Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kural Inithu
Kural Inithu
Kural Inithu
Ebook84 pages25 minutes

Kural Inithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் 'சசி' என்ற பெயரில் ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாகி வந்தன. பிறகு காலப்போக்கில் வாரப் பத்திரிகைகளில் அவ்வப்போது ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாயின. அவற்றைப் படிக்கும் போது மனதில் 'நாமும் எழுதிப் பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

பல பத்திரிகைகளில் படித்துப் பார்த்து, தனித்தாளில் அந்தக் கதைகளில் உள்ள சிறப்பு அம்சங்களைக் குறித்துக் கொண்டேன்.

குறைவான, செறிவான வர்ணனை, சொற் சிக்கனம், ஆரம்ப வரியிலேயே வாசகரை ஈர்க்கும் தன்மை, முடிவை நோக்கி வேகமாக ஓடும் கதைப் போக்கு, வாசகர் எதிர்பார்க்கும் முடிவுக்கு மாறாக ஒரு முடிவுடன் கதை இருக்க வேண்டும் என்ற உறுதி. ஆரம்ப காலத்தில் இரண்டு பக்கங்களுக்குக் கதை ஓடிவிடும்; மறுபடியும் ஒரு வாசகனாகப் படித்து, அனாவசிய வாக்கியங்களை, சொற்களை நீக்கிவிட்டு, மறுபடியும் செப்பனிட்டுத் திருத்தி, எழுதி, திருப்தியுடன் தபாலில் சேர்க்கும் பொறுமை தேவையாயிருந்தது!

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580128506792
Kural Inithu

Read more from Bhama Gopalan

Related to Kural Inithu

Related ebooks

Reviews for Kural Inithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kural Inithu - Bhama Gopalan

    https://www.pustaka.co.in

    குரல் இனிது

    சிறுகதைகள்

    Kural Inithu

    Sirukathaigal

    Author:

    பாமாகோபாலன்

    Bhama Gopalan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/bhama-gopalan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    வாழ்த்துரை

    உயிலிலே ஓர் இடிபாடு

    என்ன கேட்டீர்களா?

    சனிக்கிழமை மத்தியான வேளையில்!

    ஆறுதல் கூறுவது நளினா

    கசப்பிலே இனிப்பு

    மாதவன் இன்னும் வரவில்லை....

    காதலுக்கு ஒரு டெபாஸிட்!

    குரல் இனிது

    அப்பா வரக் கூடாது!

    கட்டில் பிரச்னை

    இரண்டு பதில்கள்

    வீண்

    தொண தொண

    மனதில் தங்க வேண்டிய கதை

    அசத்தல்

    கல்யாணத்துக்கு முன்னாடியே....

    நிறுத்து, கல்யாணத்தை!

    பாம்புக்கு பால்!

    சிரிக்க வேண்டும்

    ஆபாச சுவரொட்டிகள்

    கொண்டு வா அப்பா

    என்னவோ நடக்கப் போகிறது

    உருப்படியான காரியம்

    ஒற்றைச் செருப்பு

    சலனம்

    பொய்! பொய்!

    பஸ் ஏறிவந்த வட்ட நிலா!

    என்ன கண்ணாடி இது!

    சிபாரிசு

    முன்னுரை

    பல வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் 'சசி' என்ற பெயரில் ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாகி வந்தன. பிறகு காலப்போக்கில் வாரப் பத்திரிகைகளில் அவ்வப்போது ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாயின. அவற்றைப் படிக்கும் போது மனதில் 'நாமும் எழுதிப் பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.

    பல பத்திரிகைகளில் படித்துப் பார்த்து, தனித்தாளில் அந்தக் கதைகளில் உள்ள சிறப்பு அம்சங்களைக் குறித்துக் கொண்டேன்.

    குறைவான, செறிவான வர்ணனை, சொற் சிக்கனம், ஆரம்ப வரியிலேயே வாசகரை ஈர்க்கும் தன்மை, முடிவை நோக்கி வேகமாக ஓடும் கதைப் போக்கு, வாசகர் எதிர்பார்க்கும் முடிவுக்கு மாறாக ஒரு முடிவுடன் கதை இருக்க வேண்டும் என்ற உறுதி. ஆரம்ப காலத்தில் இரண்டு பக்கங்களுக்குக் கதை ஓடிவிடும்; மறுபடியும் ஒரு வாசகனாகப் படித்து, அனாவசிய வாக்கியங்களை, சொற்களை நீக்கிவிட்டு, மறுபடியும் செப்பனிட்டுத் திருத்தி, எழுதி, திருப்தியுடன் தபாலில் சேர்க்கும் பொறுமை தேவையாயிருந்தது!

    ஆனால், கதை பிரசுரமான பிறகு, கிடைக்கும் விமர்சனங்கள் நச் என்றிருக்கும்! அமரர் திரு. நா. பார்த்த சாரதி அவர்கள் ஓர் இலக்கியக் கூட்டத்தில் பேசும் போது சொன்னார்:

    நாவல் எழுதுவது ஒரு பெரிய வீட்டில் உலவுவது போன்றது; சிறுகதை என்பது ஓர் அறையில் நடப்பது போன்றது

    ஒரு பக்கத்தில் எழுதுவது என்பது ஓர் அறையின் ஒரு மூலையில் குழந்தை இருப்பது போன்றது என்று சொல்லலாமா?

    இரண்டு, மூன்று பக்கங்களில் கதைகள் எழுதும்போது, கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றி எழுத முடியும்; தேவையும்கூட

    ஆனால் ஒரு பக்கக் கதைகளில், வர்ணனைகள் வாக்கியங்களில் இருக்க முடியாது; வார்த்தைகளில் இருந்தால் நல்லது.

    திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்கள் ஒரு பேட்டியின் போது சொன்னது முக்கியமானது.

    "நான், காருக்காக சபா வாசலிலோ, அகாடெமி வாசலிலோ, ஏன் வெளியூர் பயணங்கள்போது சில சமயங்களில் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது பெரிய கதைகளைப் படிக்க முடிவதில்லை. ஒரு பக்க கதைகளை சட் சட் என்று படிக்க முடிகிறது! சினிமா தயாரிப்பாளர்களுக்கு, சினிமா கதை எழுதுபவர்களுக்கு குட்டி குட்டி ஐடியாக்கள் கிடைப்பது ஒரு பக்கக் கதைகள் மூலம்தான். பிறகு அதை டெவலப்

    Enjoying the preview?
    Page 1 of 1