Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thagappatta Meengal
Thagappatta Meengal
Thagappatta Meengal
Ebook69 pages32 minutes

Thagappatta Meengal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Thagappatta Meengal

Read more from V.Thamilzhagan

Related to Thagappatta Meengal

Related ebooks

Related categories

Reviews for Thagappatta Meengal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thagappatta Meengal - V.Thamilzhagan

    11

    1

    கோவில் வேலை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. கோபுரம் கட்டி முடித்து; அதில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

    சிற்பிகளில் முக்கியமானவன் செல்லக்கண்ணு. இளைஞன். நல்ல கட்டிளங்காளையாக இருந்தான்.

    கோவில் முகப்பில் குதிரைகளும், அதன்மேல் அய்யனாரும் அமர்ந்திருப்பது போலவும் சிலை செய்ய முடிவு செய்து, அதன் பொறுப்பை செல்லக் கண்ணுவிடம் ஒப்படைத்திருந்தார்கள்.

    குதிரை சிலை செய்து, அதன் முகப்பொலிவை ஜொலிக்குமாறு வண்ண வேலை செய்து கொண்டிருந்தான் செல்லக்கண்ணு.

    ஊரே அதைப் பற்றிய பேச்சுத்தான். குடத்தோடு இரு இளம் பெண்கள் அங்கே வந்தனர்.

    பரண் அமைத்து, அதன் மேல் நின்றபடி வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த செல்லக்கண்ணு அவர்களைப் பார்த்தான்.

    இருவரில் ஒருத்தி, செல்லி! குதிரைகள் இரண்டும் நெஜக்குதிரைகள் மாதிரியே இருக்குடி. பாய்ஞ்சு ஓடுறமாதிரி அப்படியே தத்ரூவமா இருக்கு.

    ஆமா, மல்லிகா. குதிரைகளோட கண்ணுங்க ரெண்டும் எவ்வளவு அழகா பார்க்குது பாரு.

    ஆமாமா... செல்லிங்கற பருவப்பொண்ணை ஆசையோட மொறைச்சு பாக்குதடீ... என்று செல்லியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள் மல்லிகா.

    ச்சீ! என்னடி இது? என்றபடி அவள் கைகளை விலக்கிவிட்டாள் செல்லி.

    செல்லக்கண்ணு, காரியமாற்றியபடியே இவர்களைப் பார்த்தான்.

    செல்லி செதுக்கி வைத்த சிற்பம் போல இருந்தாள். கொட்ட விழிக்கும் அகலக் கண்களும்... அந்தக் கன்னங்களும்... நிற்கும் ஒயிலும்... அவன் கண்ணோடும் நெஞ்சோடும் அப்படியே ஒட்டிக் கொண்டது...

    மல்லிகாதான் மீண்டும் பேசினாள்.

    பாத்தியாடி செல்லி! பாத்தும் பாக்காத மாதிரி பசுமாட்டுக்கு புண்ணாக்கு மாதிரி பாசாங்கு பண்ணிக்கிட்டிருக்காரு அந்த மைனரு... என்றாள்.

    மல்லிகா! பேசாம இருடி. வீண்பேச்சு பேசாதே - செல்லி தன் தோழியை அதட்டிக் கொண்டிருந்த அதே நேரம், கையிலிருந்த சின்ன பூசு கரண்டியைத் தவற விட்டான் செல்லக்கண்ணு.

    மல்லிகாவின் முன்னால் அது விழுந்தது. மேலே நிமிந்தவள்,

    அடி ஆத்தி! அழகான பொண்ணுகள பாத்தா... அலைபாஞ்சிருவீங்களே... கரண்டிய தவறவிட்ட மாதிரி... மனச கினச வுட்ராத மைனரு... அப்புறம் ரொம்பக் கஷ்டம். என்றவள் குனிந்து கரண்டியை எடுத்தாள்.

    அந்த வாய்த் துடுக்குக்காரியின் பேச்சைக் கேட்டு, சிரித்துக் கொண்டு,

    மல்லிகா! அந்த கரண்டியை அப்படியே எடுத்துப் போடும்மா. உனக்குப் புண்ணியமா இருக்கட்டும். என்றான்.

    பெயரைச் சொல்லி கூப்பிட்டதைக் கண்டு அதிர்ந்து போன மல்லிகா... கரண்டியைத் தூக்கி மேலே வீசினாள்.

    மீண்டும் கீழே விழுந்தது. மறுபடி எடுத்துப் போடச் சொன்னான்.

    ஒருதடவ எடுத்துப் போட்டே கை சுளுக்கிடிச்சு. நம்மால ஆவாது. நான் தண்ணி எடுத்துப் போகணும். என்றவள் செல்லியை திரும்பிப் பாராமல் நடந்தாள்.

    ‘இத்தனை முறை பேசும் அவளுக்கு வாய் சுளுக்கவில்லையே?’ என நினைத்தவன், செல்லியைப் பார்த்தான்.

    அவன் பார்வை உதவி கேட்டுக் கெஞ்சியது. மல்லிகாவைப் போல தானும் செய்ய விரும்பவில்லை.

    அவன் பரண் மீதிருந்து பாதி தூரம் இறங்கியிருப்பான்.

    நீங்க ஏன் இறங்கிட்டு மறுபடி மேலே ஏறி கஷ்டப்படனும்? அப்படியே இருங்க - நான் எடுத்துப் போடுறேன் என்ற செல்லி கரண்டியைத் தூக்கிப் போட்டாள்.

    குறிதவறிவிட்டது. பரண் கட்டியிருந்த மூங்கில் மீது மோதி, மோதிய வேகத்தில் விழுந்து, கரண்டியின் கூரான பகுதி அவளது காலைப் பதம் பார்த்தது.

    ஆ... அம்மா..., என அலறிய செல்லி, பாதத்தைப் பிடித்தபடி கீழே

    Enjoying the preview?
    Page 1 of 1