Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Unnai Mattum
Unnai Mattum
Unnai Mattum
Ebook80 pages27 minutes

Unnai Mattum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்தாளர் பாலாவின் வெற்றிக்குக் காரணமான ஜனனி அவர் இவ்வாழ்வு சிறக்காததால் அவருக்குத் தன்னையே தருவதாகச் சொல்லியும் மறுத்து அவளுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தருகிறார்.

ஒரு நாள் அவருக்குச் செய்தி வருகிறது. அது என்ன? அது அவரை எப்படி பாதிக்கிறது?

உயர் காதலில் திளைத்திட வைக்கும் அழுத்தமான காதல் கதை 'உன்னை மட்டும்'

Languageதமிழ்
Release dateJul 24, 2021
ISBN6580145507210
Unnai Mattum

Read more from Gavudham Karunanidhi

Related to Unnai Mattum

Related ebooks

Reviews for Unnai Mattum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Unnai Mattum - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    உன்னை மட்டும்

    Unnai Mattum

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    சீரான வேகத்தில் வந்து கொண்டிருந்த ரயில் பொம்மிடி ரயில்வே ஸ்டேஷனில் நின்றது.

    உட்கார்ந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்த பாலமுருகன் சட்டென்று விழித்துக் கொண்டார்.

    அய்யா ஏதாவது வேணுங்களா?

    அருகில் அமர்ந்திருந்த வசந்த் கேட்டான்.

    வேண்டாம் என்று தலையசைத்தார்.

    வசந்த்

    அய்யா

    இது என்ன ஸ்டேஷன்?

    பொம்மிடி ஐயா

    அடுத்து என்ன ஸ்டேஷன் வரும்?

    சேலம் அப்புறம் ஈரோடு.

    வசந்த் ஈரோடு என்று சொல்லும் போது பாலமுருகனின் விழிகள் மலர்ந்தன.

    வசந்த் தப்பா நினைக்கலன்னா ஒண்ணு கேக்கலாமா?

    அய்யோ என்னங்கய்யா இது நீங்க போய் இப்படி கேட்கறீங்க ? சொல்லுங்கய்யா செய்றேன்

    ஒண்ணும் இல்ல ஈரோட்டில இறங்கி ஒருத்தரைப் பார்த்துட்டு அதுக்கப்புறம் கோயம்புத்தூர் போலாமா?

    அவ்வளவுதானேங்கய்யா அப்படியே செய்வோம் விடுங்க

    வசந்த் சொல்ல பாலமுருகன் புன்னகைத்தார்.

    ஐயா தமிழ்நாட்டுக்கு கடைசியா எப்ப வந்தீங்க?

    பாலமுருகன் புன்னகைத்தபடி சொன்னார்.

    இருபது வருஷம் ஆச்சு.

    இத்தனை வருஷமும் டெல்லியில் இருந்துட்டே எழுதுனிங்களா அய்யா?

    ஆமா.

    சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா ஐயா?

    வேண்டாம் நான் அப்புறம் சாப்பிடறேன். பசி இல்ல.

    சரிங்கய்யா வசந்த் மௌனமானான்.

    பாலமுருகன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தார்.

    பாலமுருகன் இன்றைய தேதியில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர். எது எழுதினாலும் பதிப்பிக்க பதிப்பகத்தார் போட்டி போடுவர். மக்கள் அவர் புத்தகங்களை முன்பதிவு செய்து வாங்குவர். எங்கு சென்றாலும் ஐயா ஐயா என்று சுற்றிக்கொள்ளும் கூட்டம் அவரை இயல்பாய் இருக்க விடாது.

    கூட்டம் அவரை எவ்வளவுதான் தொல்லை செய்தாலும் அவர்  புன்னகை முகம் என்றும் மாறாது இருக்கும் .

    இருபது வருடங்களுக்கு முன்பே போய் டெல்லியில் செட்டிலாகிவிட்டார். பலமுறை பல விழாக்களுக்கு தமிழ்நாட்டில் தேதி கேட்டும் வர மறுத்த பாலமுருகன் வசந்த் வந்து தங்கள் கல்லூரியின் பட்டம் பெறும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புரையாற்ற வேண்டும் மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது என்ன என்று அவரின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோது மறுப்பின்றி ஒத்துக்கொண்டார். அது இன்றும் மனைவி கமலத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    எத்தனையோ பெரியாளுங்க கூப்பிட்டும் தமிழ்நாட்டுக்குப் போகாத நீங்க ஒரு காலேஜ் ஸ்டுடன்ட் கூப்பிட்டான்னு  சரின்னு சொல்லிட்டீங்க. என்ன காரணம்?

    கமலம் பலமுறை கேட்டும் புன்னகையை மட்டுமே பதிலாகச் சொன்னார் பாலமுருகன்.

    அவர் ஒத்துக்கொண்டார் என்பதை நம்ப முடியாத நிலையில் இருந்த வசந்த் அலைபேசியில் தன் கல்லூரி நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து மகிழ்ச்சியைப்பரிமாறிக் கொண்டான்.

    வசந்த் எம்பிஏ முதல் பருவத்தில் இருக்கிறான். நல்ல உயரம் மாநிறம். எவரிடமும் திடமாய் பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை. இதெல்லாம் அவனுக்கு பிளஸ் பாயிண்ட்.

    ரயில் காவிரி பாலத்தின் மீது போக பாலமுருகன் சின்ன குழந்தை போல காவிரி ஆற்றை கண்கள் விரிய வேடிக்கை பார்த்தார்.

    "ஐயா ஈரோடு

    Enjoying the preview?
    Page 1 of 1