Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Super
Super
Super
Ebook87 pages28 minutes

Super

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலு தன் மாமா மகள் கண்மணியுடன் சென்னைக்கு வந்த இடத்தில் கண்மணி கடத்தப்படுகிறாள். யார் கடத்தினர்? ஏன்? கண்மணிக்கு என்னவாகிறது?

அசோக் அதிரடியில் "சூப்பர்", சூப்பர் க்ரைம் த்ரில்லர்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580145507389
Super

Read more from Gavudham Karunanidhi

Related to Super

Related ebooks

Related categories

Reviews for Super

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Super - Gavudham Karunanidhi

    https://www.pustaka.co.in

    சூப்பர்

    Super

    Author:

    கவுதம் கருணாநிதி

    Gavudham Karunanidhi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    கணபதிபாளையம் கிராமம்.

    ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து கரூர் பஸ் ஏறினால் கணபதிபாளையம் ஸ்டாப்பில் நிற்கும். கணபதிபாளையத்திற்கு டவுன் பஸ்களும் உண்டு. பஸ் நம்பர் 42, 43, 15 எல்லாம் கணபதிபாளையம் வழியாகச் செல்லும். காவிரிக்கரையில் அமைந்துள்ள கிராமம். அதனால் எப்பொழுதும் தன்னகத்தே இயற்கையாக ஒரு குளுமையைப் பெற்றிருக்கும்.

    வேல் மரத்தடியில் அமர்ந்திருந்தான். முழுப்பெயர் சண்முகவேல். அவனே அவன் பெயரை சுருக்கி வேல் என்று அழைத்துக் கொண்டான். மற்றவரையும் அழைக்கச் செய்தான்.

    வயது இருபத்து இரண்டு. ஈரோடு கலைக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் இறுதியாண்டு படிக்கிறான். படிக்கிறான் என்று தான் பெயர். படிப்பைத் தவிர எல்லாமே செய்வான். எப்போதும் குழிவிழ சிரித்து எவர் மனதையும் எளிதில் கவர்வான். எங்கு சென்றாலும் அவனுக்கென ஒரு செட் சேர்ந்துவிடும். கல்லூரியில் அவன் பேசுவானா என்று உடன் படிக்கும் மாணவிகள் ரகசியமாய் எதிர்பார்ப்பர். எவரோடும் பேசமாட்டான். ஏனென்றால் அவனுக்கு கண்மணியை நிறையப் பிடிக்கும்.

    கண்மணி அவன் மாமா மகள். அவளுக்குக் கண்மணி என்று பெயரிட்டதே அவன் தான்.

    மாமா பாப்பா முழிச்சுப் பார்க்கிறது ரொம்ப சூப்பரா இருக்கு. பாப்பாக்கு கண்மணின்னு பேர் வைங்க மாமா

    அவன் சொல்ல அவன் மாமா ஆறுமுகம் சிரித்தார்.

    உனக்குப் பொண்டாட்டி ஆகப் போறா. நீ வச்ச பேரே இருக்கட்டும்

    சிரித்தபடி அவர் சொல்ல வேலின் அம்மா கண்ணம்மாள் அண்ணனைப் பார்த்து நெகிழ்ந்து புன்னகைத்தாள்.

    கண்ணம்மாவிற்கு தன் அண்ணன் ஆறுமுகம் என்றால் உயிர். அவளை விளையாட்டாய் சீண்டுவதற்கு கணவன் சுந்தரம்,

    உன் அண்ணன் இருக்கானே? என்று ஆரம்பித்து பட்டினி கிடந்த நாட்கள் நிறைய. இப்போதெல்லாம் விளையாட்டிற்குக் கூட சுந்தரம் ஆறுமுகத்தைப் பற்றி ஒன்றும் பேசமாட்டார்.

    கண்மணி வீட்டிற்கு வந்தால் சுந்தரம் அவளுக்கு நாட்டுக்கோழி எடுத்துட்டு வந்துவிடுவார். கண்ணம்மா சூப் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொடுக்க அதில் உப்பு மிளகுப்பொடி போட்டு கண்களில் நீர் வர காரமாய் சூப்பைக் குடிக்கும் கண்மணியைப் புன்னகையுடன் பார்த்து ரசிப்பான் வேல்.

    தன்னைக் கண்டால் தன்னிலை மறக்கும் வேலின் நிலைமை கண்மணிக்குப் புரிந்துதான் இருந்தது. இருந்தாலும் அவள் இன்னும் வெளிப்படையாய் ஒன்றும் சொல்லவில்லை ஏனென்றால் அவனும் இன்னும் எதுவும் வெளிப்படையாய் கேட்கவில்லை.

    பெரும்பாலும் ஆண்கள் வெளிப்படையாக நேசத்தை வெளிப்படுத்தாமல் தமக்குள் பூட்டி வைத்து பாசம் காட்டுவர். அது புரிந்துகொள்ளப்பட்டால் மிக நன்று. இல்லையென்றால் இதயங்கள் வலித்து என்ன செய்யவென்று தெரியாது பித்துப் பிடித்து அதையும் தமக்குள் வைத்து மாய்ந்து போகின்றனர்.

    நேசத்தை வெளிப்படுத்தினால் எவரும் எவரையும் தவறாக நினைக்கப் போவதில்லை. அதேபோல் ஏற்க இயலாத சூழலையும் வெளிப்படுத்துபவர் புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயத்தில் காதல் வரவே வராது.

    எதைப் பார்த்து வரும்? எதை வேண்டுமானாலும். }

    எப்போது வரும்? எப்போது வேண்டுமானாலும்.

    என்ன செய்யும்? எல்லாம் மறக்கச் செய்யும்.

    அப்படி காதல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

    அறிவோடு நடத்தல் வேண்டும்.

    ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும் ஏற்கும் பக்குவம் வேண்டும். எரிச்சல் அடையாது இருக்கக் கற்றிருக்க வேண்டும்.

    தானும் துயரப்பட்டு தன் குடும்பத்தையும் தன்

    Enjoying the preview?
    Page 1 of 1