Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vizhiyin Vazhiyil Vanthu Vidu!
Vizhiyin Vazhiyil Vanthu Vidu!
Vizhiyin Vazhiyil Vanthu Vidu!
Ebook75 pages27 minutes

Vizhiyin Vazhiyil Vanthu Vidu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் தாயை இழந்து தன்னுடைய அத்தையின் கொடுமையில் வாழ்ந்து வருபவள் மல்லிகை. தனக்கு விடிவுகாலம் வந்துவிட்டது என்று எண்ணியவளாய் தன்னுடைய தந்தையுடன் சென்றவளுக்கு காத்திருந்ததோ மிகப்பெரிய ஏமாற்றம். பிறகு ஆதரவற்றோர் இல்லத்தில் ஜாஸ்மின் என்ற பெயரில் வளர்ந்து, படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து கொண்டிருப்பவள். இவளுக்கு பிரதீப் மற்றும் குணா என்ற இருவருடனும் நட்பு ஏற்பட்டு அது காதலாகவும் மலர்கிறது. இது எப்படி சாத்தியம்? குணா, பிரதீப் இவர்களில் யாரை ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டாள்? வாருங்கள் வாசிப்போம்... விழியின் வழியில் வந்துவிடு...

Languageதமிழ்
Release dateSep 23, 2023
ISBN6580137109470
Vizhiyin Vazhiyil Vanthu Vidu!

Read more from R. Sumathi

Related authors

Related to Vizhiyin Vazhiyil Vanthu Vidu!

Related ebooks

Reviews for Vizhiyin Vazhiyil Vanthu Vidu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vizhiyin Vazhiyil Vanthu Vidu! - R. Sumathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விழியின் வழியில் வந்து விடு!

    Vizhiyin Vazhiyil Vanthu Vidu!

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    வெகு நேரமாக ஜாஸ்மினுடைய அலைபேசி அழைத்துக் கொண்டேயிருந்தது. பக்கத்து சீட்டிலிருந்து ஆர்த்தி அதை எடுத்துப் பார்த்தாள் குணா, மறுபடியும் அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு விழிகளை அங்கும்இங்கும் உருட்டினாள். ஜாஸ்மினைத் தேடினாள். ஜாஸ்மின் எம்.டி.யின் அறைக்குள் ஏதோ வேலையாக சென்றவள் இன்னும் வரவில்லை.

    தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் அலைபேசியின் ஒலியை தவிர்க்க முடியாமல் எடுத்து பேசலாம் என்று நினைத்தபோது எம்.டி.யின் அறையிலிருந்து வெளிப்பட்டாள் ஜாஸ்மின்.

    ஜாஸ்மின் அளவான உயரத்தில் அலைபாயும் கூந்தலுடன், அழகான முகவடிவுடன் இருந்தாள். பெயருக்கு ஏற்றமாதிரி மல்லிகைப்பூவின் பொலிவு முகத்தில், மைதீட்டிய விழிகள் ஓவியத்தின் ஜாடையில் இருந்தன.

    அவள் நடந்து வரும் அழகை ஒருமுறை ரசித்த ஆர்த்தி அவள் இருக்கைக்கு வந்ததுமே.

    குணா ரொம்ப நேரமா போன் பண்றார்

    அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசி சரியாக அவள் அங்கே வந்ததுமே சொல்லி வைத்ததைப்போல் ஒலிப்பதை நிறுத்திவிட்டது.

    நீ எடுத்து பேச வேண்டியதுதானே என்றபடியே அலைபேசியைக் கையிலெடுத்தாள் ஜாஸ்மின்.

    ஏம்மா. எனக்கு வம்பா? நான் போனை எடுத்து ஹலோன்னு சொன்னதும் உன்னோட குணா என்னை நீன்னு நினைச்சுக்கிட்டு இச்சு இச்சுன்னு... கொடுத்து வச்சாருன்னா நான் என்ன பண்றது

    அடச்சீ... என்ன பேசற நீ? குணா அந்தமாதிரி ஆள் இல்லை. ரொம்ப டீசன்ட்டானவர்

    ஆஹா... இந்த விஷயத்துல எந்த ஆம்பளையையும் நம்ப முடியாது. நாலு நாள் பேசினா போதும் அஞ்சாம்நாள் ஐ லவ் யூன்னு சொல்லி ஆறாம்நாள் அங்க இங்க தொட ஆரம்பிச்சிடுவானுங்க, இதுல உன் குணா மட்டும் எந்த மாதிரி இருப்பாராம்...

    ஏய்... சும்மா ஏதாவது பேசாதே, குணா அந்த மாதிரியெல்லாம் இல்லை.

    அப்படின்னா அவர் காதலிக்கவே லாயக்கு இல்லைன்னு அர்த்தம்.

    அடிச்சேன்னா பாரு... ஜாஸ்மின் செல்லமாக கோபித்துக்கொள்ள ஆர்த்தி பெரிதாக சிரித்தவாறே தன்னுடைய கேலிப் பேச்சைத் தொடர்ந்தாள்.

    பின்னே... காதலிக்கிறவர்னா எப்படியிருக்கணும் தெரியுமா? ஹீரோ மாதிரி இருக்கணும். உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் இப்படி மன்னாருதான் கிடைப்பான். இந்த லட்சணத்துல ஒரு வாரத்துல கல்யாணம். கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு என்ன பண்ணப் போறானோ?

    ஏய்... ரொம்ப அதிகமா பேசறே? என்கிட்ட அடிவாங்கப் போறே? ஜாஸ்மின் கை ஓங்கிய அதே நேரம் மறுபடியும் குணா அழைத்தான்.

    இரு உன்னை அப்புறமா கவனிக்கறேன் என்றவள் குணாவின் அழைப்பை ஏற்றாள்.

    ஹலோ!

    அவளுடைய குரலைக் கேட்டதுமே குணா மறுமுனையில் குரலை உயர்த்தினான்.

    ஏய்... எவ்வளவு நேரமா போன் பண்றேன். எங்க போனே?

    நான் என்ன வேலை வெட்டி இல்லாமலாயிருக்கேன். எப்பவும் உங்க போனுக்காக காத்துக்கிட்டுக்கிடக்க. அவசர வேலையா எம்.டி.யோட ரூமூக்குப் போனேன். எம்.டி.யோட ரூமுக்குப் போகும்போது மொபைல எடுத்துட்டுப் போகக்கூடாது. இப்பத்தான் பிரெண்ட் சொன்னா. உடனே பேசறேன்.

    சரி... சரி... நம்ம கல்யாணப் பத்திரிகையெல்லாம் ரெடியாயிடுச்சு, ஆபீஸ் முடிஞ்சதும் வெயிட்பண்ணு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன். பத்திரிகை வாங்கப் போகலாம்.

    சரி அவள் சரி என்றதுமே மேற்கொண்டு எதுவும்

    Enjoying the preview?
    Page 1 of 1