Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Meettum Veenai
Uyir Meettum Veenai
Uyir Meettum Veenai
Ebook68 pages46 minutes

Uyir Meettum Veenai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By V.Thamilzhagan
Languageதமிழ்
Release dateMay 15, 2019
ISBN9781043466572
Uyir Meettum Veenai

Read more from V.Thamilzhagan

Related to Uyir Meettum Veenai

Related ebooks

Related categories

Reviews for Uyir Meettum Veenai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Meettum Veenai - V.Thamilzhagan

    16

    1

    கதவைத் தட்டினாள் கபிலா.

    திறந்தது. மங்கை எட்டிப் பார்த்தாள். முகம் மாறியது.

    இங்க எதுக்காக வந்தே? என்றாள் வெறுப்புடன்.

    உங்ககூட வாழ வந்திருக்கேன் அத்தை! நான் உள்ளே வரலாமா? என்றாள் கபிலா.

    ஏய்... எங்ககூட வாழ நீயாரு?

    உங்களுக்கு மருமகளாகியிருக்க வேண்டியவ. விதி. விலகிப் போச்சு. என்னையும், உங்களையும் காப்பாத்தணும்னு முடிவு செய்தேன். வந்தேன். அனுமதியுங்க என்றாள். கண்கள் மினுங்கியது. குரல் அடைத்தது.

    குருவரதன் எழுந்து வந்தார். மங்கையின் முன் நின்றபடி,

    இதோ, பார்! எங்க மகனை மயக்கினே. அவனை இப்போ எங்களுக்கில்லாம செய்திட்டே. இன்னும் என்ன செய்யணும்? எங்களையும் சேர்த்து சீக்கிரம் கொன்னுடு என்று கரம் குவித்தார்.

    மாமா! என அதிர்ந்தாள் கபிலா.

    யாருடி மாமா?

    அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கு. உங்களுக்கு உதவவே நான் வந்திருக்கேன். நம்புங்க.

    பிள்ளைய பிரிச்சிட்டு; பெத்தவங்களைக்காப்பாத்தறேங்கறியா? போ, வெளியே...

    அவளது பெட்டியைத் தூக்கி வெளியே எறிந்தார்.

    லொக் லொக்கென இருமினார்.

    பெட்டி திறந்தது கொண்டது. அவள் உடமைகளின் நடுவே, ஒரு போட்டோ!

    அதை எடுத்தாள்.

    ‘மது! உன் பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை மது... நான் என்ன செய்வேன்?’ எனக் கண்ணீருடன் புலம்பினாள்.

    நம்பிக்கையை இழக்கவில்லை - அவள்.

    எழுந்து, மங்கை குருவரதன் இருவரையும் அணுகினாள்.

    எந்த ஜென்மத்திலும் எனக்கு மாமா- அத்தை நீங்கள் தான். என்னை ஆசீர்வதியுங்கள். என்று நமஸ்கரித்தாள்.

    சட்டென விலகிக் கொண்டனர்.

    அப்படியொரு நினைப்பில் மிதக்காதே. உன்னை சொந்தம் கொண்டால் ஊர் சிரிக்கும். உன்னால்தான் அது ஏற்கெனவெ சிரித்துவிட்டதே. மீண்டுமா? என்றார்.

    நடுநடுவே நோயாளிக்குரிய இருமல் பேசத் திணறினார்.

    நீங்க சும்மா இருங்க. என்ற மங்கை, இதபாருடி! என் மகன் - மது - எங்களை விட்டுப் பிரியக் காரணம் நீ. உன்னை மன்னிக்க முடியாது. என் பையனைப் போல ஏமாளி எங்கு கிடைக்கிறானோ... அந்த வீட்டைப் பார்... ஏற்கெனவே நீ அரங்கேற்றிய நாடகம் போதும்... என்ற மங்கை படீரென கதவை சாத்திக் கொண்டாள்.

    இவர்களை நம்பியே இங்கு வந்துவிட்டாள். கதவை அடைத்து விட்டனர்.

    இனி எங்கே போக?

    சட்டென, வீட்டின் கொல்லைப்புறமிருந்த கிணற்றடியை நோக்கிப் போனாள்...

    2

    நவயுகா எண்டர்பிரைசஸ் - நீட்டிங் - கம்பெனியின் எம்.டியைச் சந்தித்து,

    குட்மார்னிங் சார். என்றாள்.

    நீங்க... மிஸ். கபிலா? என்றான் மாதவ்குமார்.

    யெஸ், சார்.

    உட்காருங்க. அப்பாய்ன்மென்ட் ஆக வந்திருக்கீங்க!

    ஆமா.

    பர்சனல் அசிஸ்டென்ட்டா ஆக வந்திருக்கீங்க. உங்க பர்சனல் விஷயம் பத்திப் பேசலாமா?

    மது செய்த குற்றம் பற்றி தெரிந்திருக்கும். குற்றவாளி என்பதை அறயாமல காதலித்தீர்கள். சுயரூபம் தெரிந்துவிட்டது. தப்பித்தீர்கள். உங்களுக்கு ஆதரவு தரவே அழைத்தேன். என்றான் மாதவ்குமார்.

    நீங்கள் சொன்னது நிஜம். வேலை தந்ததற்கு நான் எப்படி நன்றி சொல்வது சார்?

    நன்றி என்கிற சம்பிரதாயமெல்லாம். வேண்டாம். பெஸ்ட் ஆப் லக்! என்றவன், இண்டர்காமில் செக்ஷன் ஆபீசரைக் கூப்பிட்டான்.

    கபிலாவை அறிமுகப்படுத்தினான்.

    இவங்களுக்கு இருக்கையை அறிமுகம் செய்து வையுங்கள். என்றான்.

    Enjoying the preview?
    Page 1 of 1