Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

No.1
No.1
No.1
Ebook76 pages47 minutes

No.1

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் அசோக் & டீம் கலக்கும் புதிய க்ரைம் த்ரில்லர்.

ஆரம்பம் முதல் முடிவு வரை பக்கங்களை தெறிக்க விடும் No.1 நாவலைப் படித்து மகிழுங்கள்.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580145507441
No.1

Read more from Gavudham Karunanidhi

Related to No.1

Related ebooks

Related categories

Reviews for No.1

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    No.1 - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    No.1

    No.1

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அது ஒரு மலைக் கிராமம். அருகிலிருக்கும் முக்கிய நகரம் சத்தியமங்கலம். மக்கள் காலையில் வேலைக்குப் போகவும், மாலையில் வீடு திரும்பவும் ஒரு மினி பஸ் உண்டு. மற்ற நேரங்களில் சத்தியமங்கலம் போவதாக இருந்தால் மலைப் பாதையில் இறங்க வேண்டும். காலங்காலமாக மக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது. மக்கள் அந்த மலைப் பாதையை பயன்படுத்த மிகவும் அச்சப்பட்டனர். நேரங்காலமாக வந்து தங்கள் வீடுகளில் அடைந்தனர். கதவை சாத்திவிட்டனர் என்றால் மறுநாள் விடியற்காலையில் தான் திறப்பார்கள். அதற்குக் காரணம் இருந்தது.

    ஒரு புலி. இதுவரை அந்த ஊரில் மூன்று பேரைக் கொன்றுவிட்டது.

    ஹனுமந்தப்பா, இருளன், காத்தான் மூவர் தான் இறந்தவர்கள்.

    ஒவ்வொரு முறை ஒரு இழப்பு நேரும் போதும் வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் வருவார்கள். பாதி தின்ற நிலையில் கிடக்கும் இறந்தவர்களின் உடல்களை போட்டோ எடுப்பர். ரோந்து வருவர். ஆனால் புலி தான் சிக்கிய பாடில்லை.

    அன்று ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் கூடியிருந்தனர்.

    கோவில் பூசாரி பேசினார்.

    நம்ம ஊருக்கு ஏதோ சாபம் இருக்கு. தாயா பிள்ளையா ஜாதி வித்தியாசம் பார்க்காம நாம எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம். இந்த பிரச்சனையையும் அதே மாதிரி ஒற்றுமையாய் இருந்து தீர்க்கணும்

    சொன்னவர் மக்களின் முகங்களை பார்த்தார். எவரும் ஒன்றும் பேசாமல் இருக்க,

    யார் வேணாலும் ஐடியா சொல்லுங்க. அந்தப் புலியை நாம விரட்டி அடிக்கணும். அந்த புலியால நம்ம ஊர் பொண்ணுங்க பசங்க எல்லாரும் ஸ்கூலுக்கு போகாம வீட்டிலேயே இருக்காங்க. எத்தனை நாள்தான் வீட்டில் இருக்க முடியும்? படிப்பு பாழாயிடாதா?

    பூசாரி கேட்க அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    ஓர் இளைஞன் எழுந்தான்.

    "இந்த பிரச்சனையை நாமதான் தீர்க்கணும். அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ எதுவும் பண்ண மாட்டாங்க. இதுவரைக்கும் மூணு பேர் செத்திருக்காங்க. அவங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் அரசாங்கம் கொடுக்கல. கேட்டா அவங்க புலி இருக்கிற இடத்தில் கிராஸ் பண்ணாங்க இழப்பீடு இல்லைன்னு சொல்றாங்க.

    வனத்துறை எப்பவுமே யாராச்சும் செத்ததுக்கு அப்புறம்தான் வறாங்க. நாம அந்த புலியைக் கொல்லணும் அதுதான் ஒரே தீர்வு."

    அதுதான் முடியலயே வரதா கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

    யார் சொன்னது? வரதன் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்தான்.

    நான்தான் பா நாகராஜ் எழுந்தார்.

    அப்ப என்ன பண்ணலாம்? நீங்க சொல்லுங்கண்ணா.

    வரதன் நாகராஜைப் பார்த்தான்.

    "இப்ப நம்ம ஊர்ல இருக்கிறது ஆயிரத்துக்கும் கம்மியான மக்கள்தான். அதனால அரசியல்வாதிங்ககிட்ட நம்ம ஊருக்கு அந்தளவு மதிப்பில்ல. ஏற்கனவே நம்ம ஊர்ல இருந்து நிறைய பேர் வேலைக்கு வெளியூருக்கு போய்ட்டாங்க. ஊர் மேல இருக்கிற பாசத்துல

    Enjoying the preview?
    Page 1 of 1