Kann Varaintha Oviyam
()
About this ebook
நாவலின் துவக்கம் முதல் இறுதி வரை பரபரப்பும், திடுக்கிடலும், திருப்பங்களும் நிறைந்து வழிந்து ஓடுகிறது... எங்கோ நடக்கும் கொலை காட்சியை அப்படியே ஓவியமாக தீட்டுகிறான் வினோதன். அவனை விரும்புகிறாள் காந்தர்யா. அவனே அந்த கொலையை செய்து விட்டு அதை ஓவியமாக தீட்டுவதாக அவனை லாக்கப்பில் வைத்து பூட்டுகின்றனர். அடுத்து நடக்கும் கொலையை லாக்கப் அறையின் சுவற்றில் தீட்டுகிறான். அந்த காட்சிப்படியே இன்னொரு இடத்தில் கொலை நடந்திருக்கிறது.
வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம்? என்பது குறித்து டாக்டர், மனோவியல் துறை புரபசர் அவர்களிடம் விவாதிக்கப்படுகிறது. "மனதில் உண்டாகும் எண்ணங்களுக்கு உருவம், ரூபம், வர்ணம் முதலான குணங்கள் உண்டு. அவற்றை படம் பிடித்து விடலாம்" என்ற உண்மையை நம்ப இயலாததாய் இருக்க... அடுத்து நடக்கப் போகும் கொலையை தடுக்க அவனை ஓவியம் வரையுமாறு உதவி கேட்கிறார் இன்ஸ்பெக்டர். கருப்பு உடை அணிந்த அந்த மர்ம உருவம் யார்? என்பது முடிவில் தெரியும் போது ... திடுக்கிட்டுகின்றனர்.
"சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவந்து சேர எட்டு நிமிடங்கள் பிடிக்கும். ஆனால், மனம் ஒரு நொடிக்குள் சூரியனுக்கு சென்று விடும்" என்பதற்கு உண்மையையும் நம்ப இயலாததாய் கருத, வினோதனின் இத்தகைய சக்தி எப்படி சாத்தியம் என்பது குறித்து டாக்டர் புரபசரிடம் காவல்துறை மீண்டும் விவாதிக்கிறது. இறுதியில் கருப்பு உடை அணிந்து கொலை செய்கிற அந்த உருவம் யாரென தெரிகிற போது கதையில் மட்டுமல்ல, வாசகர்களின் மனதிலும் தான் அந்த அதிர்ச்சி கலந்த திருப்பம் உண்டாகும். இனி கண்கள் எப்படி ஓவியம் வரையும்? என்பதை "கண்வரைந்த ஓவியம்" படித்து அறிந்து கொள்ளுங்களேன்...
Read more from V. Tamilalagan
100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnvizhi Neeyandro! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Varum Kanney Rating: 0 out of 5 stars0 ratingsPattaya Kilappum Pattai Maruthuvam Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Mazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsPoovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kann Varaintha Oviyam
Related ebooks
Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsIlakkanam Meeriya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsAntharathil Sundari Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathanidu Rating: 0 out of 5 stars0 ratingsMalai Sarivil Oru Tea Kadai Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Nathigal Rating: 0 out of 5 stars0 ratingsPani Nilavai Pathiyanidu Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsManitha Subavam Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKannathil Muthathin Eeram! Rating: 0 out of 5 stars0 ratingsEn Vizhiyil Yen Vizhunthaai Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Nattupura Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsNilaiyattra Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsNiram Marum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsSuthi Suthi Vandheega... Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Maayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsCrime Sooravali Rating: 5 out of 5 stars5/5Naan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Vaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsKathi, Thupakki, Kanneer Rating: 5 out of 5 stars5/5Kaadhal Neethana!? Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nanalla Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5Unnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kann Varaintha Oviyam
0 ratings0 reviews
Book preview
Kann Varaintha Oviyam - V. Tamilalagan
https://www.pustaka.co.in
கண் வரைந்த ஓவியம்
Kann Varaintha Oviyam
Author:
வெ. தமிழழகன்
V. Tamilalagan
For more books
https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
மதுமிதா இம்போர்ட்டட் கம்பெனி. மார்க்கெட்டிங் மேனேஜர் மனோன் முரளியின்முன்வந்து நின்றாள் காந்தர்யா!
குட் மார்னிங் சார்!
"குட் மார்னிங், காந்தர்யா! இப்பதான் இ மெயில் வந்தது. சிங்கப்பூரிலிருந்து நம் எம்டி வருகிறார்.அவரை விமான நிலையத்தில் இருந்து ரிசீவ் செய்து வரணும்.
'அதுக்கு நீங்க போறது தான் பெட்டர்னு தோணுது சார்!"
