்துல கை வைப்பேன்
என்று கார் நிறுத்துமிடத்தில், 'பைன்ட்டிங்' செய்த புத்தகத்தோடு உட்கார்ந்து 'கடல் புறா' படிக்க ஆரம்பித்துவிடுவாள் கல்பனா".
இன்றைக்கு அப்பா 'பெல்ட்'டை கழற்றிக்கொள்ளப் போகிறார்
என்கிற என் எதிர்பார்ப்பு பொய்யாய்ப் போகும். ‘ஸ்கூட்டரை' உதைத்துப் போய் திரும்புவார். சமதானக் கொடியாக அம்மா அந்த ஊதா நிறத் தாவணியை கார் நிறுத்தத்துக்கு எடுத்துப் போவாள். அப்புறம்தான் அப்பளம் உண்டு, விரதம் முடிப்பாள் கல்பனா."
இதே மாதிரி 'வேட்டைக்காரன்’ சினிமா, வெள்ளிக் கொலுசு, தாழம்பூ ஜடை பின்னி போட்டோ', பொருட்காட்சியில் ராஜஸ்தான் செருப்பு என்று சகலமும் சாதித்துக்கொள்வாள்.
"நான்தான் மக்கு. அப்பிராணி. எனக்கும் ஆசைவரும். ஏதாவது தேவைப்படும். ஆனால், அதை கோரிக்கைப்படுத்தத் தெரியாத