Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vandhal, Sendral, Vendral...
Vandhal, Sendral, Vendral...
Vandhal, Sendral, Vendral...
Ebook99 pages44 minutes

Vandhal, Sendral, Vendral...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு மனிதனின் குண நலன்கள் அவன் வளரும் சூழ்நிலைகளை கொண்டு அமைகின்றது. இருப்பினும் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய நமது வாழ்க்கைப் பாதையில் நாம் சந்திக்கும் சில போராட்டங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் நமது குணாதிசயங்களை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. எம்.காம் படித்த வெகுளியான பெண் சுகன்யா நந்தகுமாரை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குள் பல கனவுகளுடன் வருகிறாள். அவளின் கனவுகள் நிறைவேறியதா? இல்லை சிதைந்ததா? வெகுளியாய் வந்தவளின் நிலை என்ன? வாழ்வில் அவள் எப்படி வென்றாள்? வாசித்தறிவோமா?

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580105707322
Vandhal, Sendral, Vendral...

Read more from Vidya Subramaniam

Related to Vandhal, Sendral, Vendral...

Related ebooks

Reviews for Vandhal, Sendral, Vendral...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vandhal, Sendral, Vendral... - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    வந்தாள், சென்றாள், வென்றாள்...

    Vandhal, Sendral, Vendral...

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    அடையார் பாலத்தில் கார் சீராக ஓடிக்கொண்டிருந்தது. பாலத்தின் மேலிருந்து பார்க்கையில் மின் விளக்குகள் நட்சத்திரங்களாய்ச் சுடர்விட்டன. எதுவுமே பேசாது அமைதியாக கார் ஓட்டிய அப்பாவை வியப்போடு பார்த்தாள் மீரா. வழக்கமாக கலகலவென்று பேசியபடி வருகிறவரின் திடீர் மௌனம் விசித்திரமாக இருந்தது. இரண்டு மூன்று முறை அப்பாவை ஓரக்கண்ணால் பார்ப்பதும் சாலையைப் பார்ப்பதுமாக இருந்தவள் மறுபடியும் அப்பாவைப் பார்த்தாள்.

    என்னாச்சுப்பா ரொம்ப ஸைலன்ட்டா வர? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா...?

    அப்பா அவளைப் பார்த்துவிட்டுச் சாலையில் கவனம் செலுத்தினார்.

    சொல்ல வேண்டாம்னு நினைச்சா வேண்டாம். ஆனா காருக்குள்ள பரவியிருக்கற இந்த மௌனம் எனக்குப் பிடிக்கல. ஏதாவது பாட்டாவது போடறேன்.

    மீரா சௌராசியாவின் குழலிசையைப் பரவவிட்டாள். இமயத்தின் மடியில் ஏகாந்தமாய்ச் சிந்தனையின்றி அமர்ந்திருக்கும் சுகத்தை அளித்த அந்தக் குழலிசையைக் கண்மூடி ரசித்தாள்.

    வேகம் குறைந்த கார் சாலையோரம் ஓரிடத்தில் நின்றது. மீரா அப்பாவைப் பார்த்தாள்.

    ப்ளீஸ் மீரா நீ கொஞ்சம் டிரைவ் பண்ணு, என்றவர் காரை விட்டிறங்கினார், மீரா புருவம் சுருங்க அவரைப் பார்த்தபடி நகர்ந்துகொள்ள, அவர் சுற்றி வந்து அவளிடத்தில் அமர்ந்தார். அவள் காரை ஓட்ட அவர் சற்றே சாய்ந்து அமர்ந்து கண்மூடிக் கொண்டார்.

    என்னப்பா, உடம்புக்கு முடியலையான்ன? மீரா கவலையோடு கேட்டாள்.

    யெஸ்...

    என்ன பண்றதுப்பா...? டாக்டர்கிட்ட வேணும்னா போகலாமா?

    வேண்டாம். ஐ நீட் சம் ரெஸ்ட்.

    அதற்குப் பிறகு மீரா எதுவும் பேசாது வண்டியை ஓட்டினாள்.

    போர்டிகோவில் வண்டி நிறுத்திய சப்தம் கேட்டு அம்மா வேகமாய் வெளியில் வந்தாள்.

    ஏங்க... எத்தனை தரம் போன் பண்ணினேன். ஏன் எடுக்கல...?

    வேலையார்ந்தேன்.

    நகைக்கடைக்காரர் போன்மேல போன் பண்றார். நாம டிஸைன் ஓ.கே பண்ணினாதானே அவங்க நகை செய்யமுடியும். நீங்க வந்ததும் நா கூட்டிட்டு வரேன்னு சொன்னேன். டிபன் சாப்டுங்க. நாம போய்ட்டு வந்துருவோம்.

