Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaanal Nathigal
Kaanal Nathigal
Kaanal Nathigal
Ebook82 pages20 minutes

Kaanal Nathigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேன்மொழி - சேகர் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து ஓடி போய் திருமணம் செய்து கொள்கிறார்கள். தேன்மொழி திருமணத்தால், அவளுடைய சித்தப்பா மகள் சுபத்ரா திருமணத்தில் பிரச்சனை வருகிறது. தேன்மொழி அவளுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். சேகருக்கு மனநிலை பாதிக்கபடுகிறது. தேன்மொழியை கொலை செய்தது யார்? தொடர்ந்து படியுங்கள்...

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580137106130
Kaanal Nathigal

Read more from R. Sumathi

Related authors

Related to Kaanal Nathigal

Related ebooks

Reviews for Kaanal Nathigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaanal Nathigal - R. Sumathi

    http://www.pustaka.co.in

    கானல் நதிகள்

    Kaanal Nathigal

    Author:

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    உங்களுக்கு பொண்ணு புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்.

    மங்களமூர்த்தி மாப்பிள்ளையின் தந்தையைப் பார்த்து கூறினார்.

    மாப்பிள்ளையின் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அந்த அமைதி அவர் எதையோ ஆழமாக யோசிப்பதைப் போல் இருந்தது.

    கடத்திக்கொண்டு போனால் காலங்காலமாய் உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதைப்போல நகை நட்டுப் போட்டிருந்த பெண்மணி அவரின் காதோரம் குனிந்து கிசுகிசுத்தாள்:

    என்னங்க... கேள்விப்பட்டதை கேட்டுடுங்களேன்.

    எப்படி கேட்கிறது? தயங்கினார் மாப்பிள்ளையின் தந்தை. மீசையைத் தடவினார்.

    ப்ச்! இதப்பாருங்க. இப்படி தயங்கிக்கிட்டிருந்தா எப்படி? இது நம்ம புள்ளையோட வாழ்க்கைப் பிரச்னை - பற்களைக் கடித்தாள் அந்த பணக்கோட்டை உடல்காரி.

    ஊர்ல பெரிய மனுஷன். அதான்... முகத்துக்கெதிரே எப்படின்னு...? லேசாக வியர்த்தார்.

    ப்ச்... நீங்க கேட்குறிங்களா? இல்லை நான் கேட்கட்டுமா? குறைந்த குரலிலேயே கேட்டாலும் குரலில் மிரட்டும் பாவனையிருந்தது.

    நீயே... கேளு... தப்பித்துக் கொண்ட பாவனையில் திருப்திப்பட்டுக் கொண்டார்.

    தொண்டையை கணைத்துக் கொண்டு அந்தம்மாளும் மங்களமூர்த்தியை ஏறிட்டாள்.

    வந்து... நாங்க ஒரு விஷயம் கேள்விப்பட்டோம்.

    என்ன கேள்விப்பட்டிங்க?

    வந்து... உங்க அண்ணன் பொண்ணு யாரோ ஒருத்தன்கூட அதுவும் வேற ஒரு சாதிக்காரனோட ஓடிப்போயிடுச்சாமே?

    மங்கள மூர்த்தியின் முகம் திடீரென மழைமூட்ட மேகமாக மாறியது.

    அவமானத்தால் சிறுத்துப் போனது. தலைகுனிந்து தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார்.

    உள்ளே கதவோரம் நின்றிருந்த மங்களமூர்த்தியின் மனைவியின் முகமும் அதே உணர்வுகக் காட்டியது.

    அவமானத்தால் கருத்து சிறுத்தது.

    என்ன எதுவுமே பேசாமயிருக்கீங்க? மாப்பிள்ளையின் தாய் கேட்க...

    மங்களமூர்த்தி என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினார். மங்களமூர்த்தியின் மனைவி கதவோரத்திலிருந்து வெளியே வந்து கணவரின் அருகில் வந்து நின்றாள். நின்றதோடல்லாமல் அவளே பதில் சொல்லவும் முனைந்தாள்.

    அது வந்து... நீங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான். எங்க குடும்பத்துல இதுவரை இதுமாதிரி நடந்ததில்லை... பெண்ணின் தாய் மென்று விழுங்க...

    மாப்பிள்ளையின் தாய், அருவெறுப்பாக முகம் சுளித்தாள். தோள்களை அலட்சியமாக குலுக்கிக் கொண்டாள்.

    நீங்க தப்பா நினைக்கக் கூடாது! ஊருக்குள்ள வரும்வரை எங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது. அப்பறம்தான் தெரிஞ்சது. தெரிஞ்ச பிறகு மனசுக்கு ஒரு மாதிரியாயிருக்கு. உண்மையிலேயே உங்க குடும்பத்துல சம்பந்தம் வச்சுக்க நாங்க ரொம்ப பெருமையாயிருந்தோம். இப்படி ஒரு கறை உள்ள குடும்பத்துல நாங்க எப்படி சம்பந்தம் வச்சுக்கறது?

    மங்களமூர்த்தியின் மீசை துடித்தது. அவருடைய அந்தஸ்து... கௌரவம்... அத்தனையும் அந்த அம்மாள் பேசிய பேச்சில் காற்றில் பறந்தது.

    நீங்க சொல்றது உண்மைதான். ஆனா என் அண்ணன் பொண்ணு செய்த காரியத்துக்கு நாங்க என்ன பண்ண முடியும்? எல்லா குடும்பத்திலேயும் இப்படியெல்லாம் நடக்கறது சகஜம்தானே?

    "நல்ல குடும்பங்கள்ல இப்படி நடக்காது. உங்க வீட்ல சம்பந்தம் கலந்தா எங்க குடும்ப கௌரவம் பாதிக்கப்படும்.

    எங்க மூணு பிள்ளைகளுக்கும் நல்ல இடத்துலயிருந்து பொண்ணு எடுத்திருக்கோம். நாளைக்கு இந்த புள்ளை ஒரு வார்த்தை சொல்லிட்டா..."

    நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. என் மகளை நான் கட்டுக்கோப்பாதான் வளர்த்திருக்கேன். என் அண்ணன் பொண்ணோட ஒப்பிடாதீங்க.

    எப்படி ஒப்பிடாம இருக்க முடியும்? எல்லாம் ஒரே ரத்தம்தானே?

    "இங்க

    Enjoying the preview?
    Page 1 of 1