Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nimmi
Nimmi
Nimmi
Ebook67 pages43 minutes

Nimmi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ஒரு தற்கொலை வழக்கில் துப்பு துலக்கச் செல்லும் விஷாலுக்கு வித்தியாசமான அனுபவம் நேரிடுகிறது. அது தற்கொலையா? கொலையா? கொலை என்றால் யார் கொன்றது எதற்காக?

விஷால் அதிரடியில் நிம்மி ஒரு அசத்தலான ஹாரர் த்ரில்லர்.

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580145507394
Nimmi

Read more from Gavudham Karunanidhi

Related to Nimmi

Related ebooks

Related categories

Reviews for Nimmi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nimmi - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    நிம்மி

    Nimmi

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    கருப்பாயூரணி போலீஸ் ஸ்டேஷன்.

    விஷால் சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பத்து நாட்கள் கடந்துவிட்டன. குறிப்பிடத்தகுந்த அளவில் குற்ற நடவடிக்கைகள் எதுவும் அங்கே இல்லாததால் கொஞ்சம் இயல்பாகவே உணர்ந்தான்.

    கடந்த மாதத்தில் நடந்தது எதுவும் அவனாலேயே நம்ப முடியவில்லை என்றாலும் அவன் வாழ்வில் நடந்திருப்பதால் அவனுக்கும் இறப்பிற்குப் பிறகும் இருக்கும் மனிதர்கள் மீது நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது. இருந்தாலும் அதைப்பற்றி எவரிடமும் விவாதிக்கவில்லை.

    ஆர்த்தி உடனான காதல் மட்டும் அலைபேசியில் வளர்ந்துக்கொண்டே வந்தது. அந்த இக்கட்டான நேரத்தில் ஆர்த்தி உடன் இருந்ததால்தான் மன அழுத்தம் அதிகமாகாமல் தப்பித்துக் கொண்டதாய் விஷால் எப்போதும் நினைப்பான்.

    பத்து நாட்களில் மதுரை விஷாலுக்கு நிறையவே பிடித்துப் போனது. வெளிப்படையான மனிதர்கள் உணர்ச்சிகளையும் அவ்வப்போது வெளிப்படுத்துவதால் ஏற்படும் சிறிய பிரச்னைகளைத் தவிர பெரிதாய் ஒன்றும் அவனை உறுத்தவில்லை.

    திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய வீடு கிடைக்க அதில் மகிழ்ச்சியுடன் தங்கினான். வீட்டு உரிமையாளர் ரங்கசாமி பெருமாளின் தீவிர பக்தர். அவரும் அவர் மனைவி சுஜாதாவும்தான். இரண்டு மகன்கள் ஒருவன் அமெரிக்காவிலும் மற்றொருவன் கனடாவிலும் இருப்பதாக சொல்லியிருந்தார். அவ்வப்போது இரவுகளில் ஸ்கைப்பில் பேரனுடனும் பேத்தியுடனும் இருவரும் பேசிக்கொள்வதைக் கேட்டுத் தனக்குள் புன்னகைத்தபடி விஷால் தூங்கிப் போவான்.

    அன்று ஸ்டேஷனில் இருக்கும்போது கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு ஃபோன் வந்தது.

    ஹலோ போலீஸ் ஸ்டேஷன்?

    யெஸ்

    இங்க ஒரு பொண்ணு தூக்கு மாட்டிக்கிச்சு.

    வாட்? எங்க இருந்து பேசறீங்க?

    அய்யப்பன் காட்டில் இருந்து பேசறேன்.

    ஓகே இப்போ வர்றோம்.

    விஷால் வெளியே ஜீப்பிற்குப் பாய்ந்தான். டிரைவர் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஏறிக்கொண்டனர்.

    தங்கராசு விஷால் அழைத்தான்.

    யெஸ் சார் ஒரு கான்ஸ்டபிள் விறைப்பானார்.

    அய்யப்பன் காடு எங்க இருக்கு?

    இங்க இருந்து ஒரு கிலோ மீட்டர் சார்

    ம்

    ஜீப் விரைந்தது. பத்து நிமிடங்களில் ஒரு காட்டுப் பாதை வர அதில் திரும்பியது. கொஞ்சதூரம் பயணித்து கூட்டமாக நின்றிருந்த அந்த வீட்டின் முன் நின்றது. விஷால் இறங்கினான்.

    யார் போன் செஞ்சது?

    நான்தான் சார் ஓர் இளைஞன் முன்னால் வந்தான்.

    நீ யாருய்யா?

    பால்காரன் சார். ரியா மேடம் வீட்டுக்கு டெய்லி பால் சப்ளை நான்தான் சார். சொன்னவன் தொடர்ந்தான்,

    "வழக்கமா வைக்கிற மாதிரி இன்னிக்கும் ஜன்னல் வழியா பால் உள்ள வச்சேன் சார். அப்பத்தான் ரியா மேடம் தூக்கில் தொங்கிறதைப் பார்த்தேன். உடனே போலீசுக்கு போன்

    Enjoying the preview?
    Page 1 of 1