Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Varum Kanney
Kaadhal Varum Kanney
Kaadhal Varum Kanney
Ebook62 pages22 minutes

Kaadhal Varum Kanney

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வெற்றிலையும், பாக்கும், சுண்ணமும் வெவ்வேறு நிறங்கள் எனினும் மென்று விட்ட பிறகு சிவப்பு என்கிற நிறமாகவும்; களிப்பு என்கிற சுவையாகவும் மாறுவதே போன்று செல்லி, செல்லக்கண்ணுவின் வாழ் நிறம் ஒன்றாகிறது. உருகி, மருகி ஓர் உன்னத போரில் உணர்வுகள் வெற்றி கொள்ளும் போது காதல் மலர்கிறது.

விரதத்தை விதிப்படி செய்யும் பக்தன் ஒருவனுக்கு கிடைக்கும் வரம் போல... செல்லக்கண்ணு, செல்லி காதல் அன்பு வளர்கிறது. புதையல் நிறைந்த பொற்காசுகளை கொட்டும் பானையைப் போல, தன் மனோ வினோதங்களை பகிர்ந்து கொள்ளும் பாத்திரங்களின் விதம் படிப்பவரை பெரும் மூச்சை விடச் செய்யும். எல்லையில்லா பரப்புடைய பிரபஞ்சத்தை சுற்றும் எண்ணற்ற கோள்களை போல... முதலில் உதிர்ந்து முடிவில் மலரும் செல்லியின்உள்ள கிடக்கையை என்னவென்று சொல்ல! இரு வேறுபட்ட மனங்களின் தின்மையில் உண்டாகும் உறவு என்பது அசைக்க முடியாத அஸ்திவாரத்தை போன்றது! "காதல் வரும் கண்ணே!" நாவல் கிராமத்து தென்றலாய் வாசக நெஞ்சங்களை நிச்சயம் வருடும்.

Languageதமிழ்
Release dateJan 14, 2023
ISBN6580158809392
Kaadhal Varum Kanney

Read more from V. Tamilalagan

Related to Kaadhal Varum Kanney

Related ebooks

Reviews for Kaadhal Varum Kanney

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Varum Kanney - V. Tamilalagan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் வரும் கண்ணே

    Kaadhal Varum Kanney

    Author:

    வெ. தமிழழகன்

    V. Tamilalagan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-tamilalagan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    கோவில் வேலை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கோபுரம் எல்லாம் கட்டி முடித்து அதில் சிற்பங்கள் செதுக்கி கொண்டிருந்தார்கள். சிற்பிகளில் முக்கியமானவன் செல்லக்கண்ணு. இளைஞன்.நல்ல கட்டுமஸ்தாக இருந்தான். கோவில் முகப்பில் குதிரைகளும் அதன் மேல் அய்யனார் அமர்ந்திருப்பது போலவும் சிலை செய்ய முடிவு செய்து அதன் பொறுப்பை செல்லக்கண்ணு விடவும் ஒப்படைத்து இருந்தார்கள். குதிரை சிலை செய்து அதன் முகப்பொலிவை ஜொலிக்குமாறு வண்ண வேலை செய்து கொண்டு இருந்தான் செல்லக்கண்ணு.

    ஊரே அதைப்பற்றிய பேச்சுதான்.அப்போது குடத்தோடு இரு பெண்கள் அங்கே வந்தார்கள்.

    பரண் அமைத்து அதன் மேல் நின்றபடி வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த செல்லக்கண்ணு அவர்களைப் பார்த்தான். இரண்டு பேரில் ஒருத்தி சொல்லி.

    குதிரைகள் ரெண்டும் நிஜ குதிரைகள் மாதிரியே இருக்குடி! பாய்ந்து ஓடுற மாதிரி அப்படியே தத்ரூபமா இருக்கு. ஆமா,மல்லிகா,! குதிரையோட கண்ணுங்க ரெண்டும் எவ்வளவு அழகா இருக்கு பாரு!

    ஆ... மா மா... செல்லிங்கிற பருவப்பண்ணை ஆசையோடு முறைத்து பாக்குதடி! என்று செல்லியின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் மல்லிகா.

    "ச்சீ! என்னடி இது?என்றபடி அவள் கைகளை விலக்கி விட்டாள்,செல்லி. செல்லக்கண்ணு காரிய மாற்றிய படியே இவர்களைப் பார்த்தான். சிற்பம் போல இருந்தாள். கொட்டவிழிக்கும் அகல கண்களும்... அந்த கன்னங்களும்... நிற்கும் ஒயிலும் அவன் கண்ணோடும் நெஞ்சோடும் அப்படியே ஒட்டிக்கொண்டது.

    மல்லிகா தான் மீண்டும் பேசினாமள்,பாத்தியாடி செல்லி! பாத்தோம். பாக்காத மாதிரி பசுமாட்டுக்கு புண்ணாக்கு மாதிரி... பாசாங்கு பண்ணிக்கிட்டு இருக்காரு, அந்த மைனர்! என்றாள் மல்லிகா.

    பேசாம இருடி! வீண் பேச்சு பேசாதே,செல்லி! தன் தோழியை அதட்டி கொண்டிருந்த அதே நேரம்... கையில் இருந்த சின்ன பூசு கரண்டியை தவறவிட்டான் செல்லக்கண்ணு. மல்லிகாவின் முன்னால் அது விழுந்தது.மேலே நிமிர்ந்தவள்,

    அடியாத்தி! அழகான பொண்ணுங்களை பார்த்தா அலை பாய்ஞ்சிடு வீங்களே! கரண்டியதவறவிட்ட மாதிரி மனச விட்டறாத மைனரு... ரொம்ப கஷ்டம்! என்றவள் குனிந்து கரண்டியை எடுத்தாள். அந்த வாய் துடுக்கு காரியின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டு, மல்லிகா! அந்த கரண்டியை அப்படியே எடுத்து போடும்மா! உனக்கு புண்ணியமா இருக்கும்! என்றான்.

    பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதை கண்டு அசந்து போன மல்லிகா கரண்டியை தூக்கி மேலே வீசினாள்.மீண்டும் கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1