Ithu Thaanda Kolai
()
About this ebook
மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடைபோல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.
பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.
மிக்க அன்புடன்,
சுரேஷ் (சுபா)
Read more from Bhama Gopalan
Kadalil Oruthi Kattilil Oruthi Rating: 0 out of 5 stars0 ratingsBagavath Geethai - Eliya Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsBhama Gopalanin Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Mutham - Oru Diary - Oru Kalyanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookal Rating: 0 out of 5 stars0 ratingsKural Inithu Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsKolaikku Oru Passport Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Kiliyum Hollywood Directorum!! Rating: 0 out of 5 stars0 ratingsMyna Unnai Kolvena? Rating: 0 out of 5 stars0 ratingsMadhavan Innum Varavillai... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsPhone Off Pannittu Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsKaattril Potta Kolam Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Kuliyal Rating: 0 out of 5 stars0 ratingsKumudham Office-il Gopalan Rating: 0 out of 5 stars0 ratingsIval Ippadithan Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Potta Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsKuzhanthaiyai Kappatrungal Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Murai Vanmurai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ithu Thaanda Kolai
Related ebooks
Kadhambavin Yethiri Rating: 0 out of 5 stars0 ratingsRendu Idly, Oru Vadai Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5கண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsUsha Subramanian Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Kalaikindrana Rating: 0 out of 5 stars0 ratingsVithaithal Vilaiyum! Rating: 5 out of 5 stars5/5Gnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsMalai Sarivil Oru Tea Kadai Rating: 0 out of 5 stars0 ratingsAvargal Artham Purinthavargal Rating: 0 out of 5 stars0 ratingsIlamaiyil Kol Rating: 5 out of 5 stars5/5உன் தோள் சேர ஆசைதான்! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thol Sera Aasaithan Rating: 0 out of 5 stars0 ratingsKalainthu Pona Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsVerpidi Man Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Malargal Pesuma? Rating: 2 out of 5 stars2/5Attaikathi Rajakkal Rating: 0 out of 5 stars0 ratingsAbaayam! Thodu! Rating: 5 out of 5 stars5/5Oru Maalai Nera Maranam Rating: 5 out of 5 stars5/5Karuppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsThiyaga Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMella Mella Oru Thigil Rating: 5 out of 5 stars5/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5January February Mortuary Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ithu Thaanda Kolai
0 ratings0 reviews
Book preview
Ithu Thaanda Kolai - Bhama Gopalan
http://www.pustaka.co.in
இதுதாண்டா கொலை!
Ithu Thaanda Kolai!
Author:
பாமா கோபாலன்
Bhama Gopalan
For more books
http://www.pustaka.co.in/home/author/ahila
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
முன்னுரை
அன்புள்ள ஆசிரியருக்கு என்று கடிதங்கள் எழுத ஆரம்பித்தபோது வயது 19. பிரசுரமான பிறகு உற்சாகத்தில் தகவல் துணுக்குள், ஜோக்ஸ், என்று படிப்படியாக வளர்ந்து, சின்னச் சின்ன கட்டுரைகளை வெளிநாட்டு ஆங்கில இதழ்களிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ததும் பத்திரிகைகளின் ஏகோபித்த ஆதரவுடன் - உற்சாகம் பொங்கியது.
பிறகு கதைகள் எழுத ஆரம்பித்து, குமுதத்தில் ஒருபக்கக் கதைகளுக்கு முன்னுரிமை என்று நானாகப் புரிந்து கொண்டு எழுதித் தள்ளினேன்.
1985 ஆம் ஆண்டு அமுதசுரபியில் சுதந்திரப் பத்திரிகையாளராகப் பணியில் சேர்ந்தேன். ஒன்றரை ஆண்டுகள் அங்கு வேலை செய்தேன். பிறகு எதேச்சையாகக் குமுதத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பியது இறை அருள் என்றே சொல்ல வேண்டும். அதன் விளைவாகக் குமுதத்திலேயே பணிபுரியுமாறு அழைப்பு வந்தது. 2002 வரை அங்கு பணிபுரிந்தது என் பொற்காலம்!
பேட்டிகள், கட்டுரைகள், மாலைமதி நாவல், ஏராளமான சிறுகதைகள் என்று எழுதித் தள்ள முடிந்தது.
அதற்கு முன்பே 1980 ஆம் ஆண்டு என் திருமணப் பத்திரிகையும், நான் எழுத்தாளரின் கணவனாகப்போகிறேன் என்ற தகவலும் குமுதம் பத்திரிகை மூலம் பிரபலமாயிற்று. மனைவியாக வாய்த்தவளின் மிகச் சிறந்த ஒத்துழைப்பு காரணமாக சிறப்பு நிருபராக ஆனேன்! பிறகு எடிட்டோரியல் கன்ஸல்டண்ட் என்னுமளவுக்கு உயர்ந்தேன். குமுதம் பக்தி ஸ்பெஷலில் பணியாற்றவும் முடிந்தது இறைவன் செயலே.
ஆதரவு தந்து ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர் குழுவுக்கும், சக நிருபர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
நன்றியுடன்
பாமா கோபாலன்
வாழ்த்துரை
என்னையும் பாலாவையும் பார்ப்பவர்கள் நெஜமாகவே ரெண்டு பேருக்குமே எழுதத் தெரியுமா?