உண்மைதான். ஆனால் ஒரு மாதமாக தள்ளிப்போன இன்டர்வியூ இன்று நடத்தியாக வேண்டும்!
ஓகே சார்.நான் போகிறேன்.
காந்தர்யா அறையை விட்டு வெளியே வந்தாள்.
காரை கிளப்பினாள். சர்ரெனஓடவிட்டாள். 15 நிமிட ஓட்டம்.
சாலையோரம் பைக் சரிசெய்து கொண்டிருந்தான் கபிலேஷ்! காரை நிறுத்தினாள்.
ஹாய், கபிலேஷ்!
"காந்தர்யா நீங்களா!
எஸ்.என்ன ஆச்சு பைக்ல?
கிளட்ச் வயர் கட்!
பைக் நிற்கட்டும். கார்ல ஏறுங்க. மெக்கானிக்கை அனுப்பலாம்!"
வேண்டாம்!
ஏன்?
உங்க கூட கார்ல வர்றதை பார்த்தா, நெருக்கமாக இருப்பதாக தவறாக பேசுவார்கள்!
நான் உன்னை காதலிக்க ஆரம்பித்து 3082 மணி நேரமாயிற்று.கிளம்பு.
காந்தர்யா சொல்ல, அவன் இன்ப அதிர்ச்சியில் அசைவற்று நின்றான்.
என்ன யோசனை கபிலேஷ்?
"நீங்க ஒரு பெரிய கம்பெனியோட உதவி மேனேஜர். நான் சாதாரண சேல்ஸ் முகவர். இது சாத்தியப்படுமா? என்று யோசிச்சேன்.
'வாழ்க்கைக்கு நம்பிக்கை மிக அவசியம்.அனுபவம் ஒரு நம்பிக்கையான விளக்கு.இதன் துணை கொண்டு வழி நடக்கலாம்.' என்பதை உணர்த்த வேண்டும் என நினைத்தவள்,
ஓகே. நான் சொல்றதுல இன்னும் நம்பிக்கை வரலைனு நினைக்கிறேன். எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. எப்போ முகூர்த்தம் வைத்துக் கொள்ளலாம்?
என்று காந்தர்யா கேட்க, அவன் அதிர்ந்தான்.
அது அவ்வளவு சீக்கிரம் முடியாது!
ஏன்?
"எனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். வரன் அமையவில்லை. டவுரி பிராப்ளம் தான்.தள்ளிப் போகிறது. அவளுக்கு கல்யாணம் முடிய வேண்டும்.
பணம் கிடைத்தால் கல்யாணம் முடிந்து விடுமா?
முடிந்துவிடும்!
எவ்வளவு தேவை?
10 லட்சம்
என்றான்.
'நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால்.. கண்டதையும், கேட்டதையும் பிறரிடம் சொல்லக்கூடாது. தனிப்பட்ட ரகசியம் எதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடாது.நாம் செய்யும் வேலையை பிறரிடம் ஒப்படைக்க கூடாது. என்பதை அவன் அறியவில்லை.
"டோன்ட் ஒர்ரி. உனக்காக நான் எதையும் செய்ய தயார்.காரில் ஏறு கபிலேஷ்!
உன்னை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு போகிறேன்! "என்று அவள் கார் கதவை திறந்து விட, டூவீலர் சைடு லாக் போட்டு நிறுத்திவிட்டு காரில் அமர்ந்தான், கபிலேஷ்.
விமானநிலையம்.
விமானத்தின் முக்கிய பாகம் பழுதடைந்து சாய்வாக இறங்கியது. தரையில் அழுத்தமாக உரசி தள்ளாடியபடி ரன்வேயில் ஓடி நிற்க, குபுகுபுவென புகை பரவியது...
விமான நிலையம் பரபரப்பானது. பயணிகள் தாறுமாறாக ஓடினர். கதம்பமான அலறல் குரல். சிப்பந்திகள் பயணிகளை வெளியே கொண்டுவந்தனர்.அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையில் அழைத்துவரப்பட்டார், சங்கர் ஆனந்த்! அவர்தான் எம்டி.
சங்கர் ஆனந்த் மயக்க நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்க, கையிலிருந்து சூட்கேஸ் நழுவியது. ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
சார்!
என அதிர்ந்தாள். காந்தர்யா சூட்கேசை எடுத்துக்கொண்டாள். சிப்பந்திகள் அவளை பின்னுக்குத் தள்ளினர்.
பெட்டியுடன் காருக்கு வந்தாள்.காரை கிளப்பி ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் நிறுத்தினாள். பெட்டியை திறந்து பார்த்தா ள்.சிலபைல்கள். வியாபார ஒப்பந்த பத்திரங்கள். அதற்கு கீழே 2000 ரூபாய் நோட்டு கட்டுகள்!