    அப்புறம் பார்க்கலாம். அப்பா தன் அறைக்குச் சென்றார். டையைத் தளர்த்தியபடி ஏஸியைப் போட்டு, மல்லாந்து படுத்தார்.

    டிபன்கூட சாப்டாம வந்ததும் படுத்துட்டீங்க...!

    அம்மா, இங்க வரயா... அப்பாவைத் தொந்தரவு செய்யாத. அவருக்கு உடம்பு முடியல போல்ருக்கு. ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.

    என்ன உடம்புக்கு...?

    ஒண்ணுல்லம்மா. அவருக்கு டயர்டா இருக்கு. தூங்கட்டும், விடு.

    மீரா அம்மாவை இழுத்துக் கொண்டு வெளியில் போனாள்.

    ஏஸியின் குளுமை மெல்ல மெல்ல அறைக்குள் நிரம்ப நந்தகுமாரின் மூடிய கண்களுக்குள் சுகன்யாவின் முகம் அவரை உற்றுப்பார்க்க, சற்றே படபடத்தது அவருக்கு.

    பெண்ணோட பேசலாமா...?

    அதெல்லாம் வேண்டாம். நா பேசியாச்சு. அவளுக்குப் பிடிச்சிருக்கு...

    அவன் பேசவில்லை. அவன் காலில் அணியும் ஷூவிலிருந்து தலைவாரும் சீப்பு வரை அம்மாதான் தேர்ந்தெடுப்பாள். அவன் விருப்பத்தை அவள் கேட்டதில்லை. அம்மாவிடம் தனக்கிருப்பது மரியாதையா பயமா என்று அவனுக்குப் புரியவில்லை. எதற்கும் மறுபேச்சுப் பேசினதில்லை அவன். அந்த வீட்டின் எந்த முடிவுகளையும் அம்மாதான் எடுத்தாள். அவளது முடிவுகளை அவன் மறுத்ததில்லை.

    அப்பா...

    நந்தகுமார் கண் திறந்தார்.

    இஞ்சி டீ. இதைக் குடிச்சா கொஞ்சம் ஃபிரஷ்ஷா இருக்கும். சாப்டுங்க...

    அவர் எழுந்து டீயை வாங்கிக் கொண்டார்.

    நா இவ்ளோ டல்லா உங்களைப் பார்த்ததில்லையே. உங்களுக்கு உடம்பு சரியில்லையா இல்ல மனசு சரியில்லையா...?

    நந்தகுமார் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் அம்மா பதறிக்கொண்டு உள்ளே வந்தாள்.

    ஏங்க... பாருங்களேன். காளஹஸ்தி கோபுரம் இடிஞ்சு விழுந்துடுச்சாம்...!

    அப்டியா... அதைப்பத்திக் கவலைப்பட வேண்டிய சாமியே சிவனேன்னு இருக்கு. நீ ஏன் பதர்ற?

    உங்களுக்கு எல்லாமே வேடிக்கைதான். அம்மா மறுபடியும் நியூஸ் பார்க்க வெளியில் போனாள்.

    என்னவோ சொல்ல வந்தீங்களேப்பா?

    நேத்து வரை கம்பீரமா நின்ன கோபுரம் இடிஞ்சு கீழ விழுந்ததைப்பத்தி நீ என்ன நினைக்கிற மீரா?

    ஒரு வரலாறு கீழ விழுந்துவிட்டது. வருத்தமாதான் இருக்கு. அதோட உறுதி குறைஞ்சதுக்குக் காரணமானவங்க மேல வருத்தம் வருது. அதே நேரம் மறுபடியும் கோபுரம் எழுப்பற சக்தி நமக்கு இல்லையா என்ன?

    அவர் கண்கள் பளிச்சிட அவளைப் பார்த்தார்.

    யூ ஆர் கரெக்ட். கீழ விழுந்தா எழுந்து நிக்க முடியாதா என்ன... நீ போய் டிபன் எடுத்து வை. சாப்டுவோம்.

    அவர் எழுந்தார். உடை மாற்றி முகம் கழுவிக்கொண்டு வந்தார்.

    இப்பதான் பழைய அப்பா! மீரா பிளேட் எடுத்து வைத்தாள். அம்மா கோபுரம் விழுந்த செய்தியிலேயே முழுகிப் போயிருந்தாள்.

    "சாப்ட்டுட்டு மாடிக்குப் போகலாம் மீரா. உங்கிட்ட நா கொஞ்சம் பேசணும். ஆனா

    Enjoying the preview?
    Page 1 of 1