Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neruppu Kuliyal
Neruppu Kuliyal
Neruppu Kuliyal
Ebook88 pages33 minutes

Neruppu Kuliyal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சென்னையில் 1943 ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி எஸ் ஸி பட்டதாரி. தான் படித்த ஏ எம் ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப்பிரவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணி புரிந்தார். குரோம்பேட்டை எம் ஐடியில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963 ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக் கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்‘ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள், துணுக்குகள், மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

Languageதமிழ்
Release dateOct 4, 2019
ISBN6580128504590
Neruppu Kuliyal

Read more from Bhama Gopalan

Related to Neruppu Kuliyal

Related ebooks

Related categories

Reviews for Neruppu Kuliyal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neruppu Kuliyal - Bhama Gopalan

    http://www.pustaka.co.in

    நெருப்புக் குளியல்

    Neruppu Kuliyal

    Author:

    பாமா கோபாலன்

    Bhama Gopalan

    For more books

    http://pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    முதல் வகுப்பு கூபேயில் வண்டி கிளம்பக் காத்திருந்ததைக் கவனிக்காமல் அந்த இளம் ஜோடி சீண்டிக் கொண்டிருந்தனர்.

    அவன் அவள் இடையை வளைத்துத் தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான்.

    'ச்சீய்' என்று அவள் சிணுங்கினாள். ஆனாலும் அவன் உடலோடு இழைந்தாள்.

    டொக் டொக் என்று சம்பிரதாயமாகத் தட்டிவிட்டு 'டிக்கட் ப்ளீஸ்' என்றார் டி.டி.ஈ.

    இதோ இதோ, என்றபடி தன் சட்டைப் பையில் இருந்து காண்பித்தான்.

    தன் பட்டியிலுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, லேசான புன்னகையுடன், அடுத்த பெட்டிக்கு நகர்ந்தார்.

    சட்டென்று கதவைச் சாத்திய இளைஞன், ஓட்டல் ரூம்லே அறைக் கதவுக்கு வெளியே 'ஜஸ்ட் மேரீட்'னு போர்டு மாட்டற மாதிரி, இந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லேயும் போட்டுக்கலாம் போல இருக்கு, என்றான்.

    'வவ்வவ்வே' என்று அழகு காட்டி, உதட்டைச் சுழித்த அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

    ஸ்ஸ்ஸு.... வண்டி இன்னும் கிளம்பல்ல, என்று முனகினாள் அவள்.

    சென்ட்ரலை விட்டுக் கிளம்பியது வண்டி.

    ப்பா... எடுத்தவுடனே இவ்வளவு வேகமா... என்று அவன் மார்பில் சாய்ந்தாள்.

    நீ எதைச் சொல்றே?

    அவள் செவிகளில் கிஸ்கிஸ்த்தான்.

    ச்சீ போடா, என்று அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள் அவள்.

    வண்டியின் வேகம் இளைஞனுக்குக் குஷியாக இருந்தது.

    என்னங்க... நேத்து ராத்திரி சொன்ன ஜோக் புரியல்லீங்க.

    சொல்றேன். கல்லூரியிலே படிக்கிறவன் ஒருத்தனும், ஓர் இளம் பெண்ணும் மழையிலே நனைஞ்சுட்டு, ஓர் ஓட்டல் ரூம்லே தங்கறாங்க. சற்று நிறுத்தினான்.

    அட சட்! அதெல்லாம் புரிஞ்சுது. ராத்திரி அந்தப் பெண்ணும் அவனும் ஒரே கட்டில்லே படுத்துக்கறாங்க. நடுவிலே ஒரு கர்ச்சீப். அந்த பொண்ணு. 'ஜாக்கிரதை, கர்சீப்பைத் தாண்டக் கூடாது,'ன்னு சொல்றா. அவ்வளவுதான். பொழுது விடிஞ்சதுன்னு சொல்லீட்டீங்க.

    ஆமாம். மறுநாள் பகல்லே ரோடிலே நடக்கறபோது வழில்லே முள்வேலி- அரையடி உயரம் இருக்கு. இதோ தைரியமா நான் தாண்டிக் காட்டறேன்னு அவன் சொல்றான். அதுக்கு அந்தப் பெண், 'ஆமா, கிழிச்சீங்க. ராத்திரிலே சின்னக் கர் சீப்பைத் தாண்ட தைரியம் இல்லே,'ன்னு பழிப்பு காட்டினாளாம்.

    படவா... இந்த மாதிரி ஜோக்ஸ் எவ்வளவு வைச்சிருக்கே? என்று கேட்டு அவன் மார்பில் முத்தமிட்டாள்.

    டில்லி போய் தேனிலவு முடியறவரைக்கும் ஸ்டாக் இருக்கு, என்றான் அவன்.

    சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான்.

    கண்ணா, ரயில்லே சிகரெட் கூடாதுப்பா, என்றபடி அவள் அவனிடமிருந்து சிகரெட்டைப் பறிக்க, அதன் நெருப்புமுனை அவன் கையில்பட, வேண்டுமென்றே அவன் 'ஆ' என்று அலறினான்.

    ஐ'ம் வெரி ஸாரி கண்ணா... சிகரெட் நெருப்பு இவ்வளவு சூடா? பதறினாள்.

    பைத்யம்... நீ என் அருகே இருக்கும்போது, பெரிய நெருப்பு ஜூவாலையே என்னை ஒண்ணும் பண்ணாது செல்லக் குட்டி.... உன் எதிரிலேயே நெருப்புக் குளியல் செய்ய நான் தயார், என்று சொன்னவனின் வாயைத் தன் உதடுகளால் அவசரமாக அழுத்தி மூடினாள் அவள்.

    விளையாட்டுக்குக் கூட அது மாதிரி சொல்லாதீங்க அத்தான், என்றவள் விசும்பத் தொடங்கினாள்.

    டில்லியில் அது மாதிரி நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போகிறது என்பது பாவம், அவளுக்கு அப்போது தெரிய நியாயமில்லை!

    2

    புது டில்லி.

    ஜனவரி மாதக்குளிர். கட்டிலை விட்டு இறங்கவே மனமில்லாமல் ரஜாயை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தாள் வினிதா.

    கல்லூரி மாணவி. மாடர்ன் டிரஸ் மட்டுமே போட்டுப் பழக்கம். பாப் செய்த தலை.

    கரோல்பாக்கில் தன் சித்தப்பா வெங்கடேசனின் அபார்ட்மென்டில் சுகவாசம் அனுபவிப்பவள் வினிதா.

    காலை மணி எட்டுரை. "ஹும். இன்னும் இவளுக்கு எழுந்துக்க மனசு வரல்லே. கல்யாணம் ஆகி, புருஷன் வீட்லே இப்படித் தூங்கிட்டிருந்தா, மாமியார், இவள் கன்னத்துலேதான் இடிப்பா. வெங்கடேசனின் மனைவி பத்மா கிச்சனில்

    Enjoying the preview?
    Page 1 of 1