காந்தர்யாவின் கண்கள் அதைக்கண்டு விரிந்தன. அதனுடன் ஒருகடிதம். பிரித்துப் பார்த்தாள். அவளை அதிர்ச்சி மேகம் சூழ்ந்து கொண்டது. நெஞ்சில் படபடப்பு.
பெட்டியை மூடினாள்.
செல்போனில் மனோன் முரளியை தொடர்பு கொண்டாள்...
இன்டர்வியூ நடத்திக்கொண்டிருந்தார் மனோன் முரளி.
வினோதன், சுமனா இருவரும் அவர் முன் அமர்ந்து இருந்தனர்.
மிஸ்டர் வினோதன்! இன்டர்வியூ வந்த நூற்றுக்கணக்கான வர்களில் உங்கள் இரண்டு பேரை மட்டும் தான் பைனல் இன்டர்வியூக்காக தேர்வு செய்து இருந்தேன். காரணம் என்ன தெரியுமா?
என்றார் மனோன்முரளி.
"சொல்லுங்கள் சார்!’
உங்க பர்சனாலிடி தான்! பர்சனாலிட்டி பத்தி உங்களால கருத்து சொல்ல முடியுமா?
"முடியும் சார்.இந்த உயிரும் உடலும் இணைந்து செயல்படும்போதுதான் மனம் என்ற மறைபொருளும் செயல்படுகிறது. இந்த பரிபூரண நிலையில்தான் மனம் விளக்கமாக இயக்கமாக_ செயல்படுகிறது.இதை மனம் என்றும், குணம் என்றும், மனித தன்மை என்றும், மனிதன் என்றும் அழைக்கிறோம்! இதையே 'பர்சனாலிட்டி '. என்பார்கள்.
குட். வினோதன் என்பவர் ஒரு மனிதன். மனிதன் என்பவர் யார்?
"உயர் போன பின் இந்த உடலுக்கு வேறு பெயர் உண்டாகிறது.' உயிர்தான் மனிதனா?'என கேட்டால், இல்லை. உடல் இல்லாத உயிர் கிட்டத்தட்ட வேறு பெயரில் தானே அழைக்கப்படுகிறது? ஆவி என்று சொல்கிறார்களே... அது இரண்டையும் பிரிக்க முடியாமல் உயிரும், உடலும் கலந்தது தான் மனிதன்!'
என்றான் வினோதன். அந்த பதிலைக் கேட்டு திடுக்கிட்டார். மிகவும் வித்தியாசமாக சிந்திக்கிரா னே! எனஅதிர்ந்தார்.
சரி.மனிதனின் மனம் பற்றி உங்கள் கருத்து என்ன?
எண்ணம், சிந்தனை, உணர்ச்சி, கற்பனை அறிவு திறன் இவை அனைத்தும் செயல்பாட்டினால் வெளிப்படுவதே மனம். இதற்கப்பால் நுண்ணிப்பாக இயங்கும் பரவெளி மனதுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் உடையது. மனம்தான் 1400 கோடி நரம்பு செல்கள் உருவான மூளையை சந்தித்து உடலை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமையை பெற்றதுவே மனம்!
எக்ஸெலண்ட், ஆன்சர் மிஸ்டர் வினோதன்! இதற்கு இன்னும் விளக்கம் இருக்கிறதா?
இருக்கிறது, சார்!
1400 கோடி நரம்பு செல்களால் ஆன மனித மூளையில் உணர்வுகளை வெளிப்படுத்தும் 240 கோடி நியூரான்களை கொண்டு சிலந்தி வலை பின்னலை போல் வெளி உலகுடன் தொடர்பு ஏற்படுத்தும் மின்காந்த வலைப்பின்னலே மனம் என்றும் விளக்கலாம்!
"அடேயப்பா! ஆச்சரியமாக, இருக்கிறது. மனம்தான் அறிவா?
"தற்பெருமை இறுமாப்பை கலையும் போது நியூரான்கள் துணையுடன் பேரழிவை கிரகித்துக் கொள்கிறது. மனம் எதனையும் அறிகிற ஆற்றலை பெறுவதோடு மற்றவர்கள் மனதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் மனிதத் தன்மையையும் பெறுகிறது மனம்.
"சூப்பர்! எனக்கு என்னவோ உன்னை பார்த்தால் உனக்குள் ஏதோ அபூர்வ சக்தி இருப்பது போல் தோன்றுகிறது. உன்னை பிறகு நான் பிரம்மாண்ட முறையில் பயன்படுத்திக் கொள்கிறேன். நம்முடையது மருந்து கம்பெனி.உன்னிடம் ஓவியத்திறமை