என்று ஆச்சர்யத்துடன் கேட்பார்கள். எழுதத் தெரிந்த இரண்டு பேர் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க முடியும் என்பதே பலரது சந்தேகம். எங்களை விடுங்கள், தங்கள் எழுத்தில் தனித்தனி நடையழகுடன் கணவனும், மனைவியும் வெற்றிகரமான எழுத்தாளர்களாக இருக்க முடியும் என்று அசத்திக்கொண்டிருக்கும் வேதா கோபாலனையும், பாமா கோபாலனையும் பார்த்து பிரமியுங்கள்.
அந்த தம்பதியுடன் எழுத்தாளர்களாக அறிமுகம் துவங்கி, நண்பர்களாக அடர்த்தியாகி, இன்றுவரை ஆரோக்கியமாக வளர்கிறது எங்கள் உறவு.
சிறியவர், பெரியவர், முதியவர், புதியவர் என்று எந்தப் பாரபட்சமும் இன்றி, யாரையும், எதற்கும் பாராட்டும் அவர்களுடைய பெரிய இதயங்களைக் கண்டு நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இங்கே பதிய வந்தது அதைப் பற்றி அல்ல. உங்கள் கைகளில் குடியேறியிருக்கும் பாமா கோபாலனின் இந்தப் புதினம் பற்றி. மாத நாவல்கள், வார நாவல்களாகக்கூட வெளியாகி வாசகர்களுக்குப் பெரும் தீனி போட்ட காலத்தில், குமுதத்தின் மாலைமதியில் வெளியானது இந்நாவல்.
மாத நாவல்கள் எழுதுவது எழுத்தாளர்களுக்கு ஒரு சவால். இத்தனைப் பக்கங்கள் என்று தீர்மானமானபின், அந்த வரையறைக்குள் தங்கள் வித்தைகளைக் களம் இறக்க வேண்டும். சுவாரசியமான எழுத்தால் பக்கத்துக்குப் பக்கம் வாசகர்களின் ஆர்வத்தையும் பிடித்து வைத்துக் கொண்டு படித்து முடித்தபின் கதை திருப்தியாக இருந்தது என்ற விமர்சனத்தையும் வரவழைக்க வேண்டும். இதில் அநாயாசமாக வெற்றி பெற்றிருக்கிறார், பாமா கோபாலன்.
ஒவ்வொரு பாத்திரத்தையும் கச்சிதமாக வடிவமைத்தபின் கதை தானாக நீரோடைபோல் செல்கிறது. திடுக் திருப்பங்களுடன் நிறைவு பெறுகிறது. கடைசிவரை சஸ்பென்ஸை நிலைநிறுத்தி, கதையை சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கும் பாமா கோபாலனுக்குப் பாராட்டுகள்.
பாமா, ஜமாய்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து ஜமாயுங்கள்.
மிக்க அன்புடன்,
சுரேஷ் (சுபா)
அடையார்
1
பம்பாய். இரவு நேரம். சான்டாக்ரூஸ் விமான தளத்தில் சர்ரென்று சக்கரங்கள் தரையைத் தொட்டன. தூசிகள் பறந்தன.
விமானம் மெட்ராசிலிருந்து கிளம்பும்போதே லேட்
ஒரு பெரிய நடிகரோடு அரசியல் புள்ளிகளும் சேர்ந்து வந்ததால் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட்டில் அரை மணி நேரம் தாமதமாய்க் கிளம்பியது அந்த விமானம்.
இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன விளக்குப் பட்டாளங்கள். ஏகப்பட்ட விமானங்கள் பறக்க அனுமதிக்குக் காத்திருந்தன. விதவிதமான பயணிகள் லவுஞ்சில் இங்கும் அங்குமாய் உலவிக் கொண்டிருந்தனர். (அலைந்து?)
சின்ன பிரவுன் பிரீஃப்கேஸுடன் அந்த நடுத்தர வயது ஆசாமி லவுஞ்சை விட்டு வாசலுக்கு வந்தார். சென்னை - பம்பாய் பயணி.
எதிரே வில்லாய் வளைந்து அவரை வரவேற்றார் ஒரு சேட்ஜி. இருவரும் இந்தி சினிமா மாதிரிக் கட்டித் தழுவிக் கொண்டனர்.
இந்தியும், மராத்தியும், ஆங்கிலமும், இடையிடையே ‘அடடே! அப்படியா?’ ‘பலே’ என்ற தமிழுமாய் ஒரே கலவை.
சேட்ஜி வேஷத்தில் இருந்த பாஸ்கர் கேட்டான். சாப், தபியத் கைஸா ஹை?
உடல் நிலை எப்படியிருக்கிறது என்று அன்பாய் விஜாரிக்கிறானாம்.
அந்த பிரீஃப்கேஸ் ஆசாமி, கீழ்க் குரலில் சொன்னான். போதும்யா. உன் தமிழே தேவலை. இந்தியை விட்டுடு. பிழைச்சுப் போகட்டும்.
காத்திருந்த மாருதியில் பிரீஃப்கேஸை எறிந்துவிட்டு அமர்ந்தார்கள்.