Manasellam Mazhai Megam
()
About this ebook
"செங்கையன்" என்ற பெயரில் மாலைமலர் தேன்மலர் பகுதியில் 13 வாரம் தொடர்கதையாக வெளிவந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை ஈர்த்து பாராட்டவும் செய்தது.
அரிதாக பூக்கும் குறிஞ்சியை போன்றவள் செண்டு. திருமணத்தன்று கணவன் பேசிய அவச்சொல் தாழாமல் செங்கையன் வீட்டில் தஞ்சம் அடைகிறாள்... ஊருக்காக மழை வேண்டி சுடு பாறையில் படுத்து தண்ணீர் பாறை விரதம் இருக்கிறாள்... மழை பொழிய வைத்து கற்பை நிலை நிறுத்துகிறாள். உதவி தேவைப்படும்போது மனிதாபிமானம் உந்தப்பட்டு செய்கிறோமே அதுதான் உறவுகளை வலிமைப்படுத்தும் என்பதை நிரூபிக்கிறான் செங்கையன்.
உறவும் இனிமையும் வாழ்வின் அதீத இன்பம் என்பதே செங்கையன் மீது கொண்ட காதலால் நிரூபிக்கிறாள் செல்லக்கிளி! நிலத்துக்கு ஆசைப்பட்டு ஊர் பாறையின் ஊற்றை அடைத்து வறட்சியை உண்டாக்கி... பஞ்சம் வரவழைத்து... ஊரையே காலி செய்கிறான் மிராசு. தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்பது ஆத்மாவை தூய்மைப்படுத்தும்; என்பதை உணர்த்தி அந்த கிராமத்தை மீண்டும் வளம் கொஞ்சம் வைக்கும்போது மாளாத மழை பொழிவது கிராமத்தில் உள்ள அனைவரின் நெஞ்சங்களில் மட்டுமல்ல அனைவரின் மனங்களிலும் தான். இந்த மாற்றம், மறுமலர்ச்சி எப்படி? என்பதை விளக்கும் கதை "மனசெல்லாம் மழை மேகம்". இதை படிக்கின்ற ஒவ்வொருவரின், மனசும் மழை மேகமாக மாறும் என்பது உறுதி.
Read more from V. Tamilalagan
Poovukul Uyir Vaasam Rating: 0 out of 5 stars0 ratingsPattaya Kilappum Pattai Maruthuvam Rating: 0 out of 5 stars0 ratingsEnvizhi Neeyandro! Rating: 0 out of 5 stars0 ratingsKann Varaintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Varum Kanney Rating: 0 out of 5 stars0 ratings100 Oru Pakka Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Manasellam Mazhai Megam
Related ebooks
Malaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaseegaram Rating: 4 out of 5 stars4/5Yazhini Endroru Thenaruvi Rating: 4 out of 5 stars4/5Meendu(m) Varuven Rating: 0 out of 5 stars0 ratingsThottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Kaattrukkenna Veli? Rating: 5 out of 5 stars5/5உன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsKannamma Kaathirukiral Rating: 0 out of 5 stars0 ratingsNayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Lakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsShshsh… Rating: 0 out of 5 stars0 ratingsSigappu Illadha Signal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagin Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsMogame Mounamai... Rating: 0 out of 5 stars0 ratingsVetti Verkal Rating: 0 out of 5 stars0 ratingsMaariyathu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsEnnavarey Mannavarey Rating: 0 out of 5 stars0 ratingsKulirkaala Kutravaligal Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Nilavae Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsCycle Rating: 0 out of 5 stars0 ratingsVadakke Oru Pudhayal! Rating: 0 out of 5 stars0 ratingsYaaga Pasukkal Rating: 0 out of 5 stars0 ratingsMaragathalingam Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsEllai Kodu Rating: 3 out of 5 stars3/5Aahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Kilakku Sivakkaiyile Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manasellam Mazhai Megam
0 ratings0 reviews
Book preview
Manasellam Mazhai Megam - V. Tamilalagan
https://www.pustaka.co.in
மனசெல்லாம் மழை மேகம்
Manasellam Mazhai Megam
Author:
வெ. தமிழழகன்
V. Tamilalagan
For more books
https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
துடும்பு சத்தம் கேட்டது. வீட்டுக்குள் இருந்த பலரும் வீதிக்கு வந்தனர். துடும்பு போட்டவன் சொன்னதை கேட்டனர்.
எல்லாம் மூடுகண்ணி அம்மன் கோயில்கிட்ட தவறாமல் வந்துடனும். பஞ்சாயத்து உத்தரவு. பகைச்சுக்காத சாமிகளே...
என்று ராகம் போட்டு சொல்லிவிட்டு மீண்டும் துடும்பை ஒலிக்க விட்டான். ஊராரை பதற்றம் பற்றிக் கொண்டது.
பரபரப்பு பரவியது. 'என்னவாக இருக்கும்?' என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர். முகத்தை முகம் பார்த்துக்கொண்டனர். ஒன்றும் புரியவில்லை. ஒருவர் தவறாமல் அம்மன் கோவில் முன்னே வந்தனர். ஆலமரத்தடியில் நின்றனர். அங்கே பஞ்சாயத்து கூடுகிறது என்றால் ஏதோ நடக்கப்போகிறது என்று அர்த்தம்!
இன்று என்ன நடக்கப் போகிறது?
சிவசாமி வந்து கல்மேடையில் உட்கார்ந்தார்.
அவரை கண்ட ஜனங்கள் பயபக்தியுடன் எழுந்து நின்றனர். கும்பிடு போட்டனர் .காரணம், சிவசாமி மிட்டா, மிராசுதாரர். தனவான். அவர் சொல்வதை அப்படியே கேட்கும் மக்கள். இவர்களிடம்_
அவர் கனவில் அம்மன் வந்து சொன்னதை ஊராருக்கு சொல்லத்தான் இந்தக் கூட்டம்.
அவரைச் சுற்றிலும் பல வேலைக்காரர்கள் பவ்யமாய் நின்றனர் .அவர் செறுமிய படி பேச்சை தொடங்கினார்.
எல்லாம் வந்தாச்சா?
வந்தாச்சுங்க ஐயா
கைகட்டி பணிவுடன் ஒருவர் சொல்ல, சிவசாமி தொடர்ந்தார்...
அம்மன் ராத்திரி சொப்பனத்தில் வந்துச்சு. ஒரு சேதி சொல்லிச்சு. ஊரே வறண்டு போக போகுது. மண்டை காய்ச்சலா காயப்போவது. மரம் செர்த்து, செடி செத்து மனுசெரெல்லாம் சாகப்போகிற சங்கலவம் வரப்போவது என சொல்லுச்சு!
எனக் கூரை நிறுத்தினார்.
அனைவரும் அதைக் கேட்டு திடுக்கிட்டனர். அச்சம் கொண்டனர்.
பீதி அடைந்தனர்.
முன்பு ஒரு தடவை அப்படித்தான்.
' ஊருக்குள்ள காலரா வரப்போவது அம்மன் பலி கொள்ளப் போகிறா' என்று சொன்னார்.
சொன்ன மாதிரியே ஆகிவிட்டது. பல பேர் செத்து விட்டார்கள்.
இப்போ ஒரே மண்டை காய்ச்சலா காயப்போகுதாமே? என நினைத்து அச்சம் கொண்டனர்.
கூட்டத்தில் இருந்து முன்னாள் வந்தான் காத்தான்.
"ஐயாஒரு சந்தேகம்! பாலி ஊற்று ஓடுற வரையில் நம்ம பூமியில பவளம் போட்டு பவளம் எடுக்கலாம்.
பச்சை பசேல்னு இருக்க இந்த ஊரை பாங்கடா போகப்போகுதுன்னு சொல்லுறீங்களே?" என கேட்டான்.
அடே, அடிமூலி! இது ஐயா சொல்றதில்லடா. அம்மன் சொன்னது! சொல்றத கேளு. சொன்னபடி செய். கிறுக்குத்தனமா பேசாத. அப்புறம் உன்னால சிரமப்பட்டு ஊரே அழிகிறாப்ல ஆயிடும்
_ என அதிட்டினான் நாகமுத்து. ஆத்திரம் பொங்கிய அவன் முகத்தை பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
காத்தான் கேட்டதும் சரிதான். ஒரு மலைப்பகுதியை ஒட்டிய கிராமம். ஊத்துக்காடு என்பார்கள் .ஒரு கரட்டின் மடிப்பில் இருந்து பொங்கி வழிந்து பெரிய ஓடையாய் பெருக்கெடுத்து ஓடியது... பாலி ஊத்து தண்ணீரால் கிராமமே தானிய களஞ்சியமாய்இருந்தது. இங்கே திடீரென வறட்சி எப்படி வரும்? என்பதுதான் காத்தானின் சந்தேகம். அவனைப் போலவே பலரின் சந்தேகமும். ஆனாலும் சிவசாமியின் எந்த வாக்கும் பொய்த்தது இல்லை. வானம் பொய்த்தாலும் பொய்க்கும்; இவரது வாக்கு பொய்த்ததே இல்லை என்பதால்... அவர் சொன்னதை நம்பத்தான் வேண்டி இருந்தது. காத்தான் வாய் அடங்கிப் போக... சிவசாமி பேசினார். "ஊர்ல நீங்க எல்லாம் உபத்திரவம் படக்கூடாது என்று தான் அம்மன் என்கிட்ட சொன்னதை நான் உங்ககிட்ட சொன்னேன். பசுங்காடா இருக்கிற இந்த ஊரெல்லாம் பாங்கடா மாறாம இருக்கணும்னா...
பாலிவுட் பக்கத்துல இருக்கிற பொறம்போக்கு இடத்தில கோயில்கட்டி, பச்சைமாவிடிச்சு கும்புடனும் .தெரிந்த குத்தத்துக்கு ஆளாகலாம். தெய்வக் குத்தத்துக்கு ஆளாகலாமா? அதனால இன்னிக்கே, இப்பவே அஸ்திவாரம் போடணும்... எல்லாரும் எம் பின்னாடி வாங்க..."
_ உத்தரவிடுவது போல சிவசாமி சொல்ல, அவரது வேகமான நடைக்கு ஈடு கொடுப்பது போல் அனைவரும் ஆவேசமாக நடந்தனர். அவர் வடிவில் அம்மனே வந்து சொல்லியது